Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
முதல் பக்கம் » ஸமய விசேஷ தீட்சா விதி
படலம் 20: ஸமய விசேஷ தீட்சா விதி
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

15 ஜூன்
2012
03:06

20 வது படலத்தில் சமய விசேஷ தீட்சாவிதி கூறப்படுகிறது. முதலில் சமயத்தை சார்ந்த தீட்சையை கூறுகிறேன் என்று உத்தரவு இடுகிறார். ஆசார்யன் நித்ய அனுஷ்டானத்தின் சாமான்யார்க்ய பாத்ரத்துடன் யாகசாலை நுழைந்து திவார பூஜை இடையூறுகளை நீக்கி யாகசாலைக்கு காப்புதல் செய்து பூதசுத்தி ஸகளீகரண அந்தர்யாகம் செய்து விசேஷார்க்யம் செய்து அந்த தீர்த்தத்தால் தன்னையும் பொருள்களையும் சுத்தி செய்து பிராதேச மாத்ரம் என்ற (சாண் அளவு) உடைய 36 தர்ப்பங்களால் ஞான கட்கம் செய்ய வேண்டும் என கூறப்படுகிறது. முறைப்படி பஞ்சகவ்யம் செய்து பஞ்சகவ்யத்தால் யாகமண்டபத்தை பிரோட்சித்து பொரி, சந்தனம், வெண்கடுகு, விபூதி, தர்பம் புஷ்பம் அட்சதை ஆகிய ஏழு பொருள்களுடன் கலந்த விகிரம் என்ற திரவ்யத்தை அபிமந்தரித்து மண்டபத்தில் அவைகளை வாரி இறைத்து நிரீக்ஷணம் முதலிய கிரியைகளால், யாகமண்டபத்தை ஸம்ஸ்காரம் செய்து அதுபோல் குண்டத்திற்கும் முறைப்படி கிரியைகள் செய்து மண்டபம் அல்லது வேதிகையில் ஈசானத்திலோ, மேற்கு திக்கிலோ சிவகும்பவர்த்தினியையும் வைத்து சந்தன புஷ்பம் இவைகளால் பூஜிக்க வேண்டும் என்று கும்பம் வர்த்தனியை ஸ்தாபிக்க வேண்டும் என்று கும்பவர்த்தனி அமைக்கும் முறை விளக்கப்படுகிறது. பிறகு பத்து திக்பாலகர்கள் 10 அஸ்திரங்கள் இவைகளுக்கு பூஜை முறையும் கூறப்படுகிறது. பின்பு உங்களால் உங்களுடைய திக்கில் இடையூறை போக்குவதற்காக பொறுமையாக வேள்வி முடியும் வரை இருக்க வேண்டும். என சிவனுடைய உத்தரவை திக்பாலகர்களிடம் தெரிவிக்க வேண்டும் என கூறப்படுகிறது. மண்டபம் ஸ்தண்டிலத்திலோ லிங்கத்திலோ விசேஷ பூஜையுடன் சிவனை பூஜிக்க வேண்டும். அக்னியில் சிவனை பூஜிக்கவும் என கூறி அந்த பூஜை முறை கூறப்படுகிறது. ஹே பகவானே என்னுடைய சரீரத்தில் நுழைந்து இரக்கத்துடன் அனுக்ரஹம் செய்ய வேண்டும் என்று வேண்டி சிவனிடம் இருந்து உத்தரவை பெற்றவனாக ஆசார்யன் ஆத்மா சிவன் இரண்டையும் சேர்ந்ததாக எண்ணவும் என கூறி சிவசரீர அழைப்பு முறை கூறப்படுகிறது.

மண்டபத்தில் செயலின் சாட்சியாகவும், சிவகும்பத்தில் யாகத்தின் சாட்சியாகவும், அக்னியில் ஹோமத்தின் இருப்பிடமாகவும், சிஷ்ய சரீரத்தில் பாச பந்தத்தை விடுவிக்க கூடியதாகவும், என் சரீரத்தில் அருள்பாலிக்கும் தன்மை உடையவராகவும் ஈஸ்வரன் இருக்கிறார். ஐந்து இருப்பிடத்தை உடைய ஈச்வரனானவன் நானே சதாசிவன் என்று வேற்றுமை இல்லா தன்மையாக தன்னை எண்ணிக் கொள்ளவும் என கூறப்படுகிறது. பிறகு தீட்சைக்காக வாயிலில் இருக்கும் சிஷ்யர்களுக்கு யாக மண்டபத்தை நுழையும் பொருட்டு சிவனிடம் வேண்டுதல் மூலம் அவர் உத்தரவை அடைந்தவனாகவும் கூறப்படுகிறது. பிறகு சிஷ்யர்களுக்கு தீட்சை செய்யும் முறை கூறப்படுகிறது. சிஷ்யனுக்கு கண்ணை கட்டும் துணியால் கண்ணை மறைத்து மண்டல சமீபம் அழைத்து சென்று ருத்திர ஈஸ்வர பதத்தை கொடுக்க கூடியதாகிய சிவஹஸ்தத்தை சிஷ்யன் தலையில் வைத்து அவன் அஞ்சலி ஹஸ்தத்தில் புஷ்பங்களை கொடுத்து கண்ணை மூடிய துணியை நீக்கி ஈஸ்வரனை காண்பித்து புஷ்பசமர்ப்பணம் செய்து புஷ்பம் விழுந்த இடத்தை அனுசரித்து பெயர் சூட்டவும் என கூறப்படுகிறது. பிராம்மண ஜாதிகிரமமாக நான்கு வர்ணத்தவர்களுக்கும், பெண்களுக்கும் பெயர் சூட்டும் விஷயத்தில் விசேஷம் கூறப்படுகிறது. பிறகு அங்கு செய்யக் கூடிய கிரியைகளை விசேஷமாக விளக்கப்படுகிறது. பிறகு நாடி சந்தானம், பிராம்மண தன்மை ஏற்படுத்துதல் ருத்திர தன்மை ஏற்படுத்துதல் இவைகள் கூறப்படுகிறது. ஆசார்யனால் பிராணாயாம முறையினால் சிஷ்ய சரீரத்தில் சிவனை சேர்க்கும் முறை கூறப்படுகிறது. ஆசார்யன் சிஷ்யனுக்கு பூணூல் அணிவிக்கவும். பிறகு நூறு, ஆயிரம் முறை மந்திரஹோமம் செய்து சிவ மந்திரத்தினால் பூர்ணாஹூதி செய்க என ஹோம முறையின் முடிவானது காணப்படுகிறது. இப்பேர்ப்பட்ட ஸம்ஸ்காரத்துடன் கூடியவன் சிவபூஜை ஹோமமுறை அத்யயனம், மந்திரத்தை கேட்டல் ஆகிய விஷயங்களில் தகுதியுடையவனாகிறான். அவன் ருத்திர பதம் அடைகிறான். அவனே நிர்வாண தீட்சைக்கு தகுதியாகிறான். முடிவில் எந்த ஆசார்யன் பிராம்மணர்களின் தீட்சா முறைப்படி சூத்ரனுக்கு தீட்சை செய்கிறானோ அவன் சூத்ர தன்மையை அடைகிறான். இவ்வாறு 20வது படல கருத்து சுருக்கமாகும்.

1. இப்பொழுது சமயத்தை சார்ந்தவர்களின் தீøக்ஷ (ஸமயதீøக்ஷ) கூறுகிறேன் என்கிறார். ஆசார்யன் நித்யானுஷ்டானம் மந்த்ராதி தர்ப்பணம் செய்தவராயும்

2. சூர்ய பூஜை செய்து ஏற்றுக் கொள்ளப்பட்ட மந்திரத்தை உடையவனாகவும் ஸாமான்யார்க்யத்தை கையில் எடுத்துக் கொண்டு யாக மண்டபமடைந்து

3. திவாரத்தை அஸ்த்ர மந்திரத்தினால் பிரோக்ஷணம் செய்து திவாரம் திவாராதிபர்களையும் பூஜிக்க வேண்டும். முதலில் சாந்திகலாத்வாராய நம: என்று

4. கிழக்கு நுழைவு வாயிலில் பூஜித்து தெற்கு நுழைவு வாயிலில் வித்யாகலையையும் மேற்கு நுழைவு வாயிலில் நிவ்ருத்தி கலையையும் வடக்கு நுழைவு வாயிலில் பிரதிஷ்டா கலையையும்

5. கிழக்கில் நந்தி, மஹாகாளர், தெற்கில் பிருங்கி, வினாயகர், மேற்கில் விருஷபர், ஸ்கந்தர், வடக்கில் தேவீ, சண்டேஸ்வரர்களையும்

6. முதலில் ஓம்காரமும் நான்காம் வேற்றுமை பதத்துடயன் நம: என்பதை இறுதியிலும் உள்ளதாக முறைப்படி சேர்த்து நந்தி முதலானவர்களை பூஜிக்க வேண்டும். தோரண தேவதைகளை கடங்கள் அல்லது சுவற்றில் உள்ளதாகவோ பூஜிக்கலாம்.

7. மேற்கு திவாரத்தை அடைந்து புஷ்பம் எறிதலை செய்து அஸ்திர மந்திரத்தால் பூமியை மூன்று முறைப்படி காலால் தட்டி அந்த பூமியிலுள்ள

8. இடையூறுகளை போக்கி மூன்றுமுறை கைதட்டுவதால் ஆகாயத்தின் இடையூறு களையும் மூன்று முறை கைசொடுக்குவதால் வெளியிலுள்ள இடையூறுகளை நீக்கி

9. இடது தூண் பக்கமாக வலது காலால் நுழைந்துகீழ் வாசற்படியில் புஷ்பத்தைப்போட்டு

10. மண்டபமத்தியில் வாஸ்தோஷ்பதே பிரம்மணே நம: என்று சந்தனம் புஷ்பங்களால் வாஸ்து பிரம்மாவை பூஜித்து, யாக மண்டபத்தை அஸ்திரமந்திரத்தால் சுற்றியதாகவும் செய்து

11. கவச மந்திரத்தினால் அவகுண்டனம் செய்து யாகசாலையை ஸம்ரக்ஷணம் செய்து வடக்கு முகமாக அமர்ந்து பூதசுத்தியை செய்ய வேண்டும்.

12. அங்கநியாஸ, கரன்யாசம் செய்து அந்தர் யாகம் செய்ய வேண்டும். விசேஷார்க்யமானது யவை வெண் கடுகு அக்ஷதை

13. தீர்த்தம், எள், தர்ப்பை நுனி, பால், புஷ்பம் இவைகளோடு சேர்ந்ததாக கல்பிக்க வேண்டும். அர்க்ய ஜலத்தால் தன்னையும் பூஜை திரவ்யங்களையும் பிரோக்ஷிக்க வேண்டும்.

14. அஸ்திர மந்திரத்தினால் பிரோக்ஷிச்சு கவச மந்திரத்தால் அவகுண்டனம் செய்து ஹ்ருதய மந்திரத்தினால் அபிமந்திரித்து சந்தனத்தால் திலகமிட்டு கொள்ள வேண்டும்.

15. சிவஹஸ்த கல்பனம் செய்து அந்த சிவ்ஹஸ்தத்தால் தலை முதல் பாதம் வரை சிவபாவனையாக்கிக் கொண்டு ஞானகட்கத்தை முப்பத்திஆறு, முப்பத்தி இரண்டு

16. தர்ப்பைகளால் ஒரு சாண் அளவும் அஸ்திர மந்திரமாகவும் நிர்மாணித்து பஞ்சகவ்யம் தயார் செய்ய வேண்டும். அதன் செய்முறை விளக்கம் கூறப்படுகிறது.

17. மண்டபத்தின் சுபபாகமான திக்கில் ஒன்பது பாகமாக்கப்பட்ட பூமியில் ஐந்து தத்வம் பூஜிக்கப்பட்ட இடத்தில் ஐந்து பாத்திரங்களை வைக்க வேண்டும்.

18. ஐந்து தத்வங்கள் சிவன், சதாசிவன், வித்யை, காலம், புருஷன் ஆகிய கோஷ்ட பூஜை பெயர்களாகும். சுப்ரதிஷ்டம், சுசாந்தம், தேஜோவத், அம்ருதாத்மகம்.

19. ரத்னோதகம் ஆகியவை பாத்திர பூஜை பெயர்களாகும், பால், தயிர், நெய், கோமூத்ரம், கோசாணம் இவைகளை ஈசானம் முதலிய மந்திரங்களால் அபிமந்திரித்து

20. ஒன்று இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து என்ற வரிசைப்படி பூஜித்து ஆறு தடவை ஜபத்தால் குசோதகத்தை பூஜித்து அம்ருதீகரணமும் சிவ ஒருமைப்பாடும் செய்ய வேண்டும்.

21. பஞ்சகவ்யத்தால் மண்டபத்தை பிரோக்ஷித்து விகிரங்களை அபிமந்திரிக்கவும் நெற்பொறி, சந்தனம், வெண்கடுகு, விபூதி, புஷ்பம், தர்பம், அக்ஷதை.

22. ஆகிய இந்த விகிரத்தின் காரணமான ஏழு பொருட்களை அஸ்த்ர மந்திரத்தினால் கலந்து மண்டபத்தின் நிருருதி திக்கில் இருந்து மண்டப ஸம்ஸ்காரம் செய்ய வேண்டும்.

23. நிரீக்ஷணமும் முதலிய ஸம்ஸ்காரங்களை வடகிழக்குமுகமாக நின்று பூஜித்து முன்பு கூறப்பட்டபடி குண்டத்திற்கும் அஷ்டாதசமஸம்ஸ்காரம் செய்ய வேண்டும்.

24. வடகிழக்கு திசையிலிருந்து ஞானகட்கத்துடன் விகிரங்களை இறைக்க வேண்டும். மண்டபத்தில் ஈசான வேதிகையிலோ மேற்கு திக்கு வேதிகையிலோ

25. தங்கம் முதலியவைகளாலான கும்பத்தில் ஜலம் நிரப்பி மாவிலை, தங்கம், வஸ்த்ரம் முதலியவைகளுடன் கூடியதாக ஸ்தாபித்து

26. விகிர பூஜை முடித்து அஸ்த்ர கும்பங்களுக்கு சலாசனம், ஸ்திராஸநம் கல்பிக்க வேண்டும். மூர்த்தி மந்திரத்தால் சிவமூர்த்தயே நம: என்று சிவகும்பத்தை பூஜிக்க வேண்டும்.

27. வஸ்திரம், நூல், தங்கம், தீர்த்தம் இவைகளுடன் கூடிய வர்த்தனியை பிரத்யங்கமான திவாரத்துடன் கூடியதும் அஸ்த்ர மந்திரத்தினால் பூஜிக்கப்பட்டதாக வைக்க வேண்டும்.

28. சந்தனம், புஷ்பம் இவைகளால் சிவகும்பம் அஸ்த்ரகும்பம் இவைகளை பூஜித்து இந்திரன் அக்னி, யமன், நிருருதி வருணன்.

29. வாயு, ஸோமன், ஈசானன் ஆகிய திக்பாலர்களை கிழக்கு முதலான திசைகளில் பூஜித்து ஈசான திக்கின் தெற்கில் பிரம்மாவையும் நைருதி திக்கின் வடக்கில் விஷ்ணுவையும் பூஜிக்க வேண்டும்.

30. இந்திராதிகளை கடம் அல்லது கலசம் இவைகளிலோ கும்பத்தில் இருப்பதாகவோ பூஜிக்க வேண்டும். அதேபோல் வஜ்ரம் முதலிய தசாயுதங்களையும் பூஜிக்க வேண்டும்.

31. ஹே இந்திரனே! உம்மால் உங்களுடைய திசையில் இடையூறுகளை நீக்குவதற்காக யாக பூஜை முடியும் வரை சிவாக்ஞையால் பொறுமையுடன் இருக்கவேண்டும் என்று

32. எல்லா லோக பாலர்களிடமும் சிவாக்ஞையை முறைப்படி அறிவித்து யாகேஸ்வர அஸ்திரகும்பங்களை வலம் வருதல் வேண்டும்.

33. பிறகு யாகேஸ்வரகும்ப வர்த்தனியை முன்பு போல் ஸ்தாபித்து யாகேஸ்வர கும்பம் அஸ்திர கும்பம் இவைகளுக்கு ஸ்திராஸந பூஜையை செய்ய வேண்டும்.

34. சிவமூர்த்தி வித்யாதேஹம் அங்கபூஜை ஸஹிதமாக சிவ ஆவாஹனம் ஆவரணபூஜை அஸ்திர கும்ப பூஜை செய்து இருவர்களின் ஐக்கிய பாவம் கல்பித்து யோநி முத்ரையை காண்பிக்க வேண்டும்.

35. வலது கை முஷ்டி பாகம் பிண்டிகை உருவமான உமாதேவியாகும். கட்டைவிரல் லிங்க உருவமான சிவரூபமாகும். போகத்திற்காக முதலில் அங்குஷ்ட முத்ரையால் சிவ கும்பத்தையும்

36. பிறகு முஷ்டிபாகத்தால் வர்த்தனியை ஹ்ருதய மந்திரத்தால் ஸ்பர்சிக்க வேண்டும். மோக்ஷத்திற்கு முதலில் முஷ்டி பாகத்தால் சிவகும்பத்தையும்.

37. அங்குஷ்டத்தினால் வர்த்தனி கும்பத்தையும் ஸ்பர்சிக்க வேண்டும். உமா பக ரூபிணியாகவும் லிங்க ரூபம் உடையவராக

38. சங்கரரையும் நமஸ்கரித்து பிரார்த்தனை செய்து இந்த யாகத்திற்கு அதிபதி நீங்கள், தங்கள் மூர்த்தி, ஸ்திரமான மூர்த்தியாகும்.

39. இந்த உம்முடைய ஞான கட்கத்தை உம்முடைய ஆயுதமாக ஏற்றுக் கொள்ளுங்கள் என்றும் யாகம் நடத்துகின்ற என்னால் உம்முடைய யாகம் பிரவ்ருத்திக்கப்பட்டது.

40. யாகம் முடியும்வரை தாங்கள் காப்பாற்ற வேண்டும் என்று வேண்டவும், யாகத்தை ரக்ஷிக்கும் விருப்பமுள்ள ஞானகட்கத்தை யாகேஸ்வரரிடமே ஆசார்யன் வைக்க வேண்டும்.

41. அர்க்ய பாத்ரம் கல்பித்து நிரோதனத்திற்காக அர்க்யம் கொடுத்து அர்க்ய பாத்திரத்தை நிரோதனத்திற்காக அங்கேயே வைக்க வேண்டும்.

42. வர்த்தனீகும்ப தீர்த்தம் சுற்றுதல், விகிர திரவ்யம் இரைத்தல், இவைகளால் யாக மண்டபம் முழுவதும் இடையூறு இல்லாததாக நினைத்து பூஜைக்காக பூமியை எடுத்துக் கொள்ள வேண்டும்.

43. மண்டலம் ஸ்தண்டிலம் லிங்கம் இவைகளில் சிவனை பூஜிக்க வேண்டும். விசேஷ பூஜையுடன் அக்னியில் சிவனை பூஜிக்க வேண்டும்.

44. ஹே பகவானே உன் தயவினால் என்னுடைய தேஹத்தில் நீவிர் ஆவிர்பவித்து பக்வமான சிஷ்யர்களுக்கு அனுக்ரஹம் செய்ய வேண்டும்.

45. என்று பிரார்த்தித்து அப்படியே செய்கிறேன் என்று அங்கீகரித்ததாகவும் சிவனிடம் இருந்து உத்தரவு பெற்றதாக நினைத்து ஏழுமுறை மூலமந்திரத்தால் மந்திரிக்கப்பட்ட

46. வெண்மையான தலைப்பாகையை தலையில் வைத்து சிவனுடன் சேர்ந்ததாக நினைத்து பிரார்த்திக்க வேண்டும். பரமேஸ்வரன் எல்லா கர்மாவிற்கும் ஸாக்ஷியாக மண்டலத்தில் இருக்கிறார்.

47. யாகத்தை ரக்ஷிப்பவராக சிவகும்பத்தில் இருக்கிறார். ஹோம அதிகாரியாக அக்னியில் பரவி இருக்கிறார்.

48. சிஷ்யனின் சரீரத்தில் அந்த சிஷ்யனின் பாசத்தை விடுவிப்பவராக இருக்கிறார். அருள்பாலிக்கும் தெய்வமாக என் சரீரத்தில் வியாபித்து இருக்கிறார்.

49. ஐந்துவித இருப்பிடத்தில் இருப்பவரான சதாசிவர் ஸோஹம் பாவனையாக இருக்கிறார். ஆத்மா வெவ்வேறாக இல்லாததாகவும் சிவகுணம் ஸமமானதாக உள்ளதாகவும் பாவிக்க வேண்டும்.

50. சாதனமாகிய ஹ்ருதயம் முதலியவைகள் என்னுடையதாகும். சந்தேகமில்லை. சிவனை ஸ்வதந்த்ரரராக பாவித்து சிவனிடம் விக்ஞாபிக்க வேண்டும்.

51. என்னால் எதற்காக இந்த யாகம் பிரவிருத்திக்கப்பட்டதோ அந்த யாகம் உம்முடைய தாகும். இந்த பசுக்கள் வாசற்படியில் இருக்கும் ஜலத்தைபோல் சாந்தர்களாக இருக்கிறார்கள்.

52. சச்சரவில்லாத அடையாளம் உள்ளதுமான உம் கைகளால் உம்மால் தூண்டப்பட்டதுமான பிரகாசமான விருத்திகளை வெகுகாலமாக அறிந்து

53. யோக்யமான அவச்யமான ஸ்நானம் செய்ததாகவும் அனுஷ்டித்த நித்யானூஷ்டானர் களாகவும் வெண்மையான வஸ்திர உத்தரீயம் உடையவர் களாகவும் உன் பாத பத்மத்தை தர்சிக்க விரும்புவர்களாக

54. உள்ள சிஷ்யர்களின் பிரவேசித்ததற்காக ஹேசங்கரா எனக்கு அனுக்ரஹம் செய்வாயாக என்று கூறி உன் பாதாரவிந்த ஸமீபமாக அந்த சிஷ்யர்களை பிரவேசிக்க செய்கிறேன்.

55. சிவனே நான் சிஷ்ய பிரவேசம் செய்ய மங்கள வார்த்தை கூறும் என்று சிவனை பிரார்த்தித்து சிவன் அவ்வாறே ஆகட்டும் என்று கூறியதாக பாவித்து சிஷ்யப் பிரவேசம் செய்ய வேண்டும்.

56. வாயிற்படியை எதிர்நோக்கி வெளியில் பிரணவமிட்ட தர்பாசனத்தில் சிஷ்யனை நிற்கச் செய்து தான் வடக்கு முகமாக நின்று கொண்டு

57. சிகையின் அடிபாகம் முதல் வலது பாத நகநுனிவரையும், பாத நகநனி முதல் சிகை அடிபாகம் வரை தத்வ ஞான த்ருஷ்டியால் சிஷ்யனை பார்க்க வேண்டும்.

58. இந்த ஆத்மா சிவத்தன்மைக்கு உரியவனாகிறான். விடுவிக்கப்பட்ட பந்த பாசங்களை உடையவனாகிறான். பதி சக்தி பிரவேசத்திற்காக பாசக்கூட்டம் என்வசப்படுகிறது.

59. அப்பொழுது இவனை தாம்ரத்திலிருக்கும் தன்னுடைய குண உதயயோக்யமான ஸ்பர்சத்தால் மணியை போல் காந்தி உடையவனாகவும் செய்து சிவனால் நான் தூண்டப்பட்டவனாகிறேன்.

60. ஸ்பர்சத்தால் நிர்மலமாக்கி சீக்கிரமாக தங்கம் போல் நல்ல குணமுள்ளதான மஸ்தக பூஷணத்தை செய்கிறேன்.

61. தர்பையினால் பிரோக்ஷணம் செய்து சிரஸில் விபூதியால் தாடனம் செய்து தர்பையின் நுனி அடிபாகங்களால் ஹ்ருதயத்தின் மேல்கீழ் பாகமாக

62. பிரவ்ருத்திக்கு காரணமான பாசகூட்டத்தை உல்லேகனம் செய்ய வேண்டும். அந்த சிஷ்யனை ஸகளீகரண பாவனையாக செய்து கண்ணை கட்டி

63. அஸ்த்ர மந்திரத்தினால் பிரோக்ஷித்ததும் கவச மந்திரத்தினால் அவகுண்டனம் செய்ததும் ஆன வெண்மையான வஸ்திரத்தினால் மூலமந்திரத்தை ஸ்மரித்ததாக (கண்ணை கட்டி)

64. சிஷ்யனை அழைத்து சென்று மண்டலத்தில் புஷ்ய ÷க்ஷபம் செய்வித்து சிவமூர்த்தியை காண்பிக்க வேண்டும். சிவமண்டலத்தின் வலதுபக்க மண்டலத்தில் முன்பு போல் செய்ய வேண்டும்.

65. பிரணவத்தை ஸ்தாபித்து உயர்ந்ததான சரீரமுடைய சிஷ்யனை தாரணம் முதலிய பாவனைகளால் சோதித்து அந்த சரீரத்தை ஸகளீகரணம் செய்ய வேண்டும்.

66. தன்னுடைய வலக்கையை சந்தனம் முதலிய வாசனை உடையதாக செய்து ஆஸநம் மூர்த்தி, மூலம் இவைகளுடன் கூடியதாக

67. சிவஹஸ்தமாக பாவித்து போக மோக்ஷமாக ஹ்ருதயத்திலிருந்து புருவம் வரையிலும் பிறகு சிகை வரையிலுமாக

68. எல்லா பாச முடிச்சுகளையும் விடுவிக்கும் பிராஸாத மந்திரத்தை கூறுவதால் ருத்ரேஸ்வர பத வியாப்திகமாக சிரசில் வைக்க வேண்டும்.

69. விசேஷமாக சிஷ்யனுடைய எல்லா அங்கத்தையும் பார்க்க வேண்டும். பிறகு சந்தனம், தூபம், இவைகளால் வாசனை உடைய புஷ்பத்தை அவன் அஞ்சலி ஹஸ்தத்தில்

70. வைத்து ஸர்வாத்மாவான சிஷ்யனால் தனிமையாக பிரார்த்திக்க வேண்டும். சிஷ்யனுடைய நேத்ரத்தை கட்டிய துணியை விலக்கி

71. ஸ்வபாமாகவே தர்சிக்கப்பட்ட ஈசானம் முதலான சிவவக்த்ரங்களை கொண்டு எந்த அங்க பாகம் உள்ளதாகவும் சிவத்தை எதிர்நோக்கியதாகவும் புஷ்பத்தை

72. வெளிப்பட்ட பக்தியாகிற சிவனாகிற தாமரையின் மேல் இருக்கின்ற கிளிபோல் அடைபட்ட அந்த சிஷ்யனை அவனால் முன்பு போடப்பட்ட மண்டல ஸ்தானத்தின் பெயரை சிவபதமுடைய பெயராக வைக்க வேண்டும்.

73. சிவசப்தமான பெயரை பிராம்மணனுக்கு வைத்து க்ஷத்ரிய வைச்ய நான்காம் வர்ணத்தவர்களுக்கு தேவ, கண்ட, கணம் என்று வரிசையாகவும் ஸ்திரீகளுக்கு சக்தி என்று முடிவுடைய பெயராக வைக்க வேண்டும். (ஈசான சிவன் ஈசான தேவன் ஈசான கண்டன் ஈசான கணன் என்பது போல)

74. அல்லது எல்லோருக்கும் எப்பொழுதும் சிவன் என்ற வார்த்தையை முடிவுடையதான பெயரை வைக்க வேண்டும். சிஷ்யனை பிரதட்சிணம் செய்வித்து ஸாஷ்டாங்க நமஸ்காரம் செய்ய சொல்லி உபதேசம் செய்ய வேண்டும்.

75. சிஷ்யனை குண்ட சமீபத்தில் தன்னுடைய தென்பாகத்தில் பிரணவாஸநத்தில் அமர்த்தி சிஷ்யனுடைய கையில் தர்பத்தின் அடியை கொடுத்து

76. தர்பை நுனியை தன்னுடைய முழங்கால் இடுக்கில் ஆசார்யன் சேர்த்து கொண்டு சிசுவின் பிராணவாயுவை வெளிக்கொணர்ந்து பிங்களை மத்தியில்

77. தன் தேஹ நாடியில் மூலமந்திரத்தால் சேர்ந்ததாக பாவித்து ஆசார்யன் நாடீசந்தானத்திற்காக மூன்று ஆஹுதி செய்ய வேண்டும்.

78. சிஷ்ய சைதன்ய கிருஹணத்திற்காக ரேசகமும் பூரகமும் செய்ய வேண்டும். மூலமந்திரத்தினால் நூற்றி எட்டு அஹுதியும் அங்க மந்திரத்தினால் பத்து ஆஹுதியும் செய்ய வேண்டும்.

79. சிவமந்திரமான மூலமந்திரத்தால் பூர்ணாஹுதி செய்து பிராயச்சித்த நிமித்தமாக சிவ மூலமந்திரத்தால் நூற்றி எட்டு ஆஹுதி செய்ய வேண்டும்.

80. பிராம்மணாதி வர்ணத்தவர்கள் நான்காவது வர்ணத்தவர்களையும் அவர்களின் குணங்களை அனுசரித்து அவர்களை உத்தாரணம் செய்ய வேண்டும். நான்காவது வர்ணமுள்ள ஜாதித்வத்தை விலக்கி மூலமந்திரத்தால் ஸ்வாஹாந்தமாக

81. மூன்று ஆஹுதி செய்து பிறகு சிவனை நோக்கி இவ்வாறு கூற வேண்டும். உணவு செயல் போன்ற நடத்தையால் யோநி பீஜசரீரத்திலிருந்து

82. சுத்தமான பிராம்மணனாகட்டும், இந்த ஆத்மா ஹே பகவானே பரமேஸ்வரா என கூறவும் ருத்ராம்சம் ஏற்பட்ட சமயத்திலும் மூன்று ஆஹுதி செய்ய வேண்டும்.

83. ஹே பகவானே உன் அனுக்ரஹத்தால் இந்த ஆத்மா ருத்ரனாகட்டும் என்று பிரார்த்தனை செய்து பிரோக்ஷணமும் தாடனமும் செய்ய வேண்டும்.

84. தன் ரேசகத்தால் ஆசார்யன் சிஷ்ய தேஹத்தில் பிரவேசித்து அஸ்திர மந்திரத்தினால் விடுபட்டதாக பாவித்து அங்குச முத்ரையால்

85. சிஷ்ய சைதன்யத்தை ஆகர்ஷித்து த்வாத சாந்த மெடுத்து சென்று உடனே பூஜித்து சிஷ்ய மஸ்தகத்திலிருந்து

86. ஸம்ஹார முத்ரையால் தன் ஹ்ருதயத்தில் பூரகத்தால் பிரவேசிக்க செய்து கும்பகத்தால் சிஷ்யனின் ஒருமைப்பாட்டை ஸ்மரித்து

87. ரேசகத்தால் த்வாதசாந்தத்தில் ஈசானம் முதலான ஸதாசிவர்களை அடைந்து ஆத்மாவை த்வாத சாந்தத்தில் சேர்த்து பிறகு சிவனையும் சேர்த்து

88. ஸம்ஹார முத்ரையால் சிஷ்ய சரீரத்தில் சேர்க்க வேண்டும். மூலமந்திரத்தால் அபிமந்திரிக்கப்பட்ட பூணூலை அணிவிக்க வேண்டும்.

89. நூறு அல்லது ஆயிரம் ஆஹூதி கொடுத்து பூர்ணாஹூதியை சிவமந்திரத்தால் செய்ய வேண்டும். இவ்வாறே சமயதீøக்ஷ பெற்றவன் சிவபூஜை

90. ஹோமம் அத்யயனம், மந்திர சிரவணம், இவைகளால் ஒருவன் யோக்யனாகிறான். ருத்ர பதத்தை அடைகிறான்.

91. பிறகு பிராம்மணன் நிர்வாண தீøக்ஷக்கு அதிகாரம் உள்ளவனாகிறான் பிராம்மண விதானப்படி நான்காம் வர்ணத்தவர்க்கு தீøக்ஷ செய்தால்

92. சந்தேகமின்றி தீøக்ஷ செய்விப்பவனும் நான்காம் வர்ணத்தவருடைய தன்மையை அடைகிறான்.

இவ்வாறு உத்தரகாமிகமென்ற மஹாதந்திரத்தில் ஸமயவிசேஷ தீக்ஷõ விதியாகிற இருபதாவது படலமாகும்.

 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar