உடுமலை : உடுமலை, திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவிலில், வைகாசி மாத அமாவாசையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் பிரம்மா சிவன் விஷ்ணு அருள்பாலித்தனர். கொரோனா தொற்று ஊரடங்கு காரணமாக, சமுக இடைவெளியை கருத்தில் கொண்டு பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. இதனால் கோயில் வெறிச்சோடி காணப்பட்டது.