Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
முதல் பக்கம் » சண்டிகேஸ்வர பிரதிஷ்டை
படலம் 65: சண்டிகேஸ்வர பிரதிஷ்டை
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

20 ஜூன்
2012
04:06

65 வது படலத்தில் சண்டிகேஸ்வர பிரதிஷ்டா விதி கூறப்படுகிறது. முதலில் அமைக்கும் முறை முன்னதாக சண்டிகேஸ்வரரின் பிரதிஷ்டைமுறை கூறப்படுகிறது என்று உத்தரவு. பிறகு சண்டிகேஸ்வரர்ஸ்தாபனமானது. ஸ்வத்ந்திரம் பராதீனம் என்று இருவகைப்படும். நகரம் முதலிய இடங்களில் மத்யபாகத்திலோ அல்லது எட்டு திக்கிலோ சண்டிகேஸ்வரர்க்கு ஸ்வதந்திரமாக ஆலயம் செய்ய வேண்டும். சிவாலயத்தில் ஈசான பாகத்திலோ வடக்கு பாகத்திலோ, உள்பிரகாரத்திலோ உள்பிரகாரத்திற்கும், உட்பட்ட பிரகாரத்திலோ இஷ்டப்பட்ட பிரகாரத்திலோ பராங்காலயம் என்ற ஆலயம் சண்டிகேசனுக்கு ஆலயம் அமைக்கவேண்டும் என கூறப்படுகிறது. பிறகு சண்டிகேஸ்வரர் ஆலயம் செய்யும் முறையும் அதற்கு திக் தேவதை நிர்மாணிக்கும் முறையும் கூறப்படுகிறது. அங்கு பிம்பம் பராதீனமாக இருந்தால் தெற்கு நோக்கிய துவாரத்தை உடையதாக அமைக்கவேண்டும். ஸ்வதந்திராலயம் அமைக்கும் முறையில் தெற்கு, கிழக்கு மேற்கு முகமாகவோ அமைக்க வேண்டும். ஸ்வதந்திர ஆலயம் பிரகாரம் மண்டபம் இவைகளுடனும் சுற்றிலும் பரிவார தேவதைகளுடன் உடையதாகவும் அமைக்கவேண்டும் என கூறப்படுகிறது. ருத்திரபக்தர்முதலான எட்டு பெயர்களை குறிப்பிட்டு அவைகளின் லக்ஷணம் கூறி இவைகள் பரிவாரம் என கூறப்படுகிறது. அல்லது இந்திரன் முதலிய துவார பாலகர்களையே அல்லது அதற்காக பீடங்களையோ பிரதிஷ்டை செய்யவேண்டும் என கூறப்படுகிறது. பிறகு சண்டிகேஸ்வரர் ஆலயத்தில் முன்பாக விருஷபம் மஹாபீடம் பலிபீடம் முதலியவை கல்பிக்க வேண்டும். சண்டேச அனுகர், சண்டமான்யர் என்ற இரண்டு துவார பாலகரும் அவருடைய லக்ஷணமும் கூறப்படுகிறது. அல்லது துவாரபாலகர் இல்லாததாகவும் பிரதிஷ்டைசெய்யலாம் என கூறப்படுகிறது. விக்னேஸ்வரர், பைரவர், சூர்யன் இவர்களுடன் கூடியதாகவோ அல்லது ஸ்வாமியின் பரிவார தேவதையோ சண்டிகேஸ்வரர் ஆலயத்தில் விசேஷமாக கூறப்படுகிறது. பிறகு கற்சிலை முதலான திரவ்யங்களால் பிம்பத்தை அமைப்பது முறைப்படி செய்யவேண்டும் என கூறப்படுகிறது.

பிறகு சண்டிகேஸ்வர மூர்த்தி லக்ஷணம் விளக்கப்படுகிறது. பிறகு நான்குகைகளை உடையதாகவோ சண்டிகேஸ்வரர் நிரூபிக்கப்படுகிறார். இருவிதபிரகாரமும் பலவிதமாக கூறப்படுகிறது. பிறகு சண்டிகேஸ்வரர் தேவியுடன் கூடியதாகவோ, கூடாததாகவோ என்றும், தர்மினி என்கிற தேவியின் லக்ஷணம் கூறப்படுகிறது. சண்டிகேஸ்வரரின் மூலமந்திரம் மூர்த்தி மந்திரம் ஆசன மந்திரம் ஆகியவைகளை கூறப்படுகின்றன. பிறகு பிரதிஷ்டாமுறை நிரூபிக்கப்படுகிறது. அங்குரார்பணபூர்வமாக பிரதிஷ்டை செய்யவேண்டும் ரத்னன்நியாசம் முன்பு கூறியபடி செய்யவும். ஸ்வர்ணமயமான பிம்பத்தில் ரத்னன் நியாசம் செய்ய வேண்டும் என கூறப்படுகிறது. நயனோன்மீலன விதியும் மிக சுருக்கமாக கூறப்படுகிறது. பிம்பசுத்தி கிராம பிரதட்சிணம் செய்யவேண்டும் இந்திரன் முதலானவர்களுடன் எட்டு கும்பத்தை ஸ்தாபித்து ஜலாதிவாசம் முதலிய கிரியைகளை செய்யவும் யாகத்திற்காக குண்டம் வேதிகை, இவைகளுடன் கூடிய அமைக்கும் முறை கூறப்படுகிறது. பிறகு மண்டபத்தில் சில்பியை திருப்தி செய்து சிவ பக்தர்களுக்கு போஜனம் செய்விக்கவும். புண்யாக பிரோக்ஷணம் செய்து வாஸ்த்து ஹோமம் செய்யவும் என கூறப்படுகிறது. பிறகு ஜலாதிவாசத்திலிருந்து சண்டிகேஸ்வரர் பிம்பத்தை எடுத்து முன்போல் ஸ்நபன சுத்திசெய்து ரக்ஷõபந்தனம் செய்து மண்டபத்தில் வேதிகையில் அண்டஜம் முதலான சயன திரவ்யங்களை ஏற்படுத்தி அதில் சண்டிகேஸ்வரரை சயனம் செய்விக்கவும். இரண்டுவஸ்திரங்களால் மூடவும் என்று சயனாதிவாச விதி கூறப்படுகிறது. பிறகு கும்பத்தை அதிவாசம் செய்யும் முறை கூறப்படுகிறது. சண்டிகேஸ்வரரின் தலைபாகத்தில் சூத்திரம், கூர்ச்சம், வஸ்திரம் இவைகளுடன் கூடியதானதும் தங்க உளியுடன் தீர்த்தத்தை நிறப்பி மாவிலையுடன் கூடியதாக ஸ்தாபிக்கவும். பிறகு சண்டிகேஸ்வரர் அம்பாளுடன் கூடியதாக இருந்தால் கும்பத்திற்கு வடக்கு பாகத்தில் வர்த்தனிகும்பம் அமைக்கும் முன்பு கூறப்பட்ட ரூபத்யான முறைப்படி கும்பங்களை பூஜித்து சண்டிகேஸ்வரரை பூஜிக்கும் முறை மந்திரத்துடன் சுருக்கமாக கூறப்படுகிறது. சுற்றிலும் எட்டுகடங்களை ஸ்தாபித்து எட்டுலோக பாலகர்களையோ சண்டேசமூர்த்திகளையோ சந்தன புஷ்பங்களினால் பூஜித்து தத்வதத்வேஸ்வரர் மூர்த்தி, மூர்த்தீஸ்வரர் பூஜிக்கும் முறை கூறப்படுகிறது.

இவ்வாறாக கும்பத்தை அதிவாசம் செய்யும் முறை கூறப்படுகிறது. பிறகு ஆசார்யன் மூர்த்திபர்களுடன் கூடி ஹோமம் செய்யவும் என கூறி ஹோம திரவ்ய நிரூபணம் செய்யப்படுகிறது. பிறகு காலையில் ஆசார்யன் சுத்தி செய்து கொண்டு சண்டேசனை கும்பத்திலும் அக்னியிலும் பூஜித்து பிராயசித்தஹோமம் பூர்ணாஹுதி செய்து யஜமானனால் மூர்த்திபனுடன் கூடிய ஆசார்யன் வஸ்திரம் ஸ்வர்ணாபரணம் அங்குளியகம் இவைகளால் பூஜிக்கப்பட்டவராகவும் தட்சிணை பெற்றுக் கொண்டவராகவும் ஆலயத்தில் முன்னமே ஸ்தாபிக்கப்பட்ட நல்லமுகூர்த்தத்தில் சண்டிகேஸ்வரரை ஸ்தாபனம் செய்து ஸ்வாமியின் முன்பாக ஸ்தண்டிலத்தில் வைக்கப்பட்ட கும்பங்களால் மந்திரந் நியாசம் செய்யவும். பிறகு கும்பத்தில் உள்ள தீர்த்தங்களால் முறைப்படி சண்டிகேஸ்வரர்க்கு அபிஷேகம் செய்யவும். பிறகு முடிவில் ஸ்நபனம் செய்து அதிகமாக நைவேத்யம் செய்யவும். பிறகு சலபிம்பமாக இருந்தால் உத்ஸவம் செய்யவும். சண்டிகேஸ்வரர் பிம்பம் அம்பாளுடன் கூடியதாக இருந்தால் அம்பாளை பிரதிஷ்டை செய்யவும். இந்த சண்டிகேஸ்வர பிரதிஷ்டை பாலஸ்தாபனத்துடன் கூடியதாக உள்ளதா இல்லையா என விவரிக்கப்படுகிறது. இவ்வாறு பிரதிஷ்டாவிதி கூறி பிரதிஷ்டையின் பலஸ்சுருதி விசேஷமாக கூறப்படுகிறது. சண்டிகேஸ்வர பிரதிஷ்டாவிதியின் அங்கமான நித்யார்ச்சனாவிதி கூறப்படுகிறது. அங்கு ஆசார்யன் ஸ்நானம் முதலியவைகளை முடித்து அங்கன்யாசகரன்நியாசம் செய்து கொண்டு சாமான்யார்க்யம் செய்து கொண்டு துவாரம், துவார தேவதைகளை பூஜித்து ஆலயம் நுழைந்து பூதசுத்தி அந்தர்யாகம், திரவ்யசுத்தி ஸ்தானசுத்தி மந்திரசுத்தி அனுஷ்டிக்கவும் என கூறப்படுகிறது. ஸ்தான சுத்தி மந்திரசுத்தி முறை விளக்கப்படுகிறது. பிறகு பிம்பசுத்தி முறையும் நிரூபிக்கப்படுகிறது. அங்கு சண்டிகேஸ்வரனின் காயத்திரி மந்திரம் கூறப்படுகிறது. பிறகு ஆசனம் மூர்த்தி கல்பனம் ஆவாஹனம் முதலிய சம்ஸ்கார முறைகள் சுருக்கமாக கூறப்படுகிறது. அபிஷேக முறை நிரூபிக்கப்படுகிறது. வஸ்திர சந்தன, தூப, தீபம் கொடுக்கும் முறை வர்ணிக்கப்படுகிறது.

ஆவரண பூஜாமுறையும் கூறப்படுகின்றன. அங்கு ஹ்ருதயாதி மந்திரங்கள், ருத்திரபக்தர்கள், ஆயுதத்துடன் கூடிய திக்பாலகர்கள் இவர்களை, சண்டிகேஸ்வரரை சுற்றி பூஜிக்க வேண்டும் என கூறப்படுகிறது. பிறகு விதியில் கூறப்பட்டபடி நைவேத்யத்தை தாம்பூல ஸஹிதமாக கொடுக்க வேண்டும் என கூறப்படுகிறது. இங்கு பராதீனமான சண்டிகேஸ்வர விஷயத்தில் விசேஷம் கூறப்படுகிறது. பிறகு ஜபம் முடித்து பரிவாரபலி கொடுக்கவும் விஸ்தாரமாக செய்யும் பக்ஷத்தில் ஹோமம் செய்யவும் என்று ஹோம முறை நிரூபிக்கப்படுகிறது. பிறகு நித்யோத்சவவிதியும் கூறப்படுகிறது. பின்பு சண்டிகேஸ்வரரை ஒவ்வொரு தினமும் ஆதரவுடன் 8 காலத்திலுமோ அல்லது இஷ்டப்பட்டகாலத்திலுமோ பூஜை செய்யவும் என கூறப்படுகிறது. பிறகு பராதீன சண்டிகேஸ்வரர் பூஜையில் விசேஷ முறை கூறப்படுகிறது. முடிவில் இந்த சண்டிகேஸ்வரர் பூஜையானது ஆத்மார்த்தத்திலும் பரார்த்தத்திலும் சாமான்யம் என கூறப்படுகிறது. பிறகு நித்யபூஜையின் பயன்கள் விசேஷமாக காணப்படுகின்றன. பிறகு இஷ்டசித்திக்காக ஸ்நபனத்துடன் கூடிய விசேஷ பூஜை செய்யவும் என கூறி 5,9,25,50,100 ஆகிய எண்ணிக்கை உள்ள ஸ்நபனத்திலும் தேவதைகளை பூஜிக்கும் முறை கூறப்படுகிறது. பின்பு மஹோத்ஸவம், தமனாரோபநம் பவித்ரோத்ஸவம் கிருத்திகா தீபாவளி வசந்தோத்ஸவம் மாசோத்ஸவம் நவநைவேத்ய விதி இவைகளுடன் சண்டிகேஸ்வரர் விஷயத்தில் அனுஷ்டிக்கவும் என அறிவிக்கப்படுகிறது. உத்ஸவத்தில் கொடியில் உளியையோ விருஷபத்தையோ வரையலாம் என அறிவிக்கப்படுகிறது. உத்ஸவ விஷயத்தில் உத்ஸவ பிம்பத்தை அமைக்கும் முறை தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு சிவோத்ஸவத்தில் சண்டநாதற்கு உத்ஸவம் செய்யவும் என கூறி கொடுயேற்றுவது ஹோமம் பலி இவை இன்றி வெறும் பேரயாத்திரை அனுஷ்டிக்கவும் என கூறப்படுகிறது. பிறகு பிரதிஷ்டை உத்ஸவகர்மாக்கள் கூறப்படாத எந்தகர்மா உள்ளதோ அவை எல்லாம் முன்பு கூறியுள்ளபடி செய்யவும். ஆனால் அந்த எல்லா கிரியைகளும் சண்டிகேஸ்வரர்மந்திரத்துடன் கூடியதாக செய்யவேண்டும் என அறிவிக்கப்படுகிறது. இவ்வாறு 65வது படல சுருக்கமாகும்.

1. சண்டேசஸ்தாபனத்தை அவருடைய அமைப்பு முறை முதற் கொண்டு சொல்கிறேன். பிறர்க்கு கீழ்பட்டவர் தன்னிச்சையானவர் என்று இருமுறையாக உள்ளது என ஆகம ஒப்பாகும்.

2. சண்டேஸ்வராலயமானது நகரத்தின் நடுவிலுமோ, எட்டு திக்குகளிலுமோ, வடக்கிலோ, வடக்கிற்கும் வடகிழக்கிற்கும், நடுவிலுமோ, வடக்கிற்கும் கிழக்கிற்கும் நடுவிலோ அமைக்க வேண்டும்.

3. உள் மண்டலம் என்பதான இரண்டாம் பிரகாரத்திலோ அர்த்தஹாரம் என்பதான ஒன்றாம் பிரகாரத்திலோ விருப்பப்பட்ட பிரகாரத்திலோ ஆலயம் அமைக்கவும். பிறகு ஒன்று முதல் முற்பத்தி மூன்று முழம் வரையிலாக பரப்பளவை உடையதாயும்

4. ஆலய லக்ஷணத்தில் கூறப்பட்ட ஆயாமம் என்ற கணக்களவோடு கூடியதாயும், ஒன்று முதல் ஏழு பாகம் வரையிலான பூமி அமைப்புடன் கூடியதாயும்

5. ஆலயத்திற்கான, கோபுரத்திற்கான அளவுகளுடன் கூடிய நான்கு திசையில் சண்டிகேஸ் வரருடைய இஷ்ட தேவருடன் கூடியோ அல்லது வ்ருஷபத்துடன் கூடியதாகவோ

6. முன் சொன்ன விதிப்படியான கர்ப்பக்ருஹம் முதலானவற்றையும் ஆத்யேஷ்டிகையுடன் கூட விமான ஸ்தாபனம், ஸ்தூபிஸ்தாபனத்துடன் கூடியதாக அமைக்க வேண்டும்.

7. முனீச்வரர்களே தெற்கு வாயிலுடன் கூடியது. பிறர்க்கு கீழ்பட்டது, பராங்கம் எனவும் ஸ்வதந்தர ஸ்தாபனத்தில் தெற்கு, கிழக்கு, மேற்கு முகமாகவும்

8. திக்குகளில், தேவர்களின் கும்பங்களை நடுவிலுடையதாக ஸ்தூபியுடன் கூடியதாக முன்பு கூறப்பட்ட ஆலய விமான அமைப்புடன் கூடியதாயும்

9. முன் சொன்ன கர்ப்பக்ருஹம் முதலிய எல்லா அளவையும் இங்கு உபயோகிக்க வேண்டும். பிரகார மண்டபங்களுடன் கூட சுற்றிலும் பரிவாரத்துடன் கூடியதாகவும்

10. ருத்ரபக்தர், ருத்ரர், சண்டர், சண்டபர் மஹாபவர் அவ்வாறே டங்கபாணி, ஈசசேவதர்

11. ருத்ரகோபஜர், ஆகிய இவர்கள் எட்டு மூர்த்தியும், பரிவாரங்கள் ஆவார்கள். இவர்கள் வெண்மை நிறம், பெரிய சரீரம், அஞ்சலி ஹஸ்தம் உடையவராயும்

12. டங்கத்தை உடையவராகவோ இல்லாமலோ வீரம் முதலான ஆஸனத்தில் அமர்ந்தவராய் புலித்தோல் அணிந்தவராகவோ அல்லது சண்டரூபம் உடையவராகவோ இருப்பர்.

13. இந்திராதிகளாகவோ அல்லது பீட வடிவாகவோ கிழக்கில் ரிஷபத்துடன் பலிபீடம் முதலான பீடங்களுடன் கூடியதாக முன் போல் அமைக்க வேண்டும்.

14. தேசிகோத்தமர்களே, திவாரத்தில் இருக்கும் திவாரபாலகர்கள் இரு கைகள், தண்டம் தரிப்பவராய், சண்டாநுகர், சண்டமாந்யர் என்றவாறு அமைத்தும் அமைக்காமலுமிருக்கலாம்.

15. பலி பீடத்தில் பலியை சொல்லிய அளவுபடி கொடுக்க தேவர்கேற்ற பரிவாரங்களுடனோ, கணபதி, ÷க்ஷத்ரபாலர், சூரியன் முதலானவர்களோடு கூடியோ அமைக்கலாம்.

16. கல் முதலிய சிலைகளின் விஷயத்தின் முன் சொன்ன லக்ஷணப்படி கூடிய நடுவில் தசதாலத்துடனோ, தச தாலத்திற்கு குறைந்ததாகவோ

17. பிரதிமாலக்ஷணத்தில் சொல்லிய, ஆயாதி என்ற அளவுடன் கூடியதாக அமைத்த சண்டநாதர், பத்தபத்மாஸனத்தில் அமர்ந்தவராய் காண முடியாத அளவிற்கு அச்சுறுத்துபவராக பயத்தை கொடுப்பவராய்

18. பாம்பை பூணூலாக அணிந்தவராயும், முகத்தால் கக்குகிற தீயையுடைய கருமையான இரு நாகத்தை யுடையவராய் ஜடாமுடியை உடையவராயும், சந்திரனை தலையில் தரித்தவராயும்

19. நான்கு முகம் நான்கு கைகளுடன் அக்ஷமாலை, த்ரி சூலம் தரித்தவராய் இடது புறம் டங்கம், கமண்டலம் தரித்து, சிவந்த சூர்யனுக் கொப்பான 12 கண்களை உடையவராயோ

20. அல்லது சங்கு போன்ற வெண்ணிறத்துடன், நான்கு கைகள், மூன்று கண்கள். உடையவராய் பாதி சந்திரனை தரித்தவராய் புலித்தோல் அணிந்தவராய் வீராஸநத்தில் அமர்ந்தவராய்

21. வில், அதிகமான அம்புகளுடன் சேர்ந்த இரண்டு கைகளையும் வர ஹஸ்தம் அபய ஹஸ்தத்தாலான இரண்டு கையால் அலங்கரிக்கப்பட்டவராயும்

22. அல்லது இரண்டுகைகள், வெண்மை நிற வஸ்த்ரம், மூன்று கண்களுடையவராய் மை போன்ற காந்தியுடன் ஜடா மகுடம் உடையவராகவோ வெண்மையான சிகையை தரித்தவராகவோ

23. நின்று கொண்டோ, ஆஸனத்தில் அமர்ந்தோ, படுத்த இடது கால் தளத்தையும், தொங்கும் வலது காலுடன் கூடியதாகவோ இடதுகை

24. அல்லது வரத ஹஸ்த்தம் அமைப்பாகவோ, வலது கை டங்கத்தை தரித்ததாகவோ, கூப்பிய கைகளுடனோ அல்லது

25. சிவனைப் பார்த்து வருத்தத்துடன் வணங்கிய கையையுடையதாகவோ தலையை உடையதாகவோ உத்குடாஸநம் என்ற அமைப்புடன் அமைதியால், ஜடா முடியையும் மழுவை தரித்ததாகவுள்ளபடியோ

26. இவ்வாறு சண்டநாதருடைய பிரதிஷ்டையில் விருப்பமான ஆஸநத்துடன் கூடியவராகவோ இருப்பார் அல்லது அபயம், டங்கம், பாசம், சூலம் தரித்தவராய் இருப்பார்.

27. நான்கு கைகள் உடையவராய் சுவாமியின் உத்தரவைக் காப்பவராய் இருப்பார் சிம்ஹள தேசத்தில் பிரதிஷ்டையின் விசேஷம் சிறிது இங்கு கூறப்படுகிறது.

28. க்ருதயுத்தில் எட்டு கைகளையுடையவராயும், த்ரேதாயுகத்தில் ஆறு கைகளையுடையவராயும் த்வாபர யுகத்தில் நான்கு கைகள் உடைய வராயும் கலியுகத்தில் இரு கைகளை உடையவராயும் இருப்பார்.

29. மற்ற தேசத்தில் எங்கும், இவ்வாறான பேதம் இல்லை, ஆனால் சண்டநாதர் தேவியுடன் கூடியோ இல்லாமலோ

30. அந்த தேவியானவள் சியாமள நிறம் இருகைகள் உடையவனாய் ஆபரணங்கள் அணிந்தவளாய் நீலோத்பலம் தரித்தவளாய் தர்மனீ என்ற பெயருள்ளவளாய் இருப்பாள்.

31. இவ்வாறு நிர்மாணிக்கப்பட்ட விக்ரஹத்தை ஆசார்யர்களால் பிரதிஷ்டிக்கப்பட வேண்டும். சண்டாஸனத்தை நான்காம் வேற்றுமை முடிவாகவும் நம: என்பதாகவும்

32. ஓம் என்பதை முதலாக சண்டமூர்த்தி என்ற பதத்தையும் நம: என்பதை முடிவிலும் கூற வேண்டும். (ஓம் சண்டேசாய நம:) சதுர்த்தி விபக்தியின் முடிவான இதுவே மூர்த்தி மந்த்ரம் என கூறப்படுகிறது.

33. முன்னால் ஓம் என்பதுடன் த்வனி சண்டேஸ்வராய என்று ஹூம்பட் ஸ்வாஹா என்ற பதமானது மூல மந்தரமாகும்.

34. குருவானவர், ஈசானம் முதலானவர்களை ச காரத்துடன் சேர்த்துக் கூறவேண்டும். ஓம் சண்டேச ஹ்ருதயாய ஹூம் பண்ணம என முடிவாக ஹ்ருதியாதிகளுடன் கூறவேண்டும்.

35. குருவானவர் அந்த சண்டரின் பெயருடன் ஹூம்பட் என்பதை முடிவாக மூர்த்திகளை கூற வேண்டும். அல்லது வேறு முறையாக சண்டரின் மந்த்ரம் கூறப்படுகிறது.

36. ஞான சக்தி பதங்களுடைய மந்திரங்களால் ஹூம்பட் என்பதோடு சேர்ந்ததாய் சண்டாய என்ற பதத்துடன் கூடியவைகளாக சண்ட மந்திரம் கூறப்படுகிறது. ஓம் க்லீம் சண்டாய ஹும் பட்.

37. சண்டநாத மந்த்ரமானது வித்யாங்கங்களுடன் சேர்ந்ததாகவும் கூறப்படுகிறது. பிறகு பிரதிஷ்டையை செய்ய வேண்டும். அங்குரார்ப்பணம் முதலில் உள்ளதாக செய்ய வேண்டும்.

38. முன் சொன்ன உரிய காலத்தில் முன் போல் ரத்ன நியாஸத்தை செய்யவேண்டும், ஸ்வர்ணமயமான மூர்த்திக்கு ரத்னநியாஸம் இங்கு கூறப்படவில்லை.

39. பிம்ப பீடத்தில் தங்க தாமரையை வைத்து கண் திறப்பதை செய்ய வேண்டும். பாத்ரத்திலுள்ள தேன், நெய் இவற்றுடன் தங்கத்தையும் சேர்த்து ஹ்ருதய மந்திரத்தால்

40. மறைந்த திரைகளினால் தங்க நகத்தால் கண் திறப்பதை செய்து பிம்ப சுத்தியை முன் போல் செய்து கிராம பிரதிக்ஷிணத்தை செய்யவேண்டும்.

41. சுற்றிலும் இந்திராதி எட்டு கும்பங்களோடு சேர்ந்த ஜலத்தில் சண்டேசரை அதிவாஸம் செய்ய வேண்டும். அந்த ஆலயத்தில் முன்போ அதன் பக்கங்களிலோ யாக மண்டபத்தை அமைக்க வேண்டும்.

42. ஆசார்யர் தெற்கு மேற்கு, கிழக்குகளில் அர்த்த சந்திரவடிவான குண்டங்களை அமைக்கவும். ஒன்பது, ஐந்து, ஒன்று என்ற எண்ணிக்கையில் வட்டமாகவோ நான்கோண குண்டங்களாகவோ அமைக்க வேண்டும்.

43. முன் சொன்ன நியமங்களுடன் மண்டபத்தை அமைத்து சிற்பியை திருப்தி செய்து அனுப்பி விட்டு இடத்தில் சைவர்களுக்கும் பக்தர்களுக்கும் போஜனத்தை செய்ய வேண்டும்.

44. பின் புண்யாஹப்ரோக்ஷணம் செய்து, வாஸ்து ஹோமத்தையும் செய்யவேண்டும், ஜலத்திலிருந்து சண்டேசரை எடுத்து முன்போல் ஸ்நபனம் செய்ய வேண்டும்.

45. ரக்ஷõபந்தனத்தை செய்து ஆத்ம நியாஸங்களைச் செய்து சயனம் செய்யவேண்டும், மேடையில் மயில் தோகை முதலியவைகளாலோ

46. சுத்தமான ஐந்து பட்டுகளாலோ ஹ்ருதய மந்திரத்தால் சயனம் செய்யவேண்டும். இரு வஸ்திரங்களால் சுற்றி கும்பஸ்தாபனத்தைச் செய்ய வேண்டும்.

47. சண்டேசருடைய சிரோ தேசத்தில் நூல், கூர்ச்சம் பட்டு வஸ்த்ரம், மாந்தளிர் இவற்றுடன் தங்கடங்கமுள்ள நீருடைய கும்பத்தை ஸ்தாபிக்க வேண்டும்.

48. அவ்வாறே வெளியில் சுற்றிலும் எட்டு கும்பங்களை ஸ்தாபிக்க சண்டேசர் தேவியுடன் சேர்ந்தவராகில் வடக்கில் வர்த்தினியை பூஜிக்க வேண்டும்.

49. ஸ்தாபிக்கப்பட்ட கும்பத்தில் ஆஸநம், வித்யா தேகத்துடன் சண்டேசரை முன் சொன்ன தியான முறைப்படி ஆவாஹித்து சந்தனம் முதலியவற்றால் உபசரித்து

50. ஆசார்யன், ஹ்ருதய, சிரஸ், சிகா, கவச, நேத்ர, அஸ்த்ர மந்திரங்களை வெளியில் சுற்றிலும் ஈசானம் முதல் வடக்கு வரை பூஜிக்க வேண்டும்.

51. லோக பாலர்களையோ சண்டிகேஸ்வர அஷ்ட மூர்த்திகளாயோ சந்தனம், புஷ்பங்களால் பூஜித்து, தத்வதத்வேஸ்வர, மூர்த்தி மூர்த்தீஸ்வரர்களை பூஜிக்கவும்.

52. ஆத்ம வித்யா, சிவ தத்வங்களையும் பிரம்மா முதலியவரை அதன் அதிபர்களுடனும் க்ஷ்மா மூர்த்திகள் அதன் ஈசர்களையும் லோக பாலர்களையும் பூஜிக்க

53. முன் சொன்ன மூர்த்திகளையோ அல்லது ருத்ர பக்தர் முதலானவர்களையோ சண்ட ஆஸந மூர்த்தி மூலத்துடன் பிரும்மாங்க ஸஹிதமாய் பூஜிக்க

54. ஆசார்யர், ரித்விக்குகளுடன் ஹோமத்திற்கான குண்டத்தை அடைக. குண்டத்தையும் அக்னியையும் ஸம்ஸ்கரித்து திக்குகளில் தத்புருஷம் முதலான மூலமந்த்ரங்களையும்

55. தென்கிழக்கு முதலான கோண குண்டங்களில் ஹ்ருதயாதி மந்திரங்களையும் ப்ரும்மாங்கங்களுடன் பிரதானத்தில் சண்டேசரையும் பூஜித்து சமித்து, நெய், அன்னம், எள் முதலியவற்றால் ஹோமம் செய்யவேண்டும்.

56. நெல், பொறி, ஸத்துமா, யவைகளுடன் புரசு, அத்தி, ஆல், இச்சி சமித்துக்களை கிழக்கு முதலான திசைகளிலும் பிரதானத்தில் புரசையும்

57. வன்னி, கருங்காலி, மயில் கொந்றை, பில்வ சமித்துக்களை தென் கிழக்கு முதலிய திசை குண்டங்களிலும் தத்வம், மூர்த்தி மூர்த்தீசர்களை முறைப்படி தனியாக ஹோமம் செய்ய வேண்டும்.

58. சாந்தி கும்ப ஜலத்தை பிரோக்ஷித்து அந்தந்த மந்திரங்களின் ஜபகார்யத்தை தர்பையைத் தொடுவதின் மூலம் ஒவ்வொரு பாகத்திலும் செய்யவேண்டும்.

59. பிறகு விடியற்காலையில் ஆசார்யர் ரித்ரிஜர்களுடன் சுத்தராய் சண்டபிம்பத்தை எழுப்பி கும்பத்தையும் அக்னியையும் பூஜிக்க

60. ஆசார்யர், பிராயச்சித்தத்தின் பொருட்டு பூர்ணாஹுதியை செய்து அவர்களை வஸ்திரம், தங்க மோதிரங்களால் பூஜிக்கப்பட்டு தட்சிணையை அடைந்தவராய்

61. தட்சிணையானது ஐந்து நிஷ்கம் என்பது அதமமாகும். அதன் இருமடங்கு மத்யமம் ஆகும். அதன் மும்மடங்கு உத்தமமாகும். மற்றவர்களுக்கு முன்போல் செய்ய வேண்டும்.

62. பிரம்ம சிலைகளின் பிரதிஷ்டை விஷயத்தில் ஆசார்யன் முன் போல் நல்ல முகூர்த்தத்தில் ஆலயத்தில் பிரதிஷ்டை செய்து, மந்திரங்களால் பூஜிக்க

63. ஆசார்யன் சண்டேசருக்கு முன்னால் ஸ்தண்டிலத்தில் உள்ள கும்பங்களிலிருந்து கும்ப ஜலத்தை சண்டேசருக்கு அபிஷேகம் செய்யவேண்டும்.

64. ஸ்நபனம், அதிகமான மஹா நைவேத்யங்களையும் உற்சவர் எனில் உத்ஸவத்தையும் தேவியுடனோவெனில் தேவியின் பிரதிஷ்டையையும் செய்ய வேண்டும்.

65. இந்த சண்டேச்வர பிரதிஷ்டையை பாலஸ்தாபனத்துடனோ, இல்லாமலோ செய்யலாம். இவ்வாறான சண்டேசஸ்தாபனத்தை எந்த மனிதர் செய்கிறாரோ அவர்

66. ஆயுளை விரும்பியவர்கள், பூர்ண ஆயுளையும், தனத்தை விரும்பியவர் ஐஸ்வர்யங்களையும், வித்யையை விரும்பியவர்கள் குறைவிலா வித்யையையும் புத்ரனை விரும்பியவர் புத்திரனையும் அடைவர்.

67. செல்வத்தை வேண்டியவர் செல்வத்தையும் இன்பம் வேண்டுவோர் உயர்ந்த ஸ்தீரீகளையும் அடைவர் சண்டேசரை வணங்கியவருக்கு பிறவித் துன்பம் இல்லை.

68. இவ்வாறான சண்டேச ஸ்தாபனத்தில் பின் அவர் பூஜை கூறப்படுகிறது. முன் போல் ஸ்நபனம் முதலியவற்றைச் செய்து ஸகளீகரணம் செய்து

69. சண்டேசரை ஹ்ருதயத்தால் தியானித்து, சாமான்யர்க்யத்தை செய்து, ஹா என்ற சந்தனாதிகளாலோ விருப்பம் போலோ, த்வார பாலகர், த்வார பூஜை செய்து, த்வார நடுவில் அஸ்த்ரத்தால் பூஜித்து

70. ஆலயத்தினுள், பிரவேசித்து, பூதசுத்தி செய்து ஸகளீகரணம் செய்த தேஹராய் சண்டேசரை ஹ்ருதயத்தில் பூஜித்து

71. அஸ்த்ர பிராகாராதி, திக் பந்தனங்களினால், ஸ்தான சுத்தியை செய்து, ஸம்ஹிதா மந்திரங்களினால் பாத்யம், அர்க்யம், ஆசமனம் கொடுத்து

72. விசேஷார்க்யம் மட்டும் செய்து, அந்த அர்க்யத்தாலோ, த்ரவ்யத்தை ஹ்ருதய மந்திரத்தால் புரோக்ஷித்து ஹ்ருதயத்தில் மந்திர சக்தியின் பொருட்டு மந்திரங்களைக் கூறி சுத்தி செய்யவேண்டும்.

73. முன் போல் பூஜித்து, சண்டேசாநாய வித்ம ஹே எனச் சொல்லி டங்க ஹஸ்தாய தீமஹி என்ற பதத்தையும் பின்

74. தன்னஸ்ச்சண்ட என்ற பதத்தையும் பின் பிரசோதயாத் என்ற பதத்தையும் கூறி ஸாமான்யர்க்யத்தைக் கொடுத்து நிர்மால்யத்தை ஜலத்தில் விட வேண்டும் (சண்டேசாநாய வித்மஹேடங்கஹஸ்தாய தீமஹி தன்ன ஸ்சண்ட: பிரசோதாயத்)

75. சண்டரை அஸ்த்ர மந்திரத்தாலும் சாமான்யர்க்க ஜலத்தாலும் சோதித்து, ஆஸநம், மூர்த்தி, மூலத்தால் பூஜித்து, ஈசானாதி மந்திரங்களாலும் பூஜித்து

76. ஹ்ருதயாதிகளையும் அங்கங்கு பூஜித்து மூலத்தால் சண்டேசரை பிந்துவிலிருந்து ஆவாஹித்து ஸ்தாபித்து ஹ்ருதய மந்திரத்தால் ஸன்னிரோதனம் செய்து

77. ஹ்ருதயாதி மந்திரங்களை நியாஸம் செய்து, அங்கங்களையும் ஒன்றிய பாவனையாக செய்து, பாத்யம், ஆசமனம், அர்க்யம், ஹ்ருதய மந்திரத்தால் கொடுத்து

78. தைலாபிஷேகம் முதலியவைகளாலும் பஞ்ச கவ்யம், பஞ்சாம்ருதங்களாலும் அபிஷேகம் செய்து வஸ்த்ரம், சந்தனம், புஷ்பங்களால் சண்டேசரை சக்திக்கேற்ப அலங்கரித்து

79. அர்ச்சநாங்க முறைப்படி தூப, தீபங்களை ஹ்ருதய மந்திரத்தால் கொடுக்க ஹ்ருதயாதிகளையும், ருத்ரபக்தர்களையும், திக் பாலர்களுடன் அஸ்த்ரங்களையும்

80. சண்டநாதரைச் சுற்றியுள்ளதாக, ஆவரணமாக பூஜித்து அர்க்யம் முதலான உபசாரங்களையும் கொடுத்து நைவேத்யமும் தாம்பூலமும் கொடுத்து

81. பராங்கமாக இருப்பின் சிவ நிவேதனத்தையும் நிவேதிக்க. ஜபம் செய்து ஸமர்பிக்க. பரிவாரங்களுக்கு பலியையும் கொடுக்க.

82. விமர்சையாக செய்யுமிடத்தில் புரசு, நெய், அன்னங்களால், ஹோமம் செய்து மூலத்தின் தசாம்சத்தில் அங்க மந்திரங்களினால் ஹோமம் செய்து

83. நித்யோத்ஸவத்தில் சண்டேசருக்கு தனி உத்ஸவம் செய்ய வேண்டும். சண்டேச அஸ்திரத்தால் புஷ்பம், அன்னம், அக்ஷதை லிங்கங்களைப் பூஜிக்க

84. காலை, மதியம், இரவுகளிலோ, சண்டே சரின்றியோ, பாதுகா ஆராதனத்துடன் ஆலயத்தை நோக்கி நுழைய வேண்டும்.

85. ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, ஏழு, எட்டு காலங்களிலும் விருப்பமான காலங்களிலும் சண்டேசரை ஒவ்வொரு நாளும் முறையுடன் பூஜிக்க வேண்டும்.

86. சண்டநாதரின் பராங்க பூஜை முறையின் விசேஷம் இங்கு கூறப்படுகிறது. முதலில் நிர்மால்ய பூஜையையும் பீடம் முதலானவைகளில் ஹ்ருதய மந்திரங்களினால்

87. சண்டேசருக்கு என்று எது தீர்மானித்ததோ, சிவனுக்கு நிவேதிக்கப்பட்டதோ அந்த நைவேத்யம் முதலியவைகளை பூஜையின் முடிவில் சண்டேசருக்கு நிவேதிக்க வேண்டும்.

88. மூலாலயம் சென்று, சுத்த ஜலம், சந்தனம் புஷ்ப மாலைகளால் பூஜித்து அந்த பூஜிக்கப்பட்ட நிர்மால்யத்தை சண்டேசருக்கு நிவேதிக்க வேண்டும்.

89. ஆத்மார்த்த பூஜையிலும் பரார்த்த பூஜையிலும், சாமான்யமாக இம்மாதிரி சொல்லப்படுகிறது. நித்யம் இம்மாதிரி அனுசரிப்பது போக மோக்ஷத்தைக் கொடுப்பதாயுள்ளது.

90. ஆயுள், ஞாபக சக்தி, ஆரோக்யம், சவுபாக்யம் குறைவிலாச் செல்வம் மற்றவைகளும் சண்டருடைய அர்ச்சனையினால் அடையப்படுகின்றது.

91. இஷ்ட ஸித்தியின் பொருட்டு சண்டேசருக்கு ஸ்நபனம், ஹோமம் செய்ய வேண்டும். முன்பு போல் ஸ்நபனம் அமைத்து மத்திய கும்பத்தில் சண்டேசரையும்

92. தேவியுடன் எனில் வர்த்தனியில் தேவியுடன் பூஜிக்க வேண்டும். அஷ்ட மூர்த்திகளை கிழக்கு முதலான திக்குகளிலும் பஞ்ச பிரம்மத்துடன் பூஜிக்க

93. ருத்ர பக்தர்கள், எட்டு பேரை நவகலசாபிஷேகத்திலும், இந்திராதிகள், வஜ்ராதிகளை வெளியில் இருபத்து ஐந்து கலசத்திலும்

94. ஐம்பது கலசங்களில் வெளியில் சண்டேச அஸ்த்ரத்தை மட்டுமோ நூறு கலச ஸ்னபனத்தில் வெளியில் ஹ்ருதயம் மந்திரம் மாத்திரமோ பூஜிக்க

95. உத்ஸவம், தமனாரோஹனம், பவித்ரோத்ஸவங்களைச் செய்யவும். தீபாவளி, வஸந்தோத்ஸவம், தனுர்மாத பூஜை, முதலிய மாஸோத்ஸவத்தையும் செய்ய வேண்டும்.

96. நவ நைவேத்யம் என்ற பூஜையும், ஜீர்ணோத்தாரணத்தையும், பிராயச்சித்தத்தையும், செய்ய வேண்டும். மேலும், உத்ஸவத்தின் கொடியில் டங்கத்தையோ (மழு), வ்ருஷபம், மாத்திரமோ எழுத வேண்டும்.

97. சிவோத்ஸவத்திலும் சண்ட நாதருக்கு உத்ஸவத்தை இங்கு செய்ய வேண்டும். த்வஜ, ஹோம, பலியுடனோ இல்லாமல் வெறும் வீதி வலம் மட்டுமோ செய்ய வேண்டும்.

98. சண்டாஸ்த்ரத்தில் மழு போல் செய்து, அதில் சண்டிகேஸ்வரரின் பிம்பத்தை அமைக்கவும். பிரதிஷ்டை, உத்ஸவம் முதலிய கார்யங்களில் எது கூறப்படவில்லையோ அவை எல்லாவற்றையும் முன் போல் அமைப்புடன் சண்டிகேஸ்வர மந்திரத்துடன் கூடியதாக செய்ய வேண்டும்.

இவ்வாறு உத்தரகாமிகாம மஹாதந்திரத்தில் சண்டேச பிரதிஷ்டா விதியாகிற அறுபத்தி ஐந்தாவது படலமாகும்.

 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar