பதிவு செய்த நாள்
10
ஜூன்
2021
10:06
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயிலில் 10 ஆண்டாக பயன்படாமல், இடியும் நிலையில் உள்ள தங்கும் விடுதியை மீண்டும் புதுப்பித்து, பக்தர்களுக்கு விபரீதம் ஏற்படும் அபாயம் உள்ளது.
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் தெற்கு ரத வீதியில் பல ஆண்டுக்கு முன் அமைத்து தங்கும் விடுதியில், பக்தர்கள் தங்கினர். நாளடைவில் விடுதி கான்கிரீட் மேற்கூரை, கதவு, ஜன்னல் சிலாப் உடைந்து, சுவரில் விரிசல் ஏற்பட்டதால் பக்தர்கள் தங்க அனுமதிக்கவில்லை. இந்த 12 விடுதியை அகற்றி பூங்கா அமைத்திட இந்து அறநிலைதுறை முடிவு செய்து, கடந்த 8 ஆண்டுகளாக விடுதியை பூட்டி வைத்தனர். இந்நிலையில் இடியும் தருவாயில் கிடக்கும் விடுதியை ரூ. 1 லட்சத்தில் புதுப்பிக்க கோயில் இணை ஆணையர் உத்தரவிட்டதும், மராமத்து பணி நடக்கிறது.
30 கோடியில் விடுதி : ராமேஸ்வரத்தில் கோயில் சார்பில் ரூ.30 கோடியில் 96 நவீன அறைகள், 10 சூட் ரூம்கள், கார் பார்க் வசதியுடன் பக்தர்கள் தங்கிட யாத்ரி நிவாஸ் அமைத்து, கொரோனாவால் தடை விதித்த நிலையில், பல ஆண்டுகளாக பயன்படாத விடுதியை ஏன் புதுப்பிக்க வேண்டும். இதனால் பக்தர்களுக்கு விபரீதம் ஏற்படும் அபாயம் உள்ளதால், இடியும் தருவாயில் உள்ள விடுதியை புதுப்பிக்கும் பணியை கைவிடுமாறு இந்து அமைப்பினர் கோரிக்கை விடுத்தனர்.