Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
முதல் பக்கம் » பவித்ரோத்ஸவ விதி
படலம் 18 : பவித்ரோத்ஸவ விதி
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

15 ஜூன்
2012
03:06

பதினெட்டாவது படலத்தில் ஆவணி மாதத்தில் செய்ய வேண்டிய பவித்ரோத்ஸவ விதி கூறப்படுகிறது. முதல் ஒரு வருடத்தில் செய்யக்கூடிய தோஷத்தின் அழிவிற்காக செய்ய வேண்டிய பவித்ரகர்மா விளக்கப்படுகிறது என உத்தரவு ஆகும். பிறகு பவித்ர கர்மா அனுஷ்டிக்காத சமயத்தில் தேசிகன், சாதகன், புத்ரகன், சமயீ இவர்களுக்கு குற்றம் உண்டாகும் என விளக்கப்படுகிறது. எந்த சொல், மனது சரீரம் இவைகளின் செயல்களால் உண்டாகிற பயன்களில் இருந்து காப்பாற்ற படுகிறதோ அந்த பொருளானது, பவித்ரம் என பவித்ர பயனின் பொருள் விளக்கப்படுகிறது. பவித்ர ஸமர்பணகாலம் நிரூபிக்கப்படுகிறது. பவித்ரம் தயாரிக்க நூல் சேரிக்கும் முறை கூறப்படுகிறது. பவித்ரம் செய்யும் முறை அதன் அதிதேவதை விளக்கப்படுகிறது. ஸ்வாயம்புவ லிங்கங்களை அனுசரித்து நூலின் எண்ணிக்கை விளக்கப்படுகிறது. முடிச்சு போடும் முறையும் செஞ்சந்தனங்களால் நூலை அழகு படுத்தலும் கூறப்படுகிறது. தத்வ சம்பந்தமான யக்ஞசூத்திரமாலை, பாகு மாலை பவித்ரம் இவைகளுக்கு அழகுபடுத்தும் முறை கூறப்படுகிறது. பிறகு க்ஷúத்ரலிங்க விஷயத்தில் விருஷபம் ஸ்வாமி, ஆவரண விஷயம், சண்டிகேஸ்வரர், பைரவர் இவர்களுக்கும் சாத்தக் கூடிய பவித்ரத்தின் விளக்கம் கூறப்படுகிறது. பிறகு திக்பாலகர்கள் பைரவர் இவர்களுக்கு வலமாக ஒன்று மட்டும் அர்ப்பணம் செய்யவும் என கூறப்படுகிறது. பிறகு யாகசாலை, விருஷபம் இருக்கும் இடம், கோபுரம் குண்டம் இவைகளுக்கு எல்லா கும்பங்களுக்கும் முப்புரி நூலில் சுற்ற வேண்டும்.

பிறகு பவித்ரஸமர்ப்பணம் முன் தினம் செய்ய வேண்டிய அதிவாச விதி விளக்கப்படுகிறது. முதலில் மண்டபத்தின் லக்ஷணம் கூறப்படுகிறது. மண்டபத்தில் வேதிகை, குண்டம் அமைக்கும் முறை கூறப்படுகிறது. மேற்கு திக்கில் மண்டலம் அமைக்கவும் கிழக்கு திக்கில் பவித்ரத்தை வைக்கவும் என கூறப்படுகிறது. பிறகு மண்டப பூஜை செய்யும் முறையில் பூஜைக்கு பிறகு செய்ய வேண்டிய ஹோமம் செய்யும் முறை கூறப்படுகிறது. ஹவிஸ் செய்யும் முறையும் பல்குச்சி, முதலிய விரதத்திற்கு அங்கமான பொருள்களின் அதிவாச முறையும் கூறப்படுகிறது. பிறகு அதிவாசத்தில் பவித்ரத்திற்கு செய்ய வேண்டிய சம்ஸ்காரம் கூறப்படுகிறது. பிறகு சம்பாத ஹோமம் செய்யும் முறை விளக்கப்படுகிறது. சூரியன் முதலானவர்களுக்கு கந்தபவித்ர ஸமர்ப்பணம் நிரூபிக்கப்படுகிறது. சிவனுக்கு ஆமந்த்ரண பவித்ரம் ஸமர்பணம் கூறப்படுகிறது. அதில் ஆமந்த்ரத்தின் மந்திர விளக்கம் கூறப்படுகிறது. திக் பாலகர்களுக்கும் அஸ்த்ரங்களுக்கும் பைரவர்க்கும் ஆமந்த்ரண பவித்ரம் ஸமர்பிக்கும் முறை சித்தாந்த புஸ்தகம் தனி ஆசார்யன இவர்களுக்கு பவித்ர ஸமர்ப்பண முறை கூறப்படுகிறது. பிறகு ஆசார்யன் யாகசாலையிலிருந்து வெளியில் வந்து ஆசமனம் செய்து பஞ்சகவ்யம் அருந்தி ஆசமனம் செய்து சிவமந்த்ரம் ஜபித்து தூங்கவும் என்று அதிவாஸநம் செய்யும் முறை பிறகு மறுதினம் பவித்ர ஸமர்ப்பண முறை கூறப்படுகிறது. முதலில் ஆசார்யன் காலையில் ஸ்நான ஸந்த்யா வந்தனம் முடித்து ஸ்வாமியிடம் இருந்து பவித்ரங்களை எடுத்து சண்டிகேஸ்வரருக்காக ஈசானதிக்கில் உள்ள மண்டல பாத்ரத்தில் வைக்கவும்.

பிறகு முறைப்படி விசேஷ ஸ்நபனத்துடன் சிவனை பூஜிக்கவும் ஜபத்திற்கு பிறகு அக்னிகார்யம் செய்து பூரணாஹூதிக்கு பிறகு சூரியன் நந்தி முதலானவர்களுக்கு பவித்ரம் கொடுத்து வரிசை கிரமமாக பிரம்மா, கும்பவர்த்தினி இவைகளுக்கு பவித்ரம் கொடுக்க வேண்டும். பிறகு சரீரம் குருபரம்பரை இவர்களுக்கு பவித்ரம் ஸமர்ப்பிக்கவும் பிறகு பகவான் சிவனின் பொருட்டு என் விருப்பப் பயன் பூர்த்தி அடைவதற்காக என்று வேண்டுதல் மூலம் விளக்கப்படுகிறது. அங்கு ஆத்மதத்வாதி தத்வத்ரய பவித்ர ஸமர்ப்பண முறை கூறப்படுகிறது. நான்கு மூன்று இரண்டு ஒன்று மாசமோ 15 தினம் 7,5,3,1 தினங்களிலோ ஆரம்பிக்கப்பட்ட காரியம் முடியும் வரை 1 வேளை உணவுடன் சுத்தமாக முடிந்தவரை அனுஷ்டானம் செய்யவும். இந்த விரத அனுஷ்டானமானது பவித்ரத்தை எடுக்கும் வரை செய்ய வேண்டும் என அறிவிக்கப்படுகிறது. பிறகு நான்காவது பவித்ர ஸமர்பண முறையும் பவித்ரோத்ஸவ வரகார்பண விதியும் கூறப்படுகிறது. பிறகு பவித்ராவரோஹண முறை கூறப்படுகிறது. இவ்வாறு பவித்ரோத்ஸவ கிரியைகள் கூறப்பட்டுள்ளன. இவ்வாறாக 18 வது படல கருத்து தொகுப்பாகும்.

1. ஹே சிறந்த முனிவர்களே! ஆண்டு முழுவதும் செய்யப்பட்ட தீய செயலின் அழிவின் பொருட்டு பவித்ரோத்ஸவத்தை கூறுகிறேன் கேளும்.

2. ஒழுங்குமுறையை கடைபிடிக்காததால் நேர்ந்த பிராயச்சித்தத்தை செய்யத் தவறிய ஆசார்யன் நற்பலனின் குழப்பத்தையடைகிறான் தேசிகன் வியாதியடைகிறான்.

3. புத்ரன் அனுபவிப்புத் தன்மையின்றியும் ஒரே பிறப்பில் சுழலுவதால் ஸமயன் ஸமயஸ்தனின்றி ஆகிறான். மேற்கூறியவை பவித்ர மனுஷ்டிக்காததால் அடைகிறான்.

4. எந்த முறையிலாவது முயற்சியுடன் பவித்ரத்தை கடைபிடிக்க வேண்டும். தினமும் வாக்கு, மனது, உடலிவைகளாலேற்படும் பாபத்தில்

5. விழுவதிலிருந்து எது காப்பாற்றப்படுகிறதோ அது பவித்ரகம் என்ற கிரியையாகும். இதற்கு ஆடி, ஆவணி, புரட்டாசி ஆகிய மூன்று மாதங்கள் உத்தம மத்யம அதமமாகும்.

6. வேறுவிதமாக ஐப்பசி கார்த்திகை மாதமும் கூறப்படுகிறது. ஆடி மாதத்தில் சுக்லபக்ஷ சதுர்தசியில் பவித்ரோத்ஸவம் கூறப்பட்டுள்ளது.

7. மற்ற மாதங்களில் சுக்லகிருஷ்ணபக்ஷங்களில் சதுர்தசி. அஷ்டமிதிதியிலும் பவித்ரோத்ஸவத்தை முறைப்படி செய்ய வேண்டும்.

8. கார்த்திகை தீபோத்ஸவத்திற்கு பிறகு பவித்ரோத்ஸவம் செய்யக் கூடாது. குடும்பமுடையவன் வளர்பிறையிலும், முனிவர்கள் இரண்டு பக்ஷத்திலும் செய்யலாம்.

9. செய்விப்பவன், செய்பவன் இவர்களுக்கு உகந்த நட்சத்ரத்தை கண்டோ காணாமலோ செய்யலாம். பட்டு, பருத்தி இவைகளாலான நூல், முஞ்சை புல்லாலோ இல்லையெனில்

10. தர்ப்பையாலோ, மரவுரி(மரப்பட்டையாலோ) யாலோ நூல்தயாரித்து பவித்ரம் செய்து அதிவாஸம் செய்ய வேண்டும். மூன்றாக உள்ள நூலை மும்மடங்காக சுற்றி அஸ்திர மந்திரத்தினால் சுத்தி செய்ய வேண்டும்.

11. உரோமம் முதலியவைகளை அஸ்திர மந்திரத்தினால் தூய நீரால் அலம்பி ஹ்ருதய மந்திரத்தினால் காயவைத்து அந்த ரோமத்தால் (கம்பளியால்) பவித்ரம் செய்ய வேண்டும்.

12. ஒன்பது நூல்களுக்கு வாமை முதலான ஒன்பது சக்திகள் அதிபர்களாவர். இரண்டு மடங்கான நூல்கள் பத்து முழ அளவினால் அதிகமாகயிருப்பது முதல்

13. நூற்றியெட்டு எண்ணிக்கை வரையுள்ள நூல்கள் உத்தமோத்தமம் ஆகும். பன்னிரண்டுக்கு அதிகமாகி முடிவான பன்னிரண்டு வரை முடிவுள்ளதாக உள்ள

14. நூல்கள் கடைநிலை முறைகளுக்கு ஏற்றதாகும். யவையளவு மெலிந்தான பதினாறு முதல் ஐம்பத்தியொன்று எண்ணிக்கை உள்ளது நடுநிலைக்கேற்றதாகும்.

15. உத்தமமான லிங்கங்களுக்கு எண்பத்தோரு நூல் எண்ணிக்கையுள்ளதாகும். மானுஷ லிங்கங்களுக்கும் அவ்வாறேயாம். ஸ்வாயம்புவம் முதலிய லிங்கங்கள், பாணம், ரத்னம்

16. ஆகிய லிங்கங்களிலும், ஸ்தண்டிலம், மண்டலம் உத்ஸவபிம்பம், மூர்த்தி பிம்பங்களிலும் எல்லா எண்ணிக்கையுள்ளதாகவுமோ சமமாகவோ, சமமின்றியோ ஏற்றுக் கொள்ள வேண்டும்.

17. குடும்பமுள்ளவர்களுக்கும் பரிவார தேவதைகளுக்கும் அவ்வாறே வசதியில்லாத குறைவான லிங்கங்களின் விஷயத்திலும் ஸமமான அளவேயாம்.

18. ஒன்றொன்றாக அதிகரித்து பன்னிரண்டு எண்ணிக்கை வரை நூல்கள், அவ்வாறே நெருக்கமாகவும், புதியதாகவும் பன்னிரண்டு முடிச்சு உள்ளதாகவும் கிரஹிக்க வேண்டும்.

19. ஸம அளவென்ற விஷயத்தில் விரும்பியபடி முடிச்சு போடலாம். முடிச்சின் அளவு ஒன்று முதல் மூன்றங்குல அளவுடையதாக இருக்க வேண்டும்.

20. அறிவாளிகளால் விரும்பிய இடத்தில் முடிச்சுகளை போட வேண்டும். செஞ்சந்தனம் குங்குமப்பூ, கைரிகை, அகில், சந்தனமிவைகளோடு

21. நீலோத்பல கிழங்கு, பச்சை கற்பூரத்துடனும், மஞ்சள் கருஞ்சந்தனத்துடன் ஹ்ருதய மந்திரத்தினால் பூசி அலங்கரித்து அல்லது சிகப்பு நூல்களாலோ

22. மூன்று பவித்ரங்களை ஆத்ம, வித்யா சிவதத்வரூபமாக லிங்க சிரஸில் சமர்ப்பித்து எல்லா தத்வமயமான நான்காவது ஆவுடையாரில் சேர்க்கவும்.

23. பூணூலின் பொருட்டாக சூத்ரமாலை, தோள்பாக பக்க சூத்ர, பவித்ரமாலையை ஸகள விக்ரஹத்திலும் முகலிங்கத்திலும் ஸமர்ப்பிக்க வேண்டும்.

24. முழந்தாள் வரை காந்தியுள்ளதாக வெளியில் தெரியும்படியாக மூன்று முதல் விருப்பப்பட்ட நூல் உள்ளதாக பவித்ரம் ஸமர்ப்பிக்க வேண்டும். யந்திரத்திற்கு லிங்க அளவாகவோ புஷ்பலிங்க அளவாகவோ பவித்ரம் ஸமர்ப்பிக்க வேண்டும்.

25. க்ஷúத்ரலிங்கத்திலும், ஸ்தண்டிலம் முதலியவைகளிலும் விருப்பப்படி பவித்ரம் ஸமர்ப்பிக்க வேண்டும். விருஷபத்திற்கு கொம்பு முதுகு தோள் குளம்பிலுமாக ஒன்றை ஸமர்ப்பிக்க வேண்டும்.

26. எல்லா ஆவரண தேவதைகளுக்கும் ஒரு பவித்ரமாகும். சண்டிகேஸ்வரர்க்கும் பைரவர்க்கும் ஒரு பவித்ரமேயாகும்.

27. ÷க்ஷத்ரபாலர், இந்திரன் முதலான திக்பாலகர்களுக்கு வலமாக ஒரு பவித்ரம் ஆகும். யாகசாலை விருஷபஸ்தான, விமானம், ஆலயம் இவைகளை சேர்ந்த

28. எல்லா காரண தேவதைகளுக்கும் மூவிழை நூலால் சுற்றவும் இவ்வாறு மூர்த்தங்களுக்கு பவித்ர முறையை அறிந்து உத்ஸவத்தின் முன் தினம் அதிவாஸத்தை செய்ய வேண்டும்.

29. ஆலயத்தின் முன்பு அல்லது வலது இடது பக்கத்திலோ மண்டபத்தில் ஐந்து முதல் இருபத்தி நான்கு முழ அளவுள்ளதாக

30. பதினாறு அல்லது பன்னிரண்டு தூண்கள் உடையதாகவும் நடுவில் எல்லா அழகோடு வேதிகையோடு கூடியதான நடுவில்

31. மூன்று பங்கு அளவு நீளமும் இருபது தூணையுடையதும் முன்பே நிர்மாணிக்கப்பட்டதுமான மண்டபத்தில் இரண்டு அல்லது மூன்று முழ அகலமான வேதிகையும்

32. அதைச்சுற்றி நன்கு அமைக்கப்பட்ட ஒன்பது ஐந்து, ஒன்று என்ற எண்ணிக்கையுள்ள குண்டங்களையோ அதே எண்ணிக்கையுள்ள ஸ்தண்டிலத்திலோ வேதிகையுடன் கூடியதாகவோ

33. அமைத்து மேற்கில் மண்டலம் அமைத்து பவித்ரத்தை கிழக்கு நோக்கி வைக்கவும். காலைக்கடன் ஸ்நானம் ஸந்த்யாவந்தனம் மந்திரதர்ப்பணம் முதலியவைகளைச் செய்தவனாகவும்

34. சூர்ய பூஜையுடன் நித்ய பூஜையையும் செய்து சூர்யனை விஸர்ஜனம் செய்து பூத சுத்தியால் மந்திரமய சரீரமுடையவனாக இருந்து கொண்டு

35. யாகத்திற்காக பூமியை ஸ்வீகரித்து, வாயில் வாயிற்காவலர்கள், வாஸ்துநாயகர், லக்ஷ்மீ யாகயாகேஸ்வரர்கள் திக்பாலகர்கள், வினாயகர், ஸப்தகுருக்கள்

36. இவர்களை பூஜித்து வணங்கி வேண்டி அதன்பிறகு மண்டலத்திலும் பரமேஸ்வரனை பூஜித்து முறைப்படி தேவனின் ஸமீபத்தில் நல்ல ஆஸநத்தில் இருந்துகொண்டு

37. பஞ்சாஸனார்ச்சனை ஆரம்பித்து ஆவாஹநம் வரை செய்ய வேண்டும். பஞ்சாம்ருதத்துடன் கூடியதாக விசேஷஸ்னபநத்துடனும்

38. பலவித வாஸனைப் பொருட்களோடும் பலவித பக்ஷண, போஜ்ய, சாதவகைகளோடும் விசேஷமாக பூஜையைச் செய்து குண்ட ஸமீபம் சென்று

39. குண்டஸம்ஸ்காரம் முதல் பூர்ணாஹூதி வரையிலாக ஹோமத்தை செய்யவும், ஸ்மித், நெய், ஹவிஸ், பொறி, எள் கோதுமை முதலான பயிர்வகைகளையும்

40. புரசு, அத்தி, அரசு ஆல் முதலிய சமித்துக்களை கிழக்கு முதலான திசைகளிலும் வன்னி, கருங்காலி, பில்வம், இச்சி முதலிய சமித்துக்களை தென்கிழக்கு முதலான திசைகளிலும்

41. பிரதான குண்டத்தில் புரச சமித்தையும் ஹோமம் செய்க. சிவமூலமந்திரத்தை நூறு அல்லது ஐம்பது ஆவ்ருத்தியும் அங்க மந்திரங்களை சிவமந்திரத்திலிருந்து பத்தில் ஓர் பங்காக ஹோமம் செய்ய வேண்டும்.

42. முன்கூறிய எண்ணிக்கையில் பாதியாக மற்ற குண்டங்களில் தத்புருஷன் முதலானதும் ஹ்ருதயம் முதலானதுமான மந்திரங்களை ஹோமம் செய்ய வேண்டும். ஸ்தாலீபக ஹவிஸ்ஸை செய்து அதை ஹ்ருதய மந்திரத்தினால் மூன்றாக பிரிக்க வேண்டும்.

43. கும்பத்திலுள்ள சிவனின் பாகத்தையும் அக்னிகார்யமாக ஹவிஸ்ஸையும் தேனாலும், நெய்யாலும் கலந்து தன்னுடைய பாகத்தை நெய்யால் மட்டும் கலந்ததாக தயார் செய்து கொள்ள வேண்டும்.

44. ஹ்ருதய மந்திரத்தினால் தேவனின் பாகத்தை பூஜித்து அதை சிவஸமீபம் எடுத்து சென்று ஈச்வரனை பூஜித்து விரதாங்கங்களை தெரிவிக்க வேண்டும்.

45. முறைப்படி தத்புருஷ மந்திரத்தை ஸ்மரித்து கிழக்கில் பற்குச்சியை வைக்க வேண்டும். அகோரமந்திரத்தினால் சுத்தமான பாத்ரத்தில் விபூதியை வைக்க வேண்டும்.

46. மேற்கில் ஸத்யோஜாத மந்திரத்தை நினைத்து சுத்தமான மண்ணை வைக்க வேண்டும். வடக்கில் நெல்லிக்கனியை ஸ்தாபித்து கிழக்கில் ஐந்துவிதமான பக்ஷணங்களை நிவேதனம் செய்ய வேண்டும்.

47. தர்பையுடன் கூடியதான எல்லா ஹோமத்ரவ்யங்களையும் மேற்கு திசையிலும், தெற்கு திசையில் தண்டம், ருத்ராக்ஷமாலை, கோவணம், பிøக்ஷ பாத்ரங்களையும்

48. கோரோசனை குங்குமப்பூ, நல்லெண்ணை, ஊசி, சீப்பு, கண்ணாடி, கத்தரிக்கோல், பல், நகம், சுத்தி செய்யும் கருவி, கண்மை இவைகளையும்

49. வேறான மைபாத்ரம் போன்ற பொருட்களை வாமதேவ மந்திரத்தினால் ஸ்தாபிக்க வேண்டும். சுண்ணாம்புடன் கூடிய தாம்பூலத்தை தத்புருஷ மந்திரம் கூறி கொடுக்க வேண்டும்.

50. வடகிழக்கு திசையில் ஆஸனப்பலகை, குடை பாதுகை, யோகவஸ்திரம் இவைகளை ஸ்தண்டிலத்தில் உள்ள பவித்ர சூத்ர சமீபத்தில் சுற்றிலும் அதிவாஸம் செய்து

51. அஸ்திர மந்திரத்தினால் புரோக்ஷித்து கவச மந்திரத்தினால் அவகுண்டநம் செய்து ஹ்ருதய மந்திரத்தினால் பூஜித்து தேனுமுத்ரையால் அம்ருதீகரணமாக்கி சிவாம்சமாக தெரிவிக்க வேண்டும்.

52. தேவதேவனுக்காக பிரம்ம மந்திரங்களால் பவித்ராரோபணம் செய்ய வேண்டும். வேதிகைக்கு மேல் எட்டு மரக்கால் அளவு நெல்லினால் ஸ்தண்டிலம் அமைக்க வேண்டும்.

53. அதன் பாதியளவு 4 மரக்கால் அரிசியும், எள் பொறியுடன் கூடியதாக ஸ்தண்டிலம் அமைத்து அதில் பாத்திரத்தில் பவித்ரங்களை ஸ்தாபிக்க வேண்டும்.

54. பவித்ரங்களை மண்டலம், வேதிகையின் மேல் பாகம் கும்பஸமீபமிவைகளிலோ வைத்து அர்க்யஜலத்தால் புரோக்ஷித்து ஸம்ஹிதா மந்திரத்தினால் அபிமந்திரணம் செய்ய வேண்டும்.

55. மான்தோல் முதலியவைகளால் போர்த்தி அக்னிஸமீபம் வைக்க வேண்டும். ஓர் ஆண்டின் குறைவில்லாத எல்லா கார்யத்திற்கும் ஸாக்ஷியாகவும்

56. ரக்ஷிப்பதற்காகவும், கர்மாவின் பயனையடைய நிச்சயித்தின் இருப்பிடமாகவும் சிவனை நினைத்து, சிவமந்திரம், பிரம்ம அங்க மந்திரங்களால்

57. இருபத்தியொரு முறை ஸம்பாத ஹோமம் செய்து மேற்கூறிய மந்திரங்களால் ஹோமம் செய்ய வேண்டும். சூர்யனுக்குகந்த பவித்ரம் கொடுத்து ஆசமனம் செய்து,

58. யாகசாலை, வ்ருபஸ்தானம் பிரகாரம் கோபுரம், அக்னி ஆகியவர்கள் சேர்ந்த காரணதேவர்களை கவச மந்திரத்தினால் ஐந்து சூத்ரத்தினால் சுற்ற வேண்டும்.

59. நந்தி முதலான மூர்த்திகளுக்கு பிரதட்சிணமாக கந்தபவித்ரம் கொடுக்கவும், முன்பு போல் ஆலயத்தில் நுழைந்து பிரம்மாவிற்கு பவித்ரம் கொடுக்க வேண்டும்.

60. ஹே பகவானே இந்த பவித்ரங்களை ஸம்ஸ்கரிக்கப்பட்டவைகளாக்கி குடத்திலிருக்கும் சிவனின் பொருட்டு அர்ப்பணிக்கிறேன் என்று தெரிவிக்கவும்

61. காப்பாற்றும் பொருட்டு தேவர்களுக்கு கந்த பவித்ரத்தை ஸமர்ப்பித்து முதலில் கும்பத்திற்கும் வர்த்தனிக்கும் ஸமர்ப்பித்து சிவஸமீபமடையவும்.

62. தன்மூர்த்தியான சரீரத்திலும் குரு பரம்பரையிலும் கந்த பவித்ரம் கொடுத்து ஓர் முடிச்சையுடையதும் குறைவான நூலால் நிர்மாணிக்கப்பட்டதும்

63. புகையூட்டப்பட்டு புஷ்பத்துடன் கூடியதும், தேனு முத்ரையால் அம்ருதீகரணம் செய்யப்பட்டதுமான ஆமந்திரண பவித்ரத்தை அஞ்சலி ஹஸ்தமாக எடுத்து,

64. அவன் தலையில் சிவனின் பொருட்டு ஏற்றி ரேசககிரியையால் சிவமந்திரத்தினால் ஸமர்ப்பிக்க வேண்டும். தேவனுடைய சன்னதியில் ஆமந்திரண மந்திரத்தை கூற வேண்டும்.

65. ஹே ப்ரபோ எல்லா கார்யங்களின் குறைகளை சரி செய்பவரே யாகத்தை குறித்து உன்னை, உன்னுடைய விருப்பத்தை அடைய காரணனாக ஆமந்திரணம் செய்கிறேன்.

66. அதன் விருப்பப்பயனை நீவிர் அறிவீர். சித்துக்கும், அசித்துக்கும் தலைவரே எல்லாவிடத்திலும் எப்பொழுதும் சம்போ உனக்கு நமஸ்காரம், எனக்கு அருள்பாலிப்பீராக!

67. என்று ஜபித்து நிவேதித்து தேவனை ஸ்தோத்தரித்து நமஸ்கரித்து க்ஷமாபிரார்த்தனை செய்து திக்பாலகர்களுக்கும் தசாயுதங்களுக்கும் பவித்ரார்ப்பணம் செய்ய வேண்டும்.

68. சருவின் மூன்றாவது பாகத்தை வஹ்நியில் இருக்கும் தேவனுக்கு ஸமர்ப்பித்து அக்னியில் இருக்கும் தேவர்க்கும் முன்பு போல் ஆமந்திரண பவித்ரத்தை கொடுக்க வேண்டும்.

69. ஓம் இந்த்ராய நம: பலிம் ஸங்க்ருஹாண என்பதாகவும் மற்ற மூர்த்திகளுக்கும் முறைப்படி பஹிர் பலியைகொடுக்க வேண்டும்.

70. வடமேற்கு திசையில் பைரவருக்காக பலிகொடுத்து ஆசமனம் செய்து பிராயச்சித்தாஹூதி செய்து பூர்ணாஹுதியை செய்ய வேண்டும்.

71. பூ:, புவ: ஸுவ: பூர்புவஸ்ஸுவ, என்ற பதங்களால் தனித்தனியாகவும் சேர்ந்ததாகவும் ஹோமம் செய்ய வேண்டும். அக்னயேஸ்வாஹா, ஸோமாயஸ்வாஹா அக்னீ÷ஷாமாப்யாம் (பூஸ்வாஹா, புவஸ்வாஹா, ஸுவஸ்வாஹா, பூர்புவஸ்ஸுவ ஸ்வாஹா, ஸ்விஷ்டக்ருதேஸ்வாஹா)

72. ஸ்வாஹா என்றும் முன்பு கூறப்பட்ட தீப நாஹுதி மந்திரங்களால் ஹோமம் செய்து மண்டலத்திலுள்ள சிவனோடு அக்னியிலுள்ள சிவனையும் பிறகு

73. நாடீ ஸந்தாநமுறைப்படி சேர்ந்ததாக பரமேஸ்வரனை பாவிக்கவும். ஸித்தாந்த புஸ்தகத்திலும் தன் ஆசார்யனிடத்திலும் பவித்ரத்தை கொடுத்து

74. யாகசாலையிலிருந்து வெளி வந்து ஆசமனம் செய்து பல்துலக்குதல் பஞ்சகவ்யம் ஹவிஸ் புசித்தலை முறைப்படி செய்ய வேண்டும்.

75. பிறகு ஆசமனம் செய்து சிவமந்திரத்தை நினைத்து கொண்டு படுக்க வேண்டும். பிறகு காலையில் செய்யப்பட்ட ஸ்னானம் ஸந்தியாவந்தனம் மந்திர தர்பணமுடையவனாக

76. விஸர்ஜனம் செய்யப்படாத ஈச்வரனிடமிருந்து பவித்ரங்களை எடுக்க வேண்டும். அவைகளை வடகிழக்கு திசையிலுள்ள மண்டல பாத்ரத்தில் சண்டேஸ்வரனுக்காக ஸமர்ப்பிக்க வேண்டும்.

77. தேவனிடம் அஷ்டபுஷ்பம் சாத்தி லிங்கத்திலிருந்து தேவனை விஸர்ஜனம் செய்க. (நிர்மால்ய பூஜைசெய்க) ஆசமனம், மந்திரநியாஸம், ஸாமான்யார்க்கத்தை கையில் எடுத்துக் கொண்டு

78. நித்யானுஷ்டானங்களையும், செய்து ஆசமனத்தையும், மந்திர விக்ரஹபாவனையும் செய்து கொண்டு வாயில் வாயிற்படி தேவதைகளை பூஜித்து அஸ்திரங்களை கும்பத்தையும் பூஜித்து,

79. திக்பாலகர்களையும் தசாயுதங்களையும் முறைப்படி பூஜிக்க வேண்டும். பிரகாசமாந ஆஸனத்தில் வடக்கு முகமாக நேராக அமர்ந்து

80. பூதசுத்தி விசேஷார்க்யம், திரவ்ய சுத்தி, சிவஹஸ்தபாவனை இவைகளையும் செய்து பஞ்சகவ்ய பூஜையையும் செய்து

81. விசேஷமான ஸ்நபனபூஜையுடன் பஞ்சாம்ருதம், பஞ்சகவ்யத்துடன் கூடியதாக அபிஷேக பூஜைகளை செய்ய வேண்டும்.

82. ஜபம் செய்து ஸமர்ப்பித்து ஆசார்யன் குண்ட ஸமீபத்தையடையவும் குண்டத்தை அஸ்திரமந்திரத்தினால் பிரோக்ஷித்து மேகலை, பரிதி இவைகளிலிருக்கும்

83. தேவர்களை பூஜித்து, முறைப்படி ஸ்ருக்ஸ்ருவாஜயஸம்ஸ்காரம் செய்து, பூர்ணாஹூதி செய்து, சிவனை ஆவாஹித்து, பூஜித்து திருப்தி செய்விக்க வேண்டும்.

84. பிராயச்சித்தாஹுதி செய்து பூர்ணாஹுதி செய்ய வேண்டும். பிறகு சூர்யனுக்கு பவித்ரம் கொடுத்து ஆசமனம் செய்து மந்திரமயசரீரமாக்கி கொண்டு

85. நந்தி முதலானவர்களுக்கு பவித்ரம் கொடுத்து உள்ளே நுழைந்து பிரம்மாவிற்கும், சிவகும்ப வர்த்தநீகும்பத்திற்கும் முறைப்படி பவித்ரம் கொடுக்க வேண்டும்.

86. தேவ சமீபம் சென்று தன் ஆஸனத்தில் அமர்ந்து (விபவாநுசாரமாக) சக்திக்கேற்றவாறு விசேஷ பூஜை செய்து

87. ஸ்வமூர்த்தத்திலும் குரு வரிசைகளில் சிவனை ஸ்மரித்து பவித்ரம் கொடுத்து வர்ஷ, ருது, மாஸ, பக்ஷ, தின நாடீ ப்ராணாதி, விக்ரஹமாயும்

88. எல்லாவித கண் முதலான இந்திரியமுள்ள சரீரம் பொருள், செயலின் காரணமாயும், செய்யப்பட்ட செய்யப்படாத சேர்க்கப்பட்ட விடுபட்டகார்யங்களுக்கு ஒரே ஸாக்ஷியாகவும்

89. பூமியை காப்பவருமான ஈசானனை சுத்தமனதை உடையவன் சரணாகதியாக கூறி ஈச்வர முகத்தை நோக்கி பவித்ரத்தை கையில் உடையவனாக இறைவனை

90. காலாத்மாவான உன்னால் ஹேதேவ என்னால் செய்யப்பட்ட இந்த முறையில் பார்க்கப்பட்டு குறைத்து சேர்த்து, அபஹரித்து மறைத்து இவ்வாறாக என்னால் செய்யப்பட்டதை

91. குறைவானது குறைவில்லாதது, செய்யப்பட்டதும், செய்யப்படாததும் ஆன கிரியை நிறைவுள்ளதாக்கி இந்த சர்வாத்மாவான சம்புவினால் உள்இச்சையால் பவித்ரத்தோடு

92. யாகத்தின் விரதபயனை பூர்த்தி செய்யும் என்று இருமுறை கூறி நியமேஸ்வராய ஸ்வாஹா என்றும் கூறி

93. ஆத்மதத்வாதி பதயே சிவாய நம: என்றும் வித்யாதத்வாதிபதயே சிவாய நம: சிவதத்வாதிபதயே சிவாய நம: என்றும் முக்தி விருப்பத்தையுடைய பதமாக கூற வேண்டும்.

94. அனுபவிப்பதை குறிக்கோளாக உடையவர் சிவதத்வம் முதலாக மூன்று பவித்ரத்தை சிரஸில் ஸமர்ப்பிக்கவும். சிவமந்திரத்தை முதலில் கூறி சிவவித்யா ஆத்ம தத்வத்தையும்

95. கூறி, பிறகு ஸர்வதத்வேஸ்வராய என்று கங்காவதாக பவித்ரத்தையும் ஸமர்ப்பிக்க வேண்டும். புஷ்பாஞ்சலி ஹஸ்தத்தோடு பக்தியோடு ஈச்வரனை விஞ்ஞாபிக்க வேண்டும்.

96. சராசரமான உலகில் எல்லா பிறப்புகளுக்கும் உன் கதி ஸ்திரமாயிருக்கிறது. பூதங்களின் உள்புறம் சஞ்சரிப்பவராக நீர் காணப்படுகிறீர்.

97. கர்மா, மனது, வாக்கு இவைகளால் செய்யக்கூடிய செய்கையானது எனக்கு உன்னிடமிருந்து இன்றி வேறில்லை. மந்திர குறைவு, செயல்குறைவு பொருட்குறைவு ஆகியவைகளுடன்

98. ஜபம், ஹோமம், அர்ச்சனை இவைகளின் குறைவை என்னால் உமக்கு நித்யம் செய்யப்பட்டதாகவுள்ளதை செய்யப்படாததாக எண்ணி வாக்யக் குறைவையும் மேற்கூறியவைகளையும் நிறைவு செய்து கொள்ள வேண்டும்.

99. ஸுரேஸ்வர பாபத்தை யழிக்கக் கூடியதாகவும் சுத்தமானது பவித்ரம். எல்லா ஸ்தாவரஜங்கமங்களும் உன்னால் சுத்தியாக்கப்பட்டதாகும்.

100. விரதத்தின் குறைவுப்பட்ட சேர்க்கையால், ஹேதேவ, என்னால் எது துண்டிக்கப்பட்டதோ அவை எல்லாம் உன் உத்தரவினால் நிரப்பப்பட்டு ஒன்றாகச் சேர்ந்ததாக ஆகட்டும்.

101. ஜபம் செய்து ஈச்வரனிடம் தெரிவித்து நமஸ்கரித்து ஈச்வரனிடமிருந்து நியமமாக பக்தியோடு இருந்து நமஸ்கரிக்க வேண்டும். நான்கு மூன்று இரண்டு ஒரு மாஸமுமோ

102. பதினைந்து தினம் ஏழுநாள், ஐந்து நாள், மூன்று ஒரு தினமாகவோ, பூஜை ஆரம்பித்து முடியும் வரை நியமத்தை கடைபிடிக்க வேண்டும்.

103. ஒருவேளை உணவு முதல் எந்த நியமமுண்டோ அவற்றை சக்திக்குதக்கவாறு கடைபிடித்து ஈச்வரனிடமிருந்து பவித்ராவரோஹணம் செய்யும் வரை விரதத்தை கடைபிடிக்க வேண்டும்.

104. தசாயுதங்களிடமிருந்தும் திக்பாலகர்களிடமிருந்தும் ஸூத்ரத்தை எடுத்ததாக நினைத்து அக்னியிலுள்ள சிவனிடம் நான்காவது பவித்ரத்தை கொடுத்து வியாஹருதிகளால் ஹோமம் செய்ய வேண்டும்.

105. வஹ்னியை ஸ்விஷ்டக்ருத்ஹோமம் வரை நிறுத்தி ஹோமம் செய்து உள்ளே நுழைந்து தேவனை பூஜித்து குருவிற்கும் ஸித்தாந்த புஸ்தகத்திற்கும்

106. பவித்ரம் கொடுத்து திக்பாலபலி கொடுத்து ஆசார்யன் ஆசமனம் செய்து பிராயச்சித்தாஹுதி செய்து குறைவை நிறைவு செய்யும் பூர்ணாஹூதியை செய்ய வேண்டும்.

107. மண்டலத்திலுள்ள தேவனை பூஜித்து ஈச்வரனை மன்னித்தருள கேட்க வேண்டும். அதன் முடிவில் உணவு, உடை, மற்றும் உபகரணப்பொருட்களால்

108. தீக்ஷிதர்களை பூஜித்து என்னிடம் ஸதாசிவன் அன்பாக இருக்கக் கடவன் என கூற வேண்டும். லிங்கத்திலிருந்து பவித்ரத்தை எடுத்து நிர்மால்ய குழியில் போட்டதும்

109. ஸ்நானம் செய்யப்பட்டு பூஜித்த காலத்தில் அதை நிர்மால்ய குழியில் வைத்துப் பிரதிதினமும் விஸர்ஜனம் செய்யாமலிருக்கவும் அதிகமான தினங்கள் வரை விரத முடிவில் பூஜித்து

110. விரதத்தை தெரிவிக்கிறேன் என்று கூறி எனக்கு பலனை யளிப்பதாக ஆகட்டும் போகத்தை விரும்புபவன் விரதியாகவும் விருப்பத்தில் கர்மாவிற்கு கட்டுப்பட்டவன் என்றும்

111. மந்திர தர்பணம் வரை செய்து பிராயச்சித்தம் அனுஷ்டிக்க வேண்டும். விபூதி கொடுத்து வஹ்னியிலிருப்பவரை சிவனிடம் சேர்க்க வேண்டும்.

112. வஹ்னியிலிருந்து மந்திரத்தை எடுத்து அதை த்வாதசாந்த ஸமீபம் சேர்த்து ஹ்ருதயத்தில் ஸமர்ப்பித்து அக்னியை விஸர்ஜித்து விஷ்டரத்திலிருந்து தேவர்களை விஸர்ஜித்து

113. பரிதிகளையும் பலிகொடுத்ததாக விஸர்ஜித்து ஆசமனம் செய்து சிவகும்ப அஸ்த்ர வர்த்தநீ கும்ப மந்திரங்களை ஸம்ஹரித்து சேர்க்க வேண்டும்.

114. ஈச்வரனிடத்தில் விருப்பத்தை கூறி மன்னித்தருளும் என்று விஸர்ஜனம் செய்து, லோக பாலகர்களை தசாயுதங்களுடன் சேர்ந்ததாக வேண்டும் வாயிற்படியிலுள்ள திவார தேவதைகளையும்

115. சூர்யன் வரை விஸர்ஜனம் செய்து மஹேச்வரனிடமிருந்து பவித்ரங்களை எடுத்து சண்டேசனிடத்தில் ஸமர்ப்பிக்க வேண்டும்.

116. பவித்ரங்களை நிர்மால்யமாகவும் வேறுவிதமாகவும் செய்யப்படாவிடில் அகோர மந்திரத்தை லக்ஷõவர்த்தி செய்து பத்தில் ஓர் பங்கு ஹோமம் செய்க.

117. நித்யபூஜாங்க பவித்ரத்தை புஷ்பம் முதலியவைகளால் கொடுக்க வேண்டும். நித்ய பவித்ரம் கொடுத்தாலும் ஸம்வத்ஸர பவித்ரத்தையும் கொடுக்க வேண்டும்.

உத்தரகாமிக மஹாமந்திரத்தில் பவித்ர சமர்ப்பண முறையாகிற பதினெட்டாவது படலமாகும்.

 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar