Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
முதல் பக்கம் » காம்யயோக விதான முறை
படலம் 33: காம்யயோக விதான முறை
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

18 ஜூன்
2012
04:06

33 வது படலத்தில் காம்யயோக விதான முறை கூறப்படுகிறது. அதில் முதலில் மந்திரங்களால் விருப்பப் பூர்த்தியானது ஏற்படுகிறது. மந்திரங்களும் பல விதமாகும். எல்லா மந்திரங்களும் விருப்பப் பயனை கொடுப்பதில் ஸாமர்த்யம் உள்ளவையாகும். அதில் ஒன்றான அகோர மந்திரத்தால் செய்யக்கூடிய ஜபம் மிகுந்த தோஷத்தை போக்க வல்லதாகவும் எனக் கூறி அகோர மந்திரம் மூர்த்தி இவைகளின் உருவ வர்ணனை செய்யப்படுகிறது தன்னுடைய சேனையை காப்பாற்றுவதும் பிறரின் படைக்கு பயத்தை உண்டு பண்ணுவது, எதிரியால் ஏவப்பட்ட கார்யத்தை அழிப்பது, எல்லா வியாதியையும் போக்க வல்லது எல்லா தோஷத்தையும் போக்குவதில் ஸாமர்த்யமானது, அண்டியவர்களை  குழந்தைபோல் பாவிப்பது என்று அகோர மூர்த்தியின் மகிமை வர்ணனை காணப்படுகிறது. அது அசிதாங்கம் முதலிய எட்டு தேவர்களால் சூழப்பட்டவர் எனக் கூறி அந்த எட்டு தேவர்களின் சுய உருவம் நிரூபிக்கப்படுகிறது. அந்த மிருத்யுஞ்ய மந்திரம் விளக்கப்படுகிறது. அதில் மிருத்யுஞ்சய மந்திரமே அமிருதேசன் என காணப்படுகிறது. பிறகு மிருத்யுஞ்சய மந்திரம் மூர்த்தி உருவம் வர்ணிக்கப்படுகிறது. மிருத்யுஞ்சய மூர்த்திக்கு நான்கு கையும், ஆறு கையும் இருப்பதாக கூறப்படுகிறது. உயிர்களை காப்பாற்றும் விஷயத்தில் இந்த மந்திரத்திற்கு ஸமமானது எதுவும் இல்லை என கூறப்படுகிறது. பிறகு மிருத்யுஞ்சய மந்திரம் உபாசிப்பவனுக்கு மிருத்யு ஸம்பவிப்பது இல்லை. அந்த ஆசார்யனை யமன் வலம் வந்து ஸ்தோத்திரம் செய்து பூஜை செய்கிறான். இதில் சந்தேகம் இல்லை என கூறப்படுகிறது. மறுபடியும் அந்த ஆசார்யன் கண், வாக்கு பாதம் இவைகளால் நதீ, ஜனங்கள் நந்தவனம் நகரங்கள் இவைகளை சுத்தி செய்கிறான். பயம் அடைந்த பிராணியையும் தன்னையும் அண்டிய மிருத்யுஞ்சய மந்திரம் காப்பாற்றும் மிருத்யுஞ்சய மந்திரத்தின் மகிமை கூறப்படுகிறது. பிறகு அகோராஸ்திர மூர்த்தி தியாநம் இருவிதமாக நிரூபிக்கப்படுகிறது. முதலில் 8 கை உடையதாகவும் பிறகு 4 கை உடையதாகவும் வர்ணிக்கப்படுகிறது. பின்பு அகோராஸ்திர மந்திரவர்ணனை காணப்படுகிறது.

இந்த அகோராஸ்திர மந்திரமானது, பிறரால் ஏவப்பட்ட சக்கரத்தை அழிப்பதிலும் பெரிய வியாதியை போக்குவதிலும், சாந்திகத்திலும், பவுஷ்டிகத்திலும், வஸ்ய, விஷயத்திலும், பிராயசித்த மந்திரம் ஜபிக் கவும் என கூறப்படுகிறது. இந்த மந்திரத்தில் ஜுரம், விஷத்தால் தீண்டப்பட்டவைகளும், நவக்கிரஹ தோஷங்களும் அழிகின்றன. பிறரால் ஏவப்பட்ட ஆபிசாரம் முதலிய கார்யம், மந்திரம் மருந்து முதலியவைகள் எல்லா எந்திரங்களும் அக்கினியில் வெட்டுபூச்சி விழுந்து அழிவதுபோல் அழிகின்றன என கூறப்படுகிறது. பிறகு பாசுபதாஸ்திரம், சிவாஸ்திரம், க்ஷúகாஸ்திரம், இவைகள் மேல் கூறிய முறைப்படி தியானித்து பூஜிக்கவும் என கூறி பூஜை முறை சுருக்கமாக கூறப்படுகிறது. பிறகு சிவாஸ்திர ஸ்தானத்தில் பிரத்யங்கிராஸ்திர மந்திரமும், க்ஷúரிகாஸ்த்திர ஸ்தானத்தில் சங்கிராமவிஜய, மந்திரமோ, பூஜிக்கவும் என விசேஷ முறை கூறப்படுகிறது. இவ்வாறே யார் ஜபித்து பூஜிக்கிறானோ அவன் சிவ சமானமாக ஆகிறான். இந்த ஸாதகனுக்கு சாதிக்கக்கூடிய கார்யம் மூவுலகிலும் இல்லை என கூறப்படுகிறது. பிறகு தட்சிணாமூர்த்தி ஜபவிதி கூறப்படுகிறது. இது முதலாவதாக இந்த மந்திரத்தினால் (வெற்றி) ஜபத்தை செய்வதில் வாக்சித்தி உண்டாகிறது. மற்ற எல்லா பலன்களும் இந்த மந்திரத்தினால் சித்திக்கப் படுகின்றன என கூறப்படுகிறது. பிறகு தட்சிணாமூர்த்தி மந்திரத்தின் லக்ஷணம் கூறப்படுகிறது. தட்சிணாமூர்த்தி தியானமும் கூறப்படுகிறது. இதில் தட்சிணாமூர்த்தி முனிவர்களுடன் கூடியவராயும் மஹா விருஷபத்துடன் கூடியவராகவும், நான்குகை மூன்று கண் உடையவராக வர்ணிக்கப்படுகிறது. பின்பு ஸங்கிராம விஜய மந்திர இலக்கணம் நிரூபிக்கப்படுகிறது. இந்த மந்திர மகிமையால் ஆசார்யன் மூவுலகையும் வெற்றி அடைந்தவன் ஆகிறான். இந்த மந்திரம் மந்திர ராஜ தன்மையாக விளக்கப்படுகிறது. பிறகு சூர்யமூர்த்தியின் தியானம் வர்ணிக்கப்படுகிறது.

பிறகு சூர்யனின் கர்பாவரண தீப்தாதி, சத்த்யாவரண சந்திராதி கிரஹாவரண, இந்திரன் முதலிய லோபாலாவரண பூஜை சுருக்கமாக கூறப்படுகிறது. காம்ய விஷயத்தில் ஈடுபட்டவனும்கூட எப்பொழுதும் சூர்யனை தியானிக்கவும் என கூறப்படுகிறது. பிறகு பிரத்யங்கிராஸ்திர மந்திரம் கூறப்படுகிறது என கூறி இந்த பிரத்யங்கிராஸ்திர மந்திரம் எல்லா பக்தியையும் கொடுக்க வல்லதும் எல்லா வியாதியையும் கெடுக்க வல்லதும், ஜுரம் அபஸ்மாரம், வைசூரி இவைகளை அழிக்க வல்லதும், காச நோயை போக்க வல்லதும் எதிரிகளால் செய்யப்பட்ட உண்டு பண்ணப்பட்ட வியாதி, படைகளை அழிக்க வல்லதும் நான்கு சேனைகளை உடைய எதிரியை அழிக்க வல்லதும் தன்னுடைய சேனையை காப்பாற்ற வல்லதும் காச நோயை போக்க வல்லதும் எல்லா கர்மாவிலும் சாமர்த்யமானது என்று பிரத்யங்கிராஸ்திர மந்திரத்தின் மகிமை கூறப்படுகிறது. பிரத்யங்கிராஸ்திர மந்திரத்தின் இலக்கணம் கூறப்படுகிறது. பிரத்யங்கிராஸ்திரம் 100 எழுத்தை உடையதாகும் என கூறப்படுகிறது. பிரத்யங்கிராஸ்திர தியானம் கூறப்படுகிறது. அந்த பிரத்யங்கிரா தேவியானவள் 4 கைகள் உடையவளாக வர்ணிக்கப்படுகிறது. ஒரே மனதுடன் ஆசார்யன் பிரத்யங்கிரா தேவியை முயற்சியுடன் தியானித்துஎல்லா எதிரிகளையும் அழிக்கிறான் எல்லா ரோகங்களையும் போக்குகிறார் பிறரால் ஏவப்பட்ட மந்திரங்களை நிவாரணம் செய்கிறான் என்று மந்திரத்தின் தியான பலன் கூறப்படுகிறது. பிறகு வித்யாதர தன்மையை அடைவதற்கும் யட்சினி சித்தியை (உத்ஸாதனம்), பிரிப்பது ராஜயக்ஷமம் முதலிய வியாதியை போக்குவது, வயிற்றுவலி, கண்வலி, விஷம், ஜுரம், ஸர்வ உபத்ரவம், வாதம், உன்மத்தம், ஸ்லேஷ்மம், முதலியவகைகளை போக்குவதற்கும் செய்ய வேண்டிய ஹோமங்கள் நிரூபிக்கப்படுகின்றன. இவ்வாறு 33 வது படல கருத்துச் சுருக்கம் ஆகும்.

1. விரும்பியதை அடையும் முறையை சுருக்கமாக கூறுகிறேன். விருப்பத்தை அடையக்கூடியது மந்திரங்களால் ஏற்படுவதாகும். மந்திரங்களும் பலவாறாக கூறப்பட்டுள்ளன.

2. எல்லா மந்திரங்களும் தகுதியுள்ளவைகளாகும். எல்லா மந்திரங்களும் விருப்பப்பட்ட பலனைக் கொடுக்கக் கூடியதாகும். அவைகளில் அகோர மந்திரம் மிகவும் தோஷத்தை போக்கக் கூடியதாகும். அது கருப்பு நிறமுடையதாகவும்

3. பாம்பினால் கட்டப்பட்ட ஜடாமுடி, கபாலத்தினால் அழகாகவும் அழகான சிவந்த கண்ணை உடையவராகவும், மிகவும் வெண்மையான பற்களை உடையவராகவும்

4. சந்திரனை தரித்தும் அகன்ற முகமும், பாம்பை பூணூலாகவும், பெரிய சரீரமும் பெரிய தித்திப் பல்லும், சலங்கை ஒலி இவைகளோடு கூடியவரும்

5. பெரிய சூலத்தின் நுனியால் குத்தப்பட்டு அழிந்த அசுரனை உடையவரும், கத்தி கேடயம், வில், அம்பு, தலையில்லா பாகம், காலன், சக்தியாயுதம்

6. வரதம், அபயம், கபாலம், பாம்பு, பாசம், ஈட்டி கதை இவைகளையுடைய கைகளை உடையவரும் இரண்டு தித்திப்பல்லை குறுக்காகவும் வாயின் நுனியிலும், பயங்கரமாக வெள்ளையாக தரித்து

7. எப்பொழுதும் தன்னுடைய படையை காப்பவராகவும், பிறர் படைக்கு பயத்தை உண்டு பண்ணவராகவும், எதிரியால் ஏவப்பட்ட கார்யங்களை அழிப்பவராகவும், எல்லா நோய்களையும் போக்குபவராகவும்

8. எல்லா குற்றங்களையும் அழிப்பதில் சிறந்தவராகவும், அடியாரிடம் அன்புள்ளவராகவும் அஸிதாங்கர் முதலான பைரவர்களுடன் சேர்ந்தோ, சேராமலோ இருப்பவர். அகோரமூர்த்தி ஆவர்.

9. அஸிதாங்கர், ருரு, சண்டர் க்ரோதநர், உன்மத்தர், கபாலீ, பீஷணர், ஸம்ஹாரர் என்பதாக எட்டு பைரவர்களாகும்.

10. அவர்கள் நான்கு கை முக்கண், கருப்பு நிறம், மஹாபலராகவும், த்ரீசூலத்தையும், முண்டத்தையும், கூப்பிய கையை உடையவராகவும்

11. அழகிய தித்திப்பல் பயங்கரமானமுகம், தலைவனின் விருப்பப்படி செயலை உடையவராகவும் இருக்கின்றார்கள். ஓம் ஜும்ஸ: என்ற மந்திரமானது ம்ருத்யுஞ்ஜயனுடையதாகும். தேவனும் ம்ருத்யுஞ்ஜயனேயாம்.

12. அந்தம்ருத்யுஞ்ஜயனே அம்ருதேசன் எனப்படுகிறான். முதலில் மறைவான எழுத்தை உடையதாகவோ அல்லாமலோ, ரஸம் முதல் சுக்லம் வரையிலான ஏழு தாதுக்களின் ஏழு எழுத்துடன் கூடியதாகவும்

13. ஹ காரம் என்ற எழுத்தால் சரீரத்தையும், ரஸமென்பதான (எழுத்துக்களான) யம், ரம், லம், வம் (சம், ஷம், ஸம் என்பதான அக்ஷரங்களையும் சேர்த்து முடிவில் ரக்ஷ, ரக்ஷ என்ற பதத்தையும், விருப்பப் பயனின் வாக்யத்தையும் கூற வேண்டும்.

14. முதலில் தேவ தேவச என்ற பதத்தை கூறவும். மூல மந்திரத்தையும் தேவதத்தனின் உயிரை என்ற பதத்தையும் சேர்க்க வேண்டும்.

15. மந்திரத்தின்பீடம் ஜும் என்றும் சரீரம் ஓம் என்றுமாக ஜும்ஸ மந்திரமாகும். மத்தியில் மறைவான மூல மந்திரத்தையோ அல்லது ஒன்பது எழுத்தையோ

16. ஹ காரம் முதலான எழுத்துக்களை கழுத்து, உதடுசம்பந்தப்பட்டதாக யும் ரூம் என்பதாக பிரம்ம மந்திரம், அங்க மந்திரங்களை ஏற்படுத்திக்கொள்ளவும். இந்த மந்திரத்திற்கு ஸமமான வேறு ம்ருத்யுஞ்ஜய மந்திரம் இல்லை என்பதாகும்.

17. அந்த ம்ருத்யுஞ்ஜயர் அம்ருத கலச மத்தியில் இருப்பவராகவும், வெண் தாமரையிலமலர்ந்திருப்பவராகவும், நான்கு கை, முக்கண், ஜடையில் பிறை சந்திரனால் அழகானவராகவும்

18. புலித்தோல் தரித்தவராகவும், பாம்பை மார்பணியாகிய பூணூலாக உடையவரும் த்ரிசூலம், அபயமிவைகளை பக்கவாட்டு கைகளிலும், நடுவிலுள்ள இரண்டு கையில் அம்ருத கலசத்தை தரித்துள்ளார்.

19. ஆறுகை உடையவராக இருப்பின் த்ரிசூலம் அக்ஷமாலை, கபாலம், கெண்டி இவைகளை வலது இடது கைகளிலும், மற்றுமுள்ள இரண்டு கையால் யோக முத்ரையையும் தரித்திருக்கிறார்.

20. உயிர்களைக் காப்பாற்றுவதில் ம்ருத்யுஞ்ஜய மந்திரத்திற்கு ஸமமான வேறு மந்திரமில்லை. முன்னும், பின்னும் இது போன்ற மந்திரம் உதாஹரணமாக இல்லை என்பதும், வேறு மந்திரம் ஏற்பட்டது, ஏற்படாது என்பதும் உண்மை.

21. மூன்றெழுத்தான ம்ருத்யுந்ஜய மந்திரத்தினால் அம்ருதீகரணமாக்கி உணவளித்தலையும் செய்யவும். ஆகையினால் உடனே அம்ருதமாகிறது. மிருதுவாகவும் ம்ருத்யுவை ஜயித்தவனாகவும் ஆகிறான்.

22. அம்ருதேச தேவ மந்திரத்தினால் நூறு முறை ஜபிக்கப்பட்ட ஜலத்தை எடுத்து அருந்தினால் நிச்சயம் அம்ருதமயமாக ஆகிறான்.

23. ப்ரும்ம வ்ருக்ஷ விறகுகளால் பிரகாசிக்கிற அக்னியில், பாலால் நனைக்கப்பட்டதும், துண்டிக்கப்படாததுமான அருஹம்பில்லை ஹோமம் செய்பவனை ம்ருத்யு அடைவதில்லை.

24. எவனுக்கு உபாஸநனாதெய்வமாக ம்ருத்யுஞ்ஜயர் இருக்கிறாரோ அவருக்கு சீக்ரமாகவே ம்ருத்யு அடைவதில்லை.

25. ஒரு மாதத்திலிருந்து வர்ஷம் முடியும் நூறு ஆவர்த்தியாகவும், இரண்டாவது மாஸத்திலிருந்து இருநூறு ஆவர்த்தியாகவும், ஒவ்வொரு மாதமும் ஜபம் செய்வதால்

26. அந்தஸாதகனை காலன் (யமன்) வலம்வந்து நமஸ்கரித்து, பூஜித்து செல்கிறான் என்பதில் ஸந்தேஹ மில்லை என்னால் கூறப்பட்டது உண்மையாகும்.

27. ஜபம் செய்த அந்தஸாதகன், கண்ணால், வாக்கால், பாதத்தினால், கையினால், நதீ, ஜனங்கள், நந்தவனம், பட்டணங்களை சுத்தப்படுத்துகிறான். ஸந்தேஹமில்லை.

28. பயந்த பிராணிகளையும், தன்னையும், தன்னை அடைந்தவர்களையும் ரக்ஷிப்பது பற்றி திரும்பவும் கூறுவானேன். பீஜாக்ஷர தொகுப்பை யுடைய அகோராஸ்த்ரத்தை கூறுகிறேன்.

29. வெட்டப்பட்டமைபோல் கறுப்பானவராகவும், சிவந்த வஸ்திரத்தை தரித்தவராகவும், எட்டு கைகளையுடையவராகவும் மேல் நோக்கிய கேசம், தித்திப் பல்லை உடையவராகவும்

30. அந்த தித்திப்பல்லும், கீழுதட்டை ஒட்டியதாகவும் பிரகாசிக்கிற நெருப்பு போன்ற கண்ணை உடையவராகவும், சலங்கை மாலையால் விளங்குபவராயும், கால் கொலுசையுடையவராகவும்

31. ஏழு ஆயுதங்களையுடையவராயும், எல்லா ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டவராயும், வெண்மையான பூணூலைத் தரித்தவராயும், சிவந்த புஷ்பங்களாலலங்காரமாயும்

32. தரிக்கப்பட்ட தேளை கழுத்து மாலையாக அலங்கரிக்கப்பட்டவராயும், இடுப்பு, வயிறு, கழுத்து, காது, ஹ்ருதயம், கை, தோள்பட்டையாக மிவைகளிலும்

33. பாதங்களிலும், கைகளிலும் ஆக பதினான்கு ஸர்பங்களால் பிரகாசிக்கிறவராயும் பத்மா ஸனத்திலிருப்பவராயும், முக்கண்ணையும், பயங்கரமான உருவத்தையுடையவராயும்

34. மற்றும் சூலத்தின் அடிபாகம், வேதாளம், கத்தி உடுக்கை இவைகளை வலக்கையில் தரிப்பவராயும், இடது கையில் சூலத்தின் நடுபகுதி

35. மணி, கேடயம், கபாலம் இவைகளையும், எதிரியை அழிப்பதில் நோக்கமுடையவரையும், இடது காலை முன்பாக வைத்தவராயும் அகோரமூர்த்தியை தியானித்து பூஜிக்க வேண்டும்.

36. த்யானம் வேறுவிதமாகவும் கூறப்படுகிறது. பிராம்மணர்களே முறைப்படி கேளும் ஆயிரம் சூர்யம் போல் பிரகாசிப்பவரும், சிரேஷ்டமான அகோராஸ்திர தேவர்

37. பிரகாசிக்கிற பற்களை உடையவராகவும் அழகானமுகம், கழுத்தை உடையவராகவும், முக்கண், மின்னல் போன்ற பிரகாசமான நாக்கு ஒளியுள்ள புருவம், மீசை சிரஸ்பாகமிவைகளையும்

38. ஸர்ப பூணூலும், சூலம், கத்தி, சக்தி, உலக்கை இவைகளை தரித்தும், நான்குமுகம், நான்கு கையையுடையவராகவும், பிரகாசிக்கிற சந்திரனை சிரஸில் தரித்திருப்பவரும்

39. பெருத்த சரீரமாயும், ஆடிக்கொண்டும், பாம்பை அணிகலன்களாகவும் இருந்து, அசுரர்கள் கர்வமுடையவர்களாயிருப்பின் அவர்களை அடக்குபவராயும் இருப்பர்.

40. ப்ரஸ்புர ஸ்புர என்ற மந்திரபதம், ஹ்ருதய மந்திரமாக கூறப்பட்டுள்ளது. கோர கோரதர என்பது சிரஸ்மந்திரமாக கூறப்பட்டுள்ளது.

41. பிறகு தநுரூப என்பது சிகாமந்திரமாக கூறப்பட்டுள்ளது. சடப்ரசட என்ற மந்த்ரபதம் கவச மந்திரமாகும்.

42. கஹ கஹ வம மந்தய என்றும் காதய, காதய என்ற மந்திரம் நேத்ரத்ரய மந்திரம் ஆகும்.

43. அகோராஸ்த்ராய, ஹும்பட் என்று நான்கு வேற்றுமையுடையயாக கூறவும் இவ்வாறு ஹ்ருதயம் முதலிய மந்திரங்களை கிரஹிக்கவும். ஓம் என்று முதலிலும் நம: என்பதாகவும் கூற வேண்டும்.

44. பிறரால் ஏவப்பட்ட சக்ரத்தை அழிக்கும் ஸமயத்திலும், பெரிய வியாதியால் பீடிக்கப்பட்ட போதிலும், சாந்திகம், பவுஷ்டிகம், பிறரை வசீகரிக்கும் கார்யங்களிலும் பிராயச்சித்தத்திலும் உபயோகிக்க வேண்டும்.

45. மிகுதியாக கூறுவானேன். பயமேற்பட்ட போது இந்த மந்திரத்தினால் ஜ்வரம், க்ருஹங் களால் ஏற்பட்டதும், விஷக்கடிகளும் அழிகின்றன.

46. மற்றவர்களால் ஆபிசாரம் முதலிய கார்யம் மந்திரம், மருந்து இவைகளை சிறந்ததான மந்திரங்கள் அக்னியில் விட்டில் பூச்சி விழுந்து அழிவதுபோல் அழிகின்றன.

47. அவ்வாறே பாசுபதாஸ்திரம், சிவாஸ்த்ரம், க்ஷúரிகாஸ்த்ரம் இவைகளை முறைப்படி தியானித்து பூஜித்து ஜபிக்க வேண்டும்.

48. அகோர தேவனை பூஜித்து அதன் முன்பாக அஸ்திரத்தை பூஜிக்கவும். தெற்கில் அகோர தேவனும், மத்தியில் ஸதாசிவரையும் பூஜிக்க வேண்டும்.

49. விசேஷமாக ஸதாசிவனின் தென்முக மண்டலத்தில் அகோர தேவரை பூஜிக்கவும். நான்கு திசைகளிலும் நான்கு அஸ்திரங்களான சிவாஸ்த்ரம்

50. அகோராஸ்த்ரம், பாசுபதாஸ்த்ரம், க்ஷúரி காஸ்த்ரம் இவைகளை பூஜித்து அவைகளின் இடை வெளியைச் சுற்றிலும் அஸ்த்ர ஜாதிகளை பூஜிக்க வேண்டும்.

51. சிவாஸ்த்ரத்தை விட்டுவிட்டு அவ்விடத்தில் ப்ரத்யங்கிராஸ்த்ரமந்திரத்தை பூஜிக்கவும். க்ஷúரி காஸ்த்ர மத்தியில் ஸங்க்ராமவிஜய மந்திரத்தையோ பூஜிக்க வேண்டும்.

52. இவ்வாறாக யார் பூஜை செய்கிறானோ அவன் எனக்கு ஸமமானவனாக எண்ணப்படுகிறான். மூவுலகில் அவனால் சாதிக்கமுடியாத விஷயங்கள் ஏதுமில்லை.

53. இவ்வாறு கூறப்பட்டது உண்மையே, அதை முயற்சியுடன் காப்பாற்றப்படவேண்டும். ஸாதகத்தலைவன் விசேஷமாக காக்கவேண்டும்.

54. தக்ஷிணாமூர்த்தி மந்திரத்தின் சொல்முறை விளக்கம் கூறப்படுகிறது. அந்த மந்திரத்தினால் வாக்ஸித்தியும், வெற்றியின் ஏற்பாடும் விளங்குகிறது.

55. அந்ததட்சிணாமூர்த்தி மந்திர திருவருளினால் மற்ற எல்லா பயன்களும் கிடைக்கின்றன. ஓம் நமோ பகவந் என்ற வாக்யத்தை விளிவேற்றுமையாக கூறவும். ஓம் நமோ பகவந்

56. தட்சிணாமூர்த்தி என்பதையும் அவ்வாறே விளிவேற்றுமையுள்ளதாகவும் கூறவும். தட்சிணாமூர்த்தே! மேதாம், ப்ரயச்ச ஸ்வாஹா என்பதாக மூல மந்திரம் கூறப்பட்டுள்ளது.

57. ஹ்ருதயம் முதலானவைகளுக்கு ஸ்வரம் என்பதான உயிர் எழுத்துக்களிலிருந்து கிரஹணம் செய்யக்கூடியதாக கூறப்பட்டு நம: ஸ்வாஹா, வஷட், ஹும், பட் என்பதாகவும் கூறவும்.

58. ஸ்படிகம்போல் வெண்மையானவரும், மலர்ந்த முகத்தை யுடையவராயும் கங்கையையும், சந்திரனையும் சேர்ந்ததான சுருட்டி முடியப்பட்டதான கேசத்தையுடையவராயும்

59. புலித்தோலையணிந்தவரும் நான்கு கைகளையுடையவராயும், வெண்மையான ஸ்படிக மாலையையும், க்ஞான முத்ரையை வலது பாகக்கைகளிலும்

60. இடதுகையில் தாமரையையும், வஹ்நியையும் தரித்தோ அல்லது வரத, அபயமுத்திரை தரித்து புஸ்தகத்தோடு கூடியதாகவோ நினைத்து, முக்கண்ணையுடையவராகவும்

61. மஹாவ்ருஷபத்துடன் கூடியவராயும், ரிஷிக்கூட்டங்களுடன் கூடியவராயும் உள்ள தேவதேவேசனைத் தியானித்து எல்லா கார்யங்களை நிறைவேற்றலாம்.

62. ய என்ற எழுத்தின் முடிவான ர வும், ஹ காரமும், ஆறாவது உயிரெழுத்தான ஊவும், பதினான்காவது உயிரெழுத்தான ஒள வும் ம் என்பதாகவும் கூறலாம். ஹ்ரூம், ஹ்ரௌம்

63. மாறுபட்ட முகத்தையுடையவரான பைரவரை வேறுவிதமாக கூறலாம். மேலே ரேபம் என்பதான ர என்ற எழுத்துடன் கூடியது பைரவ பீஜ எழுத்தாகும். (ப்ரைம்)

64. இந்த மந்திரமானது ஸங்கிராம விஜயம் என்பதாக கூறப்பட்டுள்ளது. இந்த மந்திரத்தின் மஹிமையால் மூவுலகையும் வெற்றிபெற்றவனாகிறான்.

65. மூவுலகிலும் எந்த சிறிய தன்மையான கார்யம் எந்த ஒருவனால் மந்திர ராஜ, மந்திரமின்றி செய்யப்படுகிறதோ, அந்த கார்யம் ஸித்திக்கப்படுவதில்லை.

66. தாமரையிலமர்ந்து, சக்தியுடன் இதயத் தாமரையிலுள்ளவரும், ஒளிதருபவரான பாஸ்கரன் என்றும், கையில் தாமரையையுடையவராயும், நான்கு முகமும், மிகவும் சிவந்த நான்கு சக்திகளால் வ்யாபித்த திசையையுடையவராயும், பாதி உடலுடைய அருணன் மேல் அமர்ந்தவரும், மங்களகரமானவரும், அபயம், வரதம், அக்ஷ்மாலை, கபாலஹஸ்தம் பாசாங்குசம் தரித்தவராயும், க்ரஹக் கூட்டங்களால் நமஸ்கரிக்கப்பட்டவரும், கட்வாங்க ஆயுதமுடையவருமான சூர்யனை நமஸ்கரிக்கவும்.

67. ப்ரும்மமந்திர, அங்கமந்திரங்களை முறைப்படி எடுத்துக்கொள்ளவும். விஸ்தாரம் முதலிய நான்கு சக்திகளை நான்கு முகத்திலும் பூஜிக்க வேண்டும்.

68. ஹ்ருதயம் முதலான மந்திரங்களை ஆக்னேயம் முதலான திசைகளில் போகாங்கமாக பூஜிக்கவும். தெற்கு பாகத்தில் நேத்ரமந்திரத்தை பூஜிப்பது கர்பாவரணமாக கூறப்பட்டுள்ளது.

69. அதற்கு வெளியில் தீப்தா முதலிய சக்திகளும் அதற்கும் வெளியில் கிரஹங்களையும் அதனின்றும் வெளியில் முறையாக லோகபாலகர் களையும் பூஜிக்கவும்.

70. விருப்பத்தையடைவதற்கும் சூர்யனை பூஜிக்கலாம். ஹே ப்ராம்மணர்களே! சுருக்கமாக ப்ரத்யங்கிராஸ்த்ர மந்திர முறையை கூறுகிறேன்.

71. எல்லா பக்தியையும் கொடுக்கவல்லதும், எல்லா நோயையும் போக்க கூடியதும் ஜ்வரம், வலிப்பு போன்ற நோய், வைசூரி இவைகளை அழிக்கக் கூடியதும் காசநோயை போக்க கூடியதும்

72. எதிரியின் கார்யத்தாலேற்பட்ட வ்யாதிக்கூட்டத்தை அழிக்கவல்லதும் நான்குவிதமான படையுடன் கூடிய எதிரியை அழிக்கவல்லதும், உயர்ந்ததும்

73. தன்னுடைய படையை காப்பாற்றுவதும் எல்லா கார்யங்களிலும் தகுதித் தன்மை உள்ளதாகவும் இருக்கிறது.

74. பிறகு ஸிம்மவதனே, மஹாவதனே என்றும் மஹாபைரவி, ஸர்வசத்ரு

75. கர்மவித்வம்சினீ பரமந்திரசேதினீ, ஸர்வ பூததமனீ என்றும்

76. ஸர்வபூதாந்பந்த பந்த என்றும்ஸர்வ விக்னாந் சிந்தி சிந்தி என்றும்

77. சர்வதுஷ்டாம் பக்ஷபக்ஷ என்றும்

78. ஜ்வாலாஜிஹ்வே, கராளதம்ஷ்ட்ரே என்றும்

79. ப்ரத்யங்கிரே ஹ்ரீம் நம: என்று ஸ்வாஹா என்பதாகவும் ப்ரத்யங்கிராஸ்த்ரமந்திரம் கூறப்பட்டுள்ளது.

79. இந்த ப்ரத்யங்கிராஸ்த்திர மந்திரம் நூறு எழுத்தை உடையதாக கூறப்பட்டுள்ளது. முதலில் உள்ள ஏழு எழுத்து ஹ்ருதயம் என்றும் பதினைந்து எழுத்து சிரஸ்ஸிற்காகவும்

80. அதன்பிறகு பத்து எழுத்து சிகைக் காகவும், கவச மந்திரம் ஏழு எழுத்தாகவும் ஆகும். அவ்வாறே ஏழு எழுத்து நேத்ரமந்திரமும் முப்பத்தி நான்கு எழுத்துக்களால் அஸ்திர மந்திரமும் ஆகும்.

81. பதிமூன்று எழுத்தை உடையது காயத்ரி மந்திரமாயும், ஏழு எழுத்து ஸாவித்ரி என்ற மந்திர வடிவுமாகும். நம: ஸ்வாஹா, வஷட், வெளஷட், ஹும் பட் என்பதாக ஹ்ருதயம் முதலான மந்திரங்களை கூற வேண்டும்.

82. த்யானம்: ஸிம்மம் போன்ற முகம், பயங்கரமான தித்திப்பல், நெருப்பை போன்ற பிரகாசிக்கின்ற மேல் நோக்கிய கேசம், கருப்பு மை போன்ற நிறம், உருண்டையான மூன்றை கண்ணையும்

83. வலது கையில் சூலாயுதம் உடுக்கை யையும் தரித்துக்கொணடும், இடது இரண்டு கையால் முண்டபாதி உடல், தளிரையும் தரித்துக்கொணடும்

84. அட்டஹாஸ சிரிப்பு சத்தங்களால் கர்ஜித்துக்கொணடும் சத்தம் செய்துகொணடும், கருப்பு வஸ்திரம் தரித்துக்கொண்டும் நரம்புடன் கூடிய மாம்ஸத்தை வாயில் வைத்து நடனத்தை செய்பவளுமாக

85. உகந்ததாக முத்துக்களாலான அணிகலன்களை எல்லாமணிந்தவளும் மான்தோலை தரித்திருப்பவளாயும், தேவர்களால் பைரவி என்ற பெயரை உடையவளாக பூஜிக்கப்பட்டு

86. ஒருமைப்பாடுடைய மனதால் தேவியை தியானித்து எல்லா எதிரிகளையும் அழிக்கவும், எல்லா நோய்களையும் அழிக்கவும், பிறரால் ஏவப்பட்ட மந்திரங்களை போக்கவும்,

87. படிப்பில் சிறந்தவனாக விளங்க காரகிலையோ, தாமரைக்கேசங்களாலோ சிறந்த சாதகன் ஹோமம் செய்யக்கடவன்

88. கடம்பபூவின் மொட்டுக்களால் ஹோமம் செய்தால் யக்ஷிணீ தேவதைகள் சித்தியடைகிறார்கள். தினை, வாழை பூவினால், நோயால் பீடிக்கப்பட்டவன் ஹோமம் செய்யவும்.

89. அரளி புஷ்பத்தை நெய், தேன் இவைகளுடன், கருங்காலி முதலான ஸமித்துக்களால் ஹோமம் செய்வதால் விரைவில் ஆரோக்யத்தை உண்டுபண்ணக் கூடியதாக ஆகும்.

90. வெண்கடுகு, முத்து, கொள்ளு இவைகளோடும், பால் பாயாஸம் இவைகளால் ஹோமம் செய்தால் அந்த நிமிடமே பொறுமையுள்ளவனாகிறான்.

91. கருவூமத்தம் புஷ்பம், கருங்காலி சமித்துடனும், கருநீலக்கல், நெய் இவைகளால் ஹோமம் செய்வதால் ஸ்தம்பநாசித்தியும், அபிசாரத்திலிருந்து விடுபட

92. செந்தாமரை புஷ்பம், அதே அளவு செஞ்சந்தனம், காராம்பசு நெய், பால் இவைகளால்

93. பத்தாயிரம் ஆவர்த்திஹோமம் சீக்ரம் விடுவிக்கப்படுகிறான். எருமை நெய் வெள்ளெருக்கு, கழுதைப்பால்

94. செந்தூரப்பொடி, சிகப்பு புஷ்பம், கரிக்கட்டை இவைகளால் ஒரு லக்ஷம் ஆவர்த்தி ஹோமம் செய்வதால் அந்த குலத்தை மேன்மைப்படுத்தியவனாகிறான்.

95. குங்குமப்பூ, கோரோசனை, பருத்திக் கொட்டை, குங்குலியம், மூங்கில் சமித்து இவைகளால் ஹோமம் செய்தால் எதிரிகளின் அழிவு ஏற்படுமென் பதில் சந்தேகமில்லை.

96. வேப்பம்பூ, நெல், வேப்பெண்ணை, வெள்ளையருகின் பால், பாதரஸம் இவைகளை ஹோமம் செய்யவும்.

97. அரசனின் காசநோய் முதலிய நோயைப் போக்கடிக்க மேற்கூறியபடியே ஹோமம் செய்யவும், எண்ணை நெய்யுடன் சேர்த்து, அருஹம்பில்லையும் நெய்யுடன் சேர்த்து

98. வெண்பட்டு, ஹவிஸ், நெற்பொறி, த்ரிமது ரத்துடன் ஹோமம் செய்தால் வயிற்றுவலி சம்பந்த நோய்களை போக்க காரணமாகும். சுக்கு, திப்பிலி, மிளகுகளால்

99. அக்னிஸித்திப்பதற்கு அக்னி பீஜ மந்திரங்களால் ஹோமம் செய்யவும். கண் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு, பால், நெய்

100. தேனினாலும் நேத்ர மந்திரத்தினால் ஹோமம் செய்யவேண்டும். விஷக்கடியைப் போக்குவதற்கு மாவிலைகளால் ஹோமம் செய்யவும்.

101. நெய்யினால் பச்சையாக உள்ள மாவிலைகளை ம்ருத்யுஞ்ஜய மந்திரத்தினால் ருத்ர சாந்தி மந்திரத்தினாலும் எல்லா இடையூறுகலை போக்குவதற்கு ஹோமம் செய்யவும்.

102. துணிமணிகளால் காச நோயைப் போக்குவதற்கு, கடுகுகளால் ஜலதோஷத்தைப் போக்குவதற்கும், பித்த வ்யாதியை போக்க குளுர்ச்சியான சந்தனம் முதலிய பொருட்களால் ஹோமம் செய்யவேண்டும்.

103. மேற்கூறிய பொருட்களை ஆயிரம், பத்தாயிரம், லக்ஷம், மூன்றுலக்ஷம் என்ற எண்ணிக்கை முறைப்படி ஹோமம் செய்ய வேண்டும்.

இவ்வாறு உத்தரகாமிக மஹாதந்திரத்தில் விருப்பத்தையடையும் முறையாகிற முப்பத்தி மூன்றாவது படலமாகும்.

 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar