Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஜம்முவில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சுவாமி ... கோவில்களை நிறுவனமாக்கிய அரசு: ஆன்மிகவாதிகள் கடும் அதிருப்தி கோவில்களை நிறுவனமாக்கிய அரசு: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஏகாம்பரநாதர் கோவில் இடம் 32 கிரவுண்டு சுவாதீனம் எடுப்பு
எழுத்தின் அளவு:
ஏகாம்பரநாதர் கோவில் இடம் 32 கிரவுண்டு சுவாதீனம் எடுப்பு

பதிவு செய்த நாள்

15 ஜூன்
2021
11:06

சென்னை: குத்தகை காலம் முடிந்த பின்னும் தனியார் தொண்டு நிறுவனம் வசம் இருந்த 32 கிரவுண்டு நிலம், அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு முன்னிலையில் சுவாதீனம் எடுக்கப்பட்டது.


காஞ்சிபுரம், ஏகாம்பரநாதர் கோவிலுக்கு சொந்தமாக, பூந்தமல்லி நெடுஞ்சாலையில் 141 கிரவுண்டு இடம் உள்ளது. இதில், 44.5 கிரவுண்டு கலவலக் கண்ணன் செட்டி தொண்டு நிறுவனம் 99 ஆண்டுகள் குத்ததைக்கு எடுத்து, மேல்நிலைப் பள்ளியை நடத்தி வந்தது.இதில், 12.5 கிரவுண்டு 2010ல் கோவில் வசம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில், குத்தகை காலம் முடிந்தது. இணை கமிஷனர் நீதிமன்றத்தில், சட்டப்பிரிவு 78ன் கீழ் சுவாதீன உத்தரவு பெறப்பட்டது.இதை எதிர்த்து, கலவலக் கண்ணன் செட்டி தொண்டு நிறுவனம் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில் கோவிலுக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது.அதன் அடிப்படையில், அங்குள்ள பள்ளிக்கூடத்தை அந்த அமைப்பால் நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது. இதையடுத்து, 32 கிரவுண்டு இடம் மற்றும் பள்ளிக் கட்டடங்களை தொண்டு நிறுவனத்தினர், அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு முன்னிலையில் கோவில் செயல் அலுவலரிடம் நேற்று முன்தினம் ஒப்படைத்தனர்.மேலும், கோவிலுக்கு சொந்தமான 96.5 கிரவுண்டு நிலத்தை அமைச்சர் பார்வையிட்டு, அவற்றை முழுமையாக கோவில் வசம் சுவாதீனம் எடுக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.இந்நிகழ்வில், அறநிலையத்துறை செயலர் சந்திரமோகன், கமிஷனர் குமரகுருபரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அயோத்தி: அயோத்தி ராமர் கோயிலில் இன்று ஏகாதசியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விழாவில் ... மேலும்
 
temple news
பாலக்காடு; கேரளாவில் பிரசித்தி பெற்ற கோவில் திருச்சூர் வடக்குநாதர் கோவில். இங்கு எல்லா ஆண்டு சித்திரை ... மேலும்
 
temple news
பெரியகுளம்; பெரியகுளம் ஷீரடி சாய்பாபா கோயிலில் சாய்பாபா பிறந்தநாள் விழா மற்றும் ராம நவமி விழா நடந்தது. ... மேலும்
 
temple news
திருப்பதி; திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள் பணம் மற்றும் நகை என காணிக்கையை கொட்டி ... மேலும்
 
temple news
கோவை; கோவை மாவட்டம் அன்னூர் கரி வரதராஜ பெருமாள் கோவிலில் சித்திரை மாதம் ஏகாதசியை முன்னிட்டு கோவிலில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar