Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பேரூராதீனத்தில் நடராஜருக்கு ... சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழா நிறைவு சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அக்னி நட்சத்திரம் தொடங்கியது : தான - தர்மங்கள் செய்யலாம்
எழுத்தின் அளவு:
அக்னி நட்சத்திரம் தொடங்கியது : தான - தர்மங்கள் செய்யலாம்

பதிவு செய்த நாள்

04 மே
2021
11:05

 ஆண்டு தோறும், சித்திரை, 21 முதல், வைகாசி, 14 வரை, வெயிலின் தாக்கம் கடுமையாக இருக்கும். இதை, ‘அக்னி நட்சத்திரம்’ என்று சொல்வர். அஸ்வினி முதலான, 27 நட்சத்திரங்களில், எந்த நட்சத்திரமும், அக்னி நட்சத்திரம் என்று பெயர் பெற்றிருக்கவில்லை. என்றாலும், சித்திரை மாதம், பரணி, 3ம் காலில், சூரியன் பிரவேசிக்கும் காலத்தை, ‘அக்னி நட்சத்திர காலம்’ என்று பஞ்சாங்கம் கூறுகிறது. இந்த ஆண்டு, இன்று முதல், வரும், 29 வரை, அக்னி நட்சத்திர காலம் என்று பஞ்சாங்கம் குறிப்பிடுகிறது.

இந்த காலகட்டத்தில், அறுவடை செய்யப்பட்ட வயல் வெளிகளில், வெப்பத்தின் காரணமாக, வெடிப்புகள் ஏற்படும். அதன்வழியாக, பூமியின் வெப்பம் வெளியேறும். அந்த பிளவுகளில், காய்ந்த இலைகளும், சருகுகளும் நுழைந்துவிடும். அக்னி நட்சத்திரம் முடிந்து வைகாசி பிற்பகுதியில் வீசும் காற்றால் பூமி குளிரும். அதையொட்டி மழை பெய்தால், நிலத்தின் வெடிப்புகள் மூடப்பட்டுவிடும். இவற்றை  ‘கர்ப்பஓட்டம்’ என்பர். இந்த அக்னி நட்சத்திர நாட்களில், செடி, கொடி மரங்களை வெட்டக்கூடாது. நார் உரிக்கக்கூடாது; விதை விதைக்கக் கூடாது.


கிணறு, குளம், தோட்டங்கள் அமைக்கக் கூடாது; நிலம் மற்றும் வீடுகளில் பராமரிப்பு செய்யக்கூடாது; வாகனங்களில் நெடுந்துாரம் பயணம் செய்யக்கூடாது. ஆலயங்களுக்கு சென்று, இறைவனுக்கும், இறைவிக்கும் அபிஷேக ஆராதனைகள் செய்வது நல்ல பலனைத் தரும். தான- தர்மங்கள் செய்யலாம்; தண்ணீர்ப் பந்தல் அமைத்து நீர் மோர் வழங்கலாம். நோயாளிகளுக்கு இளநீர், உடல் ஊனமுற்றவர்களுக்கு காலணி, குடைகளை வழங்கலாம். ஏழை, எளியவர்களுக்கு தயிர் சாதம் அளிக்கலாம். அக்னி நட்சத்திரக் கால கட்டத்தில், மாரியம்மன் கோவிலுக்குச் சென்று வணங்கி, அபிஷேக ஆராதனைகள் முடிந்ததும், பானகம் வழங்குவதும். நல்ல பலன்களைத் தரும் என்பது ஐதீகம்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி; திருமலை ஸ்ரீவாரி கோயில் ஸ்ரீராமநவமி ஆஸ்தான விழாவில் நேற்று புதன்கிழமை மாலை 6.30 மணி முதல் இரவு ... மேலும்
 
temple news
பாலக்காடு; திருச்சூர் பூரம் திருவிழா நாளை நடைபெற உள்ளது.கேரளாவில் பிரசித்தி பெற்ற கோவில் திருச்சூர் ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; சித்தூர் மாவட்டம் ஐரால மண்டலம் காணிப்பாக்கம் ஸ்ரீ வரசித்தி விநாயகர் கோயிலில் ஸ்ரீராம நவமியை ... மேலும்
 
temple news
அயோத்தி; தெய்வீக மற்றும் அற்புதமான ராமர் கோவிலில் ராம் லல்லா பிரதிஷ்டை செய்யப்பட்ட பிறகு இது முதல் ... மேலும்
 
temple news
ஒட்டன்சத்திரம்; ஒட்டன்சத்திரம் சாமியார்புதூர் ஸ்ரீஷீரடி சாய்பாபா கோயிலில் ராம நவமி விழா சிறப்பாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar