Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
முதல் பக்கம் » கோத்ர நிர்ணய விதி
படலம் 25: கோத்ர நிர்ணய விதி!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

16 ஜூன்
2012
03:06

25 வது படலத்தில் கோத்ர நிர்ணய விதி கூறப்படுகிறது. முதலில் கோத்ரங்கள் ஆயிரம், பத்தாயிரம் கோடி என்று எண்ணிக்கையில் உள்ளன. அதில் உயர்ந்ததான கோத்ரங்கள் 49 எண்ணிக்கை ஆகும் என கூறப்படுகிறது. அதில் கவுசிகர், காஸ்யபர், பரத்வாஜர், கவுதமர், அத்ரி, வசிஷ்டர், ஜமதக்னி, பார்க்கவர், ஆங்கீரஸர் மனு என்பதாக 11 ரிஷிகள் முக்கியமாக எண்ணப்படுகிறது. பிறகு முனிவர்கள் சிவ சிருஷ்டியுடன் கூடியவர்கள் சிவனின் ஐந்து முகங்களினால் தீட்சிக்கப்பட்டவர்களாக ஆகிறார்கள். தீட்சையால் சித்திக்கப்பட்டதல்ல. ஆனால் பிறப்பினால் ஜாதி சித்தம் என கூறப்படுகிறது. பிறகு க்ஷத்ரியர்களுக்கும், வைச்யர்களுக்கும் கோத்ரம் ஆசார்யர்கள் முனிரிஷி பிரயுக்தமாகவோ ஆகும் என்று சுருக்கமாக கூறப்படுகிறது. கோத்திரவிதியில் சூத்திரனுக்கு கோத்ரம் இல்லை என்று ஒப்புக்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. பிறகு ஜாதி சித்தமான கோத்திரத்தை அறிஞர்களால் விவாக விஷயத்தில் அனுசரித்து செய்ய வேண்டும். பின்பு கோத்திர விஷயத்தில் பிரதானமான முனிவர்கள் முதலில் கூறப்படுகிறது என்று கூறி 49 முனிவர்களின் பெயர் எண்ணப்படுகிறது. பிறகு எண்ணப்பட்ட முனிவர்களின் கணங்கள் பிரவரங்கள் முறைப்படி விளக்கப்படுகின்றன. அதில் எண்ணப்பட்ட இடத்தில் குறிக்கப்பட்ட பெயர்களின் கணப்ரவர இவர்களின் விரிவாக்கப்பட்ட இடத்தில் குறிக்கப்பட்ட பெயர்களும் சில இடங்களில் வேற்றுமையாக காணப்படுகிறது. அதில் உதாரணமாக சிலது காண்பிக்கப்படுகிறது. ரவுத்ரராக எண்ணப்பட்ட பெயருக்கு: விவரிக்கப்பட்ட இடத்தில் ரவுஷா: என்று வித்யாசமாக குறிக்கப்பட்டுள்ளது. அங்கு ரவுஷா: என்று சொல்லும் பொருளே நல்லதாக விளங்குகிறது. இவ்வாறே முத்பவா: கிவதிதா: என்று எண்ணிக்கை இடப்பட்டு உள்ளது.

விவரிக்கப்பட்ட இடத்தில் முத்களா: கபய: என்ற குறிப்பு காணப்படுகிறது. அங்கும் முன்பு போல் முத்களா: கபய: என்று கூறுவதே சரியாகும் என விளக்கப்படுகிறது. இவ்வாறே பார்க்கவா: என்று எண்ணிக்கை இடப்பட்ட இடத்தில் குறிக்கப்பட்ட கவுதமா: என்று விவரிக்கப்பட்ட குறிப்பு விஷயம் நிச்சய சாதக பிரமாணமாக காணப்படுவதில்லை. பிறகு சத்திரியர்களுக்கும் வைச்யர்களுக்கும் கோத்ர பிரவரவர்ணனை காணப்படுகிறது. அதில் க்ஷத்ரிய வைச்யர்களுக்கு ஆசார்ய பிரவரம் உண்டா என்று விளக்கமாக கூறப்படுகிறது. இந்த விஷயம் படல ஆரம்பத்திலும் குறிக்கப்பட்டுள்ளது. பிறகு ஸமானமான கோத்திர பிரவரங்களை அறிந்து ஸம்பந்தத்தை அனுஷ்டிக்க வேண்டும். ஸமானமான கோத்ர பிரவரத்தை ஒருபொழுதும் வரிக்க கூடாது. அறியாமையால் விவாஹம் செய்து கொண்டால் அண்ணன் மனைவி போலும், தாயை போலும் அவளைக் காப்பாற்ற வேண்டும். விவாஹ தோஷ சாந்திக்காக சாந்திராயணம் என்ற விரதத்தை அனுஷ்டிக்க வேண்டும். பிறகு அவளுடன் அறியாமையால் ஸம்யோகம் ஏற்படும் விஷயத்தில் செய்ய வேண்டிய பிராயச்சித்த விதி விளக்கப்படுகிறது. அவளிடம் இருந்து பிறந்த (புத்திரர்கள்) எல்லாம் பிராம்மணர்கள் அல்ல என கூறப்படுகிறது. அப்பேர்பட்ட புத்திரன், பவுத்திரன், இவர்களுடன் சேர்க்கையிலும் அனுஷ்டிக்க வேண்டிய பிராயச்சித்த விதி விளக்கப்படுகிறது. இவ்வாறாக 25வது படல கருத்து சுருக்கமாகும்.

1. எல்லா ரிஷிகளுடைய கோத்திர நிர்ணயத்தை சொல்லுகிறேன் கோத்திரங்களுடைய எண்ணிக்கை ஆயிரம், பத்தாயிரம், நூறுஆயிரம் என்று விரிவாக உள்ளது.

2. இந்த இடத்தில் 49 ரிஷிகளுடைய மேன்மையான எண்ணிக்கையாக இருக்கட்டும். கவுசிகர், காசியபர், இவ்வாறே, பாரதீவாஜர், கவுதமர் மேலும்

3. அத்ரி, வசிஷ்டர், அகஸ்த்யர், ஜமதக்னி, பார்கவர், ஆங்கீரஸர், மநுவும், வேறு ரிஷிகளும் இரண்டு விதானங்களாக அந்த ரிஷிகள் சொல்லப்படுகிறார்கள்.

4. சிவ சிருஷ்டியில் தோன்றிய முனிகள் சிவ சிருஷ்டி இல்லாத முனிகள் என இரண்டு வகை ரிஷிகள் ஆகும். சிவ சிருஷ்டியால் தோன்றிய முனிகள் சிவ பெருமானுடைய ஐந்து முகங்களிலிருந்து தீட்சிக்கப்பட்ட ரிஷிகள் ஆவார்கள்.

5. கவுசிகர் முதலிய முனிவர்கள் ஐவரும் மற்றவர்கள் எல்லா இடத்தும் தீட்சிக்கப்பட்டவர்கள் ஆவார்கள். இவர்களுடைய கோத்திரமும் தீட்சையினால் இல்லை. என்னவொவெனில் அவர்களுக்கு தன் ஜாதியே கோத்திரமானது.

6. க்ஷத்தியர்களுக்கு வைசியர்களுக்கும் கோத்திரம் ஆசார்யர்களிடமிருந்து தோன்றியதாகும். அவ்வாறு சூத்தரர்களுக்கு கோத்திரம் அமையவில்லை. இவ்வாறு கோத்திரத்தின் விதிகள் கூறப்படுகிறது.

7. ஆதிசைவரிடத்தில் எப்படி கோத்திரமோ அப்படியே அனுசைவரிடமும் கோத்ரம் மதிக்க வேண்டும். பின் என்னவோ எனில் தீøக்ஷ இல்லாமையும் சிவசிருஷ்டியிலிருந்து வேறுபட்டும் இருப்பதால்

8. பெரியோர்களால் திருமணத்தில் அந்த ஜாதி ஸித்தமானது. பரிகாரமாக உள்ளது. பெண், மாப்பிள்ளை வீட்டாரின் கோத்திரத்தை அறிந்து செய்தோ, கலியுகத்தில் அறியாமலோ கோத்திரத்தை கடைபிடிக்க வேண்டும்.

9. முக்யமான ரிஷிகள் முதலில் கூறப்படுகின்றன. கவுசிகர், லோகிதர், ரவுத்ரர், விஸ்வாமித்ரர், கதர் மற்றும்

10. தனஞ்சயர், வாஜாயனர், அகமர்ஷனர், கவுசிகர், இந்திர பூர்வகர் இவர்களும் மற்றும்

11. பவுரணர், காஸ்யபர், ரேபர், சாண்டில்யர், கதர் லோகாக்ஷயர், பாரத்வாஜர்கள், ரவுக்ஷõயணர்கள் மற்றும்

12. பார்க்கவர்கள் ஆகும். சரத்வந்தர், கவுமண்டர் தீர்க்கதமர்கள் காரேண பாலயர்கள்.

13. உசனர், வாமதேவர், அத்திரி, வார்த்தக்யர், கவிஷ்டிரர், முத்கலர், வசிஷ்டர், குண்டினர், உபமன்யு, ஆகியவர்களுக்கும்

14. பராசரர், அகஸ்தியர், சாம்பவாஹனர்கள், ஸோமவாஹநர், என்ற ரிஷி கோத்திரங்கள் யக்ஞவாஹரிஷிகள் இவர்களின் கோத்ரங்களும் கூறப்படுகின்றது.

15. வத்ஸர்கள், பிதர்கள், ஆர்டிஷேனர்கள், யஸ்கரர்கள், மித்ரயுவர்கள், வைந்யர்கள் சுநர்கள், விஷ்ணு விருத்தர்கள், கண்வரிஷிகள் இந்தரிஷி கோத்திரங்களும் இதற்கு மேலும்

16. ஹாரிதர்கள், சங்கிருதி, ரதீதரர், முத்பவர் ஆகியவர்கள் 49 கோத்திரங்களாக கூறப்படுகிறது.

17. முதலில் கவுசிகர் முதலான, ரிஷிகளை பற்றி கூறப்போகிறேன். குசிகர், பார்ணஜங்கர், பாரக்யர், அவுதலி, மானி, ஆலர்வி, ப்ருகதக்னயர்

18. கட்டி, ஆபத்தி, ஆபாத்யவர், காந்தகர், பாஷ்பகர், வாச்யுகிதர், லோமகர், தனர் ஆகிய கோத்திரங்களும்

19. சாங்காயனர், கவுரர், லோகர், சவுகதர், யமதூதர், ஆனபின்னர், தாராயனர் இந்த கோத்திரங்களும் கூறப்றபட்டுள்ளன.

20.  சவுலகாயன கோத்திரம் ஜாபாலி, உதும்பர கோத்திரம் இவையும் தண்டர், புவநய கோத்திரம், யாக்ஞவல்க்யர் சவுச்ரதய கோத்ரம் அவ்வாறே

21. ஸ்யாதாமயர், ப்ராஷ்ட ஷட்கதேகர், ஆகிய கோத்ரங்களும் சாலாவதர் மயூரர், துத்சரி, கோத்ரங்களும் சொல்லப்பட்டுள்ளன.

22. சித்ரயக்ஞர், சவுமத்யர், ச்வேதுந்தாயனர், மனுவதர், மாந்தவர், முதலிய கோத்திரங்கள் சொல்லப்பட்டன.

23. எவர்கள் மிகவும் நுன்னிய பாதங்களை உடையவர்கள் இருக்கிறார்களோ அவர்கள் பாலவ்யர் என கூறப்படுகிறார்கள். கவுசிகர்கள் ராலவர், உன்மனயர் என கூறப்படுகிறார்கள்.

24. ஐந்து ரிஷிகள் கூறப்பட்டு விஸ்வாமித்ரர் தேவநாதர், ததீசி, முதலியவர்களால் மூன்று ப்ரவர ரிஷிகளாகும்.

25. லோகிதர்கள், தண்டகாயர்கள், சக்ரவர்மாயணர்கள், என்ற ரிஷிகளும் ஜக்ஷ்யயர்கள் ப்ராக்ஞர்கள், வாஜிஜெயர்கள் இவர்களும் லோஹிதர்கள் ஆவார்கள்.

26. மேலே கூறப்பட்ட ரிஷிகள் கவுசிகனின், ப்ரவரரிஷிகளாவர், விஸ்வாமித்ரர் ஷ்டைஷகயர் லோகிதர், இவர்களும் த்ரயாரிஷிகளாகும்.

27. ப்ரவரரிஷிகள் கூறப்பட்டு ரவுக்ஷர்கள், மானர்கள், உத்வலகர், ஆகிய இவர்கள் ரவுக்ஷர்களான குசிகர்கள் ஆவர்.

28. ப்ரவரிஷிகளில், த்ராயாரிஷயர்கள், விஸ்வாமித்ரர், ரவுக்ஷகர், மாணிகி இவர்கள் மூன்று பேர்களும் த்ரயாரிஷயர்கள்.

29. விஸ்வாமித்ரர், தேவஸ்ரவசர், பரிப்ரமர் ஸ்ரவுமிதர், தேவதரசர், காமகாய நிகர்

30. ஆகிய இந்த காமகாயனர்கள் என்றும் விஸ்வாமித்ரர்கள் என்றும் சொல்லப்படுகிறார்கள். த்ரயாரஷேயர்கள் கூறப்பட்டு விஸ்வாமித்ரர் அவர்களுக்கு ப்ரவரமுதல்வராக எடுத்துக் கொள்ள வேண்டும்.

31. இதே போல் வேறு ரிஷிகளுக்கும் தேவச் ராவஸர் தேவதரஸர் இந்தரிஷிகளும், கடர் ஸ்வைரந்திரி கரபர் இவ்வாறு கீழுள்ள ரிஷிகளும் கூட குறிக்கப்படுகிறார்கள்.

32. வாஜநயர், கவுக்ருத்யர்கள், ஜாணாயநர்கள், இவர்களும் கவுக்ருத்யர்கள், கவுசிரர்கள் உதும்பராயனர்கள்,

33. பிண்டிக்ரீவர்கள், நாராயணர்கள், நாரத்யர் என்று பெயருள்ள ரிஷிகளும், இவர்கள் கடாரிஷிகள் என கூறப்படுவார்கள். அவர்கள் த்ரயாரிஷிகள் என்றும் கூறப்பட்டுள்ளன.

34. விச்வாமித்ரர், கடர், ஆஷ்டிலர் தனஞ்ஜயர்கள், இவ்வாறு வேறு ரிஷி கோத்ரங்கள் உண்டு ஆச்வவீதர்கள், காரிஷயர்கள், மயூரர்கள், ஸேந்தவாயநர்கள் என்ற கோத்திரங்கள் உண்டு.

35. தலவ்யர்களும், மஹாக்ஷர்களும், புஷ்டர்களும் தனஞ்சயரிஷிகளை சேர்ந்தவர்கள், இவர்கள் ப்ரவரத்தில் உள்ள த்ரயாரிஷேயர்கள் என்று சொல்லப்படுகின்றார்கள்.

36. விச்வாமித்ரர், மதுச்சந்தர், தனஞ்சயர் என்று மூன்று ரிஷிகளும் அவ்வாறே ஆஜாயனர் ஏகவத்சர் இவர்களும்

37. முக்கியமாக சொல்லப்படுகின்ற த்ரயாரிஷேயர்கள் விஸ்வாமித்ரமும் அப்படியே மதுச்சந்தர், ஸோஜரும் ப்ரவரத்தைச் சார்ந்த மூன்று ரிஷிகள் ஆவர்.

38. அகமர்ஷணர் முதலாகவும், கவுசிகர்ளும் அப்படியே இருவர்களும் த்ரயாரிஷேயர்கள் ஆகிறார்கள். விஸ்வாமித்தரர் அகமர்ஷணர்.

39. கவுசிகளும், இந்த மூன்று ரிஷிகளும் ப்ரவர ரிஷிகளாகும் கவுசிகளும் இந்த்ர பூர்வர்களும் அப்படியே சொல்லப்படுகின்ற முனீஸ்வரர்கள்

40. த்ரயார்ஷேயர்கள் என்று அறிய வேண்டியவர்கள் வருமாறு. விஸ்ராமித்ரர் இந்திரகவுசிகர், கவுசிகர்கள் இம்மூவரும் யாககாரியத்தில் ப்ரவரரி ஷிகளாக அறிய மூன்று ரிஷிகளும் சொல்லப்படுகிறார்கள்.

41. பவுராணர் முதலியவர்கள் த்வயாரிஷியர்கள் ஆவர்கள். கவுசிகனும் அவ்வாறே ஆவார். அந்த இரண்டு ரிஷிகள் விஸ்வாமித்ரர் பவுரணர் இவர் இருவரும் ஆவர்.

42. இவ்வாறாக பத்து விதமாக கவுசிக ரிஷிகளை பற்றி கூறப்பட்டது. அவர்கள் தொடர்ந்து வரும் ரிஷிகள் அல்ல. பிறகு காஸ்யபரிஷிகளை பற்றி கூறுகிறேன். அவர்களில் காஸ்யபர் முதலானவர் ஆவார்.

43. பிறகு ஆங்கீரஸர் என்று அறியவும் மாடரர்கள், ஏதிசாயநரர்கள், இவர்களும் ஆபூத்தாரிஷிகளும், வைசிப்ரர்கள், தூமர்கள், தூம்ராயணர்கள், இந்த ரிஷிகளும் கூறப்படுகிறார்கள்.

44. கவுதமர் தவும்ராயணர், அவுத ப்ரசுரர் ஆக்ரயணர்கள் இந்த ரிஷிகளும் சொல்லப்படுகிறார்கள். ருத்ராக்நயர்களும் அப்படியே ப்ரவரரிஷிகள் பைம்பகயர்கள், பின்னால்

45. காயாதாயர்கள், அகாபாயர்கள் நிகாமமவுஷிநிகி அவ்வாறே மற்றரிஷிகள் காத்ராயணர் அவுஜ்வலயர் ரோஹிதாயநர் இப்பெயர்களுள்ள ரிஷிகளும் சொல்லப்பட்டுள்ளன.

46. பிங்காக்ஷி, மிதகும்பர்களும் மாராயணயர், இவர்களும் வைகர்ணேயர்கள் பிறகு சொல்லப்படுகின்ற ரிஷிகள் தூமலக்ஷ்மணயர் (சுரார்கள்) இந்த ரிஷிகளும்

47. கவுஷிதகேயர், வாத்ஸ்யர்கள், அக்னி சர்மாயனர் ரிஷிகோத்தரமாக எண்ணப்படுகின்றார்கள். காமி, ஜங்கோதரர் கவுரீவாயநர் தவுக்ஷகாயநர்கள்.

48. வைதம்பர்கள், தேவாயாதர்களும் மஹா சக்ரர்க்களும், இந்த பெயருள்ள ரிஷிகளும் பைடீநஸர்களும் பாந்த்ரேப்ரர்கள் பிறகு மாலாந்தர் என்ற பெயருடைய ரிஷிகோத்ரங்களும் உள்ளன.

49. வ்ருஷகணரிஷிகளும் பாநத்யர்கள், தாக்ஷபாயணர் இவ்வாறு ஹரிதாரிஷிகள் காகமித்ரர் ஆகிய ஐவர்கள் இவ்வாறே ஆவர்கள், ஸ்வைரிகர்கள் இந்த ரிஷி கோத்ரங்களும் உண்டு.

50. ஜாரமண்டர், வாயு, ஸ்வந்திவர்ஷகணாயணர் வைசம்பாயனர் கேசாயகர் இவர்களும்

51. அவுகாயநி, மார்ஜாயனர் காம்சாயனர், ஹோத சூச்யர், ஸ்தூனர், தேவர், பாகுரயர் இவர்களும்

52. பாதிகாயர், ரவரேபர், கோமயாதர், ஹிரண்யபாபர், முசலர், ஆவிஸ்ரேன்யர் இவர்களும்

53. அக்னிதேவி, சவும்யர், சூலபிந்தவர், இவ்வாறும் முன்வந்த ரிஷிகோத்ரம் மந்தர வைகர்ணய ரிஷிகளாக கூறப்படுகிறார்கள்.

54. நைத்ரவர்கள், காஸ்யபர்கள் இவர்கள் த்ரயாரிஷிகளாக கூறப்படுகிறார்கள் காஸ்யபர், ஆபத்ஸாரர், நைத்ரவர் ஆகிய ரிஷிகள் த்ரயாரிஷிகளாவர்.

55. அவ்வாறே ரேபர் காஸ்யபர் இவர்கள் த்ரயா ரிஷிகளாகும் காஸ்யர் ஆபவத்ஸாரர் ரேபர் ஆகியவர்களும் த்ரயாரிஷிகளாகும்.

56. சாண்டில்யர், கவுண்டில்யர், பாயகர், பாயிகர், ரபேரவ்யர், சவுமானவர்கள், வனஸம்ஸ்து கரேயுதர்,

57. காகுண்டேயர், காரேயர், ஷ்டைஷிகர் ஆகியவர்களும் மஹாகாயர், ஜானவம்சவர், கவுஸ்ரேயர், கார்த்தமாயனர் இவர்களும்

58. பிறகு காமசயர், மஹெளஜக்யர், மவுஞ்சாயனர், காங்காயனர் இவர்களும்

59. வாத்ஸபாலயர், கோமிலர், வேதாயனர் இவர்கள் வாச்யாயனர்களாக எண்ணப்படுகிறார்.

60. பஹூதரயர், வார்த்தீமுகர், பாகுரீ, இரண்ய பாகு, தேதேகர், கோமூத்ரர் இவர்களும்

61. வாக்ய சுண்டர், ஜானந்தரி தன்வந்திரி பிறகு ஜாலந்தரி, சாண்டில்யரின் த்ரயாரிஷிகளாக கூறப்படுகிறது.

62. காஸ்யபர், ஆபவத்ஸாரர், சாண்டிலர், மூவரும் த்ரயாரிஷிகளாகும். காஸ்யபர், ஆபவத்ஸாரர் அஸிதர் இவர் மூவரும் த்ரயாரிஷிகளாகும்.

63. சாண்டில்யர், அசிதர், அக்னி, தேவலப்ர வரர், கோகாக்ஷயர், மை(த்)ரவாதி, வேகர், தார்பாயனர் இவர்களும்

64. சைரந்திரி, பசு, பயனாயனர், கலயர், காபுஷ்டி, லவுகாக்ஷயர் இவர்களும்

65. காம்ஸபத்ரர், வாலுகாயனி, கவுனாமி, சவுதயர்கள், விரோதிகி இவர்களும்

66. சைதகிம்ஷ்டி, பேரோநிஷ்டி, ஷ்டைவிகி, சவுசுகி, யவுதகாலகி, காலேயர், லோகாக்ஷயர் இவர்களும்

67. யவுதவர், யாஜபர், இவர்கள் லோகாக்ஷய ரிஷியின் கோத்திர பிரிவினர் ஆவர். பகலில் வசிட்டர் என்றும் இரவில் கஸ்யபர் என்னும் மூன்று ரிஷிகளும் ஆவர்.

68. காஸ்யபர், ஆபவத்ஸாரர், வசிட்டர் ஆகிய ரிஷிகள் மூவரும் முன்பு கூறப்பட்ட பிரசித்தியான காஸ்யபரோடுகூட வசிட்டரும் சேர்ந்தவராகிறார்கள்.

69. பாராத்வாஜர், மாகண்டர், க்ஷõம்யாயணர், தேவாஸ்வர், உத்வஹவ்யர், பிறகு ப்ராக்வாஸயர் இவர்களும்

70. வாஹளவர், த்வ்யவுகர் அஸிநாயநர் ஆஜர், அவுமர் தவுதேகர், பரினத்தேதர், இவர்களும்

71. சைக்கேயர், பூரயர், ரூடர், சவுத்யர், காரிக்கீரிவர், வயோக்ஷிபேதர், அவுபசயர், அக்னிவேஸ்யர், சடர்கள் இவர்களும்

72. ஸ்வேலகர், தநகர்ணர், வேஸ்யர், கவுரி வாயநர், ருக்ஷர், மானபித்யர், காம்போதகர் இவர்களும்

73. பைலர், சவுஜ்வலர், காருணாதி, சுகர், பாருண்டர், இஷுமதர், அவுதேதமேகர் இவர்களும்

74. சவுரபரர், பாத்ரபதர்களாக, சொல்லப்பட்டுள்ளன. பிறகு, தேவமதயர்கள், கல்மாஷர்கள் சதோபகிருத் இவர்களும்

75. ப்ரவாஹநேயர், ஸ்தம்பஸ்தம்பி, பிறகு வாராஹயர், தேவவேலர், வலபீகயர் இவர்களும்

76. பத்ராங்ககதர், சாலாஹலயர், இவர்களும், நிருத்யாயனர், மஹாவேலர் சாலாலயர், இவர்களும்

77. சார்தூலயர், காக்ஷலர், பாஷ்களர், க்ரோதாயனர், கவுடில்யர், சைம்ஹ்யகேந்திரர் இவர்களும்.

78. பிரம்ம ஸ்தம்பர், ராஜஸ்தம்பர், இவர்களாக கூறப்பட்டுள்ளன. ஸோம அக்னி வாயு சூர்ய இந்தர யமவிஷ்ணு ஆப என்ற வார்த்தைகளை முதலாக கொண்டதாக உள்ள (ஸொமஸ்தம்பர், அக்னிஸ்தம்பர், வாயு ஸதம்பர், சூர்ய ஸ்தம்பர், இந்திரஸ்தம்பர், யமஸ்தம்பர், விஷ்ணுஸ்தம்பர், ஆபஸ்தம்பர்)

79. ஸ்தம்ப என்ற வார்த்தையுடன் கூடியதான ரிஷிகளும், அருணசிந்து கவுமுதகந்தி இவர்கள் சக்திரிஷி ஆகும். கவுதகாயனர் இவர்களும்

80. ஆத்ரேயனர், மாமண்டர், தூமகந்தர், தூம்ரர், கவுக்÷க்ஷயர், நேதுதயர் தாபயர், என்ற இவர்களும்

81. மத்ஸ்யக்ரோதர்கள் ச்யாமேயர்கள் பிறகு ÷க்ஷõ÷க்ஷயநர் என்ற பெயருள்ளவர்கள் ஆவர். காபல்யர்கள், காருபதயர்கள், காரிஷாயணர் இவர்களும்

82. பரத்வாஜவநர் இந்த இரு ரிஷிகளும் பஞ்சரிஷிகளாக சம்மதிக்கப்படுகிறார்கள். இங்கே உள்ள பாரத்வாஜர்கள் எல்லோரும் த்ரயாரிஷிகளாக கொண்டாடப்படுகிறார்கள்.

83. அங்கிரர், பர்கஸ்பத்ய, பாரத்வாஜர், இவர்கள், த்ரயாரிஷிகள், ஒருவரான ரவுக்ஷõயனர் மட்டும் சேர்ந்து ஐந்து ரிஷி ஸமூகம் என கூறப்படுகிறார்கள்.

84. பாரத்வாஜர், ஆங்கீரஸர், ப்ருஹஸ்பதி மாதவசஸர், வந்தனர், கர்க்கர் இவர்களும்

85. சாம்பராயணர், யவுகந்தராயனர், சகீனர், பாகுலகயர், பிருஷ்டயர்கள், பிரஷ்டபிந்து இவர்களும்

86. பிறகு க்ரோஷ்டகயர், சவுயாமுனி, காணாயனர், பாஜிதாக்ஷயர், இவர்களும் கோத்ராபசயர் மற்றும்

87. சதியாபசயர், ஜாநபக்வலர், பலாசசாகர், மர்கடாயனர் இவர்களும்

88. பிறகு சங்கிரஹ துல்யர், வைதூகர், காரிரோதயர், திஸ்ரோதஸர், காரவல்யர், ஆஜயர்கள் பைலயர் இவர்களும்

89. ஐந்து மூன்று என்ற முனிகளையுடைய கர்க்கர், பாரத்வாஜர் என்று கூறப்படுகிறார்கள். ஆங்கீரஸ, பாரத்வாஜ, பார்ஹஸ்பத்யர் இவர்களும் சைன்யர்கள்.

90. கர்க்கர் ஆகியவர்களும் சேர்ந்து ஐந்து ரிஷிகளாக கூறப்படுகிறார்கள். ஆங்கீரஸர் சைன்யர், கர்க்கர் ஆகியவர்களும் த்ரயாரிஷிகளாக கூறப்படுகிறார்கள்.

91. பாரத்வாஜர்கள் மூவர்களும் தொடர்ந்து இருப்பவர்கள் அல்ல. பிறகு கவுதமரைபற்றி கூறுகிறேன். ஆயாஸ்யர் தவுடிநி இவர்களும்

92. ஆணீசயர், மூடர், பாத்யர், காசாக்ஷதர், சாத்யகாயர், தைதேகர், கவுமாரர், சாத்யமுக்ரிகர் இவர்களும்

93. வ்யாப்யாபர், நைகரிஷ்டர், டைஷகி, தேவகி, கடோரி, காருணி, கீலாலயர், பார்த்திவர், இவர்களும்

94. காசிவாஜர் ஆகிய இவர்கள் கவுதமர்களாகிற ஆயாஸ்யர் என்றும் கூறப்படுகிறார்கள். இவர்களின் பிரவரத்தில் த்ரயாரிஷேயர்களும் கூறப்பட்டுள்ளன.

95. ரிஷிகள், ப்ரவரங்கள் என கூறப்படுகிறார்கள். ஆங்கீரர் ஆயாஸ்யர் கவுதமர் ரவுகின்யர் அபிஜித்துக்குள் மேலும்

96. பிறகு க்ஷீரகம்பர் சவுமுசயர், சவுர்யா முனியர், அவுபபிந்து ராயனர் மேலும்

97. ராஹூகனர், மாஷன்யர், சரத்வந்தர், இவர்களை கவுதம ரிஷிகளாக அறியவும். இவர்கள் த்ரயாஷிகளாகவும் கூறப்படுகிறார்கள்.

98. ஆங்கிரர் கவுதமர், சரத்வந்தர், ஆகிய மூவரும் த்ரயாரிஷிகளாகும், கவுமாண்டர், மாசுராக்ஷர், மாமாந்த ரேஷனர் இவர்களும்

99. பயந்த்யாதாயநர்களும் பின் கோஷ்டேயர்கள் பசவர்கள், ஊர்ஜாயனர்கள் இவர்களும் கவுதமர்களாகவும் கூறப்படுகிறார்கள்.

100. பஞ்சார்ஷேயர்கள், ஆங்கிரஸர், சவுசத்யர், காக்ஷீவதர், கவுமாண்டர், கவுதமர் இவ்வாறு ஐந்துபேறும் பிறகு தீர்கதமர் எனவும் கூறப்படுவார்கள்.

101. பஞ்சார்ஷேயர்களாக அறிந்து கொண்டு ஏகார்ஷேயமாகவும் சம்மதிக்கப்படுகிறார்கள். ஆங்கீரஸர், அவுசத்யர், காக்ஷீவதர், கவுதமர் இவ்வாறும்

102. பிறகு தீர்கதமர் என்னும் ஐந்து பர்யாயங்கள் ஆகும் காரேனு பாலயர்களும், வாஸ்தவ்யா ஓதிவர்கள்

103. ப்ருஹதுக்தர், பவுஞ்சிஷ்டர் ராஜகந்தயர், அவுதுஞ்சாயநர், என்ற பெயருள்ள ரிஷிகள் இவர்கள் காரேணுபாலகர் ஆவர்.

104. இந்த கவுதமர் மூவரும் த்ரயார் ஷேயர்கள், அங்கிரர்கள், கவுதமர் பின் காரேனு பாலி என்ற இவர்களில் த்ரயாரிஷேயர்கள் ஆவர் அவுசநஸர்

105. ஸகதிஷ்டர்கள், ப்ரசஸ்தர்களாகக் கூறப்படுகிறார்கள், சுரூபாக்ஷர்கள், மஹோதரர் விகம்ஹதர்கள் சுபுத்யர்களும், நிஹதாக்களும், குஹா என்றும்

106. சொல்லப்படுகிறார்கள். இவர்கள் எல்லாம் உசநஸர்கள் ஆவார். த்ரயாரிஷிகளாக கவுதமர்கள் அங்கிரர்கள், ஓசநர் ஆகிய ரிஷிகள் கூறப்படுகிறார்கள்.

107. ஸஹதிஷ்டர்கள், ப்ரசஸ்தர்களாக ஆகிறார்கள். சுரூபாக்ஷர்கள் மஹெளஜஸர் விகம்ஹதர்கள் அப்படியே வாமதேவரும் த்ரயாரிஷேயர்கள் என கவுதமர்களின் கோத்திர ரிஷிகள் ஆவர்.

108. ஆங்கிரஸர், கவுதமர், வாமதேவர், என்ற மூவரும் ஸமாசநத்தாலே, அத்திரி ரிஷிகளாகி சொல்லுகிறேன். முதலில் மூன்று அத்ரி ரிஷிகள் கூறப்படுகிறார்கள்.

109. போஜர், அதிதி என்பவரும் சாந்த்ரோசீ பார்வ என்பவர் காமாங்குலயரும் சைவர்களும் சகாலர், சாகலர் என்பவரும் அப்படியே

110. த்ருண பிந்துவும் பிறகு பாகந்தயர் என்று சொல்லப்படுகிறது. பிறகு மாலருகர் சொல்லப்பட்டு பின் வ்யாகலயர் சொல்லப்படுகிறது.

111. சாம்பவ்யஸநர், என்ற பெயருள்ள ரிஷியும் கார்மர்யாயநயர் என்று சொல்லப்படுகிறார். பின்பு தாக்ஷியும் தைதேஹரும், கானிஸ்பதயர் என்ற ரிஷியும் கோத்திரங்களாக நிர்ணயிக்கப்படுகிறது.

112. அவுத்தாலகி, த்ரோணிபவா கவுரி க்ரீவாயதர்கள் என்று கவிஷ்டிரர் - சொல்லப்பட்டு - சிசுபாலர் இவர்களும் கோத்ராதிகளாக கூறப்படுகிறார்கள்.

113. கவுராத்ரேயர் பின் கிருஷ்ணாத்ரேயர்கள், (அருணாத்ரேயர்கள்) அருண பூர்வமாக உள்ள ரிஷிகோத்ரங்கள், ஸ்வேத, நீல, மஹாச்யாம என்ற வார்த்தையுடன் நான்கு விதமாவார்கள்.

114. ஹாலேயர்களும், வாலேயர்கள், ஹ்ரேலேயர்கள், இவர்களும் வாமரதிநர், வைதேகர்கள், வாஜோப்ரேயர்கள் இவர்களும்

115. கவுத்ரேயர்கள், கவுபமாநர்கள், காலதபர், அநீலாயயநர் என்ற பெயருள்ள ரிஷிகளும் அங்கிரஸரிஷிகளாக அநீலாயயகர் கூறப்படுகிறார்கள்.

116. கவுரங்கியும், சவுரங்கி, மாநங்கி, புஷ்பயர், சைலேலரும் மறுபடியும் ஸாகேதாயுநர்களாக கூறப்படுகிறது.

117. பாரத்வாஜர், இந்த்ர, அதிதி, என்ற மூவரும் ஆத்ரேயர்களாகவும் த்ரியார்ஷேயர்களாகவும் சொல்லப்பட்டார்கள் பாலிகர்களும் அத்ரி

118. அர்சநாநஸர் இவ்வாறு இங்கே மூன்று ரிஷிகள் சொல்லப்படுகிறார்கள். அப்படியே வாக்பூதகர்கள் என்பவர்களும் த்ரயாரிஷேயர்களாக கூறப்படுகிறது.

119. அத்ரி, அர்ச்சநாநஸர், வாக்பூதர்கள், ஆகரிஷிகள் மூவர், பிறகு கவிஷ்டிரரிஷிகளும் மூன்று ரிஷிகளாக அறியப்படுகிறார்கள். முன் மூன்றும் த்ரயாரிஷேயர்கள்.

120. மேலும் அத்ரி, அர்சநாநஸர், என்பவரும் கவிஷ்டிரர் என்பவரும் மூன்று ரிஷிகள், முத்களர், வ்யாள ஸந்தியும், சூர்ணவர்கள், போதவாஜிகர்.

121. வைதபாவயர் என்ற இந்த ரிஷிகளும் கோத்திர ரிஷிகளாக கூறப்படுகிறார்கள் பிறகு சாலிமதர் - கவுரீமதர் - ப்ராம்மீமதர் - இந்த கோத்திர ரிஷிகளும் கூறப்படுகிறது.

122. பின்பு கவுரகயர், வாயுபூரகர், சாயநர்கள், இவ்வாறு அவர்களும் த்ரயாரிஷேயர்களான முத்கலர்கள், என கூறப்படுகிறது.

123. அர்ச்சநாநஸர், பூர்வாதி. திதி இவ்வாறு மூன்று ரிஷிகளும், கூறப்படுகிறார்கள். இவ்வாறு ஆத்ரேயர் நான்கு விதமாக இருந்து வம்சத்தோடு கூட தொடர்ந்து வருபவர்களாக இல்லை.

124. வசிட்டரை பற்றி நான் சொல்கிறேன். அதில் முதலில் வைகலிர் என்ற ரிஷி. சொல்லப்படுவதுடன். வாடரகி பின் சொல்லப்படுகிறார்கள். கவுரீச்ரவஸர் என்றும் கூறப்படுகிறார்கள்.

125. ஆச்வலாயநர் என்ற பொருளோடும் கவிட்டர்களும் ஆச்வலாயநராக கூறப்படுகிறார். சவுசி விருக்ஷர்கள் பிறகு சொல்லப்பட்டு பின் வியாக்ர பாதபர்கள் கூறப்படுகிறார்கள்.

126. அவுடுலோமி, ஜதூகர்ணர்கள், வாஷ்ட வ்யர், வாஹ்யகாயநி, கோலாயநர், கோபோஜி, பின் பவுலாயநர்களும் கோத்திர ரிஷிகளாக கூறப்படுகிறார்கள்.

127. சுந்தஹரிதர், என்பவர் சொல்லப்பட்ட காண்டேயவிதியும் இவ்வாறு சொல்லப்படுகிறது. பின் ஸப்தவேலா என்ற இந்த கோத்ர ரிஷிகள் ஹே ப்ராம்ணோத்தமர்களே வசிட்டர்களாகவும் சொல்லப்பட்டுள்ளனர்.

128. இவர்கள் ஏகார்ஷேய கோத்திர ரிஷிகளாக ஆகின்றனர். வசிட்டர் ஒருவராக ப்ரவர ரிஷியாகவும் கருதப்படுகிறார். பின்பு குண்டிநர்கள் கூறப்படுகிறார்கள்.

129. பின் குக்குலயர் சொல்லப்படுகிறார். பிறகு லோஹாயநர், ஆவிஸ்வ, அஸ்வத்த, வைகர்ணி ஆஜிவகதிரர்கள் என்று கூறப்படுகிறார்கள்.

130. பேடகர், நவக்ராமர், அஸ்மரத்யவாஹவர், ஸோமரங்கலிநர், கோகர்கள் பின் காபடவர்கள் கூறப்படுகிறார்கள்.

131. ஹிரண்யாயணர், புலாபக்ஷர், அப்படியே மாத்யந்திநிகள், சாந்தியும், ஸோபதார்தரும், கவுண்டிநரும், கோத்ர ரிஷிகளாக

132. த்ரயாரிஷேயர்களாக ஏற்றுக் கொள்ளப்படுகிறார்கள். வசிட்டர் என்ற மகரிஷிகள் வசிட்டர், மித்ராவருணர், குண்டிநகரும் த்ரயாரிஷியாக கூறப்படுகின்றார்கள்.

133. உபமன்யு, அவுபகவர்கள், மண்டலேகயர்கள், இவர்களும் பின்பு ஜாலாகதர், ஜயர், லோகர்கள், பின் கபிஞ்ஜலர்கள் என கூறப்படுகிறார்.

134. த்ரைவர்ண, வைசாகாரி, ஸாரக்ஷர்; ரக்ஷர்கள், சைலாலயர், மஹாகர்ணாநயர், பாலசிகர் என்றும் கூறப்படுகிறார்கள்.

135. அவுத்தாஹ மாநயர், பாலாநயர் பாகர் பிறகு இவ்வாறு உன்மாயனர் என்ற பெயருள்ளவர்கள். பின் குண்டோதராயணர்கள்

136. லக்ஷ்மணேயர், பின் காசான்வயர், லாகுலயர், அந்ருக்ஷரவஸம்ஞர்களும், காபிலர்கள் வயர்கள் இவர்களும்

137. கபிகேசர்கள், இந்த கோத்ர ரிஷிகள் உபமன்யுக்கள் என்ற இவர்கள் வஸிட்டவர்களின் த்ரயாரிஷேயர்கள் ஆவர். இவர்களும் வசிட்டரும் ஆபரத்வஸுவும்

138. இந்த்ரப்ரமத என்றவரும் இவ்வாறாக மூவரும், பிறகு பராசரர் பின்பும் மூன்று பேர் சொல்லப்படுகிறார்கள். பரதவசு என்று நினைக்கப்படுகிறார்கள்.

139. பைமதாயநர் வாஜியும் கோபாலி ஆகிய ஐவரும் பிறகு கிருஷ்ணர் பராசரர், ப்ராரோஹயேர் என்று கூறப்படுகிறார்கள்.

140. கவுமுதி ப்லாக்ஷ்யரும் கூறி இவ்வாறே பிறகு வைகலியர் சொல்லப்படுகிறார். ஹார்யச்வி ஆகிய ஐவரும் அவர்களுக்கென்று கவுரர்கள் பராசரர்கள் என்ற கோத்திரங்களும் கூறப்படுகிறது.

141. கல்வாயநர் என்று கூறப்பட்டுள்ளது. கோபயர், கர்க்கயர், பிறகு ஸ்வேதயர், வாருணி, அவர்களுக்கு ஐந்து ரிஷிகளாக சொல்லப்படுகின்றார்கள்.

142. பராசரர்கள் அருணர்களாகிற பாலுக்யர், என்பவர்களும், பாதரியும் அப்படியே கர்கரும் வநர்கள் கவுகசாதயர் இந்த ரிஷிகளும்

143. இவ்வாறு அந்த ரிஷிகள் ஐந்து பிரிவாக பின் ப்ரநீலர்களும் பராசரர்களும் பிறகு சவுதவஸாநர்களும் பிரிவான ஆலம்பாயந என்று பெயருள்ளவர்களும்

144. ஸ்வர்யர்களும், காகுக்ஷதர்களும் இவ்வாறே லோமாத்யர்கள் பூர்ண காயநர்கள் சோலகா யநர் எனப்படும் அர்ணவல்கர்களும் அவ்வாறே மேலும்

145. திரும்பவும் தேவநகவுக்யர் ச்ரவிஷ்டாயநர் என்ற ரிஷிகள் பிறகு வாசவயர் பஞ்சவாஜயர்கள் அதன் பிறகு

146. ஆத்யக்ஷõயத என்று சொல்லப்படுகிறார்கள். அவ்வாறே பூதிமாஷர்கள் அப்படியே கைமீயதயர் இவர்கள் ஐந்து நீலர்கள் என்றும் பராசரர்கள்

147. கிருஷ்ணா ஜிநர்கள், காவிசுபர்கள் பிறகு ஸ்யாமாயநர், பவுஷ்கரஸாதியும் ஸ்வேதயூபய என்றும் கோத்ர ரிஷிகள் நிர்ணயம் சொல்லப்படுகிறது.

148. ஸ்வேதர்கள், பராசர்கள், ஆகிய ஐவரும் வாத்ஸ்யாயநர், இவ்வாறே ஸ்யாமேயர்கள், பார்ணயர் ஸஹசவுலியும் சவுபுதரும் மேலும்

149. ஸ்யாமர்கள், பராசரர்கள் இந்த ஆறு விதமான வரும் த்ரயாரிஷேயர்கள், என்று சொல்லப்படுகிறார்கள். வஸிட்டர், சக்தி ஸம்ஞர்கள் பராசரர் என்று மூன்று ரிஷிகளாக சொல்லுவார்கள்.

150. எல்லோரும் பராசரர்களோவெனில் இவர்கள் ஒருவருக்கு ஒருவர் தொடர்பு அற்றவர்கள். பின்பு அகஸ்த்யர்கள் பற்றி நான் சொல்கிறேன். அவர்களில் அகஸ்தியர் முதலில் உள்ளவராவர்.

151. சாலாத்யாக்யரும், குல்மாஷரும் தண்டியும் காலாயனர், அவுபதஹநியும், தாவணி, லாவணி பிறகு

152. லாவ்யர், அற்புதர், வைரணயர், புதாதரயர் போதரி, சைவரதயர், பின்பு ச்யாமாதயர், இவர்கள் கோத்ர ரிஷிகளாக கூறப்படுகிறார்கள்.

153. பிறகு மவுஞ்சிகியர், பாண்டூருஹி மவுஸலயர் அவ்வாறே கவுரி தீபர்களும் ரோஹிஷ்யர்கள் இவ்வாறான ரிஷிகள் த்ரயாரிஷேயர்கள்.

154. திருடச்யுதி, அகஸ்த்யரும், இத்மவாஹர் இம்மூவரும் ஸாம்பவாஹநர் என்பவர்களும் த்ராயரிஷேயர்களான அகஸ்த்யர்கள் ஆவர்.

155. த்ருடச்யுதி அகஸ்த்யரும், ஸாம்பவாஹரும் இங்கே மூன்று ரிஷிகள். ஸோமவாஹநஸம்ஞர்கள் த்ரயாரிஷேயர்களாக அகஸ்த்யர்கள் ஆவர்.

156. த்ருடச்யுதி, அகஸ்த்யரும், சோமவாஹரும் இவ்வாறே மூன்று ரிஷிகள் யக்ஞவாஹநஸம்ஞர்கள் த்ரயாரிஷிகளான அகஸ்த்தியர்கள் ஆவர்.

157. த்ருடச்யுதி, அகஸ்த்யரும், யக்ஞவாஹர், இந்த மூவரும் அகஸ்த்யர்கள். எனினும் நான்கு வகையினரானவர்கள் ஸந்ததியோடு கூடி தொடர்ந்து வருபவர்களாக இருக்கவில்லை.

158. இதன் பிறகு ஜமதக்னி வழிவாழும் ரிஷிகளை சொல்கிறேன். முதலில் வத்ஸ என்ற ரிஷி சொல்லப்படுகிறது. மார்கண்டேயர்களும் மாண்டூகர் மாண்டவ்யர், காம்ஸயர்கள் பிறகு

159. ஆலோகநர்கள் பின் தார்பாயணர்களும் சொல்லப்படுகிறார்கள். சார்கராக்ஷர்கள் பின் தேவ தாயணர், சவுசநகாயநர்கள்

160. மாண்டூகேயர்கள், பார்ஷிகர்கள், ஸாங்கப்ர பாயணர்கள், இந்த கோத்திர ரிஷிகளும் பைங்கலாயந என்பவர்களும் பைலர்கள் ஆவார்கள். தாத்ரேஷயர்கள்

161. பிறகு பாஹ்யகயர், வைச்வாநரயரும் விலோஹிதர்களும் பாஹ்யாகோஷ்டாயநர்கள், ஷ்டைஷகயர், பாணிநயர் பிறகு

162. வாக்பூதகர், காசக்ருதஸ்நர்கள் ருதபாக், ஜதிசாயநர்கள், வைஹீநரயர், வால்மீகி, ஸ்தௌலபிண்டயர் இவர்களும்

163. ததீசயரும், பாணியும் பின் சைகாவதர்கள் வாகாயநர்கள், சவுக்ருதயர் பின் பாலா நகர்கள் இவர்களும்

164. சவுவிஷ்டயர் மாண்டவியும் பிறகு ஹஸ்தாக்நயர் பின்பு சவுத்தகியர் என அறியப்பட்டு வைகர்ணர், த்ரோணஜிஹ்வயர் இவர்களும்

165. ஜாநாயநர்கள், அவுரக்ஷயர்கள் காம் பரோ தரயர்களின் கடோரக்ருத், விரூபாக்ஷ, தேவமத்யர்கள் பைரவி

166. வ்ருகாச்வர்கள், அர்காயணர், உச்சமந்யவர் மார்காயணர் சார்ங்கரவர், வாயவாபநயர் பின்னும்

167. காஹ்வாயனர்கள் காரபயர் பிறகு சந்த்ரமஸர், நோபேயர்களும் காங்கேயர்கள், யாக்ஞிகர் பாரிமாண்டலியும் இவர்களையும்

168. பாஹுமித்ராயணர், அபிசலயர், ரோஹிதாயநர்கள் பிறகு வைஷ்டபுரேயாரும், உஷ்ட்ராக்ஷர்களும் பின் உள்ள ரிஷிகளாக கூறப்படுகிறார்கள்.

169. பிறகு ராஜிதவாஹர்களும் பிறகு சாரத்வதாயநர்களும், நாலாயநர்களும் வாஸர்களும் வாநர்கள், வாத்யர்கள் என்று கோத்ர ரிஷிகளும் கூறப்படுகிறார்கள்.

170. இந்த ரிஷிகள் அனைவரும் வத்ஸர்களாகவும், பஞ்சார் ஷேயர்கள் எனவும் கூறப்பட்டனர். ஜாமதக்நயர் பார்கவர் ச்யாவநர் அவுர்வாப்நுவாநர் ஜமதிக்னயர்களின்

171. ரிஷிகள் யாககர்மாவில் பஞ்ச ப்ரவர கோத்ர ரிஷிகளாவார். விதர்கள் சைலர்கள் அப்படியே சைலர்கள் அவடர்களும் புலஸ்தயர் இந்த மஹரிஷிகளும்

172. இவர்கள் ப்ராசீந யோகர்கள் என மிகப் பழமையான முன் தொடர்புள்ள கோத்திர ரிஷிகள் எனவும் வைநபூதர்கள் பிறகு அபயஜாதர்கள் காண்டரதயர் இவர்களும் இருக்கிறார்கள்.

173. ஆர்காயணர்கள் அவ்வாறே நாஷ்ட்ராயணர்கள் மார்க்காயணர்கள், க்ரவுஞ்சாயநர்களும் ஜாமாலாக்கள் பிறகு புஜாயநர்கள்

174. இவர்கள் விதர்கள் என்றும் ஐந்து ஆர்ஷேயர்களாக ஜாமதக்நயர் வழிவந்தவர் எனவும் கூறப்பட்டுள்ளனர். பார்கவர் ச்யவநர், அவுர்வி பஞ்சரிஷீகளாவர், ஆப்நுவாநர், விதர்கள் இவர்கள்

175. ஆர்ஷ்டிஷேணர்கள், நைரதயர், க்ராம்யாணயர் இவ்வாறாக காணாயநர்கள் பின் சாந்தராயணர்கள், பைடீகலாயநர்கள்

176. கவுராம்பி, ஆம்பி சித்தர்களும் பின்பு சமநாயநர்களும் ஆர்ஷ்டிஷேணர்களும் ஜாம தக்னியின் பஞ்சார்ஷேயர்களாக கருதப்படுவர்.

177. பார்கவர் ச்யாவநர் ஆப்நுவாநர் அநூபர்கள் என்ற பெயருள்ளவருமாக கோத்ர ரிஷிகளும் ஆன்ஷ்டிஷேணார் என்ற பெயருள்ள வருமாக ஐந்து ப்ரவரம் உள்ளவர்களாக கூறப்படுகின்றனர்.

178. வத்ஸ என்ற பெயருள்ள ரிஷிகளுக்கும் ஆர்ஷ்டிஷேணர்களும் விதா என்பவர்களுக்கும் ஒருவருக்கொருவர் விவாக சம்பந்தம் இல்லாதவராக சொல்லப்படுகிறார். பிறகு ப்ருகவர்கள் (ப்ருகுரிஷி வழிவந்தவர்கள் குறித்து) கூறப்படுகிறார்கள்.

179. யஸ்கர்களும் மவுநரும் மூகரும் வாதூலர் பாஸ்கரர் பின்பு வர்ஷ புஷ்யரும் வாலேயர்களும் பிறகு ராஜிததாயநர்கள்

180. துர்திநர்கள், மாத்யமேயர்களும் தேவந்தாயநர், கவுசாம்பேயர், வாகலயர், வாஸயர் என்றும் சொல்லப்படுகிறார்கள்.

181. ஸாத்யகியும், சித்ரஸேநரும் கவுடியல்யர்களும், பிறகு அவுக்தர்கள் பாகந்தயர் பின்வார்கர்களும் ஸ்வகயர், ப்ருகு, இந்தயர்கள்

182. பிறகு போகசிதயர் இவர்கள் யஸ்கர்கள் என்று கருதப்படுகின்றனர். ப்ருகு சம்மந்தமான பார்கவகோத்ர ரிஷிகள் த்ரயார்ஷேயர்கள் எனவும் கூறப்படுகிறார்கள்.

183. ப்ருகுவும் அவ்வாறே யஸ்கர் திவோதாஸர் என்று மூன்று ரிஷிகள் மித்ரயுவர் பிறகு ரம்யாயணர்கள் தாக்ஷõயணர்கள் பிறகும்

184. ஸாபிண்டிநர் மஹாவால்யர்கள் மால்யர்கள் யாவால்யர் ஆகிய பெயருள்ளவரும் புராபிநாயர் ஏஜேயர் ராக்ஷõயணர் இந்தரிஷிகளும்.

185. கைதவாயநயர் மாஞ்ஜாயநாக்கள் மாதாயவர்கள் மித்ரயுவர்கள் இந்த ரிஷிகள் பார்கவர்களின் த்ரயாரிஷேயர்கள் என்றும் கூறப்படுகிறார்கள்.

186. ப்ருகுவும் மித்ரயுவரும் திவோதாஸ என்ற மூவரும், வைந்யர்கள் பார்தாக்கள், பாஷ்கலா வைந்ய என்ற பெயருள்ள ரிஷிகள் என்று சொல்லப்படுகிறார்கள்.

187. ப்ராம்மண சிரேஷ்டர்களே பார்கவர்கள் த்ரயாரிஷேயர்கள் என்றும் ப்ருகுவும் வைன்ய பார்தர்களும் (பார்கவ) ப்ரவரம் கொண்ட ரிஷிகள் மூவர்

188. சுனகர், சவுகந்தயர், யக்ஞபயர், கார்த்ஸமதர், காங்காயநர், மத்ஸ்யகந்தர், கார்தமாயநர் இவர்கள் ஐக்ஷர்கள் என கூறப்படுகிறார்கள்.

189. ச்ரோத்தியர்கள் தைத்தரீயர்களும் பிப்பலர்களும் பின்னர் இவ்வாறாக உள்ள இந்த சுநகர்கள் முதலிய ரிஷிகள் ஏகாரிஷேயர்களாகவும் புகழ்ந்து கூறப்படுகிறது.

190. சுனகர் ஒருவராக இருந்தாலும் அவர் பார்கவராகவே சொல்லப்படுகிறார். யஸ்கரர்களும் மித்ரயுவர்களும் வைந்யாரிஷிகளும் ஒருவர்க்கொருவர் தொடர்புடையவர்கள்.

191. சுனகர்களுடைய சம்மந்தமும் உண்டு என கருதப்படுகிறது. விஷ்ணு விருத்தர் முதலியவரோவெனில் ஆங்கிரஸரின் ஆதியாக உள்ள கோத்ர ரிஷிகள் என கூறப்படுகின்றனர்.

192. பத்ரணா மத்ரணா இவ்வாறாக ஷடமர்ஷண என்ற பெயருள்ள ரிஷி கோத்ரங்கள் ஸாத்யகி ஸாத்யகாயநர்கள்

193. பாதராயணர், வாத்ஸ ப்ராயணர் ஆருண்யர்களும், வைஹோடா, நேதுத்யர்கள், ஸ்துத்யர்கள்

194. தேவஸ்தாயநர் இந்தரிஷிகள் விஷ்ணு வ்ருத்தர்கள் என கொண்டாடப்படுகிறார்கள். இந்த கோத்திர ரிஷிகள் ஆங்கிரஸ வழிவந்த த்ரயாரிஷிகள் என கூறப்படுகிறார்கள்.

195. ஆங்கிரா, விஷ்ணு விருத்தமும் விஷ்ணு தாஸர் இம்மூவரும் த்ரயார்ஷேயர்கள் எப்பொழுதும் வைருத்யரும், ருருத்யரும், த்ராஸதஸ்யுவும் ஆக இவர்கள் மூவரும் மூன்று ரிஷிகளாவர்.

196. கந்வர்கள், சைலர், வல்கலர்கள், ஹலிநர் மோஜயர்கள் மேலும் மவுஞ்ஜியும் மாஞ்ஜயரும் மர்கடாயநர் என்ற த்ரயாரிஷிகளாக கூறப்படுகிறார்கள்.

197. மவுஞ்சிகந்தர் பின்னும் வாஜயர் ஆஜயர்களும் மார்கச்ரவஸ இவ்வாறு இந்த ரிஷிகளும் கந்வர் என்பவரின் த்ரயார்ஷேயர்களாவர்.

198. அங்கிரர்களும் அஜமீடர்களும் கண்வரும் இந்த மூன்று ரிஷிகளும், ஹரிதாக்களும் பின் கவுத்யர்களும் ஸாங்க்யர்களும் தார்பாக்களும்.

199. சைவங்கர், சர்மநாயுவும் லாபேதரர் மஹோதரர்களும் மேலும் நைமிச்ரேயர் ஹைமகவர் பின்பு மிச்ரோதரர்

200. கவுதபர்கள் கவுலயர் காரீஷய பவுலயர் மேலும் பவுண்டவரும் மாதூபர், மாந்தாதா மாண்டகாரர்கள்

201. இவ்வாறு இங்கே சொல்லியிருந்த ரிஷிகள் ஹரீதர்கள் என்று சொல்லப்படுகிறார்கள். த்ரயாரிஷேயர்கள் என்றும் அங்கிரர்களும் அம்பரீஷரும் யவுவநசவரும் மூன்று ரிஷிகளும் ஆங்கிரர் ஆவார்கள்.

202. பிறகு ஸம்க்ருதயர் தண்டியும் சம்புவும் மலகாவும் பிறகு பவுந்யரும் சைபவரும் தாரகாத்யார்களும் பரிபாவர்கள்

203. ஹாரித்ரா, வைதலேயர்களும், ஸ்ரோதாயநரும் சாரணரும் பூதிமாஷர்களும் ஆக்கிராயணர் சம்மந்தமான ரிஷிகள்

204. சாந்த்ராயனரும் ஆபர்ஷயர் அவக்ராபயர் என்றும் ஸம்க்ருதயர் என்பதில் சைவர்களும் இவர்களும் கோத்ர ரிஷியாக சொல்லப்பட்டு த்ரயாரிஷேயர்களாக கொண்டாடப்படுகிறார்கள்.

205. ஆங்கிரர்கள், ஸம்க்ருதி அம்பரீஷர் என ரிஷிகள் மூவர் ரதீதரர்கள் பின் காஹ்வாயநர்கள் நைதீரக்ஷயர் என்ற கோத்ரரிஷிகளும்

206. சைலாலயரும் லைபியும் பின் லீபாயநர்களும் கூறப்படுகின்றனர். மைக்ஷவாஹரும் சவுவாஹவாஹரும், ஹஸ்திவாஸயரும்

207. பின் ஹோமசதர் என்பவர்கள் ரதீதரர்களின் த்ரயாரிஷேயர்கள். அங்கீரர்கள், அம்பரீஷர், ரதீதர என்று மூவர்களும்

208. ஆங்கிரர்கள் விரூபரும் ப்ருஷதச்வ என்றுமோ ஆகின்றனர். முத்கலர்கள் ஹிரண்யாக்ஷர்கள் மிதாக்ஷர்கள் இவர்கள் த்ரயார்ஷேயர்கள்.

209. ருக்யர்கள் ருக்யாயநர்கள், தீர்கஜங்கர்கள் ஜங்கர் என்பவராக சொல்லப்படுகிறது. பின் தோரண பிந்தும் முத்கலர்கள் என்பதாக இந்த ரிஷிகளும் கூறப்பட்டுள்ளன.

210. த்ரயாரிஷேயர்களாக சொல்லப்பட்டுள்ளார்கள் கவசர் தைகிலாதயர் ஹம்யாச்வர்கள் கபயர்கள் வேதலர்கள் இவர்களும் கோத்ர ரிஷிகளாக சொல்லப்பட்டுள்ளனர்.

211. ஐதிசாயநர், தரச்வியும், பதஞ்ஜலியும் மிண்டி போஜஸி சார்ங்கரவர் என்றும்

212. பின் கரசிகண்டரும் பின் மவுஷீம்த்கி என்ற ரிஷிகள் அப்படியே ஸாம்சய பவுஷ்யரும் இவ்வாருள்ள கோத்ர ரிஷிகள் கூறப்படுகின்றனர்.

213. இங்கு சொல்லப்படுகின்ற ரிஷிகள் த்ரயாரிஷேயர்களான கபயர்கள் என இவர்களும் ஆங்கிரர்களும் கபித்தர்களும் அம்பரிஷி என்று மூன்று ரிஷிகள் ஆவர்.

214. விஷ்ணு வ்ருத்தாதிகள் எல்லோரும் ஒருவர் ஒருவர் சம்மந்தமில்லாதவர்கள். ராஜரிஷிகள் பற்றியும் வைச்யரிஷிகள் பற்றியும் நான் சொல்கிறேன். ஐலர்கள் புரூரவர்கள்

215. பின்னர் க்ஷத்ரியர்களுடைய (சன்ததி வழியில் வந்த) ரிஷிகள் சொல்லப்படுகிறார்கள் வாத்ஸப்ர போதகர் வைச்யர்கள் நாராஸாதீயதயர்கள்

216. ஆத்ரேயரும் ஆத்ரேயர் வாதுலர் ஸங்கிருதியும் வஸிட்டர் சுனகரும் கண்வர் யஸ்கர் இவர்கள் எட்டுபேர்கள்

217. நாரஸாத்யர்கள் மநு இங்கே ப்ரவரமாக கூறப்படுகிறது. பிறகு க்ஷத்திரிய வைஸ்யர்களுடைய ஆசார்ய ப்ரவரமோ எனில் நன்கு அறிந்து கொள்ள வேண்டும்.

218. ஸமான கோத்ர ப்ரவரங்களை அறிந்து சம்பந்தம் செய்து கொள்ள ஸமான கோத்ர ப்ரவரமுள்ள கன்னியை (பெண்ணை) எப்பொழுதும் வரிக்கக் கூடாது. (சமாந கோத்ர விவாகம் செய்யக் கூடாது என்பது கருத்து).

219. சகோத்ர விவாஹம் ஆகிவிட்டால் உடன் பிறந்த சஹோதரியாக பாவித்து தாயை போல காப்பாற்ற வேண்டும். அவருடைய ரக்ஷணகார்யம் ஆகாரம் வஸ்திராதிகளிலே (அவள்மனம் கஷ்டப்படாதபடி) காக்க வேண்டியது மிக முக்யமாகும்.
 
220. விவாஹ தோஷ சுத்திக்காக சாந்த்ராயன வ்ருதத்தை அனுஷ்டிக்க வேண்டும். அப்படி இருக்கும் பொழுது ப்ரமாதத்தினால் (அடக்கமின்மையால்) முதலிய சம்யோகம் செய்திருப்பானாகில்

221. அவன் எப்பொழுதும் ப்ராயச்சித்தம் செய்து கொள்ள வேண்டும். அதன் முறை கூறப்படுகிறது. ஓர் முறை ஸம்போகம் செய்தால் சாந்திராயண வ்ரதத்துடன்

222. ஆயிரம் அகோர மந்திர ஹோமம் செய்ய வேண்டும். இரண்டு முறை ஸம்போகம் செய்தால் சந்திராயண வ்ரதத்துடன்

223. ஒரு மாதத்திற்கு மேல் க்ருச்ரம் அனுஷ்டித்து சாந்திராயணவ்ரதத்துடன் ஹோமம் செய்தும் ஆறு மாதம் முதல் வ்ருஷம் வரை முன்பு சொல்லிய சகல விரதானுஷ்டானங்களையும் அனுஷ்டிக்க வேண்டும்.

224. அதன் மேலும் அதிக்ருச்ராசரணத்தை அனுஷ்டித்து மூன்று வருஷம் முடியும் வரை க்ருச்ராசித்த முடிவுகளில் ஸம்ஸாரத்தையகற்றும் நிர்வாண தீøக்ஷ செய்ய வேண்டும் என்று சொல்லப்படுகின்றது.

225. மேலும் அவர்களுக்கு உண்டானபுத்ரர்கள் பிராம்மணர்களாக எண்ணப்படுவதில்லை. அவர்களின் மகன், பேரன், இவர்களின் ஸம்யோக விஷயத்தில் பிராயச்சித்தம் மேற்கூறியவையேயாகும்.

226. உபவாஸம், அப்பொழுதே ஸ்நானம் பஞ்சகவ்யப்ராசநம் ஜபம் செய்தல் இவற்றையும் ஹோமங்களும் செய்வதால் நன்மக்களுக்கு ஸர்வ சங்கடத்தில் ஏற்படுகின்ற மலம் என்ற பாபதோஷங்கள் நீங்குகின்றன.

227. அப்பொழுது சூர்யோதயம் முதல் காலையில் பகலில் இரவிலும் யார் ஒருவன் நான்கு வேளை போஜனமின்றி அனுஷ்டிக்கப்படுகிறதோ என அது உபவாஸமென சொல்லப்பட்டு இருக்கிறது.

228. மூன்று காலம் குறைவுபட்டதாகவும் ராத்திரி முதல் நாள் முழுவதும் அவன் விரதம் உபவாஸம் அனுஷ்டிக்க வேண்டும். இரண்டு காலம் குறைவு ஏற்பட்டதாக துர்லபமான ஆத்மாக்களுக்கு காப்பாற்ற வேண்டிய உபவாஸ விரதங்களின் அனுஷ்டானம் குறைவு பட்டவர்களுக்கு (மேலும் அனுஷ்டானங்களை பக்தியும் அனுசரிக்க வேண்டும்.)

இவ்வாறு உத்தரகாமிகாமக மத்தியில் கோத்ரநிர்ணய விதியாகிற இருபத்தைந்தாவது படலமாகும்.

 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar