பதிவு செய்த நாள்
10
ஜூன்
2021
10:06
திருநெல்வேலி: உலக நன்மைக்காக நெல்லை டவுன் மேட்டுத்தெரு அறம்வளர்த்தநாயகி அம்மன் கோயிலில் சிறப்பு யாகம் நடந்தது.
நெல்லை கல்ச்சுரல் அகாடமி மற்றும் தென் மாவட்ட பூசாரிகள் சங்கம் சார்பில் உலக நன்மைக்காகவும், கொரோனா பாதிப்பிலிருந்து மக்கள் விடுபட வேண்டியும்நெல்லைடவுன் மேட்டுத்தெருவில் உள்ள அறம்வளர்த்தநாயகி அம்மன் கோயிலில் 3 நாட்கள் சிறப்பு யாகம்நடந்தது. யாகத்தின் துவக்க நாளான்று தென்திருப்பதி மேலத்திருவேங்கடநாதபுரம் பெருமாள் கோயில் தலைமை அர்ச்சகர் முரளி பட்டாச்சார் தலைமையில் 11 வேதவிற்பன்னர்கள் சுதர்சன மற்றும்தன்வந்திரி ஹோமம் நடத்தினர். 2ம்நாளான்று கோமதி சங்கர் பட்டர் தலைமையில் ருத்ரஜெபம், மிருத்தியுஞ்ஜய ஹோமமும், நிறைவு நாளான்று அதிசய விநாயகர் கோயில் அர்ச்சகர் ராஜேஷ் தலைமையில் பிரித்தியங்கராதேவி சிறப்பு ஹோமமும் நடந்தது. ஏற்பாடுகளை கார்த்திகேயன் குருக்கள், அத்ரி மாரியப்பன், சுகி சுவீட்ஸ் காஜாராஜன், ராஜலட்சுமி ஷூ மார்ட் லட்சுமணன், இந்தியன் வங்கி முன்னாள் முதுநிலை மேலாளர் ராமபத்ரன், பி.கே.எஸ்.செல்வராஜ், சொனா. வெங்கடாசலம், முத்துகிருஷ்ணா ஜூவல்லர் ஸ்ரங்கராஜன் உட்பட பலர் செய்திருந்தனர்.