Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
நினைத்ததை நிறைவேற்றும் யோக ... விருப்பத்தை நிறைவேற்றும் விமானம்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
குறை தீர்ப்பான் குருவாயூரப்பன்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 ஜூன்
2021
03:06


கேரளாவிலுள்ள குருவாயூரில் உன்னி கிருஷ்ணன் என்னும் பெயரில் கிருஷ்ணர் அருள்பாலிக்கிறார். தரிசிப்போரின் குறை தீர்க்கும் இவரை குருவாயூரப்பன் என அழைக்கின்றனர். கிருஷ்ணர் தனக்குத் தானே உருவாக்கிய சிலை இங்குள்ளது.  
  துவாரகையில் வாழ்ந்த பக்தரான உத்தவருக்கு கிருஷ்ணர் தன் கையால் வடித்த சிலை ஒன்றை பரிசளித்தார். அவரிடம், “எதிர் காலத்தில் துவாரகை நகரம் கடலில் மூழ்கும். அப்போது இச்சிலை கடலில் மிதக்கும். அதை குருபகவான் தான் விரும்பும் இடத்தில் பிரதிஷ்டை செய்து வழிபடுவார்’ என்றார் கிருஷ்ணர். அதன்படி துவாரகை வெள்ளத்தில் மூழ்கியது. சிலை நீரில் மிதந்தது. அதை வாயுபகவானின் உதவியுடன் குருபகவான் பிரதிஷ்டை செய்தார்.  குரு, வாயுவின் முயற்சியால் அமைந்த இத்தலம் ‘குருவாயூர்’ என பெயர் பெற்றது.  குழந்தை வடிவில் தலையில் மயிற்பீலி அசைந்தாட, நான்கு கைகளிலும் சங்கு, சக்கரம், தாமரை, கதாயுதம் தாங்கி சிங்கார கோலத்தில் குருவாயூரப்பன் காட்சி தருகிறார். ‘உன்னி கிருஷ்ணன்’ என்றும் இவருக்கு பெயருண்டு. ‘சின்ன கண்ணன்’ என்பது பொருள்.
 இங்கு தினமும் அதிகாலை 3:00 மணிக்கு நடை திறக்கப்படும். முதல்நாள் இரவு அணிந்த மாலை, அலங்காரத்துடன் சுவாமிக்கு நிர்மால்ய பூஜை நடத்தப்படும். பின்னர் அபிஷேகம் நடக்கும். தொடர்ந்து 12 கால பூஜைகள் நடத்தப்படும்.
இங்கு நடக்கும் திருவிழாக்களில் விருச்சிக ஏகாதசி சிறப்பானது. கார்த்திகை மாத ஏகாதசிக்கு 18 நாள் முன்னதாக விழா தொடங்கும். அப்போது கோயில் யானை சன்னிதியை திறந்து வைக்கும். விழா காலங்களில் சுவாமியை யானை சுமந்து வரும். இந்தக் கோயிலில் பல யானைகள் உண்டு, சுவாமியை சுமக்கும் பாக்கியம் பெறுவதற்காக யானைகளுக்கு ஓட்டப்பந்தயம் நடத்தப்படும். வெற்றி பெறும் யானைக்கு சுவாமியை சுமக்கும் வாய்ப்பு கிடைக்கும்.  
சித்திரை முதல் நாளில் தரிசிக்க வரும் பக்தர்களுக்கு ‘கை நீட்டம்’ வழங்கப்படும். தலைமை அர்ச்சகரான மேல்சாந்தி ஒரு ரூபாய் வழங்குவார். இதனால் ஆண்டு முழுவதும் பணப்புழக்கம் இருக்கும். குருவாயூரப்பன் அருளால் திருமணம் கைகூடப் பெற்றவர்கள் இத்தலத்திலேயே திருமணம் நடத்துகின்றனர். குழந்தை வரம் பெற்றவர்கள் துலாபாரம் நடத்தி நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். குழந்தைக்கு முதன் முதலில் இத்தலத்தில் சோறுாட்டுவது முக்கிய வேண்டுதலாக உள்ளது.
எப்படி செல்வது: திருச்சூரில் இருந்து 20 கி.மீ.,

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
கலக்கத்தில் இருப்பவர்களுக்கு பலத்தைக் கொடுப்பவர் ராமர். அவரது திருவடியில் சரணடைந்த பக்தர்களைக் ... மேலும்
 
ஆடி என்றொரு கொடிய அரக்கன் முன்னொரு காலத்தில் இருந்தான். பிரம்மாவை வேண்டிப் பல வரங்களைப் பெற்றான். ... மேலும்
 
கவலை, கடன்களில் இருந்து மீள வழி கூறுங்கள் என அறிஞரிடம் ஒருவர் கேட்டார்.அதற்கு அவர் உங்களுக்காக ... மேலும்
 

நீ நீயாக இரு ஏப்ரல் 05,2024

கழுதை ஒன்று வழி தவறி காட்டிற்குள் சென்றது. அங்கு இருந்த மானிடம், ‘ஏன் எல்லா விலங்குகளும் ஓடுகிறது’ எனக் ... மேலும்
 

ராஜா மரியாதை ஏப்ரல் 05,2024

* நீதியின் பாதையில் நடப்பவர்களுக்கு ராஜமரியாதை கிடைக்கும்.* தேவனிடம் கேட்பது கிடைக்கும்.* எண்ணத்தில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar