Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
முதல் பக்கம் » கிருத்திகா தீபாவளி விதி
படலம் 8: கிருத்திகா தீபாவளி விதி
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

13 ஜூன்
2012
05:06

எட்டாம் படலத்தில் கிருத்திகாமாஸ தீபாரோபண விதி படலம் கூறப்படுகிறது. முதலில் தீபாரோபண கால நிர்ணய பிரகாரம் நிரூபிக்கப்படுகிறது. அதற்காக நட்சத்ரதிதி நிர்ணய பிரகாரம் வர்ணிக்கப்படுகிறது. பிறகு அங்குரார்ப்பணம் செய்க என கூறப்படுகிறது. தீபா ரோபணத்தின் முன்தினம் அதிவாஸம் செய்தல் வேண்டும். தீப தண்டஸ்தாபன யோக்ய ஸ்தான நிரூபணம், தீபதண்டபிரமாண வாக்யம், தீபதண்டயோக்ய விருக்ஷ நிரூபணம். தீப தண்டத்தில் கீலயோஜநபிரகாரம், அதில் கீலபிரமாணம், கீலபிரமாண வாக்யம் பத்ர தாரணத்திற்கு பிரதிகீலம் சக்ரயோஜந பிரகாரவர்ணணம், பிரதி சக்ரம், தீபிகா யோஜநபிரகார நிரூபணம், தீபிகா ஸங்க்யா வாக்யம், தீபதண்டத்தின் வெளியில் காய்ந்ததான தென்னங்கீற்றுகளால் ஆச்சாதனம் செய்யவேண்டும் என்ற தான விஷயங்கள் கூறப்படுகிறது. பிறகு தீபதண்டத்தில் தக்ஷிண பாகத்தில் தண்டாரோஹ ஸித்திக்காக த்வார கல்பந விஷயத்தில் கல்ப, அனுகல்ப, உபகல்ப மென்றதான மூன்றுவிதம் நிரூபிக்கப்படுகிறது. தீப தண்டஸ்தாபன விஷயத்தில் மாலாகாரமான உருவபேதம் வர்ணிக்கப்படுகிறது. பிறகு ஆலயத்தில் தீபாரோபணம் எங்கெங்கு செய்யவேண்டும் அந்தந்த ஸ்தானங்களின் பெயர் நிரூபிக்கப்படுகிறது. அதில் கிராமாதிகளில் கிராம வெளியில் தீபாரோபணம் செய்ய வேண்டும் என சூசிக்கப்படுகிறது. பிறகு முன்தினமே அதிவாஸம் செய்யவேண்டும் என்ற சூசகத்திற்காக அதிவாஸகர்ம நிரூபணம், அதிவாஸ தீபதண்டஸ்தாபனம் அதனடியில் வேதிகல்பன பிரகாரம் சில்பி விஸர்ஜனத்திற்கு பிறகு அங்கு செய்ய வேண்டிய ஸம்ஸ்கார நிரூபணம், ஹோமவிதி ஆகிய விஷயம் நிரூபிக்கப்படுகிறது.

அதிவாஸத்திற்கு பிறகு இரண்டாம்நாள் நான்கு திக்கிலும் விதிக்கிலும் பந்தல்கள் அமைக்கவும் என கூறி பந்தலமைப்பு பிரகாரவர்ணம் சூர்யன் மறைந்த சமயமான சாயங்காலத்தில் தீபதண்டத்தை பூஜித்து அதில் வஸ்த்ர யுக்ம வேஷ்டநம், பிறகு பந்தலில் ஸ்தண்டிலங்களில் குண்டங்களிலோ அதிவாஸ ஹோமத்துடன் ஹோமம் செய்க என கூறி அங்கு விதிக்கப்பட்ட ஹோம விதி பிரதிபாதிக்கப்படுகிறது. பூர்ணாஹூதி பிரதான முடிவில் எல்லா தீபத்தையும் ஒன்று கூட்டி பாத்திரத்தில் ஸ்தாபனம் பிறகு ஸர்வாலங்கார யுதமாயும் பலவிதவாத்ய ந்ருத்த ஸம்யுதமாயும், பேரயாத்ரா புரஸ்ஸரமாயும், தீபதண்டத்தில் தலையிலிருந்து பாதம் வரை தீபா ரோபணபிரகாரம் நிரூபிக்கப்படுகிறது. அதில் பேர யாத்ரையின்றி தீபாரோபணம் விதேயமென பக்ஷிந்தரம் சூசிக்கப்படுகிறது. அங்கு தீபாரோபண கர்த்தாவான பரிசாரகருக்கு தேசிகனால் வஸ்த்ராதிகளால் பூஜைசெயற்பாலது என கூறப்படுகிறது. ஜ்யோதிர்லிங்கத்தை அனுசரித்து முன்புகல்பிக்கப்பட்ட கூடங்களின் தஹநம் விதேயம் என கூறப்படுகிறது. கூட தஹநமின்றி மற்ற கர்மாவை ஆசரிக்கவும் என பக்ஷõந்தரம் சூசிக்கப்படுகிறது. தோரண கீழ்பாகத்தில் தேவனை தீபதண் பிரதட்சிணம் செய்து ஆலய பிரதட்சிண பூர்வமாக ஆஸ்தான மண்டபம் அடைய வேண்டும். ஆலயங்களில் எல்லா இடத்திலும் தீபா ரோபணம் செய்ய வேண்டும். பிறகு பரிவேஷ கிரமமாக தேவனை பேரஸ்தானத்தை அடைவிக்க வேண்டும். பிறகு பேரம், லிங்கத்திற்குமாக நவகலசஸ்நபனம் செய்யவும் என கல்பிக்கப்பட்டுள்ளது. பின்பு தேங்காய் திருவலுடன் கூடிய அவலை ஈஸ்வரனுக்கு நிவேதனம் செய்யவேண்டுமென தீபாரோபணகிரியையில் பூஜா செயல்கள் விளக்கப்பட்டுள்ளது. இந்த தீபாரோபணகிரியை அங்குரார்பணம் இன்றியும் செய்யலாமென கூறப்பட்டுள்ளது. ஆசார்யர்களுக்கு தட்சிணாதானபிரகாரம் கூறப்படுகிறது. இந்த தீபாரோபண கர்மா ராஜகிருஹம், கிராமாதிகளிலும் செய்யவேண்டும், ரோக நிவ்ருத்திக்காக கோசாலையில் தீபாரோபண கர்மா செய்யவேண்டும். முடிவில் தீபாரோபண கால விஷயத்தில் நட்சத்ர, திதிநிர்ணய பிரகாரம் கூறப்படுகிறது. இவ்வாறாக எட்டாவது படல கருத்து சுருக்கமாகும்.

1. தீபாவரிசையை பற்றி கூறுகிறேன் கேளுங்கள். கார்த்திகை மாத கிருத்திகா நக்ஷத்திரத்தில்

2. பூர்ணிமையிலோ பூர்ணிமையோடு சேர்ந்த தினத்திலோ எல்லா விருப்பத்திற்காக சூர்யாஸ்தமன வேளையில் தீபாரோஹணம் செய்ய வேண்டும்.

3. கர்த்தாவின் அஷ்டம ராசிமுதல் லக்ன தோஷம் பார்த்து விருஷ்டி வைநாசிக நக்ஷத்திரங்களையும் பார்க்க வேண்டும்

4. சூர்யாஸ்தமனத்திற்கு முன்னதாகவுள்ள யாமத்தின் கால்பாக நேரமும் அஸ்தமனத்திற்கு பிறகு உள்ள அரையாமமும் தீபவரிசையின் பூஜைக்குரிய காலமாகும்.

5. இவ்வாறு காலத்தை நிச்சயித்து அங்குரார்ப்பணம் செய்ய வேண்டும். தீபாராதன தினத்திற்கு முதல் தினம் அதிவாஸம் செய்ய வேண்டும்.

6. இறைவனுக்கு முன்போ ஒவ்வொரு கோபுரத்திலோ, அஷ்டதிக்கிலோ நான்கு திக்கிலோ மூன்று அல்லது இரண்டு இடத்திலோ ஓரிடத்திலோ தண்டத்தை ஸ்தாபிக்க வேண்டும்.

7. கொடிமர அளவுபோல் தீபதண்டத்தின் அளவாகும். அந்த தண்டமும் தென்னை பனை, பாக்கு மூங்கில் மரங்களாலோ செய்யவேண்டும்.

8. கொடிமரத்திற்கு சொல்லப்பட்ட மரங்களினாலேயும் தீபவரிசைக்கான மரத்தையும் தயார் செய்து அதில் ஆப்புகுச்சிகளை சேர்க்க வேண்டும். பன்னிரண்டு அங்குலம் முதல் ஐந்தங்குல அதிகரிப்பாக

9. ஐம்பது முழம்வரை தீபவரிசைக்கான மரத்திற்கு வெளியில் ஆப்புகுச்சி இருக்கவேண்டும். இரண்டு மாத்ராங்குல அளவிலிருந்து கால் அங்குல அதிகரிப்பால் ஆறங்குல அளவுவரை

10. தீபமரத்தின் அகலமாகும். அதன் கனம் மூன்றரை பாகமாகும். முக்கால் பாகம் தீபமரத்தின் குறுக்களவாகும். தீபமரம், ஆப்பு குச்சிகளால் இணைக்கப்பட்டதாக வேண்டும் இருக்கலாம்.

11. ஒன்பது ஆப்புகுச்சி முதல் ஒவ்வொர் ஆப்புகுச்சி அதிகரிப்பாக இருபத்தியேழு ஆப்புகுச்சி வரை ஓர்திசையில் பொருத்த வேண்டும்.

12. மற்றமூன்று திசைகளிலும் இவ்வாறு ஆப்புக் குச்சிகளை பொருத்த வேண்டும். மூன்று ஆப்புகுச்சி, நான்கு ஆப்புகுச்சி, விருப்பப்படியான குச்சியுடனோ

13. தீபமரத்தின் நுனியில் பொருத்தி, தீப பாத்ரத்தை சுமப்பதற்காக ஒவ்வோர் ஆப்புக்குச்சியிலும் மரச்சக்ரங்களை பொருத்த வேண்டும்.

14. ஒவ்வொரு சக்ரத்திலும், எட்டு, பண்ணிரெண்டு, பதினாறு எண்ணிக்கையுள்ள தீபங்களை பொருத்த வேண்டும். தீபமரத்தை சுற்றி வெளியில் தென்னங்கீற்று முதலிய காய்ந்த கீற்றுகளால்

15. நன்கு மூடிய பிறகு இடைவெளியின்றி சுழலும் போலுள்ள சக்ரத்தை அமைக்க வேண்டும். ஓர் முழு அகலமும், இரண்டு முழ நீளமும் உள்ளதாக

16. தீப மரத்தின்மேல் ஏறுவதற்காக தென்திசையில் வாயிற்படி அமைக்க வேண்டும். இவ்வாறு கல்பம் என்ற முறை கூறப்பட்டு அனுகல்பம் கூறப்படுகிறது.

17. எல்லா சக்ரங்களையும் விட்டு ஒவ்வோர் ஆப்புக்குச்சியிலும் தீபத்தை சேர்க்க வேண்டும். ஹோமம், கூடாரமின்றி செய்வது உபகல்பமாகும்.

18. தீபமரமின்றி செய்வது அகல்பமாகும். தீபம் வைக்கப்படும் கூடாரங்களை கிழக்கு முதலான திசைகளிலும், தென்கிழக்கு முதலான மூலைகளிலும் நடுவிலும் அமைக்க வேண்டும்.

19. ஒவ்வோர் தெய்வங்களுக்கும் அதிக எண்ணிக்கையுள்ள தீபங்களை செய்ய வேண்டும். தீபங்களை வைப்பதற்கான மரங்களை மாலை போன்ற அமைப்புள்ளதாகவும் செய்யலாம்.

20. தோரணம் போன்றோ, வட்ட வடிவமாகவோ திருவாசி போன்றோ தீபமரங்களை செய்து அதில் தீபங்களை பொருத்த வேண்டும்.

21. விமானம், கோபுரம், பிராகாரம், பரிவாராலயம், மண்டபம் பலி பீடாதிகள், கிணறு, கிருகம் (வீடு) ஆகிய இடங்களிலோ

22. விருஷப முன்பே மடப்பள்ளியிலோ புஷ்ப மண்டபாதிகளிலோ கிராமங்களிலோ மண்டபத்திற்கு வெளியிலோ தீபங்களை கல்பிக்க வேண்டும்.

23. இவ்வாறு தீபவரிசையின் பூஜை செய்ய வேண்டும். தீப பூஜையின் முதல் நாளின் மாலையிலேயே பூஜித்து அஸ்திர மந்திரத்தால் தீபமரத்தை சுத்தி ஓமென்ற மந்திரத்தால் பூஜிக்க வேண்டும்.

24. ஆறு, நான்கு, ஐந்து தாள அளவில் பூமியில் குழி அமைக்க வேண்டும். தீபஸ்தம்பபூஜையின் முதல் நாள் குழியில் தீபமரத்தை நட்டு வேதிகையை அமைக்க வேண்டும்.

25. கொடிமரத்தின் வேதிகைபோல் அல்லது தாமரை போன்ற அமைப்பாகவோ வேதிகை அமைத்து சில்பிக்கு தட்சிணை கொடுத்து அனுப்பிவிட்டு புண்யாஹ வாசனம் செய்ய வேண்டும்.

26. உள்ளே சென்று சந்தனம், புஷ்பங்களால் தீபஸ்தம்பத்தை பூஜிக்க வேண்டும். ரக்ஷõ பந்தனம் செய்து பூஜை செய்ய வேண்டும்.

27. ஆலயம், மண்டபம், யாக மண்டபம், அழகான இடம், இவைகளை பசுஞ்சாணத்தால் மெழுகி

28. ஸ்தண்டிலம் அமைத்து அஸ்திர மந்திரத்தால் பிரோக்ஷிக்க வேண்டும். ஒன்பது, ஐந்து, ஒன்று என்ற எண்ணிக்கையில் அங்கு பாத்திரம் வைக்க வேண்டும்.

29. நீராஜன விதியில் கூறப்பட்டுள்ள பிரம்ம மந்திரம், அங்க மந்திரங்களை, பூஜித்து பிரம்மாவின் மந்திரத்தோடு திக்பாலகர்களின் மந்திரங்களினாலோ, மூர்த்தி, மூர்த்தீஸ்வரர்களையோ, அக்னியுடன் எட்டு வஸீக்களையுமோ வாமை முதலிய எட்டு சக்திகளையுமோ, ஐந்து கலைகள், ஐந்து பூதங்கள், பிரம்மாதி காரணேச்வரர்களையுமோ பூஜிக்க வேண்டும். பாத்ரத்தில் ஓம் என்று கூறி பூஜிக்க வேண்டும்.

30. குண்டத்தில் குண்டஸம்ஸ்காரம், ஸ்ருக் ஸ்ருவஸம்ஸ்காரம் அக்னி ஸம்ஸ்காரம் இவைகளை செய்து சிவாக்னியை பூஜித்து, ஆஸன, ஆவரண பூஜையும், ஹ்ருதயம் முதலிய ஷடங்கமந்திரத்துடன் அக்னியில் சிவனை பூஜிக்க வேண்டும்.

31. சமித், நெய், ஹவிஸ், பருத்திவிதைபால் இவைகளால் நூறு, ஐம்பது, இருபத்திஐந்து ஆஹூதிகளை செய்ய வேண்டும்.

32. மேற்கூறிய எண்ணிக்கையால் மூலமந்திரா ஹூதியும், அதில் பத்தில் ஓர் பங்கு அங்க மந்திரா ஹூதியும், வஹ்நி பீஜமான ரம் என்ற மந்திரத்தால் நூற்றெட்டு ஆஹுதியும் செய்து பூர்ணாஹுதி செய்ய வேண்டும்.

33. பரிவாரதேவர்கள், ஹ்ருதயம் முதலிய ஷடங்க தேவர்களுடன் கூடிய இறைவனை விஸர்ஜனம் செய்து, நல்லெண்ணை அல்லது நெய்யாலோ பாத்ரத்தை நிரப்பி ஸர்வாத்மகரான ஈசனை நினைத்து தீபத்தை ஏற்றவேண்டும்.

34. ரம் என்ற வஹ்நி பீஜத்தை ஸ்மரித்து மத்ய தீபம் முதல் எல்லா தீபங்களையும் சந்தன புஷ்பங்களால் பூஜித்து சிவாக்னியை விசர்ஜனம் செய்ய வேண்டும்.

35. பலவித அலங்காரத்துடன் கூடிய தருண தீபமான மத்ய தீபபாத்ரத்தை ஜ்வாலையுடன் கூடியதாக எடுத்து

36. தண்டத்தின் மேல் ஸ்தண்டிலத்தில் ஹ்ருதயத்தினால் வைக்க வேண்டும். ஹோம முடிவில் தீபதண்டத்திற்கு ரக்ஷõபந்தனம் செய்ய வேண்டும்.

37. பிறகு இரண்டாம்நாள் நான்கு திக்கிலும், விதிக்கிலும், நான்கு தோரண ஸஹிதமாக நான்கு கூடங்கள் அமைக்க வேண்டும்.

38. கூடாரங்கள் ஐந்து, நான்கு, மூன்று முழ அளவும், விரும்பிய அளவுள்ள இடைவெளி உடையதாகவும் அமைத்து, கிழக்கு அல்லது தென்கிழக்கு திசையில் ஒரு கூடாரம் அமைக்க வேண்டும்.

39. தோரணத்தை கூடத்திற்கு தக்கவாறு விருப்பப்படி அமைக்க வேண்டும். கூடாரத்தை சுற்றி தோரணம், தர்ப்ப மாலைகளால் அலங்கரித்து

40. எல்லா அலங்காரத்துடனும் வாழைமரம், பாக்கு மரத்துடன் கூடியதாக மண்டபம் அமைத்து சூர்யன் மறையும் நேரத்தில்

41. புண்யாஹவாசனம் செய்து கந்தாதிகளால் தண்டத்தை பூஜித்து இரண்டு வஸ்திரத்தால் தண்டத்தின் அடிபாகத்தில் சுற்றி

42. ஸ்வர்ணம் முதலியவைகளால் ஆக்கப்பட்ட பாத்திரத்தை தண்டத்தின் மேல் வைக்க வேண்டும். பருத்தி கொட்டையால் ஆன திரியோடு எண்ணை அல்லது நெய்யை சேர்த்து

43. தீபத்தை கூடத்தில் சேர்த்து குண்டம் ஸ்தண்டிலங்களில் அதிவாச ஹோமத்துடன் ஹோமம் செய்ய வேண்டும்.

44. தென்கிழக்கிலோ, வடகிழக்கிலோ பந்தலில் ஹோமம் செய்ய வேண்டும். பிரம்மா, விஷ்ணு, ருத்ரன் ஈச்வரன் ஸதாசிவன் இவர்கள்

45. இங்கு ஹோமாதிபர்கள் என கூறப்படுகிறார்கள். தீப தண்டத்தில் ஸதாசிவரை பூஜிக்க வேண்டும். புரசு, ஆல், வன்னி, எருக்கு சமித்துக்களையோ அல்லது எல்லா குண்டத்திலும் வன்னி சமித்தையோ

46. ஹோமம் செய்து வஸ்திரம் தங்கமாபரணங்களால் அசார்யரை பூஜித்து பூர்ணாஹூதி செய்து எல்லா தீபத்தையும்

47. ஒன்று சேர்த்து வஹ்னி பீஜத்தால் (ரம் என்று) ஹ்ருதயத்தால் பாத்திரத்தில் ஸ்தாபிக்க வேண்டும். எல்லா அலங்காரத்துடனும் மங்களாங்குரத்துடனும்

48. விதான த்வஜத்துடனும் சத்ர சாமரத்துடனும் பலவித வாத்யம் பலவித நிருத்தத்துடன் கூடியதாகவும்

49. உத்ஸவ பேரத்துடன், பேரயாத்ரையுடனும் திரு வீதியுலா இன்றியுமோ கிருஹஸ்தரோ பிரம்ம சாரியோ தீபத்தை கையால் எடுத்து

50. தீபமரத்தில் சீக்ரம் ஏறி அதற்கு மேல் வடக்கு நோக்கியவாறு நின்று மரத்தில் மேலுள்ள பாத்ரத்தில் தீபமேற்றி பிறகு அங்கிருந்து இறங்கி

51. மஹேசனிடம் விக்ஞாபித்து அந்த காலத்தில் சக்ரத்திலுள்ள தீபங்களை மூர்த்தாதி பாதம் வரை ஏற்றவும்.

52. ஆசார்யன் தீபமேற்றிய கர்தாவையும் பரிசாரகனையும் வஸ்திராதிகளால் வடக்கு முகமாக இருந்துகொண்டு கவுரவிக்க வேண்டும்.

53. ஜ்யோதிர் லிங்கத்தை ஸ்மரித்து நான்கு கூடத்தையும் சொக்கபானை தஹிக்க வேண்டும் (அல்லது) சொக்கபானை கூட தாஹமின்றி மற்ற எல்லாவற்றையும் அனுஷ்டிக்க வேண்டும்.

54. தோரணத்திற்கு கீழே தேவரை எழுந்தருளச் செய்து தீபமரத்தினின்று பிரதட்சிணமாக தீபத்துடன் கூடி கிராமத்திற்கு செல்ல வேண்டும்.

55. கோயில் பிரதட்சிணம் செய்து ஆஸ்தான மண்டபம் செல்ல வேண்டும். எல்லா கோயில் விமானங்களில் தீபங்களை ஏற்ற வேண்டும்.

56. வலமாக கோயிலையடைந்து, உற்சவ பிம்பத்திற்கு கூறியபடி ஸ்நபனம் செய்துமோ செய்யாமலுமோ இருக்கலாம்.

57. பூர்ணமாக அதிகமான ஹவிஸ் கொடுத்து தாம்பூலம் நிவேதித்து தேங்காயுடன் கூட அவலை தேவனுக்கு நிவேதிக்க வேண்டும்.

58. மிளகு ஜீரகத்துடன் வெல்ல சர்க்கரையுடனும் அவலை நிவேதித்து அங்குரார்ப்பணம் செய்யாமலும் இந்த உத்ஸவத்தை செய்யலாம்.

59. குருவிற்கு தட்சிணை கொடுத்து ஹோமம் செய்பவர்களுக்கும் தட்சிணை கொடுக்க வேண்டும். இந்த உத்ஸவத்தில் ஹோம உயயோகித்த திரவ்யம் கொட்டகை, மூங்கில்குச்சி முதலியவைகளையும்

60. அந்த தீப பூஜையின் அங்கமான மற்ற திரவ்யங்களையும் சேர்த்து ஆசார்யனுக்கு கொடுக்க வேண்டும். இந்த தீப பூஜையானது அரசரின் அரண்மனையிலும் செய்யலாம்.

61. கிராமம் முதலியவிடங்களில் பிரம்மஸ்தானமான மத்தியில் தீபவரிசை பூஜை செய்யலாம். மற்றும் மனிதர்களுக்கும் வாஹனங்களுக்கும் தீமை ஏற்படும் போதும் செய்யலாம்.

62. மாட்டுத் தொழுவத்தில் பசுக்களின் வியாதியை போக்குவதற்காக செய்ய வேண்டும். எந்த திதியில் சூர்யன் உதிக்கிறானோ!

63. அந்த வளர்பிறை திதி, ஸகலா என்று பெயர்.

64. சூர்யன் மறையும் நேரத்தில் எந்த நட்சத்ரத்துடன் கூடி சூரியன் இருக்கிறானோ அந்த நட்சத்ரத்தை ஸகலம் என்பதாகவும் நட்சத்திரத்தை அறியும் விஷயத்திலும் அவ்வாறேயாகும்.

65. இவ்வாறாக அறிந்து பூஜை முதலிய எல்லா கார்யங்களையும் செய்ய வேண்டும்.

இவ்வாறு உத்தரகாமிக மஹாதந்திரத்தில் கிருத்திகா தீபாவளி முறையாகிற எட்டாவது படலமாகும்.

 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar