முதுகுளத்துார் : முதுகுளத்துார் அருகே பூங்குளத்து அய்யனார் கோயிலில் சுடலைமாடன், சேதுமாகாளி, அய்யனார் உட்பட பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் முடிந்து 45 நாட்களுக்கு பின் மண்டலாபிஷேக பூஜை நடந்தது.வேதபாராயணம், பூர்ணாகுதி தீபாராதனை நடந்தது.காலை யாக பூஜை முடிந்த பின்பு புனிதநீர் ஊற்றப்பட்டது. கொரோனா தாக்கத்தில் இருந்து மக்கள் நலம் பெறவும், உலக நன்மை வேண்டி 108 சங்காபிஷேகம் சிறப்பு பூஜை நடந்தது.