Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அன்ன வாகனத்தில் ஜெனகை மாரியம்மன் உலா பரமக்குடியில் பூசாரிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல் பரமக்குடியில் பூசாரிகளுக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
இன்று பெரியாழ்வார் அவதார திருநாள்
எழுத்தின் அளவு:
இன்று பெரியாழ்வார் அவதார திருநாள்

பதிவு செய்த நாள்

21 ஜூன்
2021
01:06

இன்று (21ம் தேதி) ஆனி ஸ்வாதி திருநக்ஷத்திரம் பெரியாழ்வார் அவதார திருநாள்.

விஷ்ணுவின் அடியவர்களான பன்னிரண்டு ஆழ்வார்களில் ஒருவர் பெரியாழ்வார். ஆனிமாதம் சுவாதி நட்சத்திரத்தன்று கருடனின் அம்சமாக ஸ்ரீவில்லிபுத்தூரில் அவதரித்தார். இவரது இயற்பெயர் விஷ்ணு சித்தர். ஸ்ரீவில்லிபுத்தூரில் கோயில் கொண்டிருக்கும் வடபத்ரசாயி பெருமாளுக்கு பூமாலை சாற்றுவதைக் கடமையாகக் கொண்டிருந்தார். ஆண்டாளின் வளர்ப்பு தந்தையான இவர், ஸ்ரீரங்கம் ரங்கநாதருக்கு ஆண்டாளை மணம் முடித்துக் கொடுத்ததால் அரங்கனுக்கே மாமனாராகும் பாக்கியம் பெற்றார்.

பெரியாழ்வாரின் இயற்பெயர் விஷ்ணு சித்தர் . ஸ்ரீ வில்லிபுத்தூரில் வடபத்ரசாயிக்கு தினமும் மாலை தொடுத்து சூட்டுவதை தன் முக்கிய பணியாக கொண்டிருந்தார் இவர். அக்காலத்தில் மதுரையில் அரசனான வல்லபதேவ பாண்டியன் நகர சோதனை வரும் போது ஒரு வேதியர் திண்ணையில் படுத்திருப்பதை கண்டு ஒரு நல்ல வார்த்தை சொல்லும்படி கேட்டார். அந்த வேதியரும் மழைக்காலத்துக்காக மற்ற எட்டு மாதங்களிலும், இரவுக்காகப்பகலிலும். கிழப்பருவத்திற்காக வாலிபத்திலும், மறுமைக்காக இம்மையிலும் முயற்சிக்க வேண்டும் என்ற சுலோகத்தை சொன்னார். மன்னனும் தம் அரசவையிலுள்ள செல்வ நம்பி என்ற அந்தணரிடம் இது பற்றி கூறினார். அதற்கு செல்வ நம்பி பரத்வ நிர்ணயம் பண்ணி அதனடியாகப் பேறு பெற வேண்டும் என்று கூறினார்.

ஸ்ரீ வில்லிபுத்தூரில் பெருமாள் விஷ்ணு சித்தர் கனவில் தோன்றி மதுரையில் நடந்த சம்பவத்தை கூறி உனக்குத்தான் பொற்கிழி, சென்று வாரும் என்றார். அதற்கு விஷ்ணு சித்தர், கல்லாதவனான என்னால் முடியுமா ? என்று கேட்க, பெருமாளும் இதற்கு நானே பொறுப்பு என்றார். விஷ்ணு சித்தர் மதுரை சென்று பாண்டியன் அரசவையில் வேதங்கள் பாடி ஸ்ரீமன் நாராயணனே பரன் (முதல்வன்) என்று நிலை நாட்டினார். பொற்கிழி தோரணம் தாழ அதனை எடுத்துக்கொண்டார். எல்லோரும் பாராட்டி ஆழ்வாரை யானை மீது ஏற்றி வீதி வலம் வந்த போது இக்கோலத்தை ரசிக்க பெருமாள், பிராட்டியுடன் கருடன் மீதமர்ந்து ஆகாயத்தில் தோன்றி ஆழ்வாருக்கு காட்சியளித்தார்.

ஆழ்வார் மருண்டார். நல்ல காலத்திலேயே இம் மண்ணுலகில் தீங்கு செய்வர். இக்கலியிலே முகம் காட்டுகிறானே, இதனால் கண்திருஷ்டி பட்டு விடுமோ என்று பொங்கும் பரிவால். யானை மீதுள்ள மணிகளை ஒலித்து கொண்டு பல்லாண்டு பல்லாண்டு என்று மங்களாசாசனம் பண்ணினார். எனவே தான் ஆழ்வார்களிலே பெரியாழ்வார் எனப்பட்டார். பொற்கிழியை கொண்டு ஸ்ரீ வில்லிபுத்தூர் பெருங்கோயிலுக்கு சமர்ப்பித்து மீண்டும் தொண்டு செய்தார். கண்ணன் லீலையை முற்றும் அனுபவித்து அதன் விளைவாக பெரியாழ்வார் திருமொழி என்ற பிரபந்தத்தை வெளியிட்டார். பெரியாழ்வாரின் வம்சத் தோன்றல்கள்  வேதப்பிரான் பட்டர்கள் என்ற திருநாமத்துடன் இன்றும் ஸ்ரீவில்லிபுத்தூரில் வாழ்ந்து வருகிறார்கள். பெருமாளின் 108 திருப்பதிகளில் பெரியாழ்வார் தனியாக சென்று 2 கோயில்களையும், பிற ஆழ்வார்களுடன் சேர்ந்து 17 கோயில்களையும் என மொத்தம் 19 கோயில்களை மங்களாசாசனம் செய்துள்ளார்.

ஆண்டவன் மீது பக்தி வைத்தவர்கள் உண்டு. ஆனால், பாசம் வைத்திருந்தோர் சிலரே. அவர்களில் ஒருவர் தான் பெரியாழ் வார். அவர் ஆனிமாதம் சுவாதி நட்சத்திரத்தில் அவதரித்தார். ஸ்ரீவில்லிபுத்தூரில் வடபத்ரசாயி கோவில் இருக்கிறது. ஆண்டாள் இங்கு தான் வாசம் செய்கிறாள். இந்த ரில் முகுந்த பட்டர், பத்மவல்லி தம்பதியினர் மகனாகப் பிறந்தவர் விஷ்ணு சித்தர். படிப்பில் நாட்டமில்லாத விஷ்ணு சித்தருக்கு, பெருமாளுக்கு சேவை செய்வதே விருப்பமாக இருந்தது. இறைவனுக்கு தொண்டு செய்து வாழ்நாளைக் கழித்து விட வேண்டுமென நினைத்தார். கிருஷ்ண அவதாரத்தில், மலர் மாலைகள் சூட்டுவதில் பெருமாள் ஆர்வம் காட்டியது பற்றி அறிந்தார். அதனால், தங்கள் ஊரிலுள்ள வடபத்ரசாயிக்கு தினமும் புத்தம்புது மலர்களைப் பறித்து, மாலை தொடுத்து, அணிவிக்கும் கைங்கர்யத்தை செய்ய முடிவெடுத்தார். சுயலாபத்துக்காக சொத்தை விற்பவர் உண்டு. ஆனால், விஷ்ணுசித்தர் தன் சொத்தை விற்று, நிலம் வாங்கினார். அதை நந்தவனமாக்கி, அழகிய மலர்ச்செடிகளை நட்டார். நிலத்தைப் பண்படுத்தி, தினமும் தண்ணீர் பாய்ச்சி, குழந்தையை வளர்ப்பது போல் மலர் செடிகளை வளர்த்து வந்தார். அவரது தோட்டத்தில் துளசிச்செடிகளுக்கு மிகவும் முக்கியத்துவம் தரப்பட்டது.

மலர்கள் மலர்ந்தன, துளசி மணத்தது. விஷ்ணுசித்தர் அவற்றைப் பறித்து மாலையாக்கி வடபத்ரசாயிக்கு அணிவித்து கண்களில் நீர் மல்க, பார்த்து ரசித்தார். மனதுக்குள் ஆனந்தம் பொங்கியது. அப்போது, மதுரையில் வல்லபதேவனின் ஆட்சி நடந்தது. அவனுக்கு, வேதத்தின் தத்துவம் என்ன, பரம்பொருள் என்பவர் யார்? என்பது குறித்து சந்தேகம் ஏற்பட்டது. அமைச்சர் செல்வநம்பியின் ஆலோசனையின் பேரில், இது குறித்து விளக்க, அறிஞர்களை அழைக்க முடிவெடுத்து, ஒரு போட்டியை அறிவித்தான். சிறந்த கருத்துக்களைத் தருவோருக்கு பொற்கிழி பரிசளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அவையின் நடுவே, ஒரு கம்பத்தில் பொற்காசுகள் கொண்ட பணமுடிப்பு தொங்க விடப்பட்டது. எல்லா அறிஞர்களும் தங்கள் கருத்தைச் சொல்ல வேண்டும். சரியான கருத்தை யார் சொல்கிறாரோ, அவரை நோக்கி அந்த கம்பம் சாயும். அவர் பணமுடிப்பை எடுத்துக் கொள்ளலாம் என்பது போட்டி. பல அறிஞர்கள் கருத்தைக் கூறினர். ஆனால், கம்பம் சாயவில்லை. அப்போது, திருமால், விஷ்ணு சித்தர் கனவில் தோன்றி, மன்னனின் சந்தேகத்தை தீர்த்து, பரிசைப் பெற்றுக் கொள்ள அருளினார்.

கல்வியறிவற்ற தன்னால் எப்படி அதற்கு விளக்கமளிக்க முடியும் என்று விஷ்ணு சித்தர் கேட்க, அதை நான் பார்த்துக் கொள்கிறேன்... என்றார். இதேபோல், செல்வநம்பியின் கனவிலும் தோன்றி, விஷ்ணு சித்தரை மரியாதையுடன் அரண்மனைக்கு அழைத்து வர கட்டளையிட்டார். விஷ்ணு சித்தரும் மதுரை வந்தார். கல்வியறிவற்ற அவரைக் கண்டு பண்டிதர்கள் ஏளனம் செய்தனர். அவர் அதை பொருட்படுத்தாமல் விளக்கத்தை ஆரம்பித்ததும், அவையே நிசப்தமானது. விஷ்ணு சித்தரின் வாயிலிருந்து மழை போல் அரிய கருத்துக்கள் வெளிப்பட்டன. கம்பம் அவர் முன்னால் வளைந்து நின்றது. மன்னன் மகிழ்ந்து அவரை வாழ்த்த, இது என் திறமையல்ல... பெருமாளின் அருள் என்றார். மன்னன் அதை அவரது தன்னடக்கமாகக் கருதி, பட்டத்து யானையில் ஏற்றி ஊரையே பவனி வரச்செய்தான். அப்போது, திருமால், ஸ்ரீதேவி பூதேவியுடன் கருட வாகனத்தில் எழுந்தருளி காட்சி தந்தார். உடனே அவர், பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு என்ற பாசுரம் பாடி, பெருமாளே... இவ்வளவு அழகாக இருக்கிறாயே... உன் மேல் ஊரார் கண்பட்டால் உனக்கு திருஷ்டி வந்து விடாதா? என்று பாசத்தோடு கேட்டார். இதன் பின் ஊர் திரும்பி, பூமாலையுடன் பாமாலையும் சாத்தி வழிபட்டு வந்தார். பெருமாளையே வாழ்த்தியவர் என்பதால், விஷ்ணுசித்தர் என்ற பெயர் மாறி, பெரியாழ்வார் என்ற பெயர் ஏற்பட்டது. தன்னை கண்ணனின் தாய் யசோதை போல் கற்பனை செய்து, பல பாசுரங்களை பாடியுள்ளார் பெரியாழ்வார். பெரியாழ்வார் திருநட்சத்திர திருநாளில், அவரை வணங்கி, கடவுளை நேசிக்கும் பண்பைப் பெறுவோம்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி திருவிழாவில் இன்று திருக்கல்யாணம் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது.திருவண்ணாமலை ... மேலும்
 
temple news
அவிநாசி; அவிநாசி வட்டம், கருவலூரில் மாரியம்மன் கோவிலில் பங்குனி தேர் விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்தூர்; ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோயில் பூக்குழி திருவிழா கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
சிவகங்கை; சிவகங்கை மாவட்டம் கொல்லங்குடி வெட்டுடையார் காளியம்மன் கோயில் பங்குனி திருவிழாவை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar