திற்பரப்பு மகாதேவர் கோயிலில் அன்னதான திட்டம் மீண்டும் துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14மே 2021 02:05
திற்பரப்பு: குமரி மாவட்ட கோயில்களில் நிறுத்தி வைக்கப்பட்ட அன்னதான திட்டம் மீண்டும் துவங்கப்பட்டது. குமரி மாவட்டத்தில் 11 கோயில்களில் அன்னதான திட்டம் செயல்படுத்தப்பட்டு வந்தது. கொரோனா பரவல் தீவிரமடைந்ததை தொடர்ந்து கடந்த ஆண்டு மார்ச் மாதம் அன்னதான திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டது.
பின்னர் தமிழக அரசின் உத்தரவுபடி கடந்த சிலதினங்களுக்கு முன் மாவட்டத்திலுள்ள முக்கிய கோயில்களில் அன்னதானம் மீண்டும் வழங்க துவங்கினர். மீதமுள்ள கோயில்களில் நேற்று முன்தினம் அன்னதான திட்டம் துவங்கியது. 100 பேருக்கு கோயில் வளாகத்தில் வழங்கி வந்த அன்னதானம் கொரோனாபரவல் காரணமாக 20ஆக குறைக்கப்பட்டது. பாதுகாப்பு கருதி அன்னதானம் பார்சலாக வழங்கப்படுகிறது. திற்பரப்பு மகாதேவர் கோயிலில் முதல் நாள், அன்னதான வினியோகத்தை கோயில் மேல்சாந்தி கணேசன் போற்றி துவக்கி வைத்தார். 25 பேருக்கு அன்னதான பார்சல் வழங்கப்பட்டது. திருவட்டார் உட்பட கோயில்களிலும் அன்னதான திட்டம் மீண்டும் துவங்கப்பட்டது.