Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
முதல் பக்கம் » விருஷபாரூட பிரதிஷ்டை
படலம் 62: விருஷபாரூட பிரதிஷ்டை
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

20 ஜூன்
2012
04:06

62வது படலத்தில் விருஷபாரூடபிரதிஷ்டை செய்யும் முறை கூறப்படுகிறது. முதலில் இலக்கண முறைப்படி விருஷபாரூட பிரதிஷ்டையை கூறுகிறேன் என்பது கட்டளை. பிறகு நூல் இடும் முறைப்படி விரூஷபா ரூடமூர்த்தியின் லக்ஷணம் கூறப்படுகிறது. அவர் நான்குபுஜம் முக்கண் ஜடாமகுடம் சமமாக வளைந்ததாக சரீரம் உடையவராகவும் ஆவர் அவரின் வேறான கைகளின் வலப்பாகம் இடப்பாகம் முறையாக மானும் மழுவும் ஆகும். முன்பாக உள்ள வலக்கையில் வளைந்த தண்டத்தையும், கடக முத்திரையுடன் கூடிதாகவும் இடதுகையின் முழங்கை பாகம் விருஷப மஸ்தகத்தில் வைத்துள்ளதாகவும் பாவிக்கவும். அந்த இடது ஹஸ்தமானது. அன்னபட்சி என்ற முத்திரை உள்ளதாகவோ அதோமுக பதாக முத்திரை உள்ளதாகவோ இருக்கவேண்டும் என கூறப்படுகிறது. ஸ்வாமியின் வலதுபாகத்தில் தேவியை லக்ஷணத்துடன் கூடியதாக அமைக்க வேண்டும். தேவியுடன், கூடிய தேவராகவோ அல்லது தனிமையான தேவனாகவும் அமைக்கலாம் என கூறப்படுகிறது. தேவனுடைய பின் பாகத்தில் விருஷபத்தை அமைக்கவும். இவ்வாறு கற்சிலை முதலிய திரவ்யங்களால் தேவனை வடிவமைத்து ஸ்தாபனம் செய்யவும் என கூறப்படுகிறது. அந்த ஸ்தாபனம் செய்யும் முறை கூறப்படுகிறது. இங்கு முன்பு செய்யப்பட்ட நல்ல காலத்தில் அங்குரரர் பணம் செய்து ரத்னன் நியாசம் நயனோன் மீலனம், செய்யவும் என கூறப்படுகிறது. இந்த சமயத்தில் விருஷபத்திற்கும் நயனோன் மீலனம் செய்யவும் என அறிவிக்கிறார். பிறகு பிம்பசுத்தி கிராமபிரதட்சிணம், ஜலாதி வாசம் செய்யவும் என்று ஜலாதிவாசம் முடிவு வரையிலான கிரியைகள் கூறப்படுகின்றன. பின்பு முன்பு கூறப்பட்டுள்ளபடி மண்டபம், குண்டம் பூசைகள், கூறப்படுகிறது. பிறகு சில்பியை திருப்தி செய்து வைத்து பிராம்மண போஜனம், புண்யாஹ பிரோக்ஷணம் செய்து மண்டபத்தில் ஸ்தண்டிலம் கல்பித்து சயனம் அமைக்கவும் என கூறப்படுகிறது. ஜலாதி வாசத்தில் இருந்து எடுத்த பிம்பத்திற்கு ஸ்நபனம் செய்து ரக்ஷõபந்தனம் செய்யவும் கூறப்படுகிறது.

விருஷபத்திற்கும் முறைப்படி ரக்ஷõபந்தனம் செய்யவும் என கூறப்படுகிறது. பிறகு பிம்பத்தை சயனாதிவாசம் செய்யவும் என கூறுகிறார். இங்கு விருஷபமானது ஸ்வாமி பிம்பத்திலிருந்து வேறு பட்டதாக இருந்தால் ஸ்வாமியின் பாத தளத்தில் தெற்கு பாகம் தலையாக வைத்து விருஷபத்தை சயனாதிவாசம் செய்யவும் என கூறுகிறார். பிறகு சயனகும்ப அதிவாசம் பற்றி கூறுகிறார். அங்கு சிவனுடைய சிரோ தேசத்தில், சிவகும்பமும், வர்தனிகும்பமும், ஸ்தாபிக்கவும், விருஷப கும்பமானது விருஷப சிரோபாகத்தில் ஸ்தாபிக்கவும் கும்பத்தை சுற்றி வித்யேஸ்வரர்கும்பங்கள் 8 ஸ்தாபிக்கவும். சந்தன, புஷ்பம், இவைகளாலும், நைவேத்யங்களாலும் பூஜிக்கவும், தத்வ தத்வேஸ்வரர் நியாசம், மூர்த்தி மூர்த்தீஸ்வரர் நியாசம் ஸ்வாமிக்கும், விருஷபத்திற்கும் செய்ய வேண்டும் என கூறப்படுகிறது. பிறகு குண்டசம்ஸ்காரம், அக்னி ஸம்ஸ்காரம் முடித்து ஹோமம் செய்யவும் என கூறி ஹோமத்தின் திரவ்யங்களை நிரூபிக்கும் முறையாக ஹோம விதி சுருக்கமாக கூறப்படுகிறது. பிறகு இரண்டாம் நாள். ஆசார்யன், மூர்த்திபர்களுடன், ஸ்வாமி, கும்பம், வஹ்னி, இவர்களை பூஜித்து யஜமானனால் வஸ்திரம், ஸ்வர்ணம் இவைகளால் பூஜிக்கப்பட்டவனும், தட்சிணையை பெற்றுக் கொண்டவருமாக, மந்திரன் நியாசம் செய்யவும் என கூறி மந்திரம் நியாசம் செய்யும் முறை விளக்கப்படுகிறது. இங்கு அம்பாள் தனிமையான பீடத்துடன் இருந்தால் தனிமையாக ஸ்தாபிக்க வேண்டும் என கூறப்படுகிறது. பிறகு கல்யாண உத்ஸவம் செய்யவும், உத்ஸவம் ஸ்நபனம் அதிகமான நைவேத்யம் செய்யவேண்டுமா, இல்லையா என விசேஷமாக கூறப்படுகிறது. இங்கு சொல்லப்படாததை சாமான்யமாக ஸ்தாபன விதியால் கூறப்பட்டுள்ளபடி செய்யவும் என கூறப்படுகிறது. பிறகு அவ்வாறே விருஷபமானது கனமானதாகவோ, கனம் இல்லாததாகவோ செய்யலாம் என கூறப்படுகிறது. முடிவில் யாரால் பக்தியுடன் பிரதிஷ்டை அனுஷ்டிக்கப்படுகிறதோ, அவன் இஷ்டபடி அனுபவித்து முடிவில் சிவபதத்தை அடைகிறான் என்று பலஸ்ருதியாகும். இவ்வாறாக 62வது படலத்தின் கருத்து சுருக்கமாகும்.

1. வ்ருஷா ரூடப்ரதிஷ்டையை அந்த லக்ஷணத்துடன் கூட கூறுகிறேன். நான்கு கை, மூன்று கண்கள், ஜடையை மகுடமாக தரித்தவராய்

2. வலது மேல் கையில் மழுவையும், இடது மேல் கையில் மானை உடையவராய் கீழ் வலக்கை கடக முத்திரையுடன் வளைந்த தண்டத்தை உடையதாயும்

3. ஸ்வாமியின் வலது முழங்கையின் அடிப்பாகம் வ்ருஷபத்தின் தலையில் இருக்க வேண்டும். இடது கீழ்கை ஹம்ஸ முத்திரையாகவோ அல்லது பதாக முத்ரையை அதோமுகமாக

4. இடது கையின் நுனி அளவுடன் தொப்பூழ் ஸூத்ர அளவு சமமாகும். இடது கையின் விரலிலிருந்து தொப்பூழ் ஸூத்ரம் வரை பதினைந்து அங்குலமாகும்.

5. அந்த மணிக்கட்டின் பக்கமானது, இரண்டங்குலம் ஆகும். முழங்கையின் அடியிலிருந்து இருதயத்தின் நடுப் பிரதேசம் வரை இருபத்தைந்து அங்குலம் ஆகும்.

6. கையின் மணிக்கட்டிலிருந்து குஹ்யத்தின் அடிப்பாகம் சமம் ஆகும். மணிக்கட்டிலிருந்து பக்கஅளவு பத்தொன்பது மாத்திரையாகும்.

7. பக்கவாட்டுக்கை மத்தியில் உள்ள கை இவைகளின் இடைவெளி ஏழங்குலம் ஆகும். நின்ற கோலத்தில் ஸமபங்க லக்ஷணம் உடையதாக அமைக்க வேண்டும்.

8. நெற்றி மூக்கு இவைகளிலிருந்து நிற்கிற வலது பாத குதிகால் நடுவரை உள்ள ஸூத்ரம் சிவ ஸூத்ரமாகும்.

9. ஹ்ருதயத்தில் உள்ள மத்ய ஸூத்ரமானது மூன்றங்குலம். நாபிக்கும் குஹ்ய தேசத்திற்கும் உள்ள ஸூத்ர இடைவெளி நான்கு மாத்திரையாகும்.

10. வலது, இடது முழங்கால்களின் இடைவெளி மூன்றங்குலம் ஆகும். வலது காலின் வளைந்த தன்மை, குதிகாலிலிருந்து ஐந்தங்குல இடைவெளியாகும்.

11. மற்ற அளவு இரண்டங்குலத்தால் சந்திரசேகரைப் போல் அமைக்கவும். இம் மூர்த்தியின் வலப் பக்கத்திலேயே தேவியை அழகாக அமைக்க வேண்டும்.

12. தன்னுடைய வலது பாகத்தில் மூர்த்தியை அனுசரித்தோ, தனியாகவோ தேவியுடன் கூடியதாகவோ ஆயுதங்கள் இல்லாமலோ மாறுதலான அங்கங்களை உடையதாகவோ

13. வ்ருஷபாரூடரை அமைக்கவும், இது மோக்ஷத்தை கொடுக்கக் கூடியது. பின் பக்கமுள்ள வ்ருஷபமானது, சுவாமியின் முழங்கால் தொடை உயர அளவாக இருக்க வேண்டும்.

14. குஹ்யத்திலிருந்து நாபியின் முடிவு வரையோ அமைத்து மற்ற உருவ அமைப்பு முன் கூறியபடி செய்யவும். இவ்வாறு பிம்பம் அமைப்பதை கற்சிலை முதலிய திரவியங்களால் செய்து பிரதிஷ்டை செய்ய வேண்டும்.

15. சுப முஹூர்த்தத்தில் அங்குரம், ரத்னந்யாஸம் முதலாக பிரோக்ஷணத்தை செய்ய வேண்டும். ரிஷபத்திற்கும் நயோன்மீலனம் பிம்ப சுத்தியை செய்து கிராம பிரதட்சிணமாக

16. ஜலாதி வாஸம் செய்து, யாக மண்டபத்தை அடைய வேண்டும். ஒன்பது, ஐந்து, ஒன்று என்ற எண்ணிக்கையில் குண்டங்களை அமைக்க வேண்டும்.

17. சதுரமாகவும், வட்டவடிவங்களாகவும் எண்கோணமாகவும் குண்டங்கள் இருக்கலாம். பின் சில்பியை திருப்தி செய்து அனுப்பிவிட்டு அந்தணர்க்கு உணவளித்து

18. புண்யாக பிரோக்ஷணம் செய்து, ஸ்தண்டிலத்தில் சயனம் அமைத்து ஸ்நபநம் செய்து ரக்ஷõபந்தனம் செய்யவும், வ்ருஷபத்திற்கும் முன்கூறியபடி செய்ய வேண்டும்.

19. சயன ஸ்தாபனத்தைச் செய்த பிறகு கும்பங்களை ஸ்தாபிக்க வேண்டும். சுவாமியின் சிரோ பாகத்தில் சுவாமி கும்பத்தையும் வர்தனியையும் ஸ்தாபிக்க வேண்டும்.

20. ரிஷபம் தனிபிம்பமாயிருப்பின் சுவாமி பாதத்தின் கீழ் ரிஷபத்தின் தலை தென்பாகம் இருக்கும்படியாகச் செய்து சயனத்தில் இருக்க வேண்டும்.

21. விருஷ பிம்பத்தின் தலை பாகத்தில் வ்ருஷப கும்பம் வைக்கவும். சுற்றிலும் எட்டு குடங்களில் வித்யேசர்களை பூஜிக்க வேண்டும்.

22. சந்தன, புஷ்பாதிகளையும், தூப, தீபங்களையும் கொடுத்து தத்வமூர்த்தி நியாஸங்களையும் குருவானவர் சுவாமிக்கும் ரிஷபத்திற்கும் செய்ய வேண்டும்.

23. குண்டஸம்ஸ்காரம், அக்னி ஸம்ஸ்காரங்களைச் செய்து சமித்து, நெய், அன்னம், பொறி, எள், கடுகு, உளுந்து முதலியவைகளை ஹோமம் செய்ய வேண்டும்.

24. புரசு, அத்தி, அரசு, ஆல் முதலிய சமித்துக்களை கிழக்கு முதலான குண்டங்களிலும் வன்னி, நாயுருவி, பில்வம், மயிற் கொன்னை முதலிய சமித்துக்களை அக்னி கோணாதி குண்டங்களிலும்

25. பிரதான குண்டத்தில் புரசு, சமித்தையும் அங்கு வ்ருஷபத்தையும் பூஜித்து ஹோமம் செய்ய வேண்டும். பின் இரண்டாவது நாளில் தேவர்கள் கும்பங்கள், அக்னியையும் பூஜிக்க.

26. ரித்விஜர்களுடன் ஆசார்யரும் வஸ்த்ரம், ஸ்வர்ணாபரணங்களுடன் தட்சிணையை அடைந்தவராகச் செய்து பிறகு மந்திர நியாஸத்தையும் செய்ய வேண்டும்.

27. குருவானவர் சுவாமியின் முன்னால் ஸ்தண்டிலத்தில் கும்பங்களை வைத்து பூஜித்து கும்பத்திலிருந்து மூலத்தை சுவாமியின் ஹ்ருதயத்தில் சேர்க்க வேண்டும்.

28. வர்த்தினீ குடத்தையும் தேவியின் பீடத்தின் முன் ஸ்தண்டிலத்தில் வைத்து பீஜ மந்திரங்களை பீடத்தில் சேர்க்கவும். ஈசனின் பீடத்துடன் சமமாக தேவியும் இருந்தால் வர்த்தனீ மந்திரத்தை அம்பிகை ஹ்ருதயத்தில் சேர்க்க வேண்டும்.

29. வ்ருஷபத்தின் கும்பத்திலுள்ள மூலத்தை விருஷபத்தின் ஹ்ருதயத்தில் சேர்க்கவும். மற்றுமுள்ள கும்பங்களின் பீடத்தைச் சுற்றிலும் சேர்க்க வேண்டும்.

30. தனி பீடமான தேவியாகில் பிரதிஷ்டையைத் தனியாகச் செய்ய வேண்டும். பிறகு கல்யாணத்தையும் முறைப்படி ஆசார்யர் செய்ய வேண்டும்.

31. உத்ஸவத்தையும் ஸ்நபனத்தையும், மஹா நைவேத்யங்களையும் வேண்டுமெனில் செய்யலாம். இங்கு கூறப்படாததை சாமான்ய ஸ்தாபன விதிபோல் செய்ய வேண்டும்.

32. இம்மாதிரியான வ்ருஷப வாஹன மூர்த்தியின் பிரதிஷ்டையானது சொல்லப்பட்டது. சிறியதாகவோ பெரியதாகவோ இருந்தாலும் விருஷபம் அவசியம் செய்ய வேண்டும்.

33. இம்மாதிரி பிரதிஷ்டையை அனுஷ்டிப்பவர் பக்தி, பாவனையோடு கூடியவராகில் அனைத்து இஷ்ட போகங்களையும் அனுபவித்து சிவ பதத்தை அடைவர்.

இவ்வாறு உத்தர காமிகாகம மஹாதந்திரத்தில் வ்ருஷபாரூட பிரதிஷ்டை முறையாகிற அறுபத்தி இரண்டாவது படலமாகும்.

 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar