தேவகோட்டை: அட்சய திருதியை நாளை முன்னிட்டு தேவகோட்டை கோயில்களில் சிறப்பு பூஜை நடந்தது.அட்சய திருதியை என்பதால் குபேர லட்சுமி அர்ச்சனை செய்து சிறப்பு பூஜை செய்தனர். சிறப்பு தீபாராதனை நடந்தது. பக்தர்கள் கோயில்களில் வெளியே நின்று தரிசனம் செய்தனர். ரோட்டோரம் உள்ள அம்மன் கோயில்களில் சமூக இடைவெளியுடன் சுவாமியை வழிபட்டு சென்றனர்.பட்டு குருக்கள் நகரில் உள்ள அட்சய மகா கணபதிக்கு சிறப்பு அபிஷேகம் செய்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.நகை கடைகள் விடுமுறை என்பதால் வீடுகளில் பெண்கள் மஞ்சளில் தங்க காசு அல்லது தங்க பொருட்கள் வைத்து அட்சய திருதியை சிறப்பு பூஜை செய்தனர்.