Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
முதல் பக்கம் » வைசிஷ்ய விதாந விதி
படலம் 74: வைசிஷ்ய விதாந விதி
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

20 ஜூன்
2012
05:06

74வது படலத்தில் வைசிஷ்ய விதாநவிதி கூறப்படுகிறது. ஆசார்யன், ஸாதகன், புத்ரகன், ஸமயி, மஹேச்வரன், என்ற ஐவரும் ஸம்ஸ்காரத்தினால் ஒருவருக்கொருவர் குணமிகுதியினால் விசேஷமாக கூறப்பட்டது. ஆசார்யலக்ஷண படலத்தில் (உ.கா 24-53 பூர்வம் - 54) ஜாதி உயர்வு இல்லாதவர்கள் சாதாரணமாக சமயீ மஹேஸ்வர: என்று மாஹேஸ்வரலக்ஷணம் இவ்வாறு கூறப்பட்டது. பிறகு பிராம்மணாதி சதுர்வர்ணத்தவர்கள் அனுலோமர்கள் ஆறுவகைப்படும். இவர்களில் ஒருவர்க்கு ஒருவர் ஜாதியினால் உயர்வு கூறப்பட்டது. பிறகு வயதினால், படிப்பினால், பக்தியினால், வைராக்யத்தினால், யோகத்தினால், கிரியையினால், நடத்தையினால் ஒன்றுக்கொன்று விசேஷம் உண்டு என்று கூறப்பட்டது. பிறகு ராஜகுரு, ராஜா, ராஜபத்தினி, ராஜ புரோஹிதர், ராஜபுத்திரர், மந்திரி இவர்களும் கூட வரிசையாக ஒருவருக்கொருவர் விசேஷமானவர். பிறகு சிவாலயத்தில் ஆசார்யன் நிஷ்களார்ச்சகர், சகளார்ச்சகர், ஜோஸ்யர் இவர்கள் ஒருவர்க்கு ஒருவர் உயர்ந்தவர். பிறகு மடாதிபதி ராஜா, ராஜாவினால் ஏற்படுத்தப்பட்டவர், நைஷ்டிகர், சிவ பக்தர்கள், பவுதிகர்கள், பரிசாரகர்கள், பூஜகர்கள், பக்தர்கள், பஞ்சாசாரியர்கள், ருத்திர கன்னிகைகள், தேவருக்குப் பணிவிடை செய்பவர்கள் இவர்கள் வரிசையாக அவர்களுடைய கார்யங்களில் விசேஷம் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த இடத்தில் கூறப்படாத மற்றவர்களும் கூட அவரவர்களுடைய கார்யத்தின் வடிவிலே பிராம்மணர்கள் கிரமாக விசேஷம் அறிந்து ஆதரவுடன் பூஜிக்க வேண்டும் என கூறுகிறது. இவர்கள் அனைவரும் ஈஸ்வரனுடைய கல்யாணம், பவித்ரோத்ஸவம் முதலியவைகளில் தேசிகருடைய கட்டளையினால் விசேஷம் உண்டு என்பது தெரிகிறது. ஆகையினால் தேசிகனே சிவன் என்று அறிய வேண்டும். தேசிகனுடைய கட்டளை சிவனுடைய ஆக்ஞை என்று சிவாகமங்களில் கூறப்படுகிறது. ஆகையினால் தேசிகர் சிவனைபோல பூஜிக்க தகுந்தவர் என்று கூறப்படுகிறது. பிறகு சன்மார்க்கம் முதலியவைகளில் கிரமமாக விசேஷம் இங்கு சம்மதம் என்று கூறி சன்மார்க்கம், புத்திரமார்க்கம், ஸஹமார்க்கம், தாசமார்க்கம் என்று கூறி இந்த நான்கின் தனிப்பட்ட லக்ஷணம் கூறி கிரமமாக ஒருவருக்கொருவர் விசேஷம் என்று கூறப்படுகிறது. இந்த அனேக பிரகாரத்தினால் குணத்தோடு கூடின சைவர்களோடு கூட விசாரித்து விசேஷம் நிர்ணயிக்கவும் என்று கூறப்படுகிறது.

1. பிறகு எல்லா கார்யங்களிலும் யாவருக்கும் விசேஷம் விதிக்கப்படுகின்றது. ஆசார்யன், சாதகன், புத்ரகன், சமயி என்றும்

2. மஹேச்வரன் என இந்த ஐவரும் ஒருவருக்கொருவர் குணம் அதிகமுடையவர். ஸம்ஸ்காரத்தினால் விசேஷமாக யாகம் முதலியவைகளில் குறிப்பிட்டு கூறப்பட்டுள்ளது.

3. பிராம்மணர் முதலிய நான்கு பிரிவினர்கள் அனுலோமத்தினர் ஆறுபேர்கள் முன்பு போலவே குணம் அதிகமுள்ள பிரிவினர்கள் விசேஷமாக கூறப்படுகின்றது.

4. வயதினால், படிப்பினால், பக்தியினால், வைராக்யத்தினால், யோகத்தினால், கார்யத்தினால் பிறகு நடத்தையினாலும் விசேஷமாக கூறப்பட்டுள்ளது.

5. முதலில் ராஜகுரு, ராஜா, ராஜமஹிஷி அவர்களது புரோஹிதர் அவர்கள் புத்ரர்கள், மந்திரிகள் இவர்களை கிரமமாக விசேஷமாக கூறப்படுகிறது.

6. ஸகலமாகவோ, நிஷ்கலமாகவோ லிங்கமுள்ள சிவன் கோயிலில், ஆசார்யன், அர்ச்சகன், ஜோஸ்யரும், வரிசையாக விசேஷமாக கூறப்பட்டுள்ளது.

7. பிறகு மடாதிபதி, ராஜா அவரால் நியமிக்கப்பட்டவர், எனது பக்தர்கள் நைஷ்டிகர்கள், பவுதிகர்கள் கூலி இல்லாதவர்கள்.

8. பரிசாரகர், அர்ச்சகர்கள், பக்தர்கள், கூலி உடையவர்கள், தானாக பாடகூடியவர்கள் வீணை, மந்திரம், பாட்டு இவைகளில் முழுமையாக ஈடுபட்டவர்கள்.

9. பஞ்சாசார்யர்கள் எனது பெண்களான தேவதாசிகள், பாடுகின்றவர்கள், வாத்யம் வாசிக்கிறவர்கள் இவர்கள் முறையாக அவரவர் வேலைகளில் விசேஷமாக கூறப்பட்டுள்ளனர்.

10. ஆகையால் மற்றவர்கள் அவரவர் வேலையை அனுசரித்து பிராம்மணர் முதலியவைகளை கிரமமாக அறிந்து ஆதரவுடன் விசேஷமாக கூறப்படுகின்றது.

11. ஈச்வரனுடைய கல்யாணம், பவித்ரோத்ஸவம் முதலியவைகளை உசிதப்படி பூஜித்து ஈஸ்வரனுடைய கட்டளையால் அதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

12. உத்தமமான குருவானவர் எதனால் தான் தேசிகன் என கூறினாரோ, ஈச்வர ஆக்ஞையே என்னுடைய ஆக்ஞையாக சிவாகமத்தில் கூறப்பட்டுள்ளது.

13. அதனால் என்னைப்போல் முதலில் எல்லோருக்கும் பூஜிக்கத் தகுந்தவர் நன்னடத்தை முதலியவைகளினாலும் வரிசையாக விசேஷமாக உள்ளவர் இங்கு ஸம்மதமாவர்.

14. ஸன் மார்க்கி, புத்ர மார்க்கீ, ஸஹ மார்க்கீ, தாச மார்க்கீ இவர்களை முறைப்படி விசேஷமாக கூறப்பட்டுள்ளது.

15. நன் நடத்தை உள்ளவன் ஸம்ஸ்காரமின்றி பக்தி உள்ளவன் யோக்யமானவன் ஒருமைப்பாட்டு உணர்வை உடையவன். அஹங்காரமின்றி சிவயோகத்தில் ஈடுபட்டுள்ளவன்.

16. எல்லா சிவாகமங்களையும் கற்றுணர்ந்த புத்ரமார்க்கீயானவன் புத்ரனுடைய அமைப்பால் செய்யப்பட்ட மனிதன் சைவாசார்யன் என்றும் சாந்தானிகர் என்றும் கூறப்படுகிறார்கள்.

17. அக்னி கார்யம் ஜபம் ஹோமம் மிகவும் ஈடுபட்டுள்ளவர் பிரவேசகர் சிவக்ஞானி அவுப தேசிகர் எனப்படுகிறார்கள்.

18. நந்தவனம் சிவலிங்கம் பிம்பம் ஆலயம் இவைகளை அமைப்பது சைவ சம்பந்த நடனங்கள் பாட்டுக்கள், ஸ்தோத்ரங்கள் வாத்யங்கள் இவைகளை செய்பவர் தாசமார்க்கீயாகும்.

19. இவ்விதமாக பலமுறைப்படி சைவர்கள் விசாரணை செய்து விசேஷமான பூஜை கார்யங்களை செய்ய வேண்டும்.

இவ்வாறு உத்தரகாமிக மஹாதந்த்ரத்தில் வைசிஷ்ய விதான விதியாகிற எழுபத்தி நான்காவது படலமாகும்.

 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar