Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
முதல் பக்கம் » ரத ஸ்தாபன முறை
படலம் 71: ரத ஸ்தாபன முறை
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

20 ஜூன்
2012
04:06

71வது படலத்தில் ரதஸ்தாபன முறை கூறப்படுகிறது. முதலில் அமைக்கும் முறையை முன்னிட்டு தேர் இவைகளின் பிரதிஷ்டை கூறுகிறேன் என்பது பிரதிக்ஞை. பிறகு தேரும் சக்கர அமைப்புகளால் பலவிதமாக கூறப்படுகிறது. அதில் மூன்று சக்கரம் முதல் 9 சக்கரம் வரையிலான ஏழு ரத பேதங்கள் கூறப்படுகின்றன. இரண்டு சக்கரம் உடையது. சகடம் என்று கூறி ரத பேதமான சகட விஷயம் கூறப்படுகிறது. பிறகு ரதவிஷயத்தில் உள் அமைப்பு, வெளி அமைப்பு என்ற இவைகளில் நிர்மாண விதியும் அவை சேர்க்கும் முறையும் வர்ணிக்கப்படுகிறது. பிறகு வெளி அமைப்புகளின் நிரூபண விஷயத்தில் பாரம், அ÷க்ஷõத்தரம், சிகை, விஷ்டை, அக்ஷம், சக்கரம், உபபீடம் என்று உருப்புகள் கூறப்பட்டுள்ளன. வெளி அமைப்பு நிரூபணத்தில் உபபீடத்திற்கு மேல் அதிஷ்டானம் அமைக்கவும் அதிஷ்டானத்திற்கு மேல் பாதவர்க்கம், பாதவர்க்கத்திற்கு மேல் பிரத்யரவர்க்கம் செய்யவும் என கூறப்படுகிறது. இவைகளை அமைக்கும் முறையும் வர்ணிக்கப்படுகிறது. பிறகு இந்த முறைப்படி அமைக்கப்பட்டது முதல் தளமாகும். இந்த முதல் தளத்துடன் கூடியது ஏகதளரதம் என்றும் ஒரு தளத்தை உடைய தேரை அமைக்கும் முறை. பிறகு இரண்டுதளம் உடைய தேர் இருக்கிறதா இல்லையா என சந்தேகம் ஏற்படுகிறது. அதனால் இரண்டுதளம், மூன்று தளம் உடைய ரதங்களை செய்யும் விஷயத்தில் அமைக்கும் முறை சுருக்கமாக கூறப்படுகிறது. பிறகு அனேக தளத்தை உடைய தேர் அமைக்கும் விஷயத்தில் செய்யவேண்டிய விசேஷ அமைப்பு நிரூபிக்கப்படுகிறது. இவ்வாறு தேர் அமைக்கும் முறை கூறி அந்த விஷயத்தில் சுபம் ஆயாதி என்ற கணக்கிடும் முறை வர்ணிக்கப்படுகிறது. முடிவில் இங்கு சகடை, பல்லக்கு முதலியவைகளில் சுபத்திலும் சுபஆயாதி அளவு முறை சம்மதம் என அறிவிக்கப்படுகிறது. பிறகு ரதத்தை ஸ்தாபனம் செய்யும் முறை விளக்கப்படுகிறது. அதில் சில்பியை திருப்தி செய்வது முறையாக பிரோக்ஷணம் முதலான சம்ஸ்காரங்கள் கூறப்படுகின்றன. பிறகு ரக்ஷõ பந்தன முறை கூறப்படுகிறது. பிறகு ரத்தின் உருவமானது சக்ரம் முதலான இடங்களில் பூஜிக்கவேண்டிய சூர்யன் முதலான தேவதைகளின் நிரூபணம், பிரம்மா, விஷ்ணு, ருத்திரன், ஈஸ்வரன், இவர்கள் ரதத்தின் அதிபர்கள் சிகரத்தின் அதிபதி சதாசிவன், ஸ்தூபிநாயகன் சிவன், தாமரை மொட்டுக்களின் அதிபன் அனந்தன் பிறகு, ரதத்தின் முன்பாக ஸ்தண்டிலம் அமைத்து ஸ்தண்டிலத்தில், கும்பஸ்தாபன முறை கூறப்படுகிறது.

அதில் 9 கும்பங்களை ஸ்தாபித்து மத்ய கும்பத்தில் சிவனையும், கிழக்கில் சூர்யனையும், ஆக்னேயதிக்கில் சந்திரனையும் தெற்கில் மஹாவிஷ்ணுவையும், நிருதியில் ஆதாரசக்தியையும் மேற்கில் விருஷபரையும் வாயு திக்கில் அனந்தரையும், வடக்கு திக்கில் தர்மாதிகளையும் ஈசான கும்பத்தில் சேஷனையும் கும்பமூர்த்தித் தன்மையாக பூஜிக்க வேண்டும் என கூறப்படுகிறது. பிறகு ஹோம விதி நிரூபிக்கப்படுகிறது. அங்கு ஸ்தாபிக்கப்பட்ட கடங்களுக்கு தேரை சுற்றிலுமோ 9 அல்லது 5 குண்டமோ அல்லது கிழக்கு திக்கில் 1 குண்டமோ அல்லது எல்லா இடத்திலும் ஸ்தண்டிலமோ அமைத்து குண்ட அக்னி ஸம்ஸ்கார முறையாக ஹோமம் செய்யும் முறை கூறப்படுகிறது. இங்கு 9,5,1 என்ற குண்டங்களை அனுசரித்து ஹோமம் செய்யும் முறையில் விசேஷம் கூறப்படுகிறது. இவ்வாறாக அதிவாச விதியில் செய்முறைகள் விளக்கப்பட்டது. பிறகு இரண்டாம் நாள் காலையில் நல்ல முகூர்த்த காலத்தில் மந்திரந்நியாச பூர்வமாக அந்தந்த கும்பத்தில் உள்ள ஜலங்களால் அந்தந்த பிரதேசத்தில் சம்ப்ரோக்ஷிக்கவும் என்று ரத சம்ப்ரோக்ஷண விதி சொல்லப்பட்டது. முடிவில் யார் இவ்வாறாக ரதத்தை தயார் செய்து சம்ப்ரோக்ஷணம் செய்கிறானோ அந்த மனிதன் இந்த லோகத்தில் தனவானாகவும், ஸ்ரீமானாகவும், விருப்பப்பட்ட பயனையும் அடைகிறான் என்று பலஸ்ருதி கூறப்படுகிறது. இவ்வாறு ரதத்தை நன்கு தயாரித்து வெள்ளோட்டம் என்கிற ரதயாத்திரை செய்யவும் என கூறப்படுகிறது. இவ்வாறாக ரதஸ்தாபனத்தில் செய்முறை விளக்கம் கூறப்பட்டுள்ளது. பிறகு பல்லக்கானது பைடீ, சேகரீ, மண்டீ, என மூன்று விதமாக ஆகும் என கூறி அந்த மூன்று விதங்களின் செய்முறை விளக்கம் அதற்கு உபயோகமான விருக்ஷங்கள் நிரூபிக்கப்படுகின்றன. சிபிகாப்ரோக்ஷணமானது. சிம்மாசன பிரதிஷ்டா விதியில் கூறியுள்ளபடி செய்யவும் என அறிவிக்கப்படுகிறது. பிறகு கட்டில், மஞ்சம், அமைக்கும் முறை அதை செய்வதற்கு உபயோக மான திரவ்யங்கள் விளக்கப்படுகின்றன. இவ்வாறு சிறிய மஞ்சம் கட்டில் செய்யும் முறையும், விளக்கப்படுகிறது. இவ்வாறாக 71வது படலத்தின் கருத்து சுருக்கமாகும்.

1. லக்ஷணத்துடன் ரத பிரதிஷ்டையைக் கூறுகிறேன். சக்கரத்தின் கணக்கை கொண்டு ரதம் பலவிதமாக சொல்லப்படுகிறது.

2. மூன்று சக்கரம், நான்கு சக்கரம், ஐந்து, ஆறு, ஏழு, எட்டு, ஒன்பது என பலவகையிலும் ஆகும். ஆனால் இரண்டு சக்கரமுள்ளது சகடம் என்றும் சொல்லப்படும்.

3. சக்ரத்தின் மேலுள்ள பலகை அமைப்பின் அகலம் மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, ஏழு, எட்டு, ஒன்பது முழம் உள்ளதாக இருக்கும். அதன் நீளமும் இப்பொழுது சொல்லப்படுகிறது.

4. அச்சின் மேல்பாகமாக கூறப்பட்டுள்ளது. தேரின் மேல்பாகம் கூறப்படுகிறது. படகு போன்று வளைவான அமைப்பாக அமைக்கவும். தேரின் கீழ் விரிப்பு நீளம்போல் கனமாக உள்ளதாகவும்

5. தேரின்கீழ் விரிப்பின் வெளி அகல அளவின் அரைபாக அளவு நீளமோ கால்பாக அதிகமோ, கால்பாக குறைந்ததாகவோ அதற்கிடைப்பட்டதான ஆறு அளவு உடையதாக

6. தேரின் கீழ் விரிப்பு பாகத்தின் ஆதாரத்திற்கு கீழாக அச்சின் மேல் பாகம் அமைக்கவும். எங்கெங்கு பாரத்தை உடைய அச்சுக்கும் சேர்க்கை உள்ளது என்பது இப்பொழுது சொல்லப்படுகிறது.

7. இரும்பு பட்டைகளாலும் முளைகளாலும், மிகப்பெரிய முனையுள்ள ஆணிகளாலும் எப்படி கட்டினால் அது வலுவாக இருக்குமோ அப்படி மிக வலுவாக கட்ட வேண்டும்.

8. அச்சைக் காப்பதற்காக நடுபக்கம் இவைகளில் அவைகளின் நடுவிலுள்ள இரு பக்கங்களில் அவைகளின் கனத்திற்கு ஸமமாக பலவித சிகைகளாக உடையதாக செய்தல் வேண்டும்.

9. அச்சுவரை தொங்குகிறதாக இரும்பு பட்டையால் நன்கு கனமாக உள்ளதாக அமைத்தல் வேண்டும். ஒவ்வொரு சக்ரத்திற்கும், ஸமமாகவோ, ஸமமில்லாமலோ அச்சாணி அமைத்தல் வேண்டும்.

10. மேல் நோக்கிய தலைபாகத்தை விட்டு பூமியை நோக்கி கீழே உள்ளதாக சிறிது வெட்டப்பட்டதாகவும் அச்சின் மேல்பாகத்தில் நுழைவதற்காகவும் அல்லது மேல் பாகத்தையோ செய்ய வேண்டும்.

11. எல்லா அச்சுகளிலும் மேல் பாகமாக இருப்பதற்காகவும் திவாரத்தில் நுழைப்பதற்காகவும் குறைக்கவும் தேரில் கீழ்பலகை அகலத்தை அறுபது பாகமாக பிரிக்க வேண்டும்.

12. அதற்கு ஸமமாகவோ அறுபதுக்கு ஐந்து பாகமாகவோ அதிகரிக்கவும். கால்பாகம், குறைந்த அளவின் இரண்டு மடங்கு நீளமுடைய அடிபாகமாக கூறப்பட்டுள்ளது.

13. அதன் நுனி, அடி பாகத்தின் பாதியை, எட்டு பாகமாக அதிகரிக்கவும். ஓர் பாகத்திலோ, முக்கால், அரை பாகத்தினாலோ, நீளத்தில் அமைக்கப்படவேண்டும்.

14. அதன் நுனியிலோ, அதை அடைந்ததாலோ, ஸமபத்ரம் என்ற அமைப்பை செய்யவும். அவைகளின் அளவு பாதத்திற்கு கூறப்பட்ட முறைப்படி செய்ய வேண்டும்.

15. பின்பாகமான பத்ர அமைப்பிலிருந்து அதிகமானதாக நுனிபாக பத்ரம் அமைக்கப்படவேண்டும், பத்ரத்தை பத்ரத்தின் நுனிகள் விருப்பப்பட்ட அளவுகளால்

16. பிரும்மாஸனத்தை செய்தோ, செய்யாமலோ இருக்கவும், பத்ரம், உபபத்ரம் இவைகளின் அளவு ஒன்று பட்டதாகவோ வேறுபாடான அதிகமாகவோ இருக்கலாம்.

17. தேரின் பத்ர, உபபத்ரங்களின் அளவு எவ்வாறு நன்கு சேர்க்கப்பட்டு இருக்கிறதோ அந்த எல்லா அளவும் தேர்கீழ்பரப்பு பலகைக்கு கனமாகும். கீழ்பரப்பு பலகையில் இடைவெளி அமைக்க கூடாது.

18. மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, ஏழு முழங்கை அளவு நீளமுள்ளதாகவும் இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து பாகம் அகலமுள்ளதாகவும் இருக்க வேண்டும்.

19. அச்சுக்குமேல் பாகத்தில் இரண்டு முதல் ஒன்பது எண்ணிக்கை வரையிலாக பாரம் என்ற கீழ்விரிப்பு பாகமாகும். மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, ஏழு பாகமாக அகலத்தில் அரைபாகமாக கொடுங்கை அமைப்புகளை

20. சேர்க்கவும், கம்பங்களின் நடுவில் பலகைகளுக்கு வேறு ஆஸனங்களை (விட்டங்களை) அமைக்கவும். கீழ் விரிப்பு அமைப்புகளில் நுனி, அடி, நடுவிலோ விருப்பப்பட்ட விட்டங்களை சேர்க்க வேண்டும்.

21. மேல் பாகத்தில் வெளியில் தெரியும்படி துவாரங்களை ஐந்து முடிச்சுக்களை உடையதாகவும், நான்கு பாகம் முதல் பதினெட்டு பாகம் வரையிலாக

22. அதிகமான விஸ்தாரத்தை செய்யவும், சக்ரத்தின் கடையாணி, இடைவெளி ஐந்து பாகத்திலிருந்து பாகம் அதிகமானதாக இருக்க வேண்டும்.

23. பந்துபாகம் வரையிலும் சக்ரத்தின் அச்சு கனமும் ஏதுண்டோ அதை வெளியில் தலைபாகம் தெரியும்படி கீழ் வெளிபரப்பு அச்சின் இடைவெளி இதற்கு சமமாகும்.

24. இவைகள் எல்லாம் அச்சின் நீளமாகும். அச்சு உருண்டையாகவோ சதுரமாகவோ இருக்கலாம்.

25. அகன்ற அமைப்பை உடைய நடுபாகத்துடன் கூடியதாகவோ இல்லாமலோ ஐந்து உருப்பு அமைப்பென்பதான கார்யங்களை மரத்தினாலும் இரும்பினாலும் செய்ய வேண்டும்.

26. எவ்வாறு பலமுள்ளதாகவும், அகலமாகவும் இருக்குமோ அவ்வாறே கனமுள்ளதாகவும் அமைக்கவும், சக்ரங்களுக்கு பிரமாணம் தேருக்கு வெளியிலும் பாரத்திற்கு இடைவெளியிலும் ஆகும்.

27. ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறுபாக குறைந்தோ அதிகப்படுத்தியுமோ செய்து இரண்டு பாகத்திலிருந்து, எட்டு பாகம் வரை சக்ரங்களின் கனமாக கூறப்பட்டுள்ளது.

28. ஒன்று, இரண்டு, மூன்றங்குல மதிகமாக நாபி தேசத்தில் ஆகும் அவ்வாறே வெளிபாக சக்ரத்தின் வட்டமும் அவைகளின் நடுவில் கோடு போன்ற அமைப்பை

29. கீழும், மேலும், ஒன்று, இரண்டு, மூன்றம்சங்களால் மெலிந்ததாகவும், இருபத்திநான்கு முதல் எட்டு அதிகத்தால் அறுபத்திநான்கு வரை எண்ணிக்கையுள்ள அம்சங்களால் மெலிந்ததாகவும் அமைக்க வேண்டும்.

30. தேரோட்டுபவர் முருகன், அல்லது நந்திகேஸ்வரர் அல்லது பிரம்மா, அல்லது விஷ்ணு, இந்திரன் இப்படியும் இருக்கலாம்.

31. கீழ்விரிப்பு பலகையின் மேல் உபபீடம் அமைக்கவும். அதன் அளவு கூறப்படுகிறது. ஓர் பாகத்திலிருந்து இரண்டுமுழம் வரை ஓர்பாக அதிகரிப்பால்

32. பாரத்தின் உபான அமைப்பிலிருந்து வெளிக்கொணர்ந்து பாரத்தின் வெளியில் ஓர் அம்சத்திலிருந்து பாகத்தின் வெளி அமைப்பு அதிகரிப்பால் ஆறு பாகம் வரையிலோ

33. இருபத்தி ஒன்பது அம்சம் வரையிலோ பீட உயரத்தை பிரிக்கவும். மூன்று, இரண்டு, ஐந்து, ஒன்று, ஒன்பது, ஒன்று மூன்று என்ற அம்சங்களாலும்

34. மூன்றுபாக, ஒவ்வோர் பாகத்தினால், கீழிருந்து ஆரம்பித்து செய்யவும். உபாநம், பத்மம், கம்பம், கர்ணம், கம்பம் இவைகளும்

35. பத்மம், வாஜநம், கம்பம் இவைகளை மேற்கூறிய அளவுகளால் கூறப்பட்டுள்ளது. கால்பாகம், அரைபாகம், மூன்றுபாகம், இரண்டு பாகத்தினாலோ

36. மூறு பாகத்தினாலோ நான்கு பாகங்களால் குறைவாகவோ, அதிகமாகவோ அமைக்கவும். இவைகளின் நுழைவு, வெளிக் கொணர்தலை அழகின் அதிகரிப்பால் செய்ய வேண்டும்.

37. ஆலயத்திற்கு சொல்லப்பட்ட உபபீடம் ஏதுண்டோ அதை இங்கு செய்யலாம். நாற்கோணங்களிலும் நடுவிலும், அவ்வாறே பத்ரம், உபபத்ரம் என்ற அமைப்புகளிலும்

38. பொம்மை போன்ற அமைப்புகளால் நாடக அமைப்புகளாலும் கழுத்து பாகத்தை அலங்கரிக்கவும். உபபீடத்தின் உயரளவிலாவது உபபத்ரபீடம் செய்ய வேண்டும்.

39. உபபத்ர பீடத்திற்கு மேல் நன்கு கனமான பலகையால் மேலே மூடுவதை செய்யவும். பலகையின் பாரமத்தியில் பாதம் முதலியவைகளால் அலங்கரிக்க வேண்டும்.

40. பலகையின் நடுவிலிருந்து பாரம் என்ற தாமரை மொட்டு அமைப்புகளை காம்புடன் கூடியதாக செய்யவும். தண்டின் அளவு இரண்டு, ஏழு, மூன்று அங்குலத்திற்கு மேற்பட்டதாகவும்

41. நூறு அம்சம் வரையிலும் கூறப்பட்டுள்ளது. அதன் அடிபாகம் நான்கு பாதத்திலிருந்து எட்டம்சம் வரை கனத்தையுடையதாக வட்டவடிவமாகவோ, எண்கோண வடிவமாகவோ அமைக்கலாம்.

42. ஆறு, பன்னிரெண்டு பாகம் வரை நுனியில்லாமல் வளைந்ததாக செய்து கும்பம் போல் அழகுடன் கூடியதாகவோ இரண்டு கண்டிகையை அடிப்படையாகவோ

43. தாமரையை பலகையுடன் கூடியதாயும், அதற்குமேல் தாமரை மொட்டையும் செய்யவும். அதையும் நான்கம்சம் ஆரம்பித்து ஓர்பாக அதிகரிப்பால்

44. எட்டம்சத்துடன் கூடியதாய் அந்த விஸ்தார நடுவரையிலுமாக அதன் முக்கால் பாகம் அகலமுமோ, அதன் கடைசிக்கு ஸமமான அளவிலுமோ

45. மெலிந்த நுனியையுடையதாகவும், வட்ட வடிவமாகவும் எண்கோண வடிவமாகவும் விரிந்த வெளிப்பட்ட இதழை உடையதாகவும், வெளிப்பக்கத்தில் அலங்காரம் செய்ய வேண்டும்.

46. கீழ்விரிப்பு பலகையின் மேல் சிறிது வெளிப்பட்ட அமைப்பை உடைய வாஜநத்தை அமைக்கவும். விருப்பப்பட்ட பலஅமைப்புடன் மேலே வாஜனத்தின் இடைவெளியில்

47. அது வெளிக்கொணர்ந்ததாகவோ, கழுத்து பாகம் வரை உபபீடத்தை அமைக்கவும். இரண்டுவித மரங்களாலோ, ஓர் மரத்தினாலோ

48. அதற்கு சம்பந்தப்பட்டதாக செய்யவும், விருப்பப்படி அச்சுக்கு மேற்பட்ட தேசத்தில் பஞ்சக்ரஹி என்ற இரண்டு கட்டின் அமைப்பை அறிஞர்களால் செய்ய வேண்டும்.

49. விடுபட்ட கனமும் விஸ்தாரமும் அதன் சம்பந்தப்பட்ட வேறு அமைப்புகளையும் பத்ரத்தின் அடியிலும் நுனியிலும், ஸமபத்ரம் என்ற அமைப்பிலும் அவ்வாறே செய்ய வேண்டும்.

50. உட்பட்ட வாஜனத்தின் மேல் உபபீட களத்தின் முடிவு வரை உபபீடத்தின் முடிவில் பாதங்களை செய்யவேண்டும்.

51. அந்த பாதத்தின் மேல் இரண்டு பலகை செய்யவும். பஞ்சக்ராஹி என்ற அமைப்பை உடைய நன்கு சேர்க்கப்பட்ட இரண்டு விட்டங்களை செய்ய வேண்டும்.

52. பத்ரமென்ற அமைப்பின் நுனியிலும், நடுவிலும் மேற்கூறியபடி செய்யவும். உபபீடத்திற்கு மேல் அதிஷ்டானம் என்ற அமைப்பை செய்ய வேண்டும்.

53. அந்த அதிஷ்டானம் உபபீடத்திற்கு ஸமமாகவோ, அதன் அரை பாகமாகவோ, ஒன்றரை பங்காகவோ, அதன் நடுவில் ஆறுபாக அளவினாலோ எது பொருந்துமோ அதை ஏற்க வேண்டும்.

54. 28 பாகமாக, அதன் உயரமானது ஸமமாகும். பத்து, இரண்டு, ஒன்று, ஏழு, ஒன்று, ஒன்று, இரண்டு, ஒன்று, ஒன்று, இரண்டு

55. பத்மம், கர்ணம், பத்மம், குமுதம், பத்மம், வாஜனம், சதந்தத்தை கண்டத்தை கம்பத்தை, மஹாவாஜனத்தையும் செய்ய வேண்டும்.

56. உபபீடத்திற்கு கூறப்பட்டபடி கூடுதல் குறைத்தலை செய்ய வேண்டும். உள்ளடக்கமும் வெளிக்கொணர்தலும் முன்பு கூறியபடியே செய்ய வேண்டும்.

57. இந்த உபபத்ரம், பத்ரம் என்ற அமைப்பை உள்பக்கமாக அமைக்கவும். அதிஷ்டானத்திற்குமேல் பாதவர்கம் செய்தல் வேண்டும்.

58. அதிஷ்டானத்திற்கு ஸமமாகவோ இருமடங்காகவோ செய்ய வேண்டும். அதற்கு இடைபட்டு ஒன்பது அளவிலோ, பாதத்தின் எட்டில் ஓர் அம்சமாகவோ

59. பொம்மை போன்ற பாதங்களால் நாட்டிய அமைப்புகளாலும் பெரிய யாளி உருவங்களாலும், லிங்கம், பூதம், யானை போன்ற பாதங்களாலும் வர்க அமைப்பை எங்கும் அலங்கரிக்க வேண்டும்.

60. அதற்கு இடைவெளியில் திவாரமிட்டு ஆணி போன்றவைகளால் நன்கு செப்பனிடவும். பாதவர்கத்தின் மேல் விரிப்பு அமைக்கவும். அதன் அமைப்பும் முகப்பும் கூறப்படுகிறது.

61. மூன்று பாகம் முதல் ஒவ்வோர்பாக அதிகரிப்பால் ஒன்பது பாகம் வரை அலங்கரிப்பு கூறப்படுகிறது.

62. பாரத்தின் உச்சம் பதினாறு பாகத்தில் மூன்று, ஒன்று, இரண்டு, ஏழு இவைகளாலும் ஒன்று, ஒன்று, ஒன்று, அம்சங்களால் மேற்பட்ட வாஜநம்

63. நித்ரா, கபோதம், ஆலிங்கம், வாஜநம், பிரதிவாஜநம், பிரவேசம், நிர்மகம் என்ற பெயருள்ள குறிப்புகளை ஆலய அமைப்பு முறைப்படி செய்ய வேண்டும்.

64. இது முதல் தளத்திற்கு கூறப்பட்டுள்ளது. ஸமமான ஆரம்பத்தையுடைய பத்ரமானது ஆகும். பாதம் வரையிலுமோ, பத்மம்வரை அடியிலிருந்து குறைந்ததாகவோ

65. இரண்டு பக்கத்திலும், ஒன்று முதல் ஆறு பாகம் வரை நுழைவின்றியோ அமைப்புடையது உபபத்ரமாகும்.

66. ஓர் தளமுடைய தேர் அமைப்பு கூறப்பட்டு இரண்டு தளத்துடன் கூடியதாகவோ அமைக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. ஆறு முதல் முப்பது அம்சம் வரை அடிபாகம் வரை ஸமமாகவோ

67. விளிம்பின் உயரம் வரை இரண்டு தளத்தின், பாதம், கபோதம் இவைகளின் உயரமாகும். இந்த முறைப்படியே மூன்று தள தேரையும் அமைக்க வேண்டும்.

68. நல்ல மரத்தின் ஓர் அங்குல கனம் அல்லது வேண்டிய அளவு கனமுள்ள பலகைகளால் மேல் பாகத்தை வலுவாக மூடவேண்டும்.

69. பத்ர பீடத்தையும் உபபத்ர பீடத்தையும் இவ்விதமே செய்ய வேண்டும். இவ்வாறே போவதற்கும் வெளியில் வருவதற்கும் அமைக்க வேண்டும்.

70. போவதற்கும், வெளியில் வருவதற்கும் வழியில்லாது போனால் நல்ல கயிற்றையாவது வைக்க வேண்டும்.

71. பல தளங்கள் இருக்குமேயானால் அதில் விசேஷம், சொல்லப்படுகிறது. தேரில் ஏறுவதற்காக படிகட்டுபோல் அமைக்கவும்.

72. பத்ரபீட அமைப்பிற்கு கூறியபடி அகல நீளத்தை முன்பும், பின்பும் அமைக்கவும். பத்ர பீடத்திற்கு ஒவ்வொரு பக்கத்திலும் நுழைவு அமைப்பு இருக்க வேண்டும்.

73. அதன் அமைப்பு முறை படிக்கட்டை மேல் அமைக்கவும். உபபத்ர பீடமின்றியோ பத்ர பீடத்தை பாரம் என்ற விரிப்புத்தளம் வரையிலுமோ செய்ய வேண்டும்.

74. இவைகள் இல்லாமல் இருந்தாலும் உபபீடம் மட்டும், அமைத்து அதன் மேல் இறைவனை எழுந்தருளச் செய்ய வேண்டும்.

75. உபபீடமின்றி மசூரம் என்ற அமைப்பை மட்டுமோ செய்யவும். வெளியில் உள்ளபடி செய்வது கூறி உள்ளே செய்வது இங்கு கூறப்பட்டுள்ளது.

76. பாத வர்க்கத்தின் இடைவெளியில் கம்பத்தின் மேலாக, க்ஷúத்ர பாதங்களை அமைக்கவும். மேல்பாக கம்பத்தை கட்டப்பட்டதாக அமைக்கலாம்.

77. அதற்கு மேல் நுனியாக விளிப்பை பஞ்சக்ராஹி என்ற அமைப்பை கூடியதாகவோ, இல்லாமலோ அமைக்கவும் பலவித ஆஸன அமைப்புகளை ஒவ்வொன்றுக்கும் அமைக்க வேண்டும்.

78. மிகுந்த காந்தியை உடையதாயும், தராசின் முகஅமைப்பை அனுசரித்ததாயும் அதற்குமேல் ஜயந்தீ என்ற அமைப்புகளையும், அதற்குமேல் விரிப்பையும் அமைக்க வேண்டும்.

79. விருப்பப்பட்ட கனம், உயரத்திலிருந்தவாறு விஜியை அமைக்கவும். பலவித தாழ்பாள், பட்டிகை, பஞ்ச க்ராஹி என்ற அமைப்புகளால்

80. பெரிய ஆணிகளாலும், பெரிய தாழ்பாளாலும் உயர்ந்த கீல்களாலும் கூர்மையான வளைந்த பட்டைகளாலும் நன்கு கட்ட வேண்டும்.

81. இது ரங்கம் என்ற அமைப்பை கூறியுள்ளது, தோரணத்துடன் கூடியோ, தோரணமின்றியோ பாதங்களுடன் சேர்ந்துள்ளதோ தேர் எனப்படுகிறது. அதன் அளவு கூறப்பட்டுள்ளது.

82. நான்கு தளம் ஆரம்பித்து அரை தாள அளவாக அதிகரிக்கவும். மூன்றங்குலம் முதல் எட்டு அங்குலம் வரை காலின் கன அளவாகும்.

83. கால்பாக அங்குல அதிகரிப்பால் மூன்றங்குலம் வரை பாதத்தின் அகலம் கூறப்பட்டு ஆலயம் போன்ற பாதத்தின் அளவு கூறப்படுகிறது.

84. நுனியிலும் அடியிலும் சிகையுடன் கூடியதாயும், கும்பம் முதலான அமைப்புகளுடன் கூடியதாய் பாதங்களை அமைக்கவும். பலவித கூர்மையான அமைப்புகளை பலகைகளில் அமைக்க வேண்டும்.

85. தாள அளவிற்கு கீழிருக்கும் விட்டங்களால் பாதத்தின் அடிபாகத்தை கட்ட வேண்டும். அவ்வாறே இரும்பு கம்பிகளால் தாங்கும்படி நன்கு இறுக்கமாக கட்ட வேண்டும்.

86. பாதத்திற்கு மேல் விரிப்பை அமைக்கவும். கொடுங்கை அமைப்பதற்கு உரியதாகவும் அந்த விரிப்பு சிகை போன்ற அமைப்பினால் கொடுங்கை என்ற அமைப்பை உடையதாயும்

87. தங்கம், வெள்ளி, ஆகிய தகடினாலும், தாமிரங்களால் பலகைகளாலும் மற்ற இடங்களை பிரகாசிக்கின்ற ஸ்தூபியுடன் கூடியதாக மூட வேண்டும்.

88. சுபம், ஆயாதி, என்று கணக்களவுடன் கூடியதாக ரதம் கூறப்பட்டது. அந்த ரதம், அகல, நீளத்தால் சிறு குறிப்புடன் கூறப்படுகிறது.

89. இரண்டு ஸகள பிம்பமூர்த்திக்கும் நீள அகலத்திலோ இரண்டு, மூன்று நான்கு அளவுகளால் குறைத்தோ, கூட்டியோ செய்யவேண்டும்.

90. ஏழு, ஐந்து, ஆறு, ஏழு ஆகிய அளவுகளால் நீளத்தையும், அகலத்தையும் மூன்று, பதினைந்து அளவாக அமைக்கவும். முற்பது முழம் இந்த ரதத்தில் கூறப்பட்டுள்ளது.

91. சட்டத்தேர் பல்லக்கு முதலியவைகளிலும் சுபாசுபம் கூறப்பட்டுள்ளது. இப்பொழுது இந்த பிரதிஷ்டை சொல்லப்படுகிறது.

92. ரதசில்பியை அனுப்பிவிட்டு சுத்தமான ஜலத்தால் ரதத்தை நன்கு சுத்தப்படுத்த வேண்டும். கோஜலம், கோமயம், தர்பை தீர்த்தம் இவைகளாலும் சுத்தம் செய்ய வேண்டும்.

93. பஞ்ச கவ்யத்தால் பிரோக்ஷித்து புண்யாக தீர்த்தத்தாலும், அஸ்த்ரமந்ர தீர்த்தத்தாலும் புரோக்ஷித்து சந்தனம், புஷ்பம் இவைகளால் பூஜிக்க வேண்டும்.

94. தாமரை மொட்டு போன்ற இடத்தில் ரக்ஷõபந்தனம், ஹ்ருதயமந் திரத்தால் செய்ய வேண்டும். வஸ்த்ரம் ஸமர்பித்து ஆலயத்திற்குச் சொன்னவாறு தத்வ தத்வேஸ்வரர்களோடு கூடவும்,

95. மூர்த்தி, மூர்த்தீஸ்வரர்களோடு கூடவும், தெற்கு வடக்கிலுள்ள சக்ரத்தில் சூர்ய, சந்திரனையும் பூஜிக்க வேண்டும்.

96. அச்சில் விஷ்ணுவையும் கீழ் விரிப்பு பலகையில் ஆதார சக்தியையும், உபபீடத்தில் வ்ருஷபத்தையும் ஆதாரத்தில் அனந்தனையும் பூஜிக்க வேண்டும்.

97. தர்மாதிகளையும் அதர்மாதிகளையும் பாதத்தில் பூஜித்து அதற்கு மேல் அதச்சனம் ஊர்த்வச்சத்தையும் இவைகளை பூஜிக்க வேண்டும்.

98. விரிப்பு பலகையில் மேலும் கீழும் பத்மகர்ணிகையையும் பூஜித்து நவ சக்திகளையும் பூஜித்து சிவாஸனத்தை கல்பிக்க வேண்டும்.

99. பிரும்மா, விஷ்ணு, ருத்ரன், ஈஸ்வரன் இவர்கள் ரதத்தின் அதிபர்கள், சிகரத்தில் ஸதா சிவபெருமானும், ஸ்தூபியில் சிவபெருமானும் நாயகராவார்.

100. தாமரை, மொட்டுகளில் அனந்தன் ஆலய அமைப்பினால் வ்யாப்த்தமாக அறியவும். அதில் நூல் வஸ்திரம், கூர்ச்சம் இவைகளோடு கூடிய

101. தங்கம், கூர்ச்சம், ஒன்பது கும்பங்களை வைத்து நடுகும்பத்தில் சிவபெருமானையும் கிழக்கில் உள்ள கும்பத்தில் சூர்யனையும், தென்கிழக்கில் சந்திரனையும்

102. தெற்கில் விஷ்ணுவையும், வடமேற்கில் உள்ள கும்பத்தில் சக்தியையும், மேற்கில் வ்ருஷபத்தையும் வடமேற்கில் உள்ள கும்பத்தில் அனந்தரையும் பூஜிக்க வேண்டும்.

103. தர்மாதிகளை வடக்கில் உள்ள கும்பத்திலும், ஈசான கும்பத்திலும் சேஷனையும் சந்தன, புஷ்பங்களாலும், பூஜித்து ஹோம கர்மாவையும் செய்ய வேண்டும்.

104. நிறுவப்பட்ட கும்பங்களை சுற்றியோ அல்லது இரதத்தின் நான்கு பக்கங்களிலோ ஒன்பது குண்டங்களையோ ஐந்து குண்டங்களையோ அல்லது கிழக்கில் ஒரு குண்டத்தையே அமைக்க வேண்டும்.

105. குண்டஸம்ஸ்காரத்தையும் செய்து, பிரதானத்தில் ஸாங்கமாக சிவபெருமானை நூற்றுக்கணக்கான ஹோமத்தால் சந்தோஷிக்க செய்ய வேண்டும்.

106. அந்தந்த திக்குகளில் உள்ள குண்டங்களில் சூர்யன் முதலியவர்களையும் ஐந்து குண்டமாக இருக்குமேயானால் ஒவ்வொரு குண்டத்திலும் இரண்டிரண்டு தேவதைகளையும் பூஜிக்க வேண்டும். ஒரே குண்டமாக இருக்குமேயானால் எல்லா தேவதைகளையும் பூஜிக்கவும். (சூர்யன், சந்திரன், விஷ்ணு - ஆதாரசக்தி, வ்ருஷபன், ஆனந்தன், தர்மாதிகள், அதர்மாதிகள், சேஷன், சிவபெருமான்.

107. ஸமித்து, நெய், அன்னம், பொறி, எள், இவைகளால் ஹோமம் செய்ய வேண்டும். தத்வ தத்வேஸ்வரர்களையும் மூர்த்தி மூர்த்தீஸ்வரர்களையும் பூஜித்து ஹோமம் செய்ய வேண்டும்.

108. பலா, அத்தி, அரசு, ஆல், இவைகளை கிழக்கு முதலிய திக் குண்டங்களுக்கு உகந்தது. வன்னி, நாயுறுவி, பில்வம், இச்சி இவைகளை தென் கிழக்கு முதலிய குண்டங்களில் ஹோமம் செய்ய வேண்டும்.

109. பிரதானத்திற்கு பலாச சமித்து சிறந்ததாகும் என சொல்லப்படுகிறது. பூர்ணாஹுதியையும் கொடுத்து, இரண்டாம் நாளில் கும்ப, அக்னி, இவைகளை பூஜித்து

110. நல்ல முஹுர்த்த வேளை வந்தபொழுது ஆசார்யன் மந்திரம் நியாஸம் செய்து ஜ்யோதிஷர் சில்பி இவர்களுடன் கூடினவராய்

111. அந்தந்த கும்பங்களில் உள்ள தீர்த்தங்களால் அந்தந்த இடங்களுக்கு அபிஷேகம் செய்ய வேண்டும். இங்கு சொல்லாதவை பொதுவான ஸ்தாபன கர்மாவில் சொல்லப்பட்டபடி செய்யவேண்டும்.

112. எவன் இவ்வாறு ரதத்தை அமைத்து பிரதிஷ்டை செய்கிறானோ அவன் இங்கேயே செல்வந்தனாகவும் லக்ஷ்மீகடாக்ஷம் பொருந்தியவனாகவும் ஆகி விரும்பிய பயனையும் அடைவான்.

113. ரதத்தை இவ்வாறு தயார்செய்து தேரோட்டத்தையும் செய்ய வேண்டும். பைடீ, சேகரீ, மண்டீ, என தேர் மூன்று வகைப்படும்.

114. பதினைந்து அங்குலம், முதற்கொண்டு ஐந்தைந்து அங்குலமாக விருத்தி செய்து, தொண்ணூற்றாவது அங்குலம் வரை பல்லக்கின் விஸ்தாரம் கூறப்பட்டுள்ளது.

115. இருபத்தியோரு அங்குலம் முதல் ஒரு மாத்ரையளவு அதிகரிப்பால் நூற்றி தொண்ணூற்றி ஒன்பது அங்குலம் நீளம் அமைக்க வேண்டும்.

116. யானை கண் விழி அமைப்பை வெளி, நடு உள்பக்கம், உதாரணமாக கூறப்பட்டுள்ளது. தேவர்களுக்கும், அரசர்களுக்கும் பாதத்திற்கு வெளிப்பட்டதாக அமைக்க விசேஷமாக கூறப்பட்டுள்ளது.

117. பாத நடுவில் பொதுவான பரப்பளவு முறையை அறியவும், இவ்வாறு யவை அளவால் யானைக் கண் அமைப்பை செய்வது நடுநிலையாக கூறப்பட்டுள்ளது.

118. கால் பாகமளவு யானைக் கண் அமைப்பை உள்ளிட்டதாக செய்வதை எல்லாவற்றிற்கும் கூறப்பட்டுள்ளது. மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, ஏழு, ஒன்பது ஆகிய மாத்ரை அளவுகளால் அகலத்தை செய்ய வேண்டும்.

119. கனத்தின் முடிவில் பதினான்கு விதஸ்தி அளவாக கூறப்பட்டுள்ளது. விதஸ்தி என்பது நீட்டப்பட்ட கட்டை விரல் முதல் சுண்டு விரல் வரையுள்ள அளவாலோ ஆயாமம் என்ற அளவுகளை அறிய வேண்டும்.

120. பரப்பளவினால் நீளத்திலிருந்து அல்லது எல்லா அமைப்பிலிருந்து அளவை கிரஹிக்கவேண்டும். எட்டு. மூன்று, எட்டு, பன்னிரெண்டு, பதினான்கு என்ற அமைப்புகளால் அமைக்கவேண்டும்.

121. எட்டு இருபத்தியேழு, குறைந்ததாகவோ முப்பது, ஏழு இவைகளால் வரிசையாக ஆயம் முதலிய அமைப்புகளை அறியவேண்டும்.

122. ஆயம், வ்யயம், யோநி, நக்ஷத்ரம், வாரம் இவைகளை விஸ்தாரத்திலோ ஆயாமம் என்ற அளவினால் வ்யயம் (கழிப்பதை) செய்ய வேண்டும்.

123. ஆயாமென்ற அளவினால் யோநியையும் அந்த அளவினால் நக்ஷத்ர அமைப்பினால் கூறப்பட்டுள்ளது. ஆயாயமென்ற அளவால் விஸ்தாரத்தை சேர்த்து திதிவார அமைப்பை உயரமாக செய்ய வேண்டும்.

124. மூன்று மாத்திரை, ஒரு மாத்திரை அளவுகளால் அதன் பிரிவுகளால் இரண்டாக கூறப்பட்டுள்ளது. ஓர்முழ அளவு உயரத்தை அறியவும், அலங்காரம் கூறப்பட்டுகிறது.

125. மூன்று மாத்திரை முதல் கால்பாத மாத்திரை அதிகரிப்பால் பதினெட்டங்குலம் வரை யானை கண் அமைப்பின் அகலமாகும்.

126. ஐந்து மாத்ரை ஆரம்பித்து கால்மாத்ரை அதிகரிப்பால் ஏழு மாத்ரை வரை யானைக்கண் அமைப்புகளை அதிகரிக்கவும் செய்யலாம்.

127. ஐந்து மாத்ரை முதல் கால்பாக மாத்ரை முதலான ஏழு மாத்ரை வரை ஓர்முழம் அளவு வட்ட வடிவமாகவோ, நாற்கோணமாகவோ அமைக்க வேண்டும்.

128. நீள்வட்டவடிவமாகவோ, செவ்வகபாகமாகவோ கைஅமைப்பாக கூறப்பட்டுள்ளது. பதினெட்டம்சத்திலிருந்து அம்ச வ்ருத்தியால் தன்பரப்பால் ஆறம்சம்வரை

129. இஷ்டிகை இரண்டுகை பாகங்களாலும் கர்ணம் கூறப்படுகிறது. ஆனால் கை அமைப்பால் அதன் பிரிப்பின் எட்டு அம்சம் வரையக விசேஷம் கூறப்பட்டுள்ளது.

130. கால் மாத்ரையிலிருந்து, கால்மாத்ரை அதிகரிப்பால் நான்கு மாத்ரைவரை பட்டிகையின் கனமும், அகலமும் முறைப்படி அமைக்க வேண்டும்.

131. ஸர்பம், சிங்கம், யானை, குதிரை, மனிதர்கள், வித்யாதரர்களாலும் பொம்மை போன்ற அமைப்பு பாதங்களாலும் பட்டைகளின்றி வாஜனம் என்ற அமைப்புகளாலும்

132. பெரிய கம்பங்களாலும், கொடிகளாலும் பெரிய ஆணிகளாலும், மூளையில் கட்டப்பட்டவைகளால் நல்ல அம்சங்கள் புறா தங்குமிடம் பிரதிவாஜனங்களாலும் அழகுள்ளதாக செய்ய வேண்டும்.

133. மீன்களாலும் வலயங்களாலும், சிறிய குண்டுகளாலும் அலங்கரிக்கப்பட்டு, தங்கம், தாம்ரம், தந்தம், மரவேலைப்பாடுகளால்

134. அழகான பல்லக்கு செய்ய வேண்டும். இது பைடீ எனப்படும். சிகரத்தோடு கூடியது சேகரீ எனப்படும்.

135. பாதங்களோடு கூடிய மஞ்சங்களால் மண்டபாகரமாக உள்ளது மௌண்டீ எனப்படும். பெருவாகை, கருப்புநிறமுள்ள மரம் (கருங்காலி) பலா, வேம்பு, அர்ஜூனம்

136. இலுப்பை, கருங்காலி மற்றும் பாலுள்ள மரங்கள் பல்லக்கு அமைப்பிற்கு கூறப்பட்டுள்ளது. இது போன்ற இன்னும் உயர்ந்த மரங்களால் லக்ஷணங்களோடு பல்லக்கு தயாரிக்க வேண்டும்.

137. இதற்கும் ஸிம்மாஸனத்தைப்போல் புரோக்ஷணம் செய்ய வேண்டும். (பர்யங்க அளவுடன்) பாதத்துடன் பல்லக்கின் விஸ்தாரத்தை சொல்லப் போகிறேன்.

138. மூன்று மடங்கு இடைவெளி உள்ளதாக விஸ்தாரமும், நான்கு பாதங்களுடன் கூடியதாகவும், பாதத்தின் அளவும் கூறப்பட்டுள்ளது.

139. மூன்றங்குலத்திலிருந்து மூன்றங்குல அதிகரிப்பால் ஐம்பதுமுழம் வரை பாதத்தின் நீளம் கூறப்பட்டு, இரண்டங்குலத்தால் பாத வ்ருத்தியுடன் கூறப்பட்டுள்ளது.

140. பாதத்தின் அடியில் பதினைந்து மாத்திரை அகலமாகும். பலவித கெண்டி அமைப்புடனும் பலவித தாமரை, பலகோடு அமைப்புகளோடும்

141. பல கர்ணபாகங்களுடனும் மூன்று மடங்கு இருப்பினால் கூடியதும் அதன் பக்கங்களில் யானைக் கண் போன்ற அமைப்புகளை உடைய பலகையையோ செய்ய வேண்டும்.

142. அதிகமான பலகையையோ, நன்கு அழகாகவும் பலமாகவும் இருக்கும்படி அமைக்கவும். பலவித பட்டைகளும் பலவித கம்பங்களையும் உடையதாக வேண்டும்.

143. பலவித ஆப்புகளையும் பலவித உயர்ந்த கற்களால் அலங்கரிக்கப்பட்டும், உலோகத்தாலோ தந்தத்தாலோ, மரத்தினாலோ எல்லா திரவ்யங்கள் கலந்ததாகவோ

144. பல்லக்கை ஆயம் என்ற கணக்கு வகைகளால் சேர்ந்ததாக செய்வது ஐச்வர்யத்தை கொடுக்கும். இது பர்யங்கம் (விரிப்பு) என்ற அமைப்பை உடையதாகும். பாலபர்யங்கமும் அவ்வாறேயாகும்.

145. பல்லக்கைப்போல் நீட்டப்பட்ட கர்ண வேலைப்பாடின்றி கேடயத்தின் பாகத்துடன் கூடி ஓர்பட்டிகையோடு கூடியதும்.

146. காலின் அடியில் வேம்பு முதலிய மரங்களால் ஏற்படுத்தப்பட்ட சிறிய சக்கரத்தோடு கூடியது பாலபர்யங்கம் என்று பெயர்.

இவ்வாறு உத்தரகாமிக மஹாதந்திரத்தில் தேர் முதலியவைகளின் அமைப்பு முறையாகிற எழுபத்தோராவது படலமாகும்.

 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar