Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கொரோனாவிலிருந்து காத்திட ... அங்காளம்மன் கோவிலில் சக்தி கரக வழிபாடு ரத்து அங்காளம்மன் கோவிலில் சக்தி கரக ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஓங்காரநந்த சுவாமிகள் உடல் தேனியில் ‛சம்ஸ்ஹாரம்
எழுத்தின் அளவு:
ஓங்காரநந்த சுவாமிகள் உடல் தேனியில் ‛சம்ஸ்ஹாரம்

பதிவு செய்த நாள்

12 மே
2021
11:05

தேனி: மகா ஸித்தியடைந்த ஓங்காரநந்ந சுவாமியின் புனித உடல், சிறப்பு பூஜைகளுடன், இறைவன் திருவடியில், ‛சம்ஸ்ஹாரம் செய்யப்பட்டது.

தேனி வேதபுரீ சுவாமி சித்பவானந்த ஆஸ்ரம பீடாதிபதி ஓங்காரநந்த சுவாமிகள், 62, மே 3ல் உடல்நலக் குறைவால், மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நேற்று மாலை, 6:15 மணிக்கு, மாரடைப்பால் மகா ஸித்தி அடைந்தார். இரவில், தேனி ஆஸ்ரமத்திற்கு, சுவாமிகளின் புனித உடல் வந்தது. புதுக்கோட்டை புவனேஸ்வரி கோவில், தேனி குரு தட்சிணாமூர்த்தி கோவிலைச் சேர்ந்த வேத விற்பன்னர்கள், சிவாச்சாரியார்களால் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. பின், உடல் சப்பரத்தில் ஏற்றப்பட்டு, ஆஸ்ரமத்தை சுற்றி, குருதட்சிணாமூர்த்தி கோவில் எதிரே, நித்ய ஆன்ம சாந்திக்கான சமாதிக்கு கொண்டு வரப்பட்டது. ஆஸ்ரம நிர்வாகி பரசுராமன் இறுதி சடங்குகள் செய்ய, சுவாமிகளின் சீடர்கள், வேத விற்பன்னர்கள், ஆஸ்ரம நிர்வாகிகள் வேத மந்திரங்கள் முழங்க, ஆன்ம நித்ய சாந்தி பூஜைகள் நடந்தன. சுவாமிகள் புனித உடல், அதிகாலை, 3:30 மணியளவில் இறைவன் திருவடியில், சம்ஸ்ஹாரம் செய்யப்பட்டது. தேனி, திண்டுக்கல், திருவண்ணாமலை, சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த சீடர்கள் வழிபட்டனர்.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு, பக்தர்கள் ஒத்துழைத்து, வீட்டிலிருந்தே வழிபட்டு கொள்ளலாம். ஸித்தி அடைந்த சுவாமிகளுக்கு, தொடர்ந்து, 16 நாட்கள் பூஜைகள் நடக்கும் என, ஆஸ்ரம நிர்வாகி நாராயணன் தெரிவித்தார்.

ஹிந்து முன்னணி புகழஞ்சலி: ஹிந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் அறிக்கை: ஸ்ரீ ஓங்காரநந்த சுவாமிகள், ஸ்ரீமத் பகவத் கீதையையும், திருக்குறளையும், உபநிஷத்துகளையும் பாரெங்கும் பரவ செய்தவர். நமது கால கட்டத்தில், தமிழகத்தின் புகழ்மிக்க வேதாந்த ஆச்சாரியராகவும், ஆன்மிக தலைவராகவும் திகழ்ந்தவர். வேதம் கற்றவர், தமிழில் புலமை பெற்றவர். எல்லா சம்பிரதாயங்களையும் மதிப்பவர். எல்லா சமுதாயத்தினரையும் அரவணைத்து சென்றவர். ஹிந்து முன்னணி நிறுவனர் ராமகோபாலன் மீது, அளப்பரிய நம்பிக்கையும், அன்பும் வைத்திருந்தவர். அவரது இழப்பு, ஹிந்து சமுதாயத்துக்கு ஒரு பேரிழப்பு. இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; மதுரை சித்திரை திருவிழாவில் இன்று தேனூர் மண்டபத்தில் எழுந்தருளிய சுந்தரராஜப் பெருமாள் சுவாமி, ... மேலும்
 
temple news
புட்டபர்த்தி: சத்ய சாய் பாபாவின் நினைவு தினத்தையொட்டி, ஆராதனை மகோற்சவம் இன்று புட்டபர்த்தியில் ... மேலும்
 
temple news
கோவை; கோவையின் குலதெய்வம் என போற்றப்படும் தண்டு மாரியம்மன் கோவில்சித்திரை விழா கடந்த 15ம் முதல் நடந்து ... மேலும்
 
temple news
காரைக்கால்; காரைக்கால் அம்மையார் கோவிலில் சித்திரை சுவாதி நட்சத்திரத்தை முன்னிட்டு, அம்மையார் ... மேலும்
 
temple news
உத்தரகாண்ட்; இயற்கை எழில் கொஞ்சும் கங்கையாற்றின் கரையில் அமைந்திருக்கும் சிறப்பு மிக்க ஆன்மீக தலம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar