Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
முதல் பக்கம் » ஸ்நபன விதி
படலம் 4: ஸ்நபன விதி
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

12 ஜூன்
2012
04:06

நான்காம் படலத்தில் ஸ்நபன விதி கூறப்படுகிறது. அதில் முதலில் அஷ்டமி முதலான திதிகள், விஷுவ அயந ஸங்க்ரமணாதி கால விசேஷங்களிலும் துர்பிக்ஷம், பூகம்பாதி துர்நிமித்தத்திலும், ஜ்வர மார்யாதி ரோக பீடத்திலும், பஞ்சமேற்பட்ட காலத்திலும் அந்ததோஷ நிவ்ருத்திக்காகவும், பிரதிஷ்டா முடிவிலும், உத்ஸவாந்தத்திலும், நித்ய, நைத்திக, காம்ய காலங்களில் ஈசனுக்கு ஸ்நபனம் செயற்பாலது என்று ஸ்நபனத்தின் நிமித்தத்தை சொல்லி உள்ளார். அதில் ஸ்நபனம் அநேக விதமாக விதிக்கப்படுகிறது. மஹாஸ்நபநகர்மாக்களில் அங்குரார்பணம் செய்யுமாறு சூசிக்கப்படுகிறது. பின்பு மண்டப விதாநம், அதன் ஸம்ஸ்காரமும் வர்ணிக்கப்படுகிறது. அதில் சூத்ர ந்யாஸம் முதலாக பஞ்சகலச, நவகலச, பஞ்சவிம்சதிகலச, நான்பத்தொன்பது கலச ஸ்நபனங்களில் கலச ஸ்தாபன விதி நிரூபிக்கப்படுகிறது. இங்கு பஞ்சகலசஸ்நபனம் முதல் ஒவ்வொரு ஆவரணத்தின் அதிக கல்பனத்தால் 49 கலச ஸ்நபனாந்தம் கலச ஸ்தாபன பிரகாரம் கூறப்பட்டுள்ளதாக சூசிக்கப்படுகிறது. பிறகு அஷ்டோத்தர ஸ்நபனவிஷயத்தில் முதல் முறை கூறப்படுகிறது. அதில் முதலில் எட்டு கிரமமாக ஆவரணத்ரயம் கல்பநீயம் என கூறப்படுகிறது. பின்பு ஆயிரத்தெட்டு ஸ்நபன விதியில் பிரதமபிரகாரம் நிரூபிக்கப்படுகிறது. அதில் சூத்ரந்யாஸ முதலாக சதுரமண்டலத்தில் 40 வியூஹங்கள் கல்பிக்க வேண்டும். அதில் ஒவ்வொரு வ்யூஹத்திலும் இருபத்தைந்து கலசங்கள் ஸ்தாபிக்கபடவேண்டுமென கூறப்பட்டுள்ளது. பின்பு அஷ்டோத்திர ஸ்நபன விஷயத்தில் இரண்டாம் விதி பிரதிபாதிக்கப்படுகிறது. அதில் நான்கு திவாரம் கல்பித்து மத்தியில் இருபத்தைந்து கலசம், கோணங்களில் இருபத்தியொரு கலசங்கள் ஸ்தாபிக்கவேண்டும் என்று கலசஸ்தாபனம் சூசிக்கப்படுகிறது. பிறகு ஆயிரத்தெட்டு ஸ்நபன விஷயத்தில் இரண்டாவது விதி கூறப்படுகிறது.

அதில் சூத்ரந்யாஸம் முதலாக சதுரஸ்ர மண்டலத்தில் பதினான்கு ஆவரணத்தில் கலச ஸ்தாபன பிரகாரம் கூறப்படுகிறது. பிறகு கும்பஸ்தாபனத்தின் ஸ்தண்டில கல்ப விஷயத்தில் நெல் அளவு நிரூபணம், அதன் அனுசாரமாக எள், அரிசி அளவு விஷயம், கும்ப அளவு, தோண்டி அளவு விஷயம் கும்பத்தில் சூத்ரவேஷ்டந கூர்ச்சந்யாஸ பிரகாரம் த்ரவ்ய ந்யாஸ, ரத்னந்யாஸ பிரகாரம் இம்மாதிரியான விஷயங்கள் நிரூபிக்கப்படுகின்றன. பிறகு இருபத்தைந்து கலச ஸ்நபனத்தில் சொல்லிய ஆவரணத்யாகத்தால் ÷ஷாடசஸ்நபன கலச ஸ்தாபனவிதி சித்திக்கிறது. என ÷ஷாடசஸ்நபனவிதி கூறப்படுகிறது. ÷ஷாடசஸ்நபன விஷயத்தில் த்ரவ்ய நிரூபணம் சொல்லப்பட்டுள்ளது. பின்பு நாற்பத்தொன்பது கலச ஸ்நபன விஷயத்தில் த்ரவ்யங்கள் நிரூபிக்கப்படுகிறது. பிறகு பஞ்சகலச நவகலச. பஞ்சவிம்சதி நாற்பத்தொன்பது கலசஸ்நபன விஷயங்களில் தேவதாந்யாஸ பிரகாரம் வர்ணிக்கப்படுகிறது. அதில் குறிப்பாக முப்பத்தி இரண்டு கலசபிரகாரம் கூறப்படுகிறது. 108 ஸ்நபன விஷயத்தில் த்ரவ்ய நிரூபணம் மூன்று விதமாக கூறப்படுகிறது. அஷ்டோத்தர ஸ்நபன விஷயத்தில் குறிப்பாக தேவதைகள் நிரூபிக்கப்படுகிறது. பிறகு எண்பத்தி ஒரு ஸ்நபன விதி நிரூபிக்கப்படுகிறது. ஒன்பது வ்யூஹம் கல்பிக்கவும், பிரதிவ்யூகத்திலும் ஒன்பது கலசம் ஸ்தாபிக்கவும் எட்டுதிவாரங்கள் உண்டென்று கூறப்படுகிறது. அஷ்டோத்திர ஸஹஸ்ரஸ்நபன விஷயத்தின் த்ரவ்ய நிரூபணம் குறிப்பாக த்ரவ்ய நிரூபண விஷயத்தில், ரத்னோதக லோஹோதக, தாதூதக, பீஜோதக, கந்தோதக, ம்ருதூதக மார்ஜனோதக, பத்ரோதக, புஷ்போதக, மான்யோதக, அஸ்திரோதக, பலோதக, கஷாயோதக, ஆட்யோதக, காந்தோதக, மூலோதக, பிரம்மகூர்ச்ச, வல்கலோதகம், முதலிய உதகங்களின் லக்ஷணம் கூறப்பட்டுள்ளது. பின்பு அஷ்டோத்தர ஸஹஸ்ரஸ்நபன விஷயத்தில் மூன்றாவது பிரகாரம் விருத்த மண்டலத்தால் கல்பிக்கவும் என பிரதிபாதிக்கப்படுகிறது.

அதில் பதினான்கு ஆவரணங்களில் கலசஸ்தாபனபிரகாரம், கலசசங்க்யை நிரூபணத்துடன் திரவ்யம் கூறப்படுகிறது. ஆயிரத்தி எட்டு ஸ்நபனத்தில் தேவதான்யாஸ பிரகாரம் நிரூபிக்கப்படுகிறது. ஐநூற்றி எட்டு ஸ்நபனம், இருநூற்றி எட்டு ஸ்பனத்திலும் வியூஹக்ரமமாக கலச விந்யாச பிரகாரம் கூறப்படுகிறது. திரவ்யங்களின் அளவு நிரூபிக்கப்படுகிறது. பிறகு கூறிய திரவ்யா பாவத்தில் கிரஹிக்ககூடிய திரவ்ய நிரூபணம் பிறகு த்ரவ்யந்யாஸ பிரகாரம் நிரூபிக்கப்படுகிறது. பிறகு ஹோம நிரூபணம் அங்கு குண்டம் அல்லது ஸ்தண்டிலத்திலோ ஹோமம் செய்யவும் என்று விகல்பிக்கப்படுகிறது. ஹோம த்ரவ்யங்களின் அளவுமுறை, அவ்வாறே அஷ்டகுண்ட, பஞ்சகுண்ட நான்கு குண்டாநுஸாரமாக ஸமித்நிர்தேசம் ஹோம கர்மபிரகாரம் காணப்படுகிறது. பிறகு லிங்க விஷயத்தில் ஸ்நபன கலசாபிஷேகவிதி கூறப்படுகிறது. பிறகு ஸகல விஷயத்தில் ஸ்நபன கலசாபிஷேகபிரகாரம் சூசிக்கப்படுகிறது. அதில் சித்ராதி ஸகள பிம்பங்கள் விஷயத்தில் தர்பணாதிகளில் ஸ்நபனம் செய்யவேண்டுமென கூறப்படுகிறது தேவிஸ்நபனத்தில் த்ரவ்ய பேதமில்லை தேவாதாபேதம் மட்டும் கூறப்படுகிறது. தேவதா நிரூபணத்தில் விசேஷம் பிரதிபாதிக்கபடுகிறது. ஸர்வாபீஷ்ட சித்திக்கும், க்ஷீராதிகளால் ஸர்வதோஷ நிவ்ருத்திக்கும் ஸ்நபன விசேஷங்களால் பரமனை ஸ்நபனம் செய்க என கூறி அவைகளின் ஸ்நபன விசேஷமும் வேறு பயனும் கூறப்படுகிறது.

அந்தஸ்நபனங்களின் செய்யக்கூடிய கால நிர்தேசம். ஸ்நபன முடிவில் விசேஷதர்சனம் கூறப்படுகிறது. நித்ய கர்மாவில் இருபத்தைந்து கலச ஸ்நபனம் பிரசஸ்தியாகும். உத்தமோத்தம பூஜையில் அஷ்டோத்திரசதம் வரைஸ்நபனம் செய்தல் வேண்டும். நைமித்திக கர்மாவில் பஞ்சவிம்சதி சங்க்யை முதல் ஆயிரத்தெட்டு ஸ்நபனம் வரை செய்தல் வேண்டும். என்ற விஷயங்கள் ஸ்நபன விஷயத்தில் சூசிக்கப்படுகிறது. இவ்வாறு ஸ்நபன விஷயத்தில் நித்யம், நைமித்திகம், காம்யம் என்று மூன்று விதம் பிராயச்சித்த நிவாரணத்திற்காக நித்ய நைமித்திகத்திற்காக ஸ்நபனம் செய்யவேண்டும் காம்யத்திற்காக காம்ய ஸ்நபனம்சூசிக்கப்படுகிறது கிரியா மந்த்ராதி பேதத்தால் தந்திர பேதமும் ஏற்படுகிறது. அதில் சைவ வசனமே செய்ய வேண்டும், வேறு சாஸ்திரத்தால் செய்யக்கூடாது என்று சூசிக்கப்படுகிறது. பிறகு ஸ்நபனாதிகர்ம நிர்வஹிப்பதற்கு கிரஹிக்க வேண்டிய குரு நிரூபணம் விசேஷ பூஜையும் அப்பேற்பட்ட ஆசார்யனாலேயே நிர்வாஹிக்க வேண்டுமென கூறி விசேஷ பூஜாவிதியும் கூறப்படுகிறது. பின்பு நித்ய நைமித்திக கர்மா சரணத்தில் செய்யவேண்டியது நிரூபிக்கப்பட்டுள்ளது அதில் நைமித்திக கர்மாசாரண காலம் இரண்டு விதம் என கூறி அதன் காலவிசேஷம் பிரதிபாதிக்கப்படுகிறது. ஆசார்ய பூஜாவிஷயம் கூறப்படுகிறது. அதில் யாகசாலைக்கு உபயோகிக்கப்பட்ட ஸ்வர்ணாம் பராதிகம் ஆசார்யனுக்கு தரவேண்டும். மற்ற போகத்திற்கு உபயோகிக்க கூடாது என்பதாக நான்காவது படல கருத்து சுருக்கமாகும்.

1. பிறகு பரமேஸ்வரனுக்கு அனுஷ்டிக்கப்படவேண்டிய ஸ்நபனத்தை பற்றி சொல்லப்போகிறேன். அஷ்டமியிலோ சதுர்தசியிலோ விஷுவ புண்யகாலத்திலோ அல்லது அயன சங்க்ரமண காலத்திலோ மாதப் பிறப்பிலுமோ.

2. கிரஹணத்தில் மாஸத்தின் நக்ஷத்திரத்தில் திருவாதிரை, இரண்டு பர்வங்கள், பூர்ணிமா, அமாவாசை, நல்ல யோகத்தில் ஞாயிற்றுக்கிழமை அல்லது உத்ஸவத்தின் முடிவில் மூன்று நாட்கள்.

3. யஜமானனின் பிறந்த நாள், இறந்தநாள், அல்லது அதற்கு தொடர்ந்த நாள், அரசன் பட்டாபிஷேக நக்ஷத்திரம், வறுமை, தீமை நிமித்தம் தோன்றிய காலங்களில்

4. பூகம்பம், தீபற்றுதல், ஜ்வரம், வைசூரி முதலிய துன்பங்களாலும் துன்புறுத்தப்பட்டபொழுதும் பிரதிஷ்டையின் முடிவிலும், நோய்கள் ஏற்படும் காலத்திலும் அத்புத சாந்தி காலத்திலும், பஞ்சமேற்படும்பொழுதும்

5. நித்யம், நைமித்தியம், காம்யம் என்ற மூன்று வகைகளிலும் சிவனுக்கு உரிய முறைப்படி ஸ்நபன பூஜை செய்து அபிஷேகம் செய்யவேண்டும். அது பலவகைப்படும். ஸ்னபன பூசை அபிஷேகத்தின் பொருட்டு கலசங்களை வைத்து பூசிப்பது ஆகும்.

6. (அங்குரார்ப்பணம் செய்து) மஹா ஸ்நபனம் கார்யத்தில் முதலில் அங்குரார்ப்பணம் செய்யவேண்டும் முன்பு சொன்ன மண்டபத்திலோ வேதிகை இல்லாமலுமோ செய்யலாம். அல்லது அளவை நோக்காமல் ஸ்நனத்திற்காக முன்பே ஏற்படுத்தபட்ட இடத்தில்

7. ஐந்து முழத்திலிருந்து ஆறு ஏழு முழ அழவுள்ள தாகவும் நான்கு முதல் எட்டு வரையுள்ள காத்ர அளவுள்ளதுமான (காத்ரம் என்பது தேஹம் என்பதாகும்) (தேஹ ஸப்தம் என்பது சுமாராக ஒன்பது தாள அளவாகும். ஒரு தாள அளவு பனிரெண்டு அங்குலம்)

8. எல்லா அலங்காரங்களோடும் கூடியதும் தோரணங்களோடு கூடியதும் நிருத்தம் வாத்யம் முதலியவைகறோடு கூடியதும் இசை ஒலி முதலியவைகளோடு கூடியதும் ஆன மண்டபத்தில்

9. அஸ்திர மந்திரத்தால் பூமியை சுத்திசெய்து வாமதேவ மந்திரத்தால் மெழுகி அகோர மந்திரத்தால் தாள மாத்ர இடைவெளிப்படி (தாளம் என்பது 9 அங்குலமாகும் என்றும் ஓர் அளவு கூறப்படுகிறது) சூத்ர நியாஸம் செய்யவேண்டும்.

10. இரண்டு தாள அளவு சிவ கும்பத்திற்கும், வர்த்தனீ கும்பத்திற்கு ஒரு தாள அளவும், மூன்று தாளம் கர்ணிகைக்கும் உள்ளது ஸாதாரண அளவாகும்.

11. அல்லது கும்பஸ்தாபனம் வடக்கிலுள்ள வீதியில் இருக்குமேயானால் அப்பொழுது கும்பஸ்தாபன நிலை ஏற்றாற்போல இரண்டு தாள அளவு கர்ணிகை யின் அளவாக ஆகும்.

12. நான்கு திக்குகளில் உள்ள தாளங்களில் வைக்கப்படும் ஒவ்வோர் கலசங்களோடு நடுவில் ஓர் கலசமாக பஞ்ச கலச அமைப்பும் மூல திசைகளிலும் ஒன்றாக சுற்றியும் எட்டு வைக்கும் முறையும் நவகலச ஸ்னபனமாகும்.

13. இருபத்தி ஐந்து எண்ணிக்கை வரையில் சுற்றிலும் உள்ளதாக வைக்கப்படுவதும், நாற்பத்தி ஒன்பது கலசங்கள் மற்றும் நூற்றி எட்டு கலசங்களின் அமைப்பும் உண்டு.

14. இரண்டு சுற்றாக வெளியில் வைக்க வேண்டும். நடுவில் உள்ள இருபத்தி ஐந்து கலசங்களை

15. விடுத்து மற்றவைகளை இரண்டாகவோ அல்லது ஒன்றாகவோ சுற்றிலும் வைத்துவிட வேண்டும். எட்டு வாயில்களை உடையதாகவும் மூன்று வெளி சுற்று உடையதாகவும் வைக்க வேண்டும்.

16. கோணங்களில் ஒன்பது சூத்திரத்திலும் மத்தியில் பதினைந்து சூத்திரத்திலும், கும்பங்களை வைக்க வேண்டும். நடுவில் பதினைந்து என்றால் நடுவில் உள்ள மூன்றை விட்டுவிட வேண்டும்.

17. நூற்றி எட்டின் முறை இது. ஆயிரமாக இருந்தால் நாற்பது வியூஹம் ஆகும். ஒவ்வொன்றிற்கும் தனித்தனியாக இருபத்தி ஐந்து பதம் போட வேண்டும்.

18. ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு என்ற முறையிலும் வியூஹம் உண்டு. நடு வியூஹத்தை சுற்றியும் நான்கு அல்லது எட்டு குண்டங்களை

19. அந்தந்த எண்ணிக்கைக்கு இணையாக வியூஹத்தில் ஹோமத்திற்கு வசதி செய்து கொள்ள வேண்டும். நடுவில் வழி அமைத்து பாதை அமைத்து கொள்ள வேண்டும்.

20. சிவவியூஹத்தை சுற்றிலும் பதினாறு சூத்திர அளவு விட்டுவிடவேண்டும். சூத்திரமுறையில் வைப்பது இதுவரை சொல்லப்பட்டது மற்றொரு முறையும் உண்டு.

21. நூற்றி எட்டின் முறையே நடுவில் இருபத்தி ஐந்தும், வெளியில் ஆக்னேய கோணங்களில் இருபத்தியொன்று என்ற பாதையின் முறையிலிருக்க வேண்டும்.

22. நான்கு திக்குகளிலும் நான்கு வாயில்களாகும். ஆயிரம் முறையில் மீண்டும் சொல்லப்படுகிறது. கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு என்ற திக்குகளில் இரண்டு சூத்திரங்கள் வைக்கவேண்டும்.

23. ஒன்றரை முழ அளவு அல்லது ஓர்முழ அளவுள்ளதாக பதினான்கு எண்ணிக்கையில் முறைப்படி வெளிவீதியாக அமைக்கப்படவேண்டும்.

24. அதன் வெளியில் நான்கு பக்கங்களிலோ அல்லது எட்டு பக்கங்களில் ஹோமம் செய்யலாம். தத்புருஷ மந்திரத்தால் ஸ்தண்டிலம் அமைத்து நெல் நான்கு படி அளவுள்ளதாக செய்வது சிறந்ததாகும்.

25. மூன்றுபடி அளவுள்ளது மத்யமமாகும். அதற்கு அடுத்தது இரண்டுபடி குறைவான அளவாகும். அதை காட்டிலும் மிகவும் தாழ்ந்து ஒருபடி நெல் அளவாகும்.

26. நெல்லின்அளவு இதுவே என்ற காரணத்தால் இதற்கு குறைவாக போடக்கூடாது. அப்படி செய்தால் ஆபிசாரதோஷம் ஏற்படும். இது நிச்சயம்!

27. இரண்டுபடி பிடிக்கும் அளவுடைய குடம் முதல் பத்துபடி பிடிக்கும் அளவு வரை சிவகும்பத்தின் அளவு ஆகும். அதற்கு மேற்பட்டது கரகம் எனப்படும்.

28. நெல்லின் பாதி அளவு அரிசி ஆகும். அதில் பாதி எள். அதில் பாதிஅளவு பொறி இருக்கவேண்டும். ஸஹஸ்ர கலசத்தில் எட்டு மரக்கால் என்று சொல்லப்படுகிறது.

29. எட்டுக்கு அதிகமான சிவவியூஹத்தில் நெல்லின் அளவு சொல்லப்பட்டது. ஹ்ருதய மந்திரத்தால் ஸ்வர்ணம் முதலியவைகளினால் ஆன கும்பங்களை வைக்கவேண்டும்.

30. சிவம் என்ற அளவு முதல் ஒவ்வொருபடி அளவாக இருபத்திஏழு வரை அளவுள்ள தன்மை சிவகும்பத்திற்கு ஆகும். அதில் பாதி (தோண்டி) கரகம் எனப்படும்.

31. நான்கு, மூன்று, இரண்டு, ஒன்று என்ற அளவில் உடைய கலசங்களில் மூன்று, இரண்டு, ஒன்று என்ற முறையில் நூலை சுற்றவேண்டும்.

32. இல்லாவிட்டால் ஒரு நூலால் மூன்று முறை கவச மந்திரத்தினால் சுற்றிய பிறகு கும்பங்களை ஹ்ருதய மந்திரத்தால் வைக்கவேண்டும்.

33. ஈசான மந்திரத்தால் முப்பத்தாறு தர்பங்களை உடைய கூர்ச்சங்களை மூன்றாக பிரித்தவாறு வைக்க வேண்டும். திரவ்யத்தை மூல மந்திரத்தால் வைக்க வேண்டும்.

34. மாணிக்கம், இந்திரநீலம், வைடூர்யம், பவழம், முத்து என்ற ஐந்து ரத்தினங்கள், இல்லாவிடில் தங்கமும் போடலாம்.

35. நிஷ்கம் என்ற அளவில் ஸ்வர்ணத்தை கால் பங்கு அல்லது அதில்பாதி பத்துஉளுந்து அளவோ அல்லது எட்டு உளுந்து அளவோ ஐந்து, நான்கு அளவோ இரண்டு உளுந்து அளவோ மிகவும் குறைந்ததான பட்சத்தில் ஓர் உளுந்து அளவோ ஸ்வர்ணம் போடவேண்டும்.

36. மேற்கூறிய அளவிலிருந்து பாதி அளவு கரகங்களில் போடவேண்டும். திரவ்யங்கள் இருக்க வேண்டிய கலசங்களாவன, பாத்யம், ஆசமனம், அர்க்யம், பஞ்ச கவ்யம் ஆகியவை நான்கு திசைகளிலும் இருக்க வேண்டும்.

37. சந்தனம் கலந்த தீர்த்தம் அல்லது சுத்தமான தண்ணீர் முதலில் சொல்லப்பட்டது. தர்ப்பை தண்ணீர், பால், தயிர், சிறிது சூடான நெய் இவைகளுமாகும்.

38. சந்தனம் கலந்த தீர்த்தம் முதலில் மூலைகளில் முறையாக எட்டு இடங்களிலும் ஆகும். இரண்டாவது ஸ்தாபன முறை சொல்லப்பட்டது. மூன்றாவது முறை சொல்லப்படுகிறது.

39. தேன், பொறி, சாணத்தூள், மஞ்சள் மற்றும் சத்துமாவு, மஞ்ச்பொடி போன்றவைகள் விபூதி, கரும்புச்சாறு, வாழைப்பழம், எள், பலா, கடுகு முதலியனவும்.

40. விபூதி, நல்லெண்ணை, வாழை, எள், கடுகு, தேங்காய், இருவிதமான நார்த்தம்பூ மாதுளை முதலியவைகளை வைக்கலாம்.

41. மாதுளை மற்றும் பக்கத்தில் பலா, மா, இஞ்சி, வாழை, வரகு, பாக்கு மற்றும் இளநீர் கடுகு இவைகளும்

42. எள், பில்வம் அதற்கு பிறகு நார்த்தை இரண்டு (எலுமிச்சை, நார்த்தை) யவை, நீவாரம், பொறி

43. ஸத்துமாவு, முதலிலோ அல்லது கடைசியிலோ மற்றும் தேன் கீழாநெல்லி, வெல்லம், பால் பிறகு கடுகு, கிராம்பு இவைகளும்.

44. தக்கோலம், தயிர், தண்ணீர், எள், விளாமிச்சை வேர், நெய், சாணத்தூள் ஸத்துமாவு, தேங்காய், மஞ்சள் பொடி இவையும்

45. இவ்விதம் மும்முறையிலும் மூறு, இருபத்தி ஐந்துகளாகும் இருபத்தி ஐந்தின் நடுவில் நடுவரிசைகளை விட வேண்டும்.

46. இவ்விதம் செய்த ஸ்தாபனத்தில் கலசங்கள் பதினாறு ஆகும். நான்கு திக்குகளிலும் நான்கு கோணங்களிலும், பாத்யம் முதலியவைகள் எட்டு ஆகும்.

47. இவைவெளிகளில் நடுவிலிருந்து எட்டு எண்ணிக்கை உடையதாகவும் மேலும் நாற்பத்தி ஒன்பது கும்பங்கள் முறையாக சொல்லப்படுகின்றன.

48. வெல்லம், சந்தனம், உலோகம் கீழாநல்லி கச்சோலம், புஷ்பம், பத்ரம், பச்சை கற்பூரம் மற்றும் தண்ணீர் ஜடாமாஞ்சி, மரிக்கொழுந்து சிற்றேலம் அருகம்பில்

49. வன்னி, அருகு, வெள்ளெருக்கு பில்வம், செண்பகம், சங்கங்குப்பி என்ற திரவ்யம், நாயுருவி, விஷ்ணுகிராந்தை, ஊமத்தை.

50. நந்தியாவட்டை, வெண்தாமரை, நாற்பத்தி ஒன்பதாகும் அல்லது வேறு வழியிலும் சொல்லப்படுகிறது.

51. பாத்யம், ஆசமனம், அர்க்யம், பஞ்ச கவ்யம், கிழக்கு முதலான திக்குகளிலும் பால், தயிர், நெய், தேன் முதலியவைகள் அக்னி முதலிய திக்குகளிலும்

52. தக்கோலம், விபூதி, சாம்பிராணி, மஞ்சரி, தேங்காய் பில்வம், நாவல் பாதிரி, வெட்டிவேர், பூங்கொத்து கச்சோலம்

53. புண்ணை பூ, சங்கு புஷ்பம், பில்வம் புலிநகக் கொன்றை, ஊமத்தை ஆகிய பதினாறும் இங்கு சொல்லப்பட்டது.

54. அருகு, கடுகு, மா, நார்த்தை, பலா, வாழை, தாமரை, தாழை, வெண்லோத்ரம் (வெள்ளொளுத்தி)

55. கரும்புச்சாறு, பொறி, சண்பகம், சந்தனாதி வாசனைத் தைலம், நீவாரம், குங்குமம், எள், ஸத்துமாவு ஜடாமாஞ்சி, சிற்றேலம்.

56. மாதுளை, சந்தனம், அகில், விளாமிச்சை, மஞ்சள்பொடி இவை கலந்த திரவ்யங்களாகும். ஐந்து கலச ஸ்னபநத்தில் பஞ்ச பிரம்மங்களை ஈசானத்தை விட்டு மற்ற பிரம்ம மந்திரங்களை பூஜிக்க வேண்டும்.

57. எட்டுகலசங்களில் வித்யேசர்களை பூஜிக்க வேண்டும். வெளியில் மூர்த்தீச்வரர்கள், நடுவில் வாம தேவர் முதலியவர்களையும் பூஜிப்பது இருபத்தி ஐந்து எண்ணிகையுள்ள கலச பூஜையாகும்.

58. எட்டு கணேச்வரர்கள் வெளியில், அங்குஷ்ட மாத்ரர் முதலான எட்டு புவனாதிபதிகளையும் கிரோதனன் முதலான எட்டு எண்ணிக்கையுள்ள சத்ருத்ராதிபர் களையோ பூஜிக்க வேண்டும்.

59. ஸ்நபனத்தில் நாற்பத்தி ஒன்பது கலசத்திற்கு தேவதாபூஜை முறை சொல்லப்பட்டது. முப்பத்தி ஆறு பதங்கள் செய்து நடுவில் உள்ள நான்கு அம்சத்தை விட்டுவிட வேண்டும்.

60. முப்பத்தி இரண்டு பதங்களில் பாத்யம் முதலியவைகளை வைக்கவேண்டும். தெற்கில் அரைபாக அளவு ஆரம்பித்து, வடக்கில் அரை பாகம் அளவு வரையில்

61. இங்கு சொல்லப்படாததை நாற்பத்தி ஒன்பது கலச பூஜையைப் போல் சமமாக எண்பத்தியோரு கலச ஸ்னபநமுறை அறிவிக்கப்படுகிறது.

62. நூற்றி எட்டு கலச பூஜை முறைக்கும் மூன்று வகைகள் உள்ளன. சந்தனம், அகில், கீழாநெல்லி, கச்சோலம், புஷ்பம், பத்ரங்கள்.

63. கற்பூரம், வெட்டிவேர், மரிக்கொழுந்து, ஜடாமஞ்சி, சிற்றேலம் அருகம்பில் ஆவரண திரவ்யங்கள் 12 ஆகும்.

64. சண்பகம், சிறுகுறிஞ்சி, தாமரை, கோரோசனை, பில்வம், யவை, வன்னி அருகு தக்கோலம் துங்குமுஸ்தை.

65. நெல்லிப்பழம், வாழைப்பழம், பில்வம், நிலத்தாமரை, சித்தரத்தை செவியம், பொரசு, வெள்ளெருக்கு, அரளி.

66. தாழம்பூ, தும்பப்பூ, ஊமத்தை, லோத்ரம், நாயுருவி, அர்ஜுநம், இச்சி, யானை திப்பிலி, விஷ்ணுகிராந்தை.

67. அரசு, நாகபுஷ்பம் நான்காவது ஆவரண திரவ்யமாகும். துளசி, ஆணைவணங்கி, பெருங் குரும்பை, தேஜநீ என்ற திரவ்யமும்.

68. வாயு விளங்கம், சீரகம், கருப்பு ஜீரகம், தக்கோலம், தேவதாருபிசின், சந்தனக்குழம்பு, குப்பமேனி, செஞ்சந்தனம்

69. கலப்பை மண், புலிநகம், கொன்றை, வல்லகீ என்ற கொடி, தங்கபுஷ்பம், வெண்டைக்காய், சிப்பி, சங்க நகமென்கிற கந்த திரவ்யம், சர்க்கை பெருங்கோரை கிழங்கு.

70. குங்குலியம், திராøக்ஷ, சர்க்கரை, விஷ்ணுக்ராந்தை, ஆல், விருஷபா என்ற ஒஷதி கிடாரங்காய், நாவல், மனச்சிலை.

71. சங்ககுப்பி, கையாந்தரை, செந்நெல், சிவப்பான சிலாவிகாரம் மாம்பழம், வாழைப்பழம், ஜாதி, பாதிரி வெள்ளொளுத்தி முதலியவைகளை

72. இது ஐந்தாவது ஆவரணதிரவ்யமாகும். வேறுவிதமாக கூறப்படுகிறது. வன்னி, அருகு, எருக்கு, பில்வம், சம்பகம் சங்கு புஷ்பம்.

73. நாயுருவி, விஷ்ணுகிராந்தி, கருவூமத்தை, நந்தியாவட்டை, வெண்தாமரை.

புன்னாகம், ஜாதி புஷ்பம், பாதிரி, சிறு குறிஞ்சித் தாழை

74. தாமரை பில்வம், தரைத்தாமரை, தாழம்பூ, துளசி, (அரளீ) மல்லிகை மற்றும் கருப்புக்கொடி நாயுருவி புஷ்பம், விஷ்ணுகிராந்தி, கருவூமத்தை, நந்தியாவட்டை, வெண்டாமரை இவைகளும்.

75. நெரிஞ்சல், தண்ணீர்முட்டான், நீர் வணங்கி, பெருந்தும்பை, தும்பை, பெருங்குமிழிஞ் செடி, குமிழிஞ் செடி

76. இந்த்ரவல்லி, பில்வம், நெல்லிக்காய், கடுக்காய், புலிநகக் கொன்றை, மஞ்சமெழுக்கு, சிவதை என்ற திரவ்யம் (மஞ்சள் கீழாநெல்லி)

77. வெண்ணெய், கச்சோலம், தக்கோலம், ஆடாதொடை, என்ற திரவியங்களில் சஞ்சலா, அதிபலா, பலா என்ற தேவர்களை பூஜிக்க வேண்டும், மேலும் சிம்மம், தினை

78. வெள்ளொளுத்தி மரம், மகிழம், புன்னை மரம், நாகபுஷ்பமரம், நாவல் விளாமரம், அரசு, குங்குலியம், கருப்பு ஜீரகம், சத்துமாவு.

79. எள்ளுடன் கூடிய குங்குமம், துங்க முஸ்தை என்ற திரவ்யம், கருப்பு கோரோஜனை, அகில், பில்வம், சந்தன குழம்பு, திப்பிலி, யானை திப்பிலி.

80. கருப்பு அகில், மனஸ்சிலை, செஞ்சந்தனம், கிராம்பு மஞ்சள்பொடி, தகரம் என்ற கந்தகப்பொருள்.

81. கஷாயோதகம், மார்ஜநோதகத்தை ஹ்ருதய மந்திரத்தால் முடிவில் ஸ்தாபிக்க வேண்டும். கஷாயோ தக மாவது: நான்கு பாலுள்ள மரப்பட்டையால் நீரூடன் கலந்து ஸ்தாபித்து பூஜிப்பதாகும்.

82. மா, நாவல், மரப்பட்டை அதன் சாரமும் சொல்லப்படுகிறது. அருகு, எள், தர்ப்பை நுனி இவைகளுடன் தீர்த்தத்துடன் கலந்து பூஜிப்பது மார்ஜநோதகமாகும்.

83. எண்பத்தி ஒரு குடங்களில் அதிபலர்வரை பூஜிக்க வேண்டும், பாத்யம், ஆசமனம், அர்க்யம், பஞ்ச கவ்யம் திக்குகளிலும், விதிக்குகளில்

84. தயிர், நெய், தேன் பால் இவைகøளை ஆக்னேய திக்கில் வைக்க வேண்டும். எள், வில்வம், சந்தனம், துங்க முஸ்தம் என்ற திரவ்யம்.

85. சண்பகம், வெட்டிவேர், கடுகு, தக்கோலம், பழம், கீழாநெல்லியையும், லோகம் என்ற பெயருள்ள கச்சோலம்.

86. லவங்கம், லவங்க பத்ரம், பச்சை கற்பூரம், வெளியில் பதினாறு திரவ்யங்களை வைக்க வேண்டும். மூன்றாவது ஆவரணத்தில் ஸத்துமாவை அக்னி பாகத்தில் ஐந்து கடங்களில் ஸ்தாபிக்க வேண்டும்.

87. நெல்லிமுள்ளி, விபூதி, மஞ்சள்பொடி, கோசாணத்தூள், இவைகளையும் தேங்காய், எலுமிச்சை மாதுளை.

88. அதன் வெளியில் அக்னி முதலிய கோணங்களில் ஏழு கலசங்களில் வைக்கவேண்டும். வில்வம், சிறுகுறிஞ்சித்தாழை, விஷ்ணுகிராந்தை முதலியவைகளை முறையாக வைக்கப்படவேண்டும்.

89. வில்வத்தோடு கூடியதாக நான்கு ஒன்பது கலசங்களில் வைக்க வேண்டும். குந்துமணி முதல் நிஷ்க அளவுவரை பாத்யம் முதலியவற்றிற்கு தேவையான திரவ்யங்களின் பிரமாணமாகும்.

90. ஒன்று, இரண்டு, மூன்று நான்குபடி வரை பஞ்சகவ்யம் முதலியவைகளுக்கு அளவாகும். முன்கூறிய அளவில் கால் அளவு அல்லது அதில் பாதி மத்யமமாகும்.

91. நெய், எண்ணை அளவும் அவ்விதமே செய்ய வேண்டும். கற்பூரம் குங்குமம் இவைகளுக்கு அளவு விருப்பம்போல் ஆகும்.

92. நடுவில் அஷ்டவித்யேச்வரர்கள் பூஜிக்கதக்கவர்கள். நூறு ருத்திரர்கள் வெளியில் பூஜிக்க வேண்டும். இவ்விதம் மூன்று வகையில் நூற்றி எட்டு கலச முறை வந்துள்ளது.

93. ஒன்பது எண்ணிக்கைகளால் ஒன்பது வியூகங்களோடு இரு திசைகளில் நடுவில் இடைவெளி உடைய இவைகள் எட்டு வாயில்களோடு கூடியதாகவும் எண்பத்தி ஒன்று பூஜிக்கப்படுகிறது.

94. ஆயிரத்தி எட்டு கலச முறை இப்பொழுது சொல்லப்படுகிறது. ஜாதிக்காய், சிற்றேலம், பச்சைக் கற்பூரம், மரப்பட்டைகள், ஏலக்காய், விளாமிச்சை வேர்.

95. இவைகளுடன் கூடியதும் சிவ மந்திரத்தால் அபி மந்திரிக்கப்பட்டதுமான சிவ தீர்த்தத்தால் கும்பங்களையும் வர்த்தனி கலசங்களையும் நிரப்ப வேண்டும்.

96. பாத்யம், ஆசமனம், அர்க்யம், பஞ்சகவ்யம், தர்ப்பை தண்ணீர், பால், தயிர், நெய் இவைகளை முதல் ஆவரணத்தில் வைக்க வேண்டும்.

97. தேன், யவை, வெல்லம், தர்ப்பை, வாழைப் பழம், கடுகு, தேங்காய், மஞ்சள், மாதுளை.

98. பொறி, மாதுளை, ஸத்து, மா, பலா, விபூதி இவைகள் நடுவில் உள்ள இருபத்தி ஐந்துக்கும் இந்த திரவ்யங்கள் பதினாறு ஆகும்.

99. ரத்னோதகம் லோஹோதகம், தாதூதகம் இவைகள் மற்றும் கந்தோதகம் (சந்தனதீர்த்தம்) முன்பு சொல்லப்பட்ட இவைகள் முறையாக கிழக்கில் உள்ள வியூஹங்களில் இரண்டு கோணங்களில் விடப்பட்டதாக ஸ்தாபிக்க வேண்டும்.

100. மிருதோதகம், மார்ஜனோதகம், பரிமார்ஜனோதம், பத்ரோதகம், புஷ்போதகம் இவைகளை தெற்கிலும், மேற்கில் மான்யோதகம் அஸ்த்ரோதகம், பலோதகம்

101. கஷாயோதகம், ஆட்யோதகம் என்று வைத்தல் வேண்டும். வடக்கில் காந்தம், மூலோதகம் பிரம்ம கூர்ச்சம், சாந்த்யோதகம், வல்கலோதகம் என்பனவாகும்.

102. மாணிக்கம், இந்த்ர நீலம், முத்து, வைடூர்யம், வைரம், புஷ்பராகம், பவழம், ஸ்படிகம், மரகதம் இவைகளையும் சேர்த்து நவரத்னமென்றும் அதில் ஐந்தை

103. உடையது பஞ்சரத்னமென்று சொல்லப்படுகிறது. முதலில் கூறப்பட்ட நவரத்னமோ அல்லது பஞ்சரத்துடனோ கூடிய ஜலம் ரத்னோதகம் எனப்படும். அடுத்து லோஹோதகம் கூறப்படுகிறது. பஞ்சரத்னம் : மாணிக்கம், இந்தரநீலம், வைடூர்யம், பவழம், முத்து இவைகளாகும்.

104. தங்கம், வெள்ளி, தாமிரம், இரும்பு, தகரம், ஈயம் பித்தளை வெண்கலம் இவைகளுடன் தீர்த்தம் சேர்ந்தது லோஹோதகம் எனப்படும்.

105. சவுராஷ்டிரம், அஞ்சனம் என்ற கருப்புப் பொடி, மை, மஞ்சள் ஹரிதாளம், மனச்சிலா, கோரோஜனை இவைகளுடன் நீர் கலந்து தாதூதகம் எனப்படும்.

106. நெல், வரகு, செந்நெல், திணை, எள், கடுகு, சாமை, யவை இவை எட்டும் பீஜோதகம் எனப்படும்.

107. வெண்ணை, பச்சை கற்பூரம், அகில், ஏலக்காய், நாகப்பூ, கீழாநெல்லி, விளாமிச்சைவேர், ஜாதிக்காய், கோரைக்கிழங்கு.

108. குங்குமப்பூ வெட்டிவேர், கோரோஜனை, கச்சோலம், ஜாதிக்காய் இவைகளை பொடிசெய்து கலக்கப்பட்ட ஜலம் கந்தோதகம் எனப்படும்.

109. மலை மண் ஆற்றுகரை மண், புற்றுமண், நண்டுவளைமண், காளை முட்டிய மண், ஸமுத்திர மண், நல்ல இடத்திலுள்ள மண், யானை தந்த மண்.

110. இந்த எண்வகை மண் கலந்த நீர்,மிருதோதகம் என்று கூறப்பட்டுள்ளது. நெரிஞ்சில், சிறு குறிஞ்சித்தாழை, விஷ்ணுகிராந்தம், யானை வணங்கி

111. கருநெய்தல், வாகை, மஞ்சள் இவைகளுடன் கூடியது மார்ஜனோதகமாகும். அருகு, தளிர், தாமரை, தர்ப்பை நுனி, வெண் கடுகு இவையும்

112. குமிழஞ்செடி, யானை வணங்கி ஆகியவைகளுடன் கூடியது பரிமாணோதகம் என்று கூறப்பட்டுள்ளது. துளசி, வில்வம், தமாலவிருக்ஷ புஷ்பம், ஜடாமாஞ்சி

113. நாயுருவியோடு கூடியது பத்ரதோயம் எனப்படும். தாமரை, செந்தாமரை, பாதிரி, சண்பகம் இவைகளும்

114. புன்னை, மருதாணி, நார்த்தை, நந்தியா வட்டை, மல்லிகை, வெள்ளெருக்கு, மகிழம்பூ இவைகளோடு கூடியது (புஷ்பதோகம்) புஷ்போதகம் எனப்படும்.

115. கீழாநெல்லி, பெருங்கோரை, தங்கம், சந்தனம், குங்குமம் (பூ) பச்சை கற்பூரம், விளாமிச்சை வேர், இவைகளுடன் கூடியது மாந்யோதகம் எனப்படும்.

116. சூலம், கபாலம், மான், வில் கோடாரி, பாசம், அக்ஷமாலை இவைகளை தங்கத்தால் செய்யப்பட்டதாக தீர்த்தத்துடன் சேர்ப்பது அஸ்திரோதகமாகும்.

117. பலா, தேங்காய், மாதுளை இரண்டு வகை, நார்த்தை இரண்டு வகை, வாழை முதலியன பலோதகம் எனப்படும்.

118. பொரசு, அத்தி, அரசு நாயுருவி, இச்சி, பாதிரி, நாவல் ஆகிய இந்த பட்டைகளோடு கூடியது கஷாய உதகம் ஆகும்.

119. தகடு சம்பந்தப்படுத்த மூன்று திரவ்யங்கள் மூன்று வகை மெழுக்கு, மூன்று சந்தன திரவ்யங்களுடன் கூடியது ஆட்யோதகம் எனப்படும்.

120. சூர்ய காந்தம், சந்திர காந்தம், அயஸ் காந்தம், பிராமகம், நிகுந்தம் என்ற காந்தம் ஆகிய ஐந்தும் காந்தோதகம் என்று சொல்லப்படும்.

121. விளாமிச்ச வேர், வெட்டிவேர், பீவரி என்ற ஒரு வகையான வேர் தாமரை புஷ்பம் சந்தனம் இவைகளுடன் கூடியது மூலோதகமாகும்.

122. கோமூத்ரம், கோமயம், பசும்பால், பசுந் தயிர், நெய் தர்ப்பை - தண்ணீர் இந்த ஆறு பொருட்களோடு கூடியது பிரம்ம கூர்ச்சம் எனப்படும்.

123. மயில்தோகை, பூவரச மரப்பட்டை, கோரோ சனை, கையாந்தகரை ஆனை வணங்கி இவை ஐந்தும் சேர்ந்தது வல்க லோதகம் எனப்படும்.

124. அக்னி மூலையிலிருந்து முறையாக எண்ணெய், பால், தயிர், நெய் இவைகளை வைக்க வேண்டும். நடுவில் உள்ள கலச திரவ்யம் நாற்பது வியூஹங்களுக்கு ஆகும்.

125. பில்வம், குமிழஞ்செடி, தர்பம், மரிக்கொழுந்து, செந்நெல், சம்பகம் விபீதை, நெரிஞ்சில் இவைகள் எட்டும் கர்பாவரண திரவ்யங்களாகும்.

126. சிவப்பு தாமரை, வன்னி, தாமரை, நந்தியாவட்டை, நாயுருவி, அருகு, அரளி, ஸுரஸம் என்ற புஷ்பம்

127. யவை, தும்பைப்பூ, விஷ்ணுகிராந்தை மல்லிகை, ஜாதிபுஷ்பம், பில்வம், வெள்ளெருக்கு, ஓரிதழ் தாமரை.

128. இந்த திரவ்யங்கள் பதினாறும் ஒவ்வொரு வியூகத்திற்கும் மூன்றாவது வரிசையாக வரும். அடுத்து விருத்த கிரமம் சொல்லப்படுகின்றது. சிவகும்பத்தை (வட்டவடிவமாக) நடுவிலும்

129. இதற்கு இடதுபக்கம் வர்த்தனியாகும். ரத்னங்களை எட்டிலும் போடவேண்டும். மாணிக்கத்துடன் கூடிய பஞ்ச ரத்னங்கள் சிவகும்பத்தில் போடவேண்டும்.

130. கர்ணிகையின் வெளியிடத்திலும் தள மத்யத்தில் எட்டு திக்குகளிலும் பாத்யம் முதலியவைகள் ஆயிரம் கலச ஸ்நபனத்தின் வெளியில் வைக்க வேண்டும்.

131. பாத்யம், ஆசமனம், அர்க்யம், பஞ்ச கவ்யம், தர்ப்பை ஜலம், பால், தயிர், நெய் இவைகளை முதல் சுற்றில் வைக்க வேண்டும்.

132. இரண்டாவது ஆவரணத்தில் பதினாறு எண்ணிக்கையுள்ள பதங்களில் தங்கமும், இருபத்தி நான்கு எண்ணிக்கையுள்ள மூன்றாவது ஆவரணத்தில் தேங்காயையும் வைக்க வேண்டும்.

133. நான்காவது ஆவரண முப்பத்தி இரண்டு கடங்களில் கரும்புச்சாறு ஸ்தாபித்து பூஜிக்க வேண்டும். ஐந்தாவது ஆவரண ஐம்பத்தி ஆறு கடங்களில் தேனை ஸ்தாபித்து பூஜிக்க வேண்டும்.

134. அறுபத்தி நான்கு வெளியில் பலமலர்களோடு கூடியதாகவும் ஆறாவது ஆவரணத்தில் பூஜிக்க வேண்டும். எழுபத்தி இரண்டு கலசங்களில் எல்லா விதைகளையும் போட்டு ஏழாவது ஆவரணத்தில் பூஜிக்க வேண்டும்.

135. எட்டாவது ஆவரணத்தில் எண்பத்தி நான்கு கும்பங்களில் வாழைப்பழத்தையும் ஒன்பதாவது ஆவரணத்தில் தொண்ணூற்றி ஆறில் விபூதியையும்

136. பத்தாவது ஆவரணத்திலுள்ள நூறு கலசங்களில், பஞ்சகவ்யமும், நூற்றி நான்கு கலசங்களில் பஞ்சகவ்யமுமாக பதினொன்றாவது ஆவரணத்திலும்

137. 12 ஆவது ஆவரண வெளி நூற்றிஎட்டில் கஷாய உதகமும், பின் உள்ள பதிமூன்றாவது ஆவரணத்திலுள்ள நூற்றி பதினாறில் தாதூதகமும், லோஹோதகமும்

138. வெளியில் உள்ள பதினான்காவது ஆவரணத்தில் உள்ள நூற்றி இருபதில் மிருதோதகம் ஆகும். எல்லா வாசனைகளும், சந்தனம் மற்றும் பொருட்களும் எல்லாவற்றிலும் போடவேண்டும்.

139. நாற்பது வியூஹத்தில் ஒவ்வொர் வியூஹத்திலும் இருபத்தைந்து கலசங்களையோ கடங்களையோ உள்ள வியூஹமாக அமைக்கவேண்டும்.

140. இங்கு வர்த்தனி, சுவர்ணம், கூர்ச்சம், இவைகளோடு கூடியதாக அந்த அந்த திரவ்யங்களுடன் கூடியதாகவும் வைக்க வேண்டும்.

141. திரவ்யங்கள் கலசங்களில் போடும் விஷயத்தில் சதுரம், வட்ட வடிவம் இரண்டுமே சிறந்ததாகும். விஷயத்தில் கூறப்பட்ட திரவ்யங்கள் எல்லாம் கிடைத்து சேர்ப்பது சிறந்த தன்மையை தரும்.

142. பாதியாக இருந்தால் மத்யமம், அதில் பாதி அதாவது கால்பாகம் அதமமாகும். நடுவில் தேவர்கள் வித்யேசர்கள் அதற்குமேல் மற்றகும்பங்களில் மந்திர மஹேச்வரர்களை பூஜிக்க வேண்டும். மத்தியில் சிவனை பூஜிக்க வேண்டும்.

143. அவரே ஆயிரம் நாமங்களால் சிறப்பிக்கப்படுகிறார்கள். ஆகையால் சிவனுடைய பல்வேறு பெயர்களாலேயே பூஜிக்கவேண்டும்.

144. மந்திரம் பொருள் மறைவான அக்ஷரங்களுடன் கூடியதாயும் நான்காம் வேற்றுமையுடனும் பிரணவத்தை முன்னிட்டும், நம: என்ற பதத்தை முடிவில் உள்ளதாயும், ஹோமங்களில் ஸ்வாஹா என்ற பதத்தையும் உபயோகிக்க வேண்டும்.

145. ஆயிரத்தெட்டு என்ற முறையில் ஆசார்யன் வெளிச்சுற்றைவிட வேண்டும். அங்கு தென்கிழக்கு முதலிய நான்கு மூலைகளில் நான்கு வியூகம் ஏற்படுத்த வேண்டும்.

146. உள்ளே உள்ள நாற்கோணங்களில் இவ்வியூ கத்திற்கு வெளியில் இவைகளுக்கு இடைவெளியில் ஹோமத்திற்காக ஸ்தாபிக்க வேண்டும்.

147. அதற்கு வெளியில் பதினாறு வியூஹங்கள் முன்போலவே செய்யவேண்டும். மற்றவை எல்லாம் சமானமாகும். இவை ஐநூற்றி எட்டு ஸ்தானத்தில் ஆகும்.

148. இருநூற்றி எட்டு நடுவில் உள்ள எட்டும் அதன் வெளியில் இருபத்தி ஐந்து கும்பங்கள் திக்குகள், மற்றும் விதிக்குகளில் வைக்க வேண்டும்.

149. வெளியில் பதினாறு எண்ணிக்கை உள்ள தாக திக்கு விதிக்குகளில் வைக்கவேண்டும். எட்டு வியூகங்களாக இருப்பின் இவ்விதம் சொன்ன முறைப்படி ஆகும்.

150. திரவ்யங்களின் அளவு மறுபடியும் விரிவாக சொல்லப்படுகிறது. ரத்னங்கள் உயர்ந்தவைகளாக அதன் தன் அளவால் சொல்லப்படுகிறது.

151. பத்து உளுந்தின் அளவு முதல் நிஷ்கம் என்ற அளவு வரை அதிகரித்ததாக உலோகத்தின் அளவாகும். உலோகத்தின் அளவு எவ்வளவோ அதுவே பாஷாணத்தின் அளவாகும்.

152. நிஷ்கத்தின் கால்பாக அளவிலிருந்து பலம் வரையில் விதை யளவு சொல்லப்படுகிறது. அது வரை அரிசியின் அளவும் சர்க்கரையின் அளவுமாகும்.

153. ஆனால் ஏழு பலம் அளவின் இரண்டு மடங்கு வெல்ல அளவும் வாசனை பொருள் அளவு தாதுக்களை போல் அளவுள்ளதாக சொல்லப்பட்டுள்ளது.

154. பழங்கள், பத்ரசூர்ணங்கள், அதேபோல் பொறி, சத்துமாவு, எள், கடுகு, மஞ்சள் மற்றும் சாணத்தூள் இவைகள் விபூதி அளவுப்படியாகும்.

155. பஞ்சகவ்யம், தயிர், பால் இவைகள் விபூதியை போன்ற அளவாகும். பாலை போலுள்ள அளவையும் அல்லது பாதி அளவிலுமோ நெய்யின் அளவும் பாலின் கால் பாக அளவோ பலம் என்ற அளவினாலோ தேனின் அளவுமாகும்.

156. பழம் இல்லையானால் கிடைத்ததை வைத்து மீதியை தண்ணீரால் நிரப்ப வேண்டும்.

157. நெய்யை போல எண்ணெயின் அளவாகவோ எல்லாம் பாத்திர அளவை பொறுத்தோ சிறந்தது. அரை, கால், அல்லது அதில் பாதி அளவாகவோ ஆகும். புஷ்பம் கை அளவாகும்.

158. மூலிகைகள் அதற்கு இணையாகவும் மருந்துகளில் அதன் உருவ அளவேயாகும். அதேபோல் அதன் பாத்திர அளவுமோ ஆகும். வேர் அளவு சந்தனத்தை போல ஆகும்.

159. காய்ந்த புஷ்பம், பழம், இவைகளின் அளவும் சந்தனத்தை போலாகும். மண் அளவும் முன் போலவே சந்தனத்தை போல் என்று மற்றவையும் இப்படியே என ஊகிக்கலாம்.

160. வைரம் எல்லா ரத்தனங்களுள்ளும் உலோகங்களுக்கும் ஸ்வர்ணமுமாகும். யவை எல்லா விதைகளுக்கும் தாதுக்களுக்குள் ஹரிதாளமும் சிறந்தது ஆகும்.

161. மூலிகைகள் இல்லாவிட்டால் (ஸஹதேவி) நற்குறிஞ்சிதாழை சிறப்பாக சொல்லப்படுகிறது. பழங்கள் இல்லையெனில் வாழைப்பழம் பத்திரங்கள் இல்லை யானால் பில்வ பாத்திரங்கள் ஆகும்.

162. புஷ்பங்களில் நீலோத்பலம் அல்லது தாமரையையோ சொல்லலாம். எல்லா வாசனை பொருட்களின் சந்தனம் சிறந்தது. மண்களில் தர்ப்பையடிமண் சிறந்ததாகும்.

163. மரப்பட்டைகளில் அரசமரப்பட்டை, கிழங்குகளில் பெருங்கோரை கிழங்கும், சர்க்கரை இல்லையெனில் வெல்லத்தையும், கரும்பு தேன் இவையில்லாவிடினும் வெல்லத்தை கிரஹிக்கலாம்.

164. பழம், புஷ்பம், இவைகள் கிடைக்காவிட்டால் அந்த பத்ரங்களை எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த திரவ்யங்கள் எல்லாவற்றையும் மூலமந்திரத்தால் போட வேண்டும்.

165. பீஜமந்திரத்தினால் மடக்கினாலோ (பாத்திரம்) மாந்தளிர்களாலோ மூடி, ஹ்ருதய மந்திரத்தினால் பலவித வஸ்திரங்களை அணிவிக்க வேண்டும்.

166. வஸ்திரங்களை மிகுந்த கருப்பானவைகளையும் குறைவான வஸ்திரங்களையும் விடுத்து அஸ்திர மந்திரத்தினால் சந்தனம் புஷ்பம், தூபம் இவைகளை அந்தந்த மந்திரங்களாலும் கொடுக்க வேண்டும்.

167. தீபத்தை காண்பித்து லிங்க முத்திரையையும் காண்பித்து கவச மந்திரத்தால் அவகுண்டனம் செய்து ஹோமம் ஆரம்பிக்க வேண்டும்.

168. எல்லா லக்ஷணங்களோடும் கூடிய குண்டத்திலோ ஸ்தண்டிலத்திலோ ஆயிரம் கவச விதானத்தில் ஐநூறு முறை ஹோமம் செய்ய வேண்டும்.

169. குண்டத்திற்கு உரிய முறையில் சொல்லப்பட்டபடி அக்னி ஸம்ஸ்காரங்கள் செய்து சமித், ஆஜ்யம், அன்னம், பொறி இவைகளை முறையாக ஹோமம் செய்ய வேண்டும்.

170. பொரசு, அத்தி, அரசு, ஆல் இவைகளை கிழக்கு முதலான திசைகளிலும், வன்னி, கருங்காலி, நாயுருவி வில்வம் இவைகளை அக்னி பாகத்திலிருந்து முறையாக சமித்துக்களை உபயோகிக்க வேண்டும்.

171. எட்டு பக்ஷத்தில் கூறிய ஸமித்துக்களில் முன்பு கூறப்பட்ட பக்ஷத்தில் கோணங்களை விட்டு விட வேண்டும். முதல் ஐந்து சமித்துக்களை எடுத்துக் கொள்ள வேண்டும். வன்னி முதலான சமித்துக்களை விட்டு விடவேண்டும்.

172. நான்கு ஹோம விதானத்தில் பிரதானத்திலோ அல்லது கிழக்கிலோ நூறு அல்லது அதில் பாதி மூலமந்திரத்தால் ஹோமம் செய்ய வேண்டும்.

173. மூலமந்திர ஹோமத்தில் பத்தில் ஒரு பங்கு பஞ்ச பிரம்ம மந்திரங்களால் நேத்ரமந்திரங்களால் அதே போல் ஆறு அங்க மந்திரங்களாலும் ஹோமம் செய்து திவார பூஜை செய்து உள்ளே செல்ல வேண்டும்.

174. கர்ப்பகிருஹத்தில் நுழைந்து லிங்கத்தை சுத்தி செய்து ஸங்கல்பம் செய்து பீடத்தை அர்ச்சித்து மூர்த்தியை ஆவாஹனம் செய்து பூஜை செய்ய வேண்டும்.

174. பஞ்ச பிரம்ம மந்திரங்களால் ஸகளீ கரணம் செய்து பிறகு வித்யா தேஹ கல்பனை செய்ய வேண்டும்.

175. பாத்யம், அர்க்யம், ஆசமனம் இம்மூன்றையும் கொடுத்து சந்தனம் புஷ்பம், தூபம், தீபம் இவைகளை மூல மந்திரங்களினால் கொடுத்து எல்லா வாத்யங்களோடும்

176. நடனம், பாட்டு இவைகளோடும் சங்க வாத்ய சப்தத்தோடும் வேதம் ஸ்தோத்திரம் இந்த பாராயணத்தோடும் மணி சப்தத்தோடும்

177. ஜய சப்தத்தோடு கூடியதாகவும் சிவ கும்பம் வர்த்தனி இரண்டையும் எடுத்து இறைவனுக்கு எதிரே முக்காலியின் மேல் வைக்க வேண்டும்.

178. கடத்தில் உள்ள இறைவனுக்கும் தேவிக்கும் பாத்யம் முதலியவைகளையும் சந்தனம் புஷ்பம் தூபம், தீபம் இவைகளையும் கொடுத்து

179. ஆசார்யன் வலது கையால் கும்பத்தை மூடியுள்ள மடக்கு அல்லது மாவிலைகளை எடுத்து கூர்ச்சம் புஷ்பம் இவைகளை சிவ மந்திரத்தை சொல்லிக் கொண்டு

180. எடுத்து தத்வ சித்தத்தோடு லிங்கத்தின் தலையில் வைக்க வேண்டும். தேவியையும் இறைவனுக்கு இடது பாகத்தில் பூஜிக்க வேண்டும்.

181. சிவமந்திரத்தை நினைத்துக் கொண்டு கும்பதண்ணீரால் இறைவனை (ஸ்தாபனம்) அபிஷேகம் செய்ய வேண்டும். தேவியை பிண்டிகை ரூபினியாக நினைத்து அபிஷேகம் செய்ய வேண்டும்.

182. ஸத்யோஜாத மந்திரத்தினால் பாத்யத்தை இரண்டு பாதங்களிலும் ஈசானமுதல் ஸத்யோஜா தம் வரையிலான ஐந்து மந்திரங்களால் ஐந்து முகங்களில்

183. ஆசமனத்தையும் சிகையில் அர்க்யத்தையும் கொடுக்க வேண்டும். பஞ்சகவ்ய அபிஷேகம் முதலிய ஆரம்பத்திலும் பெரிய மணி சப்தத்தோடு சிரசில் அர்க்யம் கொடுக்க வேண்டும்.

184. எழுப்புதலோடு கூடிய தூபத்தை வைக்கலாம். ஆவரணபூஜை முடிவில் கட்டாயம் தூபத்துடன் கூடியதாக உபஸ்தானம் செய்ய வேண்டும்.

185. பல்வேறுவகையான பழங்கள், பஞ்சகவ்யம், பஞ்சாம்ருதம் இவைகள் இருப்பின் அவைகளால் பரமேஸ்வரனை அபிஷேகம் செய்ய வேண்டும்.

186. வாசனாதி (பன்னீர்) சந்தன தீர்த்தத்தால் பிரோக்ஷித்து சந்தனத்தால் சிவலிங்கத்தை அபிஷேகம் செய்து அர்ச்சனை விதியில் கூறப்பட்டபடி செய்து ஹோமத்துடன் நிறைவு செய்ய வேண்டும்.

187. ஸகள ஸ்நபனம் என்றால் ஸகளஸ் தாபன முறையில் கூறியபடி ஆஸனம் முதலியவைகளை செய்து கும்பத்தில் மூர்த்தியை தியானிக்க வேண்டும்.

188. பஞ்ச பிரம்ம மந்திரங்களால் ஸகளீகரணம் செய்து அந்த கலைகளை அங்கு வைக்கவேண்டும். (நியாஸம் செய்ய வேண்டும்)

189. வித்யா தேஹத்தை கல்பனை செய்து அந்தந்த உருவத்தோடு கூடியதாக இறைவனை தியானம் செய்து ஆசார்யன் பாத்யம் முதலியவைகளை ஹ்ருதயமந்திரத்தினால் கொடுக்க வேண்டும்.

190. சந்தனம் தூபம், தீபம், அர்க்யம் இவைகளை செய்து லிங்க முத்திரையையும் காண்பித்து கவச மந்திரத்தால் அவகுண்டனம் செய்ய வேண்டும்.

191. கவுரியை வர்த்தினியில் பூஜை செய்து யோனி முத்திரை காண்பித்து கவச மந்திரத்தினால் அவகுண்டனம் செய்து ஆவரண தேவதைகளான ருத்ரர்களை பூஜிக்க வேண்டும்.

192. முன்பு சொன்ன முறையினாலும் முறையாக ஸகளமூர்த்தியின் அருகில் சென்று ஆசனம், மூர்த்தி இவைகளால் பூஜை செய்ய வேண்டும்.

193. சகளீகரணம் செய்து வித்யாதேஹ சரீரத்தை கல்பனை செய்துகொண்டு ஸ்நபனம் முதலியவைகளை செய்து பிறகு பாத்யம், ஆசமனம் அர்க்யம் இவைகளையும் கொடுக்க வேண்டும்.

194. சந்தனம், புஷ்பம், தூபம், தீபத்துடன் மற்றும் இவைகளால் உபசாரம் செய்ய வேண்டும். முன்பு போல் குடத்தையும் எடுத்து சென்று சிவனின் ஹ்ருதயத்தில் மந்திரத்தை ஸமர்ப்பிக்க வேண்டும்.

195. அந்தந்த தேவதையின் மந்திரத்தை அந்த தேவியின் ஹ்ருதயத்தில் ஸமர்ப்பணம் செய்ய வேண்டும். அபிஷேகம் செய்த பிறகு பாத்யம் முதலியவைகளை கொடுக்க வேண்டும்.

196. ஈஸ்வரனுக்கு அபிஷேகம் செய்து மீதமுள்ள கடதீர்த்தங்களை ஈச்வரியிடமும் அபிஷேகம் செய்யலாம் அம்பாளுக்கு தனியாகவும் இருக்கும்போது தேவிக்கும் ஸ்தாபித்து அபிஷேகம் செய்ய வேண்டும்.

197. சித்திரத்தில் கண்ணாடி முதலியவைகளான ஸ்வாமிக்கு அதன் பாதத்தின் அடியில் சந்தனம் முதலியவைகளால் ஸ்நபனத்தில் கூறியபடி செய்ய வேண்டும்.

198. தேவியினிடத்தில் ஸ்நபனத்தில் கும்பத்தையோ கரகத்தையோ வைக்க வேண்டும். திரவ்யங்களில் பேதம் இல்லை. தேவதைகளில்தான் பேதம் உண்டு.

199. சாந்தி கலை முதலியவைகள் ஐந்து கும்பம் என்ற தன்மையிலும், ஒன்பதாக இருந்தால் வாமை முதலியவர்களும், தாரிகா முதலியவர்களையும் திக்குகளிலும் பூஜிக்க வேண்டும்.

200. அனந்தன் முதலியவர்களை விதிக்குகளின் கோணங்களில் பூஜிக்க வேண்டும். இது 25 கலச பூஜா முறையாகும். பிருத்வி முதலிய முக்கிய தேவர்களை இடது புறத்திலிருந்து பூஜிக்க வேண்டும்.

201. மேற்படியுள்ள தேவர்களை பெண்பால் உடையதாக பூஜிக்க வேண்டும். இங்கும் பால் முதலியவைகளால் ஸ்நபனம் (அபிஷேகம்) சொல்லப்படுகிறது பிராம்மணர்களே.

202. பால், தயிர், நெய், தேன் பஞ்சகவ்யம், பஞ்சாம்ருதம், கரும்புச்சாறு பழங்கள் எல்லா தான்யம் பொறி சத்துமாவு மற்றும் எல்லாவகை பொருட்களாலும்

203. மஞ்சள் பொடியாலும், பல்வேறு புஷ்பங்களாலும் இளநீர்களாலும் நல்ல பழங்களாலும் சிறந்த இடங்களில் இருக்கின்ற தண்ணீர்களாலும்

204. சந்தனம் மூலிகைகளோடு கூடியதாகவும் சுத்தமான தண்ணீராலும் சந்தனாதி தைலத்தாலும் கங்கை முதலிய புண்ணிய தீர்த்தங்களாலும் முன் சொன்ன முறையில்

205. எல்லா தோஷங்கள் அகலவும் நினைத்தது நடக்கவும் அரசர்களுக்கு வெற்றி ஏற்படவும் சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்ய வேண்டும்.

206. நீண்ட ஆரோக்யம் பெறவும், நீண்ட ஆயுள் பெறவும் எல்லா நலன்களையும் பெறவும் பலம், காந்தி இவைகள் பெற வேண்டும்.

207. நாட்டின் வறுமை போக்கவும், அதன் துஷ்டர்களை அழிக்கவும் நாட்டின் கலகமேற்பட்ட போதும் ஆச்சர்யமான சமயத்திலும் கெட்ட சகுனங்களிலும்

208. எல்லா உலகங்களையும் வசப்படுத்துவதற்கும் யானை, குதிரை, இவைகளின் வளர்ச்சிக்காகவும் அவைகளின் ரோகங்கள் போவதற்காகவும் நோய் உண்டாகமல் இருப்பதற்கும்.

209. சண்டைகளின் முயற்சிக்கும் தன் ஸேனையின் பலத்திற்கும் இறப்பின்மைக்கும் எதிரி சேனையின் குறைவிற்காகவும் பயத்திற்காகவும் மயக்கத்திற்காகவும்.

210. ஆண் பெண் விலங்குகள் மற்றும் அனைத்தின் நலனிற்காகவும் பிறந்த நாளிலோ அரசன் பட்டாபிஷேக நாளிலோ

211. அந்தந்த சந்திராஷ்டம தினங்களிலோ வைநாசிக நக்ஷத்திரத்திலுமோ அந்த கிரஹண காலங்களிலோ மற்றும் அயன விஷுவகாலங்களிலும் பிரதிஷ்டாகாலங்களிலுமோ

212. உத்ஸவம், பவித்ரோத்ஸவம், மரிக்கொழுந்து சாத்துதல், கிருத்திகா தீபம் மற்றும் மாச நக்ஷத்திரங்களிலும்

213. அஷ்டமி அல்லது சதுர்தசி அல்லது (அமாவாசையை) பவுர்ணமி மார்கழி மாதத்தில் சிறப்பான திருவாதிரையிலும்

214. பிராயச்சித்தமாக செயல்களிலும் நவநைவேத்ய கர்மாவிலும் மக்களுக்கு நன்மை தரும் காலங்களிலும் மக்களை காப்பாற்ற வேண்டிய சமயத்திலும்

215. சிறப்பு பூஜை காலங்களிலும் பக்த உத்ஸவ சமயங்களிலும் ஸ்வாமி வீதி யுலா காலங்களிலும் சிறப்பான வேட்டை உற்சவ நிகழ்ச்சிகளிலும்

216. தினமும் மூன்று வேளைகளிலுமோ அல்லது இரண்டு அல்லது ஒன்று என்ற முறையில் ஆசார்யர்கள் இறைவனுக்கு ஸ்நபனம் செய்ய வேண்டும்.

217. முன்பு சொன்ன முறையிலும் சில சிறப்புக்கள் சொல்லப்படுகின்றன. ஓர் கும்பத்தையோ அல்லது ஐந்து கலசங்களை ஸ்தாபித்து

218. முன் சொன்ன திரவ்யங்களுடனோ அல்லது வர்த்தனீ கும்பத்துடனோ பஞ்ச பிரம்மம் கூடிய ஐந்து கலசங்களுடனோ

219-220. ஒரு திரவ்யத்துடனோ அல்லது வர்த்தனி யோடும் இஷ்டமான பொருள்களை நடுவிலும் குறைந்த பொருட்களுடனோ ஓர் திரவ்யத்தை நான்கு திசைகளிலுமோ வெவ்வேறு திரவ்யங்களையுமோ பாத்யம், ஆசமனம், அர்க்யம் பஞ்சகவ்யம் இவைகளை வைத்தோ செய்யலாம்.

221. ஒன்பது கும்ப விதானத்திலும் இந்த முறை சரியானதே முன்பு கூறியவைகளில் குறைந்தாலும் திக்குகளில் பாத்யம் முதலியவைகளை செய்தாலும் செய்யலாம்.

222. தங்கம் முதலிய பாத்திரங்களில் செய்வது மிகவும் சிறந்ததாகும். முன் சொன்ன பாத்யாதி கர்மாக்களிலும் நித்யகர்மாவில் பாத்யாதிகர்மாக்களை செய்வது சிறப்புற்றதாகும்.

223. இருபத்தி ஐந்து கலசபூஜை முறையிலும் தினச்செயல் முறைகளில் சிறப்பு பெற்றதாகும் மிகச் சிறந்த பூஜையில் நூற்று எட்டு வரையில் செய்யலாம்.

224. தினபூஜைக்கு ஸ்நபனம் செய்தாலும் செய்யலாம். சிறப்பு பூஜைக்கு முன்பு சொன்ன முறையும் சிறந்தது.

225. இருபத்தி ஐந்து முதல் ஆயிரத்தெட்டு வரையில் இடையில் சில சிறப்புக்கள் சொல்லப்படுகின்றன.

226. நாற்கோணங்களை சேர்த்தாவது விட்டாவது இறைவனை தண்ணீரால் முன் சொன்ன முறைப்படி அபிஷேகம் செய்ய வேண்டும்.

227. சிரேஷ்டமான பூஜை செய்யுமிடத்தில் ஸ்நபன பூர்வமாக செய்தல் ஆகும். அது சிறந்த பலனை கொடுக்கும். உத்ஸவம் முதலியவைகளில் கார்ய குறைவை விட வேண்டும்.

228. குறைவான பூஜாகாலங்களில் நல்ல கிரியைகள் உயர்ந்ததல்ல. நித்யம், நைமித்திகம், காம்யம் என்று மூன்று விதமாக ஸ்நபனம் படிக்கப்படுகிறது.

229. நித்ய நைமித்திக கார்யங்களில் அனுசரித்து பாபங்கள் போவதற்கு செய்ய வேண்டும். உலக நன்மைக்காக வேண்டும் தான் விரும்பிய பலனுக்காகவும் காம்ய பூஜை செய்ய வேண்டும். தாழ்ந்ததை ஒரு பொழுதும் செய்யக்கூடாது.

230. அவச்யம் செய்ய வேண்டியதை செய்ய வேண்டுமா, வேண்டாமா என்ற சந்தேகம் வருமே யானால் செய்ய வேண்டியதை செய்தால் மேன்மையும் செய்யாத பொழுது குற்றமும் ஏற்படும்.

231. லோகம், சாஸ்த்ரம் இரண்டிற்கும் சமமாக இருக்குமானால் அதை செய்வது நியாயமாகும். லோக சாஸ்திரங்களால் அதற்கு பொருத்தமில்லையானால் சந்தேகத்தை விட்டு விடலாம்.

232-233. கிரியை மந்திரம் இவைகள் சாஸ்திர பேதமாக இல்லாமலிருந்தாலும் கிரியை மந்திரம் இவைகள் பேதங்களுடன் தந்த்ர பேதமும் இருந்தால் ஆகையால் இவை மூன்றுமே சைவசாஸ்த்ரத்தில் செய்ய வேண்டும். மற்ற சாஸ்திரங்களை கூடாது உரிய முறைப்படி சைவ சாஸ்திரத்தில் உயர்வாக கூறாததை வேறு சாஸ்திர உயர்வை ஏற்கலாம்.

234. சாஸ்த்ர விதிக்கும் அனுபவத்தியிருக்குமேயானால் மற்ற சாஸ்திரத்தினால் உபபத்தி கூற வேண்டும். சாஸ்திரத்தில் பிராயசித்தம் முதலியவைகள் விரிவாக சொல்லப்படவில்லை என்றால் பிற சாஸ்த்ரங்களில் இருந்து எடுத்து கொள்ளலாம்.

235. சாஸ்த்ர முறையில் பொருள் நன்கு இருக்கும் பொழுது அதற்கு அங்கமாக ஸ்ருக் ஸ்ருவம் முதலியவைகள் தன் சாஸ்த்ரத்தில் சொல்லப்பட்டபடி ஏற்றுக் கொள்ள வேண்டும். வேறு சாஸ்தரங்களில் இருந்து கூறப்பட்டவைகளை எடுத்து கொள்ளக்கூடாது.

236. இவ்விதம் எல்லாவற்றையும் ஆராய்ந்து எந்த அரசன் செய்கிறானோ அவன் வெகுநாட்கள் சக்ரவர்த்தி யாக இருப்பான்.

237. அவருக்கு நீண்ட ஆயுள் நோயின்மை மனதில் நினைத்த கார்யம் வெற்றி, சந்தோஷம் சிவனிடத்தில் நிலையான பக்தி உடையவராக இருப்பான்.

238. மாறுபட்ட செய்கைகளை கண்டு யார் அலட்சிய படுத்துகிறானோ அந்த அரசன் நிச்சயம் அழிவை அடைவான் இதில் சந்தேகமில்லை.

239. புலன்களை வென்றவரும் ஐந்து கோத்ரத்தினால் பிறந்தவரும் சைவாகமத்தின் ஞானத்தை கரை கண்டவரும் ஆன சிறந்த அனுஷ்டானமுடையவராக ஆசார்யரைக் கொண்டு

240. தன் நாட்டு மக்கள் நன்மைக்காக செயல்களை நிறைவேற்ற செய்ய வேண்டும். ஆசார்யர்களிலே சிறந்த ஆசார்யனை சிவசாஸ்த்ரத்தில் தேர்ச்சி பெற்ற வரை கரஹிக்க வேண்டும்.

241. அவர் மூலமாகவே ஸ்நபனம் முதலியவைகளையும் செய்ய வேண்டும். சிறப்பு பூஜை அவராலேயே நினைத்ததை நிறைவேற்றுவதற்கு அனுஷ்டிக்க பட வேண்டும்.

242. பால், தயிர், நெய், தேன், நெல்லி மாவு, முதலியவைகளால் இறைவனை நன்கு ஸ்நான வேதிகையின் மேல் வைத்து அபிஷேகம் செய்விக்க வேண்டும்.

243. சந்தனம் மற்றும் வாஸனை தீர்த்தத்தால் சிவனை அபிஷேகம் செய்து சுத்த துனியால் ஒத்தி எடுக்க வேண்டும். சந்தனம் முதலியவைகளால் பூசி பட்டு முதலியவைகளால் சிவனை அலங்கரிக்க வேண்டும்.

244. சந்தனம் புஷ்பம், மாலைகள் இவைகளுக்கு பிறகு தூபம் தீபம் முதலிய உபசாரங்களும் கற்பூர ஹாரத்தி தீபாராதனை முதலியவைகளை செய்ய வேண்டும்.

245. ஐந்து வகையான சாதங்கள், பாயசம், சுத்தான்னம் இவைகளுடன் பலவகை காய்கறி பக்ஷணங்கள் மற்றும் பலவித பழங்களுடன் காய்கறிகளுடன் கொடுத்து

246. இவைகளை கொடுத்து தாம்பூலம் முகவாஸம் முதலியவை கொடுக்க வேண்டும். ஏலக்காய், லவங்கம், கற்பூரம், ஜாதிபத்திரி தக்கோல சூர்ணம் மற்றும் வாசனை பொருட்கள்

247. சுண்ணாம்புடன் சேர்ந்தது முகவாஸம் எனப்படும். வணங்கி அனுமதி பெற்று ஹோமத்திற்காக குண்டத்தின் அருகில் செல்ல வேண்டும்.

248. ஸ்மித், நெய், ஹவிஸ், எள், இவைகளால் நூற்றிஎட்டு முறை ஹோமம் செய்து நிறைவாக பூர்ணாஹுதி செய்ய வேண்டும்.

249. அதிலிருந்து விபூதி ரøக்ஷ எடுத்து எஜமானருக்கு கொடுக்க வேண்டும். வேண்டியதை பிரார்த்தித்து மீண்டும் மீண்டும் வணங்க வேண்டும்.

250. ஒரு நாள் முதல் ஆரம்பித்து ஏழுநாள் வரை செய்ய வேண்டும். இருமுறை அல்லது மூன்று அல்லது நான்கு ஐந்து என்ற முறைகளினாலோ செய்யலாம்.

251. ஆறு ஏழு என்ற எண்ணிக்கையானது செயலின் பலன் கிடைப்பதற்கு ஆகும். முன்பு கூறப்பட்ட பலனை கொடுக்க கூடியதானது விசேஷமான பூஜையாகும்.

252. நித்யத்தின் முடிவில் விரோதமின்றி நைமித்திகமாகும். நித்யம் செய்து கொண்டு இருக்கும்பொழுது நைமித்திகம் செய்ய வேண்டி இருந்தால்

253. நித்யத்தை சுருக்கமாக முடித்துக் கொண்டு நைமித்திகத்தை செய்ய வேண்டும். நித்ய சந்த்யாபூஜை அதன் பூஜா காலத்தின் முன்பு நைமித்திகமும் நித்ய பூஜையும் ஏற்பட்டால்

254. நைமித்திகம் தன்னுடைய காலத்தில் நிச்சயமாக செய்யவேண்டும். ஸந்தியை கூட குறுகிய காலத்தில் மற்றொரு கிரியை பகுதியில் செய்ய வேண்டும்.

255. இரு இடங்களிலும் தந்திரங்களாலேயே அனுஷ்டானம் செய்ய வேண்டும். தூபம் நைவேத்யம் வரை உள்ள நித்ய கர்மாவை செய்யவேண்டும்.

256. உரிய காலத்தில் செய்து நைமித்திக செயல்களை பிறகு செய்ய வேண்டும் நைமித்திக பூஜை பெரியதாக இருப்பின் அதன் காலத்தில் ஆரம்பித்து

257. ஒன்று முதலான ஆவரணத்துடன் கூடியதாகவே ஸந்த்யை பூஜை முதலியவைகளை முடித்து ஸந்தியாபூஜை முடிவில் எல்லா கலசங்களாலும் கூறிய முறைப்படி அபிஷேகம் செய்ய வேண்டும்.

258. நைமித்திகம் இரண்டு வந்தால் பெரியதை முதலில் செய்ய வேண்டும். சிறியதை பிறகு செய்ய வேண்டும் அல்லது இரண்டுமே சமமாக இருந்தால் விருப்பப்படி செய்யலாம்.

259. நைமித்திக காலமும் இரண்டு வகைப்படும். சிறியது பெரியது என்ற பிரிவில் அயனம் முதலியவைகள் சிறியவை ஆகும்.

260. கிரஹணம் முதலியவைகள் பெரிய காலங்கள் ஆகும். சூர்யகிரஹணத்தின் ஆரம்பத்திலும் சந்திர கிரஹணம் விடும் பொழுதும் விசேஷ பூஜை செய்ய வேண்டும்.

261. தட்சிணாயனம் வருவதற்கு முன்பும் உத்தராயனம் வந்த பின்பும் விஷுவம் போன்ற காலங்களில் நடுவிலும் ஸ்நபனம் முதலியவைகள் செய்ய வேண்டும்.

262. கன்னி, மிதுனம், மீனம், தனுசு இவைகளில் கடைசியிலும் சிம்மம், விருச்சிகம், கும்பம், விருஷபம் இவைகளில் முதலிலும் ஸ்நபனம் செய்யலாம்.

263. பாதி, ஒன்று அல்லது இரண்டு என்ற முடிவான யாமங்களிலோ அல்லது அரை ஒன்று அல்லது இரண்டு என்ற நாழிகை கணக்கிலோ ஆரம்பத்திலோ முடிவிலோ ஸ்நபனம் முதலிய செயல்களில் எடுத்து கொள்ள வேண்டும்.

264. ஆசார்யனை தங்க அணிகலன்கள் வஸ்திரங்கள் கொடுத்து உபசரிக்க வேண்டும். யாகத்தில் உபயோகப்படுத்தப்பட்ட தங்கம் ஆடைகள் முதலியவைகளை

265. ஆசார்யனுக்காக கொடுக்க வேண்டும். வேறு ஒன்றுக்கும் உபயோகபடுத்தக் கூடாது. யாகத்தில் உபயோகிக்கப்பட்ட பொருள் அணிகலன் மற்றும் யாக மண்டபத்தில் உள்ள

266. ஸ்தண்டிலம் ஆடை, தங்கம், கும்பமோ, அல்லது கலசமோ முதலியவைகள் தோரணம், ஸ்ருக்ஸ்ருவம் அஷ்டமங்களம் நவரத்னங்கள்

267. ஹோமத்திற்கு செய்த ஹவிஸ், நைவேத்யம் மற்றும் கொட்டகை வலயங்கள் அங்கு உபயோகப்படுத்தப்பட்ட பொருட்கள்

268. ஐந்து கோத்ரத்தில் பிறந்த ஆசார்யனுக்கே இவைகளை கொடுக்க வேண்டும். ஓர் நிஷ்கம் முதல் பத்து மடங்கு தட்சிணை ஆசார்யனுக்கு கொடுக்க வேண்டும்.

269. எட்டின் ஒரு பகுதி நிஷ்கதானம் ஹீனமாகும். அதில் பாதி அதமமாகும். ஒன்பது விதமாக தட்சிணை க்ஷீத்ரக்ரமமாக கூடி இறைப்பது கீழ்பட்ட செயலாக கூறப்படுகிறது.

270. தினமும் செய்து வந்தால் அபிவ்ருத்தியையும் மனஸ் சந்தோஷத்தையும் கொடுக்கும்.

இவ்வாறு உத்தர காமிக மஹாதந்த்ரத்தில் ஸ்நபன முறையாகிற நான்காவது படலமாகும்.

 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar