சத்திய ஞானசபை திருக்கோவிலில் அன்னதானம் பெறுவோர் எண்ணிக்கை அதிகரிப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11ஜூன் 2021 03:06
பொங்கலூர்: ஏழைகளின் பசியாற்றுவதை நோக்கமாகக் கொண்டு செயல்படுகிறது பொங்கலூரிலுள்ள சத்திய ஞான சபை திருக்கோயில். இக்கோவில் சார்பில் கொரோனா பாதித்த நாள் முதல் ஏழைகள், நலிவுற்றோர், குழந்தைகள் மற்றும் மருத்துவமனை நோயாளிகள் ஆகியோருக்கு மதிய உணவு இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. முன்பு ஒரு நாளைக்கு, 100 பேர் வரை மதிய உணவு சாப்பிட்டு வந்தனர்.
தற்போது கொரோனா தொற்று வேகமெடுத்து உள்ளதால் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் பல தொழிலாளர்கள் வேலை இல்லாததால் வருமானத்தை இழந்து உள்ளனர். இதனால், சத்திய ஞானசபை திருக்கோவிலில் வழங்கப்படும் அன்னதானத்தை சாப்பிடுவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கொரோனா பாதித்த போது துவக்கத்தில் 100 பேர் வரை சாப்பிட்டு வந்தனர். தற்போது, 500 பேர் வரை நாள்தோறும் சாப்பிட்டு பசியாறி வருகின்றனர். பக்தர்கள் கொடுக்கும் காணிக்கை மற்றும் பொதுமக்கள் தரும் உதவிகளால் இந்த கோவிலில் நாள்தோறும் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.