Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
முதல் பக்கம் » மாசி மாத கிருதகம்பள பூஜா முறை
படலம் 10: மாசி மாத கிருதகம்பள பூஜா முறை
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

15 ஜூன்
2012
02:06

பத்தாவது படலத்தில் மாசிமாதத்தில் செய்ய வேண்டிய கிருதகம்பள பூஜாவிதி கூறப்படுகிறது. முதலில் மாகமாசத்தில் மகாநட்சத்திரத்தில் கிருத கம்பளம் செய்ய வேண்டுமென கால நிர்தேசமாகும். பிறகு கிருத (நெய்) ஸம்பாதநம் அதன் ஸம்ஸ்காரமும் வர்ணிக்கப்படுகிறது. பிறகு பஞ்சகவ்ய பஞ்சாம்ருதத்தால் விசேஷ ஸ்நபனம் விசேஷ பூஜை செய்து ஹோமம் செய்க என கூறி அங்கு செய்ய வேண்டிய ஹோம விதி பிரதிபாதிக்கப்படுகிறது காலை மதியத்தில் முன்பு போல் ஸ்நபனத்துடன் விசேஷ பூஜை செய்து ஸர்வாலங்கார யுதமாக ஆலய பிரதட்சிண பூர்வம் ஸம்ஸ்கரிக்கப்பட்ட நெய்யை லிங்கத்தில் பீடம் வரை எல்லா இடத்திலும் பூச வேண்டும். பிறகு கந்தாதிகளால் பூஜித்து கம்பள வேஷ்டநம் செய்ய வேண்டும். பிறகு தாம்பூல சஹிதம் ஹவிஸ் நிவேதிக்க வேண்டும். பிறகு அடுத்த ஸந்த்யா காலத்திலோ மறுதினத்திலோ கம்பளாதிகளை எடுத்து முன்பு போல் பூஜிக்க வேண்டும். முயற்சிக்கு தக்கவாறு ஆசார்யனுக்கு தட்சிணாதானம் கொடுக்க வேண்டும். இந்த பூஜை அங்குரார்ப்பண ஸஹிதமாகவோ, ரஹிதமாகவோ செய்யலாமென சூசிக்கப்படுகிறது. இவ்வாறாக பத்தாவது படல கருத்து சுருக்கமாகும்.

1. மாசி மாதத்தில் மகாநட்சத்திரத்தில் நெய்யில் (நனைத்த) கம்பளியை சாத்தும் பூஜையை செய்ய வேண்டும். புழு, பூச்சி, இல்லாததும் காராம்பசு வினையுடையதும்.

2. ரோமம் இல்லாமலும், சுத்தமாயும், நல்ல மணத்தோடு நூதனமான நெய்யை ஆசார்யன் அஸ்த்ர மந்திரத்தினால் ஸ்தாபிக்க வேண்டும். ஜலத்தில் வருண மூல மந்திரத்தை கூறிக்கொண்டு

3. அந்த நெய்யை குங்குமப்பூ, அகில், மஞ்சள் பொடி, பச்சை கற்பூரம் இவைகளோடு சேர்த்து உருண்டையாக செய்து (இவைகளால் ஸம்ஸ்கரிக்கப்பட்டு)

4. தங்கபாத்ரம் முதலியவைகளில் வைத்து, பஞ்ச பிரும்மந்திரம் ஷடங்க மந்திரம் சிவமந்திரத்தோடு கூட பூஜித்து தூபம் கொடுத்து அபிமந்த்ரணம் செய்ய வேண்டும்.

5. பஞ்சகவ்ய, பஞ்சாமிருதங்களினாலோ விசேஷமாக ஸ்நபனம் செய்ய வேண்டும். விசேஷ பூஜையை செய்து முடிவில் ஸ்தண்டிலத்திலே நெய்யை வைக்க வேண்டும்.

6. புத்திமானானவன் ஹ்ருதய மந்திரத்தை கூறிக்கொண்டு சந்தனம் முதலியவைகளினால் பூஜிக்க வேண்டும். அதற்கு முன் ஸ்தண்டிலத்தில் சிவாக்னியை ஸ்தாபிக்க வேண்டும்.

7. புரச சமித், நெய், அன்னம், எள்ளு, பொரி இவைகளோடு கூடியதாக நூற்றெட்டு தடவை ஹோமம் செய்து முடிவில் பூர்ணாஹுதியை செய்ய வேண்டும்.

8. பவித்ராரோகணமுறைப்படி நெய்யில் ஸம்பாத ஹோமம் செய்து முன்புறத்தில் ஸ்தண்டிலத்தில் வஸ்திரத்தால் மூடப்பட்ட நெய்யை வைக்க வேண்டும்.

9. காலையிலோ மத்தியானத்திலோ கவச மந்திரத்தினால் அவகுண்டனம் செய்தபிறகு ஈசனை ஸ்னபனம் முதலியவைகளோடு பூஜித்து

10. ஸகலவிதமான அலங்காரத்தோடு விசேஷமாக பூஜைகள் செய்து சிவமந்தரத்தை சொல்லிக் கொண்டு நெய்யுடன் கோயில்வலம்வந்து

11. நெய்யால் லிங்கத்தை எல்லா இடத்திலும் பூசி எல்லா பீடங்கள் முடிவுவரை சந்தனம் முதலியவைகளால் பூஜித்து கம்பளியை சுற்றவேண்டும்.

12. ஈஸ்வரனுக்கு வெற்றிலைபாக்குடன் கூடின நிவேதனத்தை கொடுக்க வேண்டும் (அர்பணிக்கவேண்டும்)

13. அடுத்த ஸந்தியா காலத்திலோ மறுநாளிலோ கம்பளி முதலியவைகளை நீக்கிவிட்டு முன்போல ஈசனை பூஜிக்கவேண்டும். அப்படியே ஆசார்யனை பூஜிக்கவேண்டும்.

14. ஆசார்யனுக்கு சக்திக்கு ஏற்றவாறு தட்சிணையை கொடுக்கவேண்டும். பாலிகை தெளிப்பதுடன் கூடவோ, இல்லாமலோ இதை செய்யவேண்டும்.

இவ்வாறு நெய் சேர்த்த கம்பள பூஜை முறை பத்தாவது படலமாகும்.

 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar