திருவாடானை : கொரோனா ஊரடங்கால் தொண்டி அருகே ராமர் கோயில் கட்டும் பணிகள் துவங்கவில்லை.
தொண்டி அருகே புல்லக்கடம்பன் ஊராட்சி இடையான்வயல் கிராமத்தில் ராமர் கோயில் கட்ட சுற்றுலாத்துறை சார்பில் ரூ. 2 கோடியே 60 லட்சம் நிதி ஒதுக்கபட்டது. 16 ஏக்கர் பரப்பளவு கொண்ட இக்கோயிலை சுற்றி அடர்ந்திருந்த சீமைகருவேலசெடிகள், புதர்கள் புல்லக்கடம்பன் ஊராட்சி சார்பில் அகற்றப்பட்டு சுத்தம் செய்யபட்டது.
கடந்தாண்டு கொரோனா பரவியதாலும், அதன்பிறகு சட்டசபை தேர்தல் அறிவிக்கபட்டதாலும், தற்போது கொரோனா இரண்டாவது அலை பரவி வருவதாலும் பணிகள் துவங்கப்படவில்லை. இது குறித்து ஊராட்சி தலைவர் மாதவி கூறியதாவது:கோயில் கட்ட இருப்பதால் உடனடியாக சீமைகருவேல செடிகளை அகற்றி சுத்தம் செய்ய வேண்டும் என்று அதிகாரிகள் கூறினர். சுத்தம் செய்து ஓராண்டிற்கு மேலாகிவிட்டது. பணிகள் துவங்கவில்லை. ஊரடங்கு முடிந்த பிறகாவது பணிகளை துவக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.