Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
முதல் பக்கம் » அத்புத சாந்தி விதி
படலம் 31: அத்புத சாந்தி விதி!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

18 ஜூன்
2012
04:06

இந்த படலத்தில் முதலில் அபூர்வமாய் இருக்கக் கூடிய விஷயத்தில் எல்லா விதமான கேடுகளையும் போக்கடிக்கக் கூடிய பரிகாரத்தை கூறுகிறேன் என்பது பிரமாணம். இரவில் சூர்யனை காண்பதும். அமாவாசையில் சந்திரன் உதயத்தை காண்பதும் பூகம்பம் ஏற்பட்டாலும் ஆலய மண்டபங்கள் சுற்றுவதிலும் நதி, குளம், கிணறு, இவைகள் வறட்சியும் சிலை அழுவதிலும் பிரதிமைகள் உண்டாவதிலும் ரத்தம் கொட்டுவதிலும் தேன், பால், நெய் மழையிலும், மண், எண்ணை, கல் மாம்சம் கொட்டுவதிலும் லிங்கம் பிம்பம் மரங்களில் இருந்து ரத்தங்கள் உண்டாவதும் எதிர்பாராத விதமாக கோயில் விழுவதிலும், ஸ்தூபி முதலியவைகள் அவயவங்கள் சேதனம் அடைவதிலும், நாசி, தலை, முதலியவைகள் குறைவு ஏற்படக்கூடிய காலத்திலும், கோயில் நடுவே இருக்கக் கூடிய தேவதைகளுக்கு பின்னம் ஏற்பட்டாலும் மண்டபங்கள் விழுந்தால் லிங்கம் முதலியவைகள் உள்ள கோயில் வேறு இடத்தை அடைந்தாலும் மரம் வேறுடன் அனுபட்டால், ஓர் மரத்தில் மற்றொரு மரத்தின் பூக்களோ பழங்களோ உண்டானால் லிங்கத்தில் பிம்பத்தில், பீடத்தில் உஷ்ணங்கள் உண்டானால் மனுஷ்யன், மிருகம் பசு, பட்சி, பாம்புகள் இவைகளில் அந்தந்த ஜாதிக்குவேறு சந்ததிகள் உண்டானால், பல தலைகள், கைகள், கால்கள், மூக்குகள், முதலிய சரீரம் உண்டானால் தன்னுடைய வர்ணத்திற்கு இதர வர்ணங்களில் உருவம் விகாரங்களினால் ஏற்பட்டு இருந்தாலும், தெளிவான வர்ணங்கள் இல்லாததான குதிரைகள் உண்டாவதினாலும், பர்வதங்களுக்குள் சண்டை ஏற்பட்டாலும் லிங்கத்தில் பிம்பத்தில் பீடத்திலோ துக்கம் ஏற்பட்டாலோ லிங்கம் விமானம் மண்டபம் கோபுரங்களில் பரிவார ஆலயங்களில் சாலைகள் ஆஸ்தானமண்டபங்கள் சபைகளில் இடி விழுந்தாலோ, அரண்மனை குளுமையான அரசமரம், முதலியவைகளில் இடி விழுந்தாலோ, யானைக்கு மதம் பிடித்தாலோ, சூறாவளி காற்று அடித்தாலோ எதிர்பாராத விதமாக நெருப்பில் புகை உண்டானாலோ லிங்கம் பிம்பம் ஆசனம் இவைகளில் புகையை கண்டாலோ லிங்கத்தில் பேரத்தில், பீடத்தில் வெளுத்திருந்தாலோ (வேறுநிறங்கள் தோன்றினாலோ) பேரீ முதலியவைகளில் தானாக சப்தம் உண்டானாலோ, சூர்யனுக்குள் சூர்யன் தெரிந்தாலோ, சந்திரனுக்குள் சந்திரன் தெரிந்தாலோ இரவில் வானவில் தெரிந்தாலும், பகலில் நட்சத்திரம் தெரிந்தாலும் நஷத்திரங்கள் வீடுகளில் விழுந்தாலும், அக்னி நட்சத்திரங்கள், விழுந்தாலும், சந்திரன், சூர்யன் மண்டலத்தில் 5 நாளுக்கு மேல் கோட்டை கட்டிருந்தாலோ திக்குகளில் தீ பிடித்தாலோ லிங்கத்தில் பூஜை செய்த புஷ்பங்கள் வேறு நிறம் ஏற்பட்டாலோ எதிர்பாராத விதமாக குளிர்ந்த மரம் விழுந்தாலும், எதிர்பாராத விதமாக வெட்டுப்பூச்சிகள் ஏற்பட்டாலும் மனுஷ்யன் மிருகம் பசு பட்சி.

பாம்புகளுக்கு பைத்யம் பிடித்தாலோ எதிர்பாராத விதமாக யானை, குதிரை இறந்தாலோ, எதிர்பாராத விதமாக மழை பெய்தாலும், எதிர்பாராத விதமாக ராஜாவினுடைய பிரதான மனைவி, குதிரை, யானை பிரதான குரு, இவர்களுக்கு மரணம் ஏற்பட்டாலோ கோயில் மண்டபங்கள் பிராகாரம், கோபுரங்கள் பரிவார ஆலயத்திற்கு மேல் அரண்மனைக்கு மேல் பீடங்கள் பிம்பங்கள் முதலியவைகளில் நாய் ஏறினாலும், அழுதாலும், பூனைகள் அழுதாலும் இவைகளில் ஸ்திரீநரி ஏறினாலும் குதிரை லாயத்தில் நெருப்பு ஏற்பட்டாலும், லிங்கத்தில் பீடத்தில் பிம்பங்களில் ஏறினாலும் லிங்கத்தின் அடியில் பீடத்தில் பிம்பத்தில் கர்பக்கிரகத்தில் பரிவாரத்தில் தேன் கூடு கட்டினாலும், தானாகவே கதவு சாத்திக் கொண்டாலும், சூர்யன் அஸ்தமனத்திற்கு பிறகும் சூர்ய உதயத்திற்கு முன்பும் ஆகாசத்தில் பலவிதமான வெள்ளை, சிவப்பு வர்ணங்களில் நீல வாலுடன் நட்சத்திரங்களை போல தூம கேதுகள் சஞ்சரித்தாலும் அபூர்வமான கார்யங்கள் பார்ப்பதினாலும் உண்டான மற்ற இடையூறுகளையும் கண்டு அதற்காக நீக்குவதன் பொருட்டு கூறப்பட்ட பிராயசித்த கார்யங்கள் தனித்தனியாக நிரூபணம் காணப்படுகிறது.

1. சகல விதமான துன்பங்களையும் போக்கக் கூடிய பரிஹாரத்தை கூறுகிறேன். இரவில் சூர்யனைக் காண்பதால் வேற்று ராஜாக்களின் பயம் உண்டாகும்.

2. பிராம்மண போஜனத்துடன் கூடிய பரிஹாரத்தை செய்ய வேண்டும். அமாவாஸ்யை அன்று சந்திரன் உதயமானால் வேறு ராஜா உண்டாவான்.

3. முன்புபோல் மத்யம பக்ஷத்திலோ அதம பக்ஷத்திலோ பரிஹாரம் செய்ய வேண்டும், பூகம்பம் ஏற்பட்டால் நிச்சயம் அரசனுக்கு கெடுதி உண்டாகும்.

4. தேன், பால் இவைகளினால் ஆயிரம் மரக்காலோ அதில் பாதியோ அதிலும் பாதியோ நூறு படியோ அதில் அரை பாகமோ

5. மூன்று, ஏழு நாட்களோ, இருபத்தி ஒன்று நாட்களோ, பதினான்கு நாட்களோ நெய், தேன்களால் அபிஷேக விதியில் கூறப்பட்டுள்ள உத்தமமான முறையினால் சிவனிடத்தில் அபிஷேகம் செய்ய வேண்டும்.

6. பிரகாரம், மண்டபங்கள் தானாகவே சுற்றுவதானாலும் இதே போல் செய்ய வேண்டும். நதி, குளம் குட்டை முதலியவைகள் காய்ந்து போகுமானால் துர்பிக்ஷம் உண்டாகும்.

7. அதன் கரையில் மண்டபம் நிர்மாணித்து ஸ்தண்டிலத்தில் சிவனையும் வர்த்தனி கும்பத்தில் அம்பிகையையும் சுற்றி எட்டு கும்பங்களை

8. தங்கப் பிரதிமைகளோடும் நூல் சுற்றப்பட்டும் வஸ்திரங்களோடு கூடியதாக உள்ள கும்பங்களில் கன்னிகையோடு ஏழு தீர்த்தங்களை (கங்கை, யமுனை, நர்மதை, கோதாவரி, ஸரஸ்வதி, ஸிந்து, காவேரி) சந்தனம் புஷ்பங்களால் பூஜித்து திசாஹோமம் செய்யவேண்டும்.

9. நதி, குளங்களில் கும்ப ஜலத்தை சேர்க்க வேண்டும். ஐந்து தினங்கள் இதுபோல் செய்ய வேண்டும். பிரதிமைகள் துக்கப்படுவதினால் வேர்வை ஏற்பட்டாலும் அரசனுக்கு மரணம் உண்டாகும்.

10. எல்லா உயிர்களுக்கும் உடனே அழிவு ஏற்படும். ஆகையால் உடனே பரிஹாரம் செய்ய வேண்டும். பிரதிமா சுத்தியை செய்து உத்தமமான சாந்தியை செய்ய வேண்டும்.

11. பிராம்மண போஜனமும் சாந்தி ஹோமமும் தினமும் செய்ய வேண்டும். எவ்வளவு நிதிநிலைமையால் முடியுமோ அந்த நிலையில் அதன் கடைசியில் உத்ஸவம் செய்ய வேண்டும்.

12. ரத்த மழை வர்ஷித்தால் எல்லாப் பிராணிகளுக்கும் அழிவு ஏற்படும். மண்டப பிரகாரங்களில் ரத்தம் விழுந்திருக்கும் இடங்களை அலம்பி விட வேண்டும்.

13. பசும்சாணத்தால்மெழுகி வாஸ்து சாந்தி புண்யாகவாசனம் செய்து தேன் முதலியவைகளால் அபிஷேகம் செய்ய வேண்டும்.

14. பூகம்பம் ஏற்பட்ட காலத்தில் கூறியுள்ளபடி ஏழு நாட்களோ அல்லது பதினான்கு அல்லது இருபத்தியோரு தினங்களிலோ சாந்தி ஹோமம் செய்ய வேண்டும்.

15. தேன், பால், நெய் ஆகிய மழைகளினால் அரசாங்கத்திற்கு கெடுதல் உண்டாகும். மண், கல், மாம்ஸம் முதலியவைகளாலோ மழைபொலியுமானால் துன்பம் உண்டாகும்.

16. அந்தந்த திரவ்யங்களினால் அபிஷேகம் செய்ய வேண்டும். பூகம்பத்திற்கு கூறியபடி நிறைவான அதிகமான நைவேத்யத்துடன் சிவனை பூஜித்து

17. பிறகு சைவர்களுக்கு ஏழுதினங்கள் நன்கு போஜனம் செய்விக்கவேண்டும். உலகத்தில் மண் மழை முதலிய மழை பெய்தால் ஸ்நபனத்துடன் பால் அபிஷேகம் செய்ய வேண்டும்.

18. சிவலிங்கம், மூர்த்திகள், மரங்களிவைகளில் ரத்தம் உண்டானால் சந்தனம் புஷ்பம் முதலியவைகளினால் இரண்டு வஸ்திரங்களினால் கட்ட வேண்டும்.

19. பிறகு சைவர்களுக்கு போஜனம் செய்வித்து திசாஹோமத்தை செய்ய வேண்டும். வேறு அரசரிடமிருந்து பயத்தை அறிந்து அது நீங்குவதன் பொருட்டு

20. லிங்கம், மூர்த்தி மரம் முதலியவைகளின் அங்கங்களை அஸ்திர மந்திரத்தால் சுத்தம் செய்ய வேண்டும், வாஸ்து சாந்தி செய்து ஸ்நபன பூஜை செய்து அபிஷேகம் சிவனுக்கு செய்ய வேண்டும்.

21. சாந்தி கர்மாவிற்கு கூறப்பட்ட தினங்களை அனுசரித்து பிராயச்சித்தம் செய்ய வேண்டும். எதிர்பாராதவகையில் அடித்தளத்திலிருந்து ஸ்தூபி வரையிலாக ஆலயம் விழுந்து விட்டால்

22. அதனால் அரசனுக்கு கெடுதி எனப்படும். மூர்த்தி ஹோமம் செய்ய வேண்டும். நித்யம் சிவனுக்கு இயன்ற வரையில் ஸ்நபனாபிஷேகம் செய்ய வேண்டும்.

23. சாந்தி ஹோம கணக்குப்படி செய்ய வேண்டும். அனுகர்ம முறைப்படி முதல் அஸ்திவார கல் வைக்கும் நிகழ்ச்சி முதலானதாக செய்ய வேண்டும்.

24. முக்கால், பாதி, கால்பாதி அதற்கு குறை ராகவோ கட்டிடம், பிளவு ஏற்பட்டால் ஏழு, ஐந்து, ஆறு, நான்கு நாட்களில் சமப்படுத்துதல் வேண்டும்.

25. மங்களத்தை விரும்பக் கூடியவர்கள் முன் கூறிய பிராயச்சித்தத்தை செய்ய வேண்டும். ஸ்தூபி முதலியவைகள் உடைந்துவிட்டால் முன்பு கூறியபடி ஒரே தினத்தில் செய்ய வேண்டும்.

26. விமானத்தில் நாஸிகம் முதலிய அங்கங்கள் நாசமானால் நன்கு முன்போலவே செய்ய வேண்டும், எதிர்பாராது விழுந்து ஆலயத்தின் பின்னமான திசைகளை அனுசரித்து பலன் ஏற்படும்.

27. முன்கூறியபடி பிராயச்சித்தம் அதுபோலவே செய்ய வேண்டும். ஆலயத்திற்கு உள்ளே இருக்கும் தேவதைகளுக்கு பிளவு குறைவு முதலியவை ஏற்பட்டால்

28. குருவானவர் அப்பொழுது அனுகர்ம விதியில் கூறப்பட்ட கார்யத்தை செய்ய வேண்டும். மண்டபங்கள் விழுந்து விட்டால் ஓர் நாள் சாந்தி ஹோமம் செய்ய வேண்டும்.

29. லிங்கத்தோடு கோயில் வேறு இடத்தை அடைந்தால் அரசனுக்கு கெடுதல் ஏற்படும். ஆகையினால் தேசிகோத்தமர் (ஆசார்யன்)

30. ஈசனை சந்தன புஷ்பங்களால் பூஜித்து உத்தமமான சாந்தியை செய்ய வேண்டும். சைவ பிராம்மணர்களின் சாப்பாட்டுடன்

31. முன்பு இருந்த அளவுக்கு ஸமமாக வேறு லிங்கத்தை பிரதிஷ்டை செய்து பிரகாரத்தோடு கூடிய பாண லிங்கம் முதலியவைகளை ஸ்தாபிக்க வேண்டும்.

32. அல்லது முன்பு இருந்த லிங்கம் இருந்தால் பிரகாரத்தோடு கூடியதாக முன்பு இருந்த இடத்தில் அனுகர்ம விதிப்படி சமமாக நடத்த வேண்டும்.

33. பிரகாரம் மட்டும் குறைவானால் முன்பு இருந்த இடத்திலே செய்ய வேண்டும். வேறு இடத்தை அடைந்த லிங்கத்தை வடக்குப் பகுதியிலோ கிழக்கிலோ வைக்க வேண்டும்.

34. அனுகர்ம முறைப்படி அந்த இடத்திலே கோயிலை கட்ட வேண்டும். ஸ்தல விருக்ஷம் வேறு இடத்தை அடைந்தால் பயிர் நாசம் உண்டாகும்.

35. ஸ்தல மரத்தின் ஜாதியில் உண்டான ஸமித்துக்களினால் மூர்த்தி ஹோமம் செய்ய வேண்டும். சைவர்களின் போஜனத்துடன் ஒன்பது நாட்கள் மூர்த்தி ஹோமம் செய்ய வேண்டும்.

36. ஸ்தல விருக்ஷத்தின் ஸமீபத்தில் இருக்கின்ற ஸ்வயம்பு முதலிய லிங்கத்தில் தினந்தோறும் ஸ்நபன பூஜை அபிஷேகம் அதிகமான நைவேத்யத்துடன் பாவாடை போடுதல் செய்ய வேண்டும்.

37. அந்த ஜாதியில் உண்டான வேறான மரத்தை முன்பு ஸ்தல வ்ருக்ஷம் இருந்த இடத்தில் ஸ்தாபிக்கவும். ஓர் மரத்தில் வேறு புஷ்பம் உண்டானாலும், வேறு பழங்கள் உண்டானாலும்

38. ஸ்தல விருக்ஷத்தில் மூன்று ஆண்டுகளுக்கு பிறகு பூ, பழம் உண்டானால் ஐந்து ஏழு ஒன்பது தினங்கள் சாந்தி பரிஹாரம் செய்ய வேண்டும்.

39. ஸ்தல விருக்ஷத்தின் அடியில், ஆசார்யன் தினந்தோறும் சாந்தி ஹோமம் செய்யவேண்டும். சிவலிங்கம், சகள பிம்பம், பீடம் இவைகளில் உஷ்ணம் ஏற்பட்டால்

40. எல்லா மனிதர்களும் ஜ்வரத்தினால் பீடிக்கப்பட்டு கட்டாயம் நாசம் அடைவார்கள். ஸ்நபன பூஜையில் கூறியுள்ளபடி சந்தன குழம்பு இளநீர் இவைகளை வைத்து

41. பஞ்சாம்ருதத்தோடு கூடியதாக பரமேஸ்வரனை அபிஷேகம் செய்ய வேண்டும். அல்லது பால், தேன், நெய் இவைகளை இரண்டு மரக்கால் அளவு சிவனுக்கு அபிஷேகம் செய்ய வேண்டும்.    

42. ஆயிரம் முதல் நான்கு வரை அளவுள்ள மரக்கால் முதலிய அளவுகளால் சந்தனம் அகில் பச்சைகற்பூரம் குங்குமப்பூ முதலியவைகளுடன் கூடி

43. சந்தனம் நிறைய கலந்து பூசி அதிகமான புஷ்பங்களை கொண்டும் பூஜிக்க வேண்டும், எவ்வளவு காலத்தில் சூடு உஷ்ணம் குறைகின்றதோ அவ்வளவு காலம் திசாஹோமம் செய்ய வேண்டும்.

44. அமைதியை விரும்பும் மனுஷ்யர்கள் சீத கும்பத்தை செய்ய வேண்டும். மனுஷ்யர்கள், மிருகங்கள், பசுக்கள் பக்ஷிகள் பாம்புகள்

45. வேறு இனத்தில் உற்பத்தியானால் உலகத்தில் கலக்கம் உண்டாகும். அநேகம் தலை, கைகள், பாதங்கள், மூக்கு தேகம் உடையதுகளாய்

46. தன்னுடைய வர்ணம் இல்லாததும் புருவம் முதலியவைகள் வேற்றுருவம் உள்ளதாகவும் நன்கு வெளிப்படுத்தக்கூடிய நிறங்கள் இல்லாததாகவுமாக குதிரைகள் உண்டானால்

47. அப்படி உண்டானவைகளை விட்டு விட்டு பிராயச்சித்தம் செய்ய வேண்டும். முறைப்படி சிவனை பூஜித்து திசா ஹோமம் செய்ய வேண்டும்.

48. சைவர்களை நன்கு பூஜித்து முறைப்படி சாந்தி ஹோமம் செய்ய வேண்டும். ஐந்து நாள், ஏழுநாள் இந்த பிரகாரம் சைவர்களுக்கு போஜனம் செய்விக்க வேண்டும்.

49. பசு, யானை, குதிரைகளின் பிராயச்சித்தம் ஏற்படுமானால் அதன் இருப்பிடத்தில் தினந்தோறும் வாஸ்து பலி, சாந்தி ஹோமம் பைரவ ஹோமமும் செய்ய வேண்டும்.

50. மலைகளின் சண்டையோ தேசத்தில் யுத்த பயமோ ஏற்பட்டால் முறைப்படி சிவனை பூஜித்து திசா ஹோமம் செய்ய வேண்டும்.

51. ஏழுதினம், ஒன்பது தினம் பரமேஸ்வரனுக்கு அபிஷேகம் செய்ய வேண்டும். லிங்கத்திலோ பிம்பத்திலோ பீடத்திலோ வியர்வை ஏற்பட்டால் ராஜபயம் ஏற்படும்.

52. அஸ்திர மந்திரத்தினால் ஜபித்த ஜலத்தினால் அலம்பி ஏழுதி தினம் சாந்தி செய்ய வேண்டும். லிங்கத்தில் பிம்பத்தில் விமானத்தில் மண்டபத்தில் கோபுரங்களில்

52.5. பரிவார ஆலயத்தில் பிரகாரத்தில் தேவரின் ஆஸ்தான மண்டபத்தில் மற்றும்

53. சபைகளில் இடிவிழுந்தால் அரசனுக்கு வியாதி ஏற்படும் என கூறப்படுகிறது. ஒன்பது வகையினாலான சாந்தி ஹோமத்தை செய்ய வேண்டும்.

54. அவ்வாறே லிங்கபீடத்திலோ பிம்பத்திலோ இடிவிழுந்தால் திசா ஹோமம் செய்து மஹா ஸ்நபனத்தோடு திசா ஹோமம் செய்ய வேண்டும்.

55. நூற்றி எட்டு கலச ஸ்நபனம், பஞ்சாம்ருதம், பஞ்சகவ்யத்தோடு, தேன், பால், நெய் இவைகளோடு

56. ஆயிரம் முதல் நான்கு வரையில் மரக்கால் அளவு ஈசனை அபிஷேகம் செய்து, பிராம்மண போஜனம் சாந்தி ஹோமம் செய்து அர்ச்சிக்க வேண்டும்.

57. இவ்வாறாக ஏழுதினம் செய்து முடிவில் உத்ஸவம் செய்ய வேண்டும். பிரகாரம் முழுமையும் இடிந்து விட்டால் முன் போலவே பிராயச்சித்தம் செய்ய வேண்டும்.

58. எதிர்பாராத நிலையில் கோயில் விழுமானால் முன்பு எவ்விதம் கூறப்பட்டுள்ளதோ அதன்படியே பிராயச்சித்தம் செய்யவேண்டும், ஆதிசைவர்களே! மண்டபங்களின் பிராயச்சித்தமும் அவ்வாறே செய்ய வேண்டும்.

59. தினந்தோறும் சைவ சாஸ்திரங்களை அறிந்த சைவர்களை நன்கு போஜனம் செய்விக்க வேண்டும், அரச அரண்மனை விழுமானால் ஆலயத்தின் பிராயச்சித்தத்தை செய்ய வேண்டும்.

60. நிழல் தரும் மரங்கள், அரச மரம் மற்ற தைவீக மரங்கள் விழுமேயானால் ஏழு தினங்கள் சாந்தி மஹா சாந்தியும் செய்ய வேண்டும்.

61. அந்த மரத்தின் முன்னால் தினந்தோறும் சாந்தி ஹோமம் செய்து அவ்விடத்திலேயே அதன் சமீபத்திலோ அந்த ஜாதி மரத்தை நட வேண்டும்.

62. வீட்டிலோ, கிணற்றிலோ, குளத்திலோ, சாந்தியை ஒருநாள் செய்யவும், யானையானது மதத்தோடு கூடினாலோ வாகனங்களின் நாசம் ஏற்படும்.

63. அந்த வீட்டில் ஏழுநாள் சாந்தி ஹோமம் செய்ய வேண்டும். பெருங்காற்று உண்டானால் அரசுக்கு கெடுதி உண்டாகும்.

64. ஓர் நாளோ மூன்று நாளோ ஐந்து நாளோ சாந்தி ஹோமம் செய்ய வேண்டும், அக்னியிலிருந்து புகை உண்டானால் யஜமானருக்கு பயம் ஏற்படும்.

65. பஞ்ச கவ்யத்தினால் அங்கு பிரோக்ஷணம் செய்து பூமியை தோண்டி நல்ல மண்ணிலோ ஐந்து வகை மண்ணிணாலோ பூச வேண்டும்.

66. அங்கு புண்யாஹவாசனம் செய்து பிராம்மணர்களுக்கு போஜனம் செய்விக்க வேண்டும். ஒன்பது வகையான சாந்தி ஹோமங்களை செய்ய வேண்டும்.

67. லிங்கம், பிம்பம், ஆசனம் இவைகளில் புகை காணப்பட்டால் முன்பு கூறியபடி பிராயச்சித்தம் செய்யவும். ஆயிரம் மரக்காலோ, அதில் பாதி அளவாலோ பாலபிஷேகம் சிவனுக்கு செய்ய வேண்டும்.

68. அதில் பாதியோ, அதிலும் பாதி அளவோ செய்து அதன் முடிவில் சீத கும்பம் வைக்க வேண்டும், லிங்கம், பிம்பம் பீடம் முதலியவைகள் நிறம் வேறுபாட்டை அடைந்தால்

69. அரசனுக்கு வியாதி என்பதை அறிய வேண்டும். சுத்தமாக அலம்பி, அரிசிமாவு, மண், வில்வம், தர்ப்பங்கள், மஞ்சள்பொடி, நெல்லி முல்லி ஜலத்தினால் அலம்ப வேண்டும்.

70. இதுபோல் உத்தம, மத்யம அதிமமாக சாந்தி செய்ய வேண்டும். சந்தனம், விளாமிச்ச வேர், பச்சகற்பூரம், குங்குமப்பூ அகிலோடு கூடியதாக

71. நிறைந்த சந்தனத்தை சேர்த்து சிரத்தையுடன் சந்தனத்தைப் பூச வேண்டும். சந்தன புஷ்பங்களால் நன்கு பூஜித்து பாபம் இல்லாத் தன்மையை வேண்ட வேண்டும்.

72. சைவர்கள், ஸாமான்யர்களான பிராம்மணர்களுக்கும் நித்யம் போஜனம் செய்விக்க வேண்டும். தானாகவே பேரி சப்தம் ஏற்படுமானால் வைசூரி உண்டாகும்.

73. அஸ்திர மந்திரத்துடன் கூடிய தீர்த்தத்தால் பேரீ முதலியவைகளை பிரோக்ஷித்து சந்தன புஷ்பங்களால் பூஜித்து சாந்தி செய்து தேவதேவனை ஆராதிக்க வேண்டும்.

74. தினமும் (ஒவ்வொரு) சூர்யோதய சமயத்தில் சந்திரனை தர்சித்தல் என்பது எந்த ராஜ்யத்தில் ஏற்படுகின்றனவோ அந்த தேசத்தில் வேறு அரசன் உண்டாவான்.

75. ஒன்பது நாட்கள் முதல் ஒரு ராத்ரி முடிய சாந்தி ஹோமம் செய்ய வேண்டும், இரவில் வானவில் தெரிந்தால் வேறு அரசனால் பயம் உண்டாகும்.

76. சுக்ரன் முதலாஜ க்ரஹங்கள் இடம் விட்டு மாறியும் பகலில் நட்சத்திரத்தை கண்டாலும் க்ருஹ நட்சத்திரங்கள் விழுந்தாலும் உலகத்தில் மழை பெய்யாதன்மை உண்டாகும்.

77. வாஹனங்களுக்கு நாசம் ஏற்படும், அதற்கு சாந்தி ஹோமம் செய்ய வேண்டும்.

78. ஒன்பது நாள் முதல் ஓர் இரவு முடிய சக்தியை அனுசரித்து சாந்தி செய்ய வேண்டும். அக்னி நட்சத்திரம் விழுந்தால் அகோர மந்திரத்தை முன்னூறு ஆவ்ருத்தி ஜபம் செய்ய வேண்டும்.

79. ஆறு ஏழு தினங்களுக்கு மேல் இடி விழுந்து கொண்டு இருக்குமானால் அரசுக்கு கெடுதல் உண்டாகும், அதற்காக திசாஹோமம் செய்ய வேண்டும்.

79. ஏழுதினங்கள் ஐந்து தினங்கள் இடி விழுந்ததின எண்ணிக்கை தினங்களில்

80. ராஜ்யத்தின் கெடுதல் போவதற்கு ஸ்நபனத்தோடு திசாஹோமம் செய்ய வேண்டும். ஏழு தினங்கள் இடி விழுந்தால் பால் முதலியவைகளினால் அபிஷேகம் செய்ய வேண்டும்.

81. சந்திரன் சூர்யனைச் சுற்றி ஐந்து தினங்கள் கோட்டை கட்டினால் அரசன் சத்ருக்களினால் ஜெயிக்கப்படுவான்.

82. உத்தம, மத்யமம் முதலான பட்சத்தில் சாந்தி ஹோமம் செய்ய வேண்டும், நெருப்பு பற்றி திக்குகளில் எரியுமானால் உலகத்தில் துர்பிக்ஷமி உண்டாகும்.

83. ஸ்நபன பூஜை செய்து ஈச்வரனுக்கு பால் அபிஷேகம் நடத்த வேண்டும், அதன் முடிவில் சாந்தி ஹோமம் ஐந்து நாட்கள் செய்ய வேண்டும்.

84. லிங்கம் முதலியவைகளுக்கு அர்ச்சித்த சந்தனம், புஷ்பம், நிறம் மாறுதல் அடைந்தால் எல்லா வர்ணத்தாருக்கும் வைசூரி ஏற்படும்.

85. சிவனை முறைப்படி பூஜித்து ஹோமம் செய்ய வேண்டும், மூன்று தினமோ ஐந்து தினமோ அதிகமான ஹவிஸை நிவேதனம் செய்ய வேண்டும்.

86. எதேச்சையாக போதி மரங்கள் குளிர்ந்த மரங்கள் வேருடன் விழுந்தால் அரசனுக்கு மரணத்தை அறிவிக்கும் வ்யாதி ஏற்படும் என்று அறிய வேண்டும்.

87. உத்தமான சாந்தி ஹோமத்தை செய்து முறைப்படி சிவனைப் பூஜிக்கவும். எந்த இடத்தில் மரம் விழுந்ததோ அந்த இடத்தில் சாந்தி ஹோமம் செய்ய வேண்டும்.

88. அதன் பக்கத்திலோ அதே இடத்திலோ அதே மரத்தை வைத்து வளர்க்க வேண்டும், அதன் கிளைகள் கீழே விழுந்தால் அரசாங்க குழப்பம் ஏற்படும்.

89. முக்கியமான கிளை உடைந்தால் சாந்தி ஹோமம். நடுக்கிளை உடைந்தால் திசாஹோமமும் செய்ய வேண்டும். ஒரு கிளை உடைந்தால் பூவுலகில் கலகம் ஏற்படும்.

90. உத்தமம், அதமமாக சாந்தி செய்ய வேண்டும். சாந்தி ஹோமம் உத்தம, மத்யம, அதமம் என்று மூன்று வகைகளாகும். பதினான்குநாள் ஒன்பது நாள் ஏழுநாள், ஐந்து நாள், மூன்று நாள் இவ்வாறாக செய்யலாம்.

91. பெரியோர்களே, மூன்று பக்ஷமாக சாந்தியை மட்டும் செய்யலாம். இதே போல மற்ற முக்கியமான மரங்களுக்கும் செய்ய வேண்டும்.

92. விளக்குவெட்டு பூச்சி முதலியவைகள் உண்டானால் உலகத்தில் துர்பிக்ஷ்ம் உண்டாக்கும். சைவர்களுக்கு சாப்பாட்டோடு மூன்று, ஏழுநாள் மூர்த்தி ஹோமம் செய்ய வேண்டும்.

93. மனுஷ்யர்கள், மிருகங்கள், பசுக்கள், பாம்புகள் இவைகள் பைத்தியங்களாக ஆனால் மூன்று, ஏழுநாட்கள் திசாஹோமம் செய்ய வேண்டும்.

94. யானை, குதிரைக்கு மரணம் ஏற்பட்டால் திசா ஹோமம் மூன்று நாள் செய்ய வேண்டும். அதிக மழை ஏற்பட்டாலும் துர்பிக்ஷம் பூமியில் உண்டாகும்.

95. ஸத்துமாவு ஆயிரம் மரக்கால் எண்ணிக்கையாகவும் அவ்வாறே மஞ்சள் பொடியும் ஆயிரம் மரக்கால் அளவாகவும் அல்லது ஐநூறு இருநூற்றி ஐம்பது அல்லது நூறு மரக்கால் அல்லது ஐம்பது மரக்கால் அளவாகவும்

96. அதில் பாதியோ ஸ்நபன முறைப்படி ஈச்வரனை அபிஷேகம் செய்து மஞ்சளை அரைத்து பச்சை கற்பூரத்தோடு செய்து

97. ஆறு, நான்கு, மூன்று பங்கு அளவு ஆவுடையாரை சுற்றி அல்லது பிம்பத்திலோ சுற்றி அகில் பூசி பச்சைக் கற்பூரம் திரி இவைகளால் பல தீபங்களால் அலங்கரித்து

98. பிறகு வெண் பொங்கல் நிவேதித்து சாந்தி ஹோமம் செய்ய வேண்டும். மூன்று ஏழுதினங்களிலோ இதுபோல் செய்ய வேண்டும்.

99. ராஜா, ராணி முக்கிய யானை குதிரை குரு புரோஹிதர் இவர்கள் இறந்தால் ராஜாவுக்கு துன்பம் உண்டாகும்.

100. சாந்தி ஹோமம் ஏழுநாள் செய்து ஈச்வரனை பூஜிக்க வேண்டும். மூன்று ஜந்து தினங்கள் யானை, குதிரை இறந்தால் சாந்தி செய்யவேண்டும்.

101. ம்ருத்யுவை ஜயிக்கும் ம்ருத்யுஞ்சய மந்திரத்தை ஆயிரத்தெட்டு முறை ஜபம் செய்து அந்த தீர்த்தத்தால் அரசனுக்கு அபிஷேகம் செய்விக்க வேண்டும்.

102. மீதி தீர்த்தத்தை நீண்ட ஆயுளை விரும்புபவர்க்கு குளிக்கவும், பருகவும் அளிக்கவும். தினந்தோறும் தேவதேவனின் பிரசாதமான ஹோமரøக்ஷயை கொடுக்க வேண்டும்.

103. சைவ சித்தாந்தத்தை கரை கண்ட ஆசார்யர்களால் விபூதி கொண்டு வரப்பட வேண்டும், சிறந்த அரசன் ஏழு தினங்களுக்குள் மேலே கூறப்பட்ட ஆசார்யனை வரிக்க வேண்டும்.

104. குரு, புரோஹிதர் அடுத்து ராணி இவர்களும் யானை குதிரை இவைகளை ராஜாங்கமாக கொண்டு வரப்பட வேண்டும்.

105. கோயிலிலோ, மண்டபம் முதலியவைகளிலோ பிரகாரம் கோபுரம் அல்லது பரிவார ஆலயத்தின் மேலோ ராஜாவின் அரண்மனையிலோ

106. வீடுகளிலோ, வெளி மாடிகளிலோ நாய் அல்லது பூனை முதலியவைகள் அழுதாலோ, ஏறினாலோ

107. இதனால் மனிதர்களுக்கு இடமாற்றம் ஏற்படும். அதன் நிவ்ருத்திக்கு, அதை விரட்டி அடித்து பிறகு புண்யாக வாசனம் செய்ய வேண்டும்.

108. நாய் ஏறினாலோ அழுதாலோ சாந்தி ஹோமத்தையும், பூனை அழுதால் சாந்தி ஹோமத்தையோ அகோர மந்திரத்தை ஜபமோ செய்ய வேண்டும்.

109. நரி ஏறினால் விசேஷமாக சாந்தி செய்யவும், குதிரை லாயத்தில் நெருப்பு உண்டானால் ஏழுநாள் சாந்தி ஹோமம் செய்ய வேண்டும்.

110. லிங்கத்திலோ பீடத்திலோ மற்ற தெய்வ விக்ரஹங்களிலோ மின்மினி பூச்சி ஏறினால் அரசனிடமோ அல்லது பட்டமஹிஷிகளிடமோ மற்ற புருஷர்களின் மேல் மின்மினி பூச்சி ஏறினால்

111. அவர்கள் எல்லோருக்கும் வியாதி தோஷமேற்படும். தேவனிடமோவெனில் அரசனுக்கு தோஷமேற்படும். அந்த மின்மினிபூச்சிகளை அடித்து விட்டு, மேற்கூறிய மூர்த்தங்களை அபிஷேகித்து சாந்தி ஹோமம் செய்ய வேண்டும்.

112. பரமேஸ்வரனுக்கு ஸ்நபனத்தை ஒருநாள் அல்லது மூன்று நாள் செய்ய வேண்டும், அரசன் விஷயத்திலும் மனிதர் விஷயத்திலும் அகோர மந்திரத்தை ஜபிக்க வேண்டும்.

113. லிங்கத்தின் அடியிலோ, பீடத்திலோ பிம்பத்திலோ கருவறையிலோ பரிவார பிம்பத்திலோ பிராணிகள் வந்தாலும், வண்டுக்கள் ஈக்கள்

114. அதிகமாக ஏற்பட்டாலும் பூமிக்கு கலக்கம் ஏற்படும், இந்த குற்றத்தைப் போக்க இடத்தை சுத்தி செய்து அஷ்டபந்தனம் முதலியவைகளால் சரிசெய்து உறுதியானதாக ஆக்க வேண்டும்.

115. புண்யாக வாசனம் செய்து முடிவில் சாந்தி ஹோமம் செய்ய வேண்டும். கதவை திறப்பதும் சாத்துவதும் தானாகவே

116. ஏற்படுமானால் அரசுக்கு தீமை ஏற்படும், அது நிவ்ருத்தியாவதற்கு ஏழு தினங்கள் சாந்தி ஹோமம் செய்ய வேண்டும். ஆகாயத்தில் பலவிதமான கொடிகள் பறப்பதுபோல் தெரிந்தால்

117. ஸூர்யாஸ்தமனத்திலோ அல்லது உதயத்திற்கு முன்போ வெள்ளை, சிவப்பு வர்ண நட்சத்திர பிரகாசம் போல் தெரியுமானாலும்

118. வால் நட்சத்திரம் போன்றவைகள் தெரியுமானாலும் அரசுக்கு பெரிய பயம் ஏற்படும். உத்தம, மத்யம, அதம பட்சத்தில் சாந்தி ஹோமம் செய்ய வேண்டும்.

இவ்வாறு உத்தரகாமிக மஹாதந்திரத்தில் அத்புத சாந்தி விதியாகிற முப்பத்தியொன்றாவது படலமாகும்.

 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar