போபால்: மத்திய பிரதேசத்தின் உஜ்ஜயினியில் உள்ள, பிரசித்தி பெற்ற மஹாகாலேஷ்வர் கோவில், கொரோனா இரண்டாம் அலையால் ஏப்., 9ல் மூடப்பட்டது. வைரஸ் பாதிப்பு குறைந்து வரும் நிலையில், 80 நாள் இடைவெளிக்கு பின், வரும் 28ல் பக்தர்கள் தரிசனத்திற்காக கோவில் திறக்கப்படும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.