Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
முதல் பக்கம் » ஏகபாத திரிமூர்த்தி ஸ்தாபனம்
படலம் 61: ஏகபாத திரிமூர்த்தி ஸ்தாபனம்
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

20 ஜூன்
2012
04:06

61வது படலத்தில் மும்மூர்த்தி ஸ்தாபனம் கூறப்படுகிறது. முதலில் இலக்கண அமைப்பு பூர்வமாக திரிமூர்த்திஸ்தாபனம் கூறுகிறேன் என்பது கட்டளை. பிறகு ரக்தவர்ணம், முக்கண் வரத அபய ஹஸ்தம் மான் மழு இவைகளுடன் ஜடாமகுடத்தையும் அலங்காரமாககொண்டவனும் ஒரு பாதத்தை உடையதும் இடுப்புபிரதேசத்திற்கு மேல் தெற்கு வடக்கு பக்கமாகிய இருஇடங்களிலும் முறையாக பாதிசரீரம் உடைய பிரம்மா விஷ்ணுவின் உருவத்தை உடையவரும் ஆகிய ஏகபாததிரிமூர்த்தி என்று ஏகபாத திரிமூர்த்தி லக்ஷணம் கூறப்படுகிறது. பிறகு இங்கு பிரம்மா விஷ்ணு ஒவ்வொருபாதத்துடன் கூடியதாகவோ அஞ்சலிஹஸ்தத்துடன் கூடியதாகவோ அமைக்கவும் என ஒருவிசேஷமாக நிரூபிக்கப்படுகிறது. பிறகு சிவலிங்கத்தின் இரண்டு பக்கங்களில் உள்அடங்கியதாகவோ அவைகள் இருக்கட்டும் என வேறு விசேஷம் கூறப்படுகிறது. அல்லது அவை இரண்டும் வெவ்வேறாக ஒரே ஆசனத்தை அடைந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. பிறகு மத்தியில் வேறு விதமான லிங்கம், பிரம்மா, விஷ்ணு இவைகள் இருப்பதாகவும் வேறு ஒருவிசேஷம் கூறப்படுகிறது. பிறகு மூன்று மூர்த்திகளும் தனித்தனி ஆலயத்துடன் கூடியதாகவோ அல்லது ஒரே ஆலயத்தில் சேர்ந்து இருப்பதாகவோ இருக்கலாம். கிழக்கு முகமாகவோ மேற்கு முகமாகவோ பரிவாரத்துடன் கூடியதாகவோ தனித்தனிபிராகாரத்துடனோ ஒரே பிரகாரத்துடனோ அமைந்ததாக மும்மூர்த்திகள் இருக்கலாம் என கூறப்படுகிறது. அங்கு சிவலிங்கபிரதிஷ்டை பிரம்மபிரதிஷ்டை விஷ்ணுப் பிரதிஷ்டை அந்தந்த படலத்தில் கூறப்பட்டுள்ளபடி செய்யவேண்டும் ஏகபாத திரிமூர்த்தியின் பிரதிஷ்டை கூறப்படுகிறது என உத்தரவு முன்பு சொல்லப்பட்டபடி நல்லநேரத்தை பரிசிட்சித்து அங்கு ரத்தினந்தியாசம், நயனோன்மீலனம், பிம்பசுத்தி கிராமபிரதட்சிணம் ஜலாதிவாசம் செய்யவும் என்று வரிசைக்கிரமமாக கிரியை கூறப்படுகிறது. பிறகு யாகசாலை முன்பு கூறியபடி அமைத்து குண்டம் அமைக்கும் முறை விளக்கப்படுகிறது.

பின்பு சில்பி விசர்ஜனம் செய்து மண்டபத்தில் பிராமண போஜனம் புண்யாக பிரோக்ஷணம் செய்து அங்குஸ்தண்டிலம் அமைத்து முறைப்படி ஸயனாதிவாசம் செய்யவும். ஜலாதிவாசம் முடித்து ஸ்நபனம் செய்து ரக்ஷõபந்தனம் செய்து சயனாதிவாசம் செய்யவும் என சயனாதிவாசம் செய்யும் முறை சுருக்கமாக கூறப்படுகிறது. இங்கு ரக்ஷõபந்தனம் சிவன் பிரம்மா விஷ்ணு ஆகிய மூவர்களுக்கும் வலதுகையில் தனித்தனியாக செய்ய வேண்டும் கூறப்படுகிறது. கும்பத்தை அதிவாசம் செய்யும் முறை கூறப்படுகிறது. அங்கு ருத்திரன் பிரம்மா விஷ்ணு (ருத்திரன்) இவர்களின் சிரோதேசத்தில் மூன்று கும்பம் வைக்கவும். ருத்திரனின் இடது பக்கம் வர்த்தினியை ஸ்தாபிக்கவும் அவைகளின் ரூபத்தியானத்தை நினைத்து சந்தனம் முதலியவைகளால் பூஜை செய்யவும் தத்வன்நியாசம் தத்வேஸ்வரன் நியாசம் மூர்த்திநியாசம் மூர்த்தீஸ்வரர் நியாசம் இவைகளை முறைப்படி செய்து பூஜிக்கவும். கும்பஸ்தாபன விதி கூறப்படுகிறது. பின்பு குண்டஅக்னி சம்ஸ்காரம் முடித்து ஹோமம் செய்யவும் என்று ஹோமதிரவ்ய நிரூபணபடி ஹோமம் செய்யும் முறை சுருக்கமாக கூறப்படுகிறது. பிறகு இரண்டாம்நாள் ஆசார்யன், கும்பம், ஸ்வாமி, அக்னி இவர்களை பூஜித்து யஜமானனால் வஸ்திரம் ஸ்வர்ணங்கள் இவைகளால் பூஜிக்கப்பட்டவராகவும் தட்சிணைபெற்றுக் கொண்டவருமாக பிம்பத்திற்கு முன்பாக கடங்களை ஸ்தாபித்து மந்திரந்நியாசம் செய்யவும் எனக்கூறி மந்திரன் நியாசமுறை நிரூபிக்கப்படுகிறது. கும்பஜலங்களால் அந்தந்த ஸ்வாமிக்கு கும்பாபிஷேகம் செய்யவும் என கும்பாபிஷேகவிதி கூறப்படுகிறது. பிறகு ஸ்நபனம், உத்ஸவம் அதிகமாக நிவேதனம், இவைகளை செய்யவும். இங்கு கூறப்படாதவற்றை அந்தந்த அத்யாயங்களில் கூறப்பட்டுள்ளபடி செய்யவும் என கூறப்படுகிறது. பிறகு எந்த மனிதனால் மும்மூர்த்திகளுக்கு பிரதிஷ்டை செய்யப்படுகிறதோ அந்த மனிதன் இந்த லோகத்தில் சவுக்கியத்தை அடைந்து முடிவில் உன்னதமான சிவசாயுஜ்ய பதவியை அடைகிறான் என்பது பலஸ்ருதியாக காணப்படுகிறது. இவ்வாறாக 61வது படலகருத்து சுருக்கமாகும்.

1. திரிமூர்த்தியின் (மூன்று மூர்த்தியின்) பிரதிஷ்டையை அதன் அமைப்பு முறைப்படியாக சொல்கிறேன். சிவப்பு வர்ணம் உடையவராயும் மூன்று கண்களையுடையவராயும் அபய வரத ஹஸ்தமுடையவராயும்

2. மான் கோடரியோடு கூடியவராயும் ஜடாமகுடம் தரித்தவராயும் நேராக அமைந்த ஓர் பாதத்தோடு கூடியவராயும்

3. வலது, இடது இரண்டு பக்கங்களிலும் இடுப்பு பாகத்திற்கு மேல் பிரம்ம விஷ்ணுக்களின் பாதி சரீரத்துடன் கூடியதாயும்

4. பிரம்ம விஷ்ணுக்களின் அளவானது பெண் சரீரம் போல் சற்று வளைவானதாக அமைக்க வேண்டும். இரண்டு கைகளும் தொழுத நிலையில் ஒரு காலோடு கூடியவராயும் இருக்கலாம். (கால் இல்லாமலும் அமைக்கலாம்)

5. அல்லது சிவலிங்கத்தின் பக்கங்களில் பாணத்திலேயோ வெளிப்படையாகவோ அல்லது தனித்தனியாக ஒரே ஆஸனத்தில் இருப்பவர் களாகவோ

6. அல்லது நடுவில் லிங்கம் கொண்ட தனித்தனி ஆலயங்களாகவோ வலப்புறம் இடப்புறம் முறையே பிரம்மாவையும், விஷ்ணுவையும் கொண்டவராகவோ அமைப்பது சம்மதமானது.

7. தனித்தனியாகவோ, அல்லது ஒரே ஆலயத்திலோ மும்மூர்த்திகள் இருக்கலாம். பிரம்ம விஷ்ணு, சிவ ஆலயங்கள் ஒன்றுடன் ஒன்று சேர்ந்ததாகவும் இருக்கலாம்.

8. கிழக்கு முகமாகவோ அல்லது மேற்கு முகமாகவோ பரிவாரங்களுடன் சேர்ந்தோ தனித்தனி பிரகாரத்தை உடையவர்களாகவோ ஒரே பிரகாரத்தில் இருப்பவராயும் இருக்கலாம்.

9. நடராஜ மூர்த்தி முதலானவர்களை மத்தியில் ஸ்தாபிக்கப்பட வேண்டும். இவ்வாறு கூறப்பட்ட லக்ஷணமுடையவரின் பிரதிஷ்டா விதி கூறப்படுகிறது.

10. ஹே, முனிபுங்கவர்களே, சிவலிங்க பிரதிஷ்டையையும், பிரம்மா விஷ்ணு பிரதிஷ்டைகளையும் அந்தந்த விதி முறைப்படி செய்ய வேண்டும்.

11. இப்பொழுது ஏகபாதருடைய பிரதிஷ்டா விதி கூறப்படுகிறது. முன்சொல்லியபடி சுபமான காலத்தில் முன் சொல்லியபடி அங்குரார்ப்பணத்தையும்

12. ரத்னன்யாஸம், நயனோன்மீலனம் (பேரசுத்தியும்) பிம்பசுத்தியும் தனித்தனியா செய்யவேண்டும். கிராமப்ரதட்சிணம் ஜலாதிவாசம் மண்டபம் அமைப்பு முறை முதலியவைகளை செய்ய வேண்டும்.

13. குண்டங்களை ஒன்பது ஐந்து ஒன்று என்ற எண்ணிக்கையில் அமைக்க வேண்டும். அவை எண்கோணம் வட்டம், சதுர குண்டங்களாகும்.

14. சில்பியை திருப்தி செய்துவிட்டு அந்தணர்களுக்கு உணவு அளித்து புண்யாஹ ஜலத்தைப் புரோக்ஷித்து ஸ்தண்டிலத்தில் சயனம் செய்து ஸ்நானம் செய்வித்து ரக்ஷõபந்தனத்தை செய்யவேண்டும்.

15. பிரம்ம விஷ்ணு சிவனுக்கு வலது கையில் ரக்ஷõபந்தனத்தை தனித்தனியாகச் செய்ய வேண்டும். சயனாரோஹணம், கும்பஸ்தாபனத்தையும் முறையாகச் செய்ய வேண்டும்.

16. பிரம்ம விஷ்ணு, சிவனின் தலைபாகத்தில் மூன்று கும்பங்களையும் சிவகும்பத்திற்கு இடப்புறம் வர்த்தனீ கலசத்தையும் ஸ்தாபிக்க வேண்டும்.

17. அந்தந்த மூர்த்திகளை அவ்வாறே தியானித்து சந்தனம் முதலியவற்றால் பூஜிக்கவும். தத்வந்யாஸம் மூர்த்தி ந்யாஸத்தையும் அவ்வாறே செய்ய வேண்டும்.

18. ஹோம குண்டங்களில் அக்னிகார்யம் செய்து எள், கடுகு, பயறு, உளுந்து, அவரை துவரை, மூங்கிலரிசி இவைகளாலும்

19. புரசு, அத்தி, அரசு, ஆல் முதலியவற்றை கிழக்கு முதலான குண்டங்களிலும் வன்னி, நாயுருவி, பில்வம் இச்சி முதலியவற்றை தென்கிழக்கு கோண குண்டங்களிலும்

20. பிரதான குண்டத்திலும், எல்லாவற்றிலும் புரசையோ ஹோமம் செய்யலாம். பின் இரண்டாவது நாள் தேவர், கும்பம், அக்னி, இவற்றிற்கு பூஜை முதலான செய்து

21. குருவானவர் ரித்விஜர்களோடு கூடியவராய் வஸ்த்ரம் ஸ்வர்ணாபரணம் இவைகளோடு பத்து நிஷ்கம் எடையுள்ள தட்சிணைகளால் சந்தோஷம் அடைந்தவராய் இருத்தல் வேண்டும்.

22. பிறகு மந்திரந்யாஸத்தைச் செய்து பிம்பத்திற்கு முன்னால் உள்ள கும்பங்களை பூஜித்து, கும்பத்தில் உள்ள சக்தியை தேவரின் ஹ்ருதயத்தில் சேர்க்க வேண்டும்.

23. வர்தனியில் உள்ள மூலத்தை கிரஹித்து அதன் பீடத்தில் சேர்க்க, ப்ரும்ம, விஷ்ணு கும்பங்களின் மூலத்தை அந்தந்த ஹ்ருதயத்தில் சேர்க்க வேண்டும்.

24. மற்ற கும்பங்களில் உள்ள மூலத்தை பீடத்தை சுற்றிலும் சேர்க்க வேண்டும். அந்தந்த கும்ப ஜலத்தை அதற்குரிய இடங்களில் அபிஷேகிக்க வேண்டும்.

25. ஸ்நபனம், உத்ஸவம், செய்து அதிகப்படியாக நைவேத்யங்களை செய்து இங்கு கூறப்படாததை அந்தந்த வழிகளில் கூறியபடி செய்ய வேண்டும்.

26. இம்மாதிரியான த்ரீமூர்த்தி பிரதிஷ்டையானது எவரால் செய்யப்படுகிறதோ அவர் இவ்வுலகில் சுகத்தை அடைந்து கடைசியில் சிவபதத்தை அடைவார்.

இவ்வாறு உத்தரகாமிகாகம மஹாதந்திரத்தில் த்ரீமூர்த்தி ஸ்தாபன விதியாகிற அறுபத்தி ஒன்றாவது படலமாகும்.

 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar