Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
முதல் பக்கம் » நீராஜன விதி
படலம் 7: நீராஜன விதி
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

13 ஜூன்
2012
05:06

ஏழாம் படலத்தில் நீராஜனவிதி கூறப்படுகிறது, அதில் முதலில் நீராஜனத்தின்கால நிரூபணம் பிறகு நீராஜந பாத்ரஸ்தாபநார்த்தம், கர்பக்ரஹம், அர்த்த மண்டபம், ஸ்நபந மண்டபம் பாகசாலை இந்த இடங்களில் ஸ்தண்டிலம் அல்லது மண்டலம் அமைத்து அஸ்த்திர மந்திரத்தால் பிரோக்ஷிக்கவும் எனவும், நீராஜநத்திற்க்காக பலி பாத்ரம் போல் அளவான தீபாதார ஸஹித பாத்திரங்கள் தயார் செய்யவும் என கூறி, அந்தபாத்ர லக்ஷணபிரமாணாதிகள் நிரூபிக்கப்படுகிறது. பிறகு நிஷ்கள பிம்பங்களில் விசேஷமாக நடராஜ மூர்த்தி விஷயத்தில், தீபாதாரத்தில் சேர்க்கவேண்டிய திரவ்யம் பிரதிபாதிக்கப்படுகிறது. தீப பாத்ரதேவதாநிரூபணம் தீப பாத்ர சேர்க்கும் திரவ்யபரிமாண நிரூபணம், நீராஜநம் செய்யும் விதம், பிறகு பஸ்மாவால் திலகதாரண விதி கூறப்படுகிறது. பஸ்மாதாந விதி பிரதி பாதிக்கப்படுகிறது. பின்பு ஜ்வாலாஸஹித, ஜ்வாலைரஹித பாத்ரங்களை எடுத்து பீடாக்ரம், விருஷபாக்ரம் கோபுராந்திகம், விருக்ஷமூலங்களிலோ ஸ்தாபிக்கவும் என்று கூறப்படுகிறது நீராஜன உபயுக்த மானதிரவியங்களை குருவிடம் கொடுக்கவும் அல்லது அவரே வஹ்நியில் தஹிக்கவும் என கூறப்படுகிறது. முடிவில் ராஜாபிஷேககாலம், ஆசார்யாபிஷேக காலத்திலும் நீராஜநம் செய்க என கூறிஅந்த நீராஜந விதியில் விசேஷ பிரகாரம் சூசிக்கப்படுகிறது. இவ்வாறு ஏழாம் கருத்து தொகுப்பாகும்.

1. நீராஜனவிதியை கூறுகிறேன். அந்த நீராஜனம் ராத்திரி வேளையில் செய்ய விதிக்கப்படுகிறது. பிரதோஷம் முதலிய காலங்களிலோ, தூப, தீப முடிவு சமயத்திலோ,

2. உத்ஸவாதி காலங்கள் மற்ற மங்கள கார்யங்களிலோ நீராஜனம் செய்தல் வேண்டும். அதற்காக ஸ்தண்டிலம் அல்லது மண்டலம் அமைக்கவேண்டும்.

3. கர்பகிரஹம் அர்த்த மண்டபம், ஸ்நபன மண்டபம் அதன் முன் மண்டபத்திலோ, மடப்பள்ளி மற்ற இடங்களிலும், அஸ்த்ர மந்திரத்தினால் புரோக்ஷணம் செய்து

4. சுத்தமாக தீபத்திற்கு ஆதாரமாக உள்ள பாத்ரங்களை எடுத்துக் கொள்ள வேண்டும். பலிபாத்ர லக்ஷணப்படி பாத்திரங்களை எடுத்து கொள்ள வேண்டும்.

5.  ஒரு மாத்திரை அளவில் பாத்திர மத்தியில் தீப ஆதாரம் கல்பிக்க வேண்டும். கால் அங்குலம் அதிகரிப்பால் ஒன்பது அங்குலம் முடிய வேண்டும்

6. விஸ்தாரமாகும், விஸ்தார ஸமமாகவோ, அதன் பாதி அளவாகவோ உயரமாகும். எட்டாக பிரிக்கப்பட்ட மத்யம பாகத்தில் ஒன்பது விதமான அளவாகும்.

7. இரண்டு யவை அளவிலிருந்து அரையவை யளவு அதிகரிப்பால் மாத்ராங்குலம் வரை பாத்ர விளிம்பின் அளவாகும். பாத்ர அளவிற்கு தகுந்த கனமும், அரை பாக மாத்ரையளவு ஓட்டையுடன் கூடியதாக இருக்க வேண்டும்.

8. தாமரைப்போல் உருவமாகவும், பாலிகை பாதம் போலும் கருவூமத்தை பூபோலவோ, சராவம் போல் (மடக்கு) உருவமாகவோ அமைக்கலாம்.

9. நான்கு, எட்டு, இதழுடன், கூடியதாகவும், ஸர்வாலங்காரத்துடன் கூடியதாக ஒரே பாத்திரத்தில் ஒரு தீபாதாரம், ஐந்து தீபாதாரமாகவோ

10. ஒன்பது தீபாதாரமாகவோ செய்ய வேண்டும். அவைகள் இடைவெளியுடன் சேர்ந்ததாக வேண்டும் மாவினாலோ அன்னத்தினா<லுமோ தேவனுக்காக தீபாதாரங்களை அமைக்க வேண்டும்.

11. விசேஷமாக நடராஜருக்கும், மற்ற பிம்பங்களுக்கும் தேவிக்கும் நீராஞ்ஜனம் செய்யலாம். ஓரிடத்தில் எள் மற்றும் கடுகு, உப்பு இவைகளையும்

12. பருத்தி விதையும், கோமயம், மா வேண்டும், பல வர்ணமுள்ள அன்னங்களுடன் ஆல், அரசு இவைகளையும்

13. கிழக்கு முதலிய திக்குகளிலும், அக்னி முதலிய திக்குகளி<லும் வரிசையாக ஸ்தாபிக்க வேண்டும், நடுவில் ஒரு தீபபாத்திரமோ ஐந்து தீபபாத்திரமோ ஸ்தாபிக்க வேண்டும்.

14. சந்தனம், அர்க்யம், புஷ்பம், விபூதி முதலியவைகளை ஆக்னேயாதி விதிக்குகளில் ஸ்தாபிக்க, எல்லா இடத்திலும் ஒன்பது எண்ணிக்கையுடைய ஜ்வாலை உடைய தீபங்களை ஸ்தாபிக்க வேண்டும்.

15. அந்த தீபங்களை நெய்யுடனோ, எண்ணையுடனோ கூடி பிரம்ம மந்திர, அங்க மந்திரத்துடன் பிரம்மாவின் மந்திரங்களை நியாஸம் செய்து திக்பாலகர்களையோ மூர்த்தி, மூர்த்தீஸ்வரர்களையோ அர்ச்சிக்க வேண்டும்.

16. அக்னி தேவருடன் எட்டு வஸுக்கள், வாமை முதலிய சக்திகள், ஐந்துகலை, ஐந்து பூதங்கள், அதன் காரணேஸ்வரர்களான பிரும்மாதி தேவர்கள் ஆகியோர்

17. பாத்ராதிதேவர்கள் என கூறப்பட்டுள்ளார்கள். தீபதேவதை அக்னியாகும். கால் ஆழாக்கு முதல் ஆழாக்கு விருத்தியாக (அதிகமாக) மரக்கால் ( குறுணி) அளவுவரை

18. எள்ளின் அளவாகும். கர்த்தாவின் விருப்பத்திற்கிணங்க பாத்ரங்களின் அளவாகும். பொதுவான நிரீக்ஷணம் முதலிய ஸம்ஸ்காரங்களை செய்து முறைப்படி துதித்து

19. ரம் என்ற வன்னி பீஜத்தை ஸ்மரித்து, தீபத்தை தீபத்தினால் யோஜிக்க வேண்டும் (தீபமேற்றவும்) ஸர்வ வாத்யத்துடனும், சங்ககோஷத்துடனும்

20. பாட்டு, நிருத்தத்துடன் கூடி ஸ்த்ரீகளையோ பரிசாரகர்களையோ எடுத்துக்கொண்டு வரச் சொல்லி,

21. இறைவனுக்கு தீபத்தை முக்காலியின் மேல் ஸ்தாபித்து பூஜிக்கவும். ஸத்யோஜாத மந்திரத்தால் பாத்யம் ஹ்ருதயமந்திரத்தால் ஆசமனம்

22. ஸ்வபீஜத்தால் எல்லா தீபங்களை கந்தாதிகளால் அர்ச்சித்து ஹ்ருதய மந்திரத்தால், ஏக வாரமோ, மூன்று தடவையோ இறைவன் தலைக்கு நேராகச் சுற்ற வேண்டும்.

23. ஹஸ்தங்களால் திரவ்யங்களை எடுத்து அந்த தீபபாத்ரங்களை பூஜிக்க வேண்டும். ஆத்மதத்வாதி மந்திரங்களால் சிஷ்யகரத்தில் தீபத்தை கொடுக்க வேண்டும்.

24. சிஷ்யனும் தீபத்தை கிரஹித்து வணக்கத்துடன் கூடியதாக நுழையவும். பிறகு சுத்தமானதும், வெண்மையானதும், நல்லவாஸனையானதும் மணலில்லாததுமான

25. விபூதியை கையினால் எடுத்து சிவனுக்கு எதிரில், மூன்று முறை சுற்றி பிறகு தீபமத்தியில் சேர்க்க வேண்டும்.

26. அங்குஷ்ட (கட்டைவிரல்) அநாமிகை (மோதிரவிரல்) விரலால் விபூதியை பஞ்ச வக்த்ர, நெற்றி, ஹ்ருதயம், கைகள் இவைகளில் வரிசையாக திலக மிட வேண்டும்

27. தேவிக்காக பீடத்திலும், இடது பாகத்திலும் திலகமிடவும் தேவீ உருவ அமைப்போடிருந்தால் தேவீ முன் பாகம் நெற்றியில் திலகம் இட வேண்டும்.

28. கழுத்து பாகத்தில் மூலமந்திரத்தினாலோ ஹ்ருதய மந்திரத்தினாலோ திலகமிட வேண்டும். உற்சவ பிம்பத்தில் நெற்றி ஹ்ருதயம், கை பிரதேசத்தில் திலகமிட வேண்டும்.

29. அந்த விபூதியை எடுத்து கொஞ்சமாக சண்டேச்வராதிகளிடத்திலு<ம் பக்தர்களிடத்திலும் உலோக பிம்பத்திலும் திலகமிட வேண்டும்.

30. பிறகு பக்த ஜனங்களுக்கும் விபூதி கொடுக்க வேண்டும். ஸர்வாலங்காரயுதமாக தேசிகர்கள் முன்போல் பாத்திரங்களை எடுத்து

31. ஜ்வாலையோடோ, ஜ்வாலையில்லாமலோ, சிவாலயத்திலிருந்து எடுத்து பீடமுன்பாகவோ, விருஷபத்தின் முன்பாகவோ கோபுர சமீபத்திலோ

32. மற்ற விருஷ மூலத்திலோ அந்தி தீபங்களை முறையாக வைக்க வேண்டும். காற்றாலும், நெருப்பாலும், தீபங்களை தஹிக்க வேண்டும். திரவ்யங்களை குருவிற்கு அர்ப்பணிக்க வேண்டும்.

33. எள்ளு முதலிய திரவ்யங்களின் அளவு விருப்பப்படி இருக்கலாம். யதேஷ்டமாக ராஜாக்களுக்கும், நீராஜனம் செய்யலாம். அதற்கு தேவதை அக்னி.

34. ராஜாபிஷேக காலம், ராஜவெற்றிக்கும், தேசிகாபிஷேக (ஆசார்ய அபிஷேகம்) காலத்திலும் பகலில் தீப பூஜையின்றியும்

35. தண்டுலங்களால் செய்க, ராத்ரியில் தீபத்துடன் கூடியதாக நீராஜந விதி செய்ய வேண்டும்.

இவ்வாறு உத்தர காமிக மஹாதந்த்ரத்தில் நீராஜனம் செய்யும் முறையாகிற ஏழாவது படலமாகும்.

 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar