திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் அடுத்த வி.புத்தூர் கிராமத்தில் உள்ள அங்காளம்மன் கோவிலில் அமாவாசை ஊஞ்சல் உற்சவம் நடந்தது.
திருக்கோவிலூர் அடுத்த வி.புத்தூர் கிராமத்தில் உள்ள பழமையான அங்காளம்மன் கோவிலில் மாதந்தோறும் அமாவாசை சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். வைகாசி மாத அமாவாசையை முன்னிட்டு நேற்று முன்தினம் மாலை 4:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. தொடர்ந்து உற்சவர் அங்காளம்மனுக்கு சோடச தீபாராதனை, கோவிலைவலம் வந்து, ஊஞ்சலில் எழுந்தருளி சிறப்பு வழிபாடு நடந்தது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக விழாவில் பக்தர்கள் இன்றி கோவில் பூசாரிகள் மட்டுமே பங்கேற்றனர்.