Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
முதல் பக்கம் » நோய்களை தீர்க்கும் முறை
படலம் 75: நோய்களை தீர்க்கும் முறை
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

20 ஜூன்
2012
05:06

75வது படலத்தில் நோய்களை தீர்க்கும்முறை முறைப்படி கூறப்படுகிறது. முதலில் எல்லா மனிதர்களுக்கும் விசேஷமாக அரசர்கள், பசு, யானை, நாய், ஆடு, எருமை முதலிய பிராணிகளுக்கும் ஜுரம், வைசூரி, கிருஹ ஆவேசம், அபஸ்மாரம், இவைகளிலும் விசேஷமாக, குஷ்டரோகம் முதலிய வியாதி ஏற்பட்டாலும், வியாதி நிவர்த்திக்காகவும், ரோகம் ஏற்படாமல் இருப்பதற்கும், புஷ்டிக்காகவும், பலத்திற்காகவும் குறுகிய முறை கூறப்படுகிறது என்று பிரதிக்ஞை ஆகும். பிறகு தேவாலயம், நதிக்கரை மலை, காடு, இவைகளிலோ மற்ற புண்ய தேசத்திலோ அந்தந்த இருப்பிடத்தில் ரøக்ஷயுடன் கூடிய தன்னுடைய வீட்டில் பசுஞ்சாணத்தால் மெழுகப்பட்ட சுத்தமான இடத்தில் லிங்கம், மண்டலத்திலோ, கும்பம், ஸ்தண்டிலம், பலகை முதலியவைகளிலோ சிவன் முதலான தேவர்களை ஆவாஹித்து முன்பு போல் சந்தனம், புஷ்பம் தூபம், தீபம், நைவேத்யம், இவைகளுடன் கூடியதாக பூஜித்து தன்னுடைய இஷ்ட தேவரை பஞ்சகவ்ய பஞ்சாமிருதம் இவைகளால் ஸ்நபன ஸஹிதம் பூஜை செய்து ஜபம் செய்யவும் என கூறி ஜபம் செய்யும் முறை, அங்கு செய்யவேண்டிய ஹோமம் முறை விளக்கப்படுகிறது. பிறகு ஆசார்யன் கும்ப ஸமீபம் சென்று தேவனை வணங்கி நமஸ்கரித்து கும்ப தீர்த்தத்தால் வியாதியால் பீடிக்கப்பட்ட புருஷனை பிராக்ஷித்து, பிறகு மந்திரம் தியானத்துடன் கூடிய அங்குள்ள விபூதியை பூசவும். பிறகு ருத்திராதி தேவர்களுக்கு நெய்யுடன் கூடின தயிர் அன்னத்தை பலி கொடுக்கவும் என்று மனுஷ்யர்களுடன் விஷயமான வியாதி நாசன விதியில் செய்யவேண்டிய ஒரு விதி விளக்கப்படுகிறது. இங்கு ஹோமம் முடிவிலோ ருத்திராதிகளுக்கு பலி கொடுக்கவும் என்று வேறு விதமாக அறிவிக்கப்படுகிறது. பிறகு வியாதியால் பீடிக்கப்பட்ட புருஷ உருவத்திற்கு சமமாக மாவினால் உருவம் செய்து சந்தன புஷ்பம் இவைகளால் பூஜைவரை பூஜித்து பிரதிதினமும் மூன்று சந்த்யாகாலத்திலோ ஒரு காலத்திலோ பலவித காய்கறிகளுடன் கூடி பாயசம் (மிளகு) வெண் பொங்கல் சுத்தான்னம் இவைகளை நாற்சந்தியிலோ, நிழல் தரும் மரத்தின் அடியிலோ, தேரோடும் வீதியிலோ, சப்த கன்னிகைகள் கோயில் சமீபத்திலோ, சுடுகாடு முதலிய இடங்களிலோ மந்திரத்தை கூறி பலிதான முறைப்படி பலியை வைக்கவும் என கூறப்படுகிறது. இங்கு பலிதான மையத்தில் சொல்லக்கூடிய மந்திரம், சாதாரணமாக எந்த சத்வன் தேவதத்தனை அறிந்து இங்கு இருக்கிறானோ அவனுக்கு இந்த பலி ஆகட்டும் என கூறப்படுகிறது.

இந்த பலியானது ஒரு தினம் முதல் 10 தினம் வரையிலும், ஒருமாசம் முதல் வருஷம் முடியும் வரையிலும், ஒரு வருஷம் நூறு வருஷம் வரையிலும் பிராணிகளின் விஷயத்தில் விதி கூறப்படுகிறது. இவ்வாறு பலிதான விதிபிரகாரம் ஒன்று மனுஷ்யர்களுக்கு வியாதி நாச விதியாக கூறப்படுகிறது. பிறகு லிங்கம் முதலியவைகளில் தேவனை பூஜித்து ஜபஹோமம் முடிந்து லோபித்தன்மை இன்றி தங்கத்தாலோ வெள்ளியாலோ வியாதியால் பீடிக்கப்பட்டவனின் உருவத்தையும், யமரூபத்தையும் சக்ரம் போன்றோ பிரதிபிம்பம் ஏற்படுத்தி முன்பு கூறிய விதிப்படி பூஜித்து அந்த பிரதிபிம்பத்தை சிவனுக்கு தானம் செய்யவும். பிறகு வியாதி அடைந்தவன் வியாதி இல்லாதவனாக ஆகிறான். இது சந்தேகம் இல்லை எனக் கூறுகிறார். இவ்வாறு பிரதி பிம்பதான வடிவம் வேறுவிதமாக மனுஷ்யர்களின் வியாதி போக்கக் கூடிய விதியில் விளக்கப்படுகிறது. இங்கு வெறும் பலிதானம் மட்டும் நான்கு மாதம் வரையிலோ ஆறுமாதம் வரையிலோ வியாதி முடியும் வரையிலோ செய்யவேண்டும் என சுருக்கமாக வேறுவிதமாக கூறப்படுகிறது. பிறகு இரண்டு பக்ஷத்திலும் அஷ்டமி, சதுர்தசி, அமாவாசை, பவுர்ணமி, அவ்வாறு சூர்ய, சந்திர கிரஹணங்கள், விஷுவபுண்யகாலம், இரண்டு அயனங்களிலும் தன்னுடைய ஜன்ம நக்ஷத்திரம், அனுஜன்ம நக்ஷத்திரம், சுத்தமான அழகான, கோசாணம் மெழுகப்பட்ட ஸ்தண்டிலம் அமைத்து, லக்ஷணத்துடன் கூடிய 25 கலசங்களையோ, அல்லது ஐந்து, ஒன்பது கலசங்களை ஸ்தாபித்து அவைகளை முறைப்படி அந்தந்த மந்திரங்களுடன் கூடி சந்தன புஷ்ப தூப, தீபங்களுடன் விசேஷமாக பூஜித்து, அதன் முன்பாக நான்கு திக்கிலும், ஸ்தண்டிலம் அல்லது குண்டத்திலோ, சமித்து நெய் அன்னம் இவைகளால் ஹோமம் செய்யவும். அந்தகுண்டத்திலே உள்ள விபூதியால் அதன் வடக்குதிக்கில் உள்ள வியாதியால் பீடிக்கப்பட்ட புருஷனை ஸ்நானம் செய்விக்கவும். யவம் முதலிய மாவுகளால் பூசி அந்த தியானத்துடன் கூடியதாக அந்தந்த மந்திரத்தை ஸ்மரித்து அபிஷிக்கவும் அல்லது சம்ப்ரோக்ஷிக்கவும். பிறகு அங்குள்ள விபூதியை பூசவும். பிறகு ரோகி ஆசார்யனை பூஜிக்கவும். இந்த வியாதியை போக்கும் விதியானது பட்டத்தில் உள்ள அரசர்களுக்கும் அஷ்டோத்தர சதகலச ஸ்தாபனமோ ஐம்பது கலஸஸ்தாபனமோ செய்து எல்லா கலசத்திலும் ஒரே மந்திரத்தை பூஜிக்கவும் என்று அரசர்கள் விஷயத்தில் கூறப்படுகிறது.

இவ்வாறு சாதாரணமான மனிதர்களுக்கும் விஷயத்தில் செய்யவேண்டிய முறை, விபூதிஸ்நானம் கும்பதீர்த்தாபிஷேகம் தீர்த்தபிரோக்ஷணம், விபூதி பூசுதல் ஆகிய வியாதியை போக்கக் கூடிய முறைகள் நிரூபிக்கப்படுகின்றன. பிறகு அரசர், சாதாரண மனுஷ்யர்கள் விஷயத்தில் வியாதியை போக்குவதற்கு ஜலத்தின் நடுவில் நின்று கொண்டு மந்திரஜபத்தால் சாதிக்கக் கூடிய வேறு விதி வர்ணிக்கப்படுகிறது. அங்கு செய்யவேண்டிய ஹோமவிதி மந்திர தர்பணவிதி கூறப்படுகிறது. பிறகு காட்டு புரசு இலையில் மந்திரத்தினை எழுதி தங்கம், வெள்ளி இவைகளால்சிறு உருண்டை மாதிரி செய்து புரசபத்திரத்தில் எழுதியதை நுழைத்து அந்த உருண்டையை (ரøக்ஷயை) கழுத்து, காது, சிகையிலோ கட்டிக் கொள்ளவும் எனக் கூறி அங்கே செய்யவேண்டிய ஹோமம் மந்திர தர்பணம் ஜபம் வரை கூறப்படுகின்றது. இந்த கர்மாவில் பிறரை அனுக்கிரஹம் செய்யவேண்டிய விஷயத்தில் ஈடுபட்ட ஆதி சைவனே ஆசார்யனாக ஆவான் என உயர்ந்ததாக கூறப்படுகிறது. பிறகு யானைகளின் விஷயத்தில் வியாதியை போக்கக் கூடிய முறை கூறப்படுகிறது. யானை கட்டும் இடத்தின் மத்தியிலோ சிவன் கோயிலிலோ, சூலம் ஸ்தாபிக்கப்பட்ட இடத்திலோ, விஷ்ணு, துர்கை, சூர்யன், மஹாகணபதி, சாஸ்தா, சப்தமாத்திருக்கள், இவர்களின் ஆலயத்திலோ ஆற்றங்கரையிலோ, குளத்தங்கரையிலோ, ஸ்வாமி நந்தவனத்திலோ, கோசாணம் மெழுகப்பட்ட இடத்திலோ முறைப்படி ஸ்தண்டிலம் அமைத்து ஓர் கும்பம் அமைத்து அங்கு அங்கபூஜை சஹிதம் அகோராஸ்திரத்தை பூஜிக்கவும் என்று கூறி அகோராஸ்திரத்யான முறை, செய்யவேண்டிய பூஜாமுறையும் கூறப்படுகிறது. பிறகு ஹோமம் செய்யும் முறை விளக்கப்படுகிறது. பூர்ணாஹுதியின் முடிவில் அஸ்திர கும்பதீர்த்தத்தால் சம்ப்ரோக்ஷணம் அங்கு இருக்கும் விபூதியை பூசுதல் யானைகளுக்கு செய்யவேண்டும்.

அப்பொழுது வியாதிகள் அழிந்து போகின்றன. யானைகளுக்கு ஆயுள் அபிவிருத்தியும் புஷ்டியும் ஏற்படுகிறது. அவைகளின் தலைவன் விஜயத்தை அடைவான் என கூறப்படுகிறது. பிறகு அங்கு செய்யவேண்டிய பலிமுறை கூறப்படுகிறது. முடிவில் இந்த பூஜை முறையே குதிரைகளை காப்பாற்றுவதற்கும் உள்ள விதியாகும். ஆனால் புகைக்கலர் உள்ள அகோராஸ்திரத்தை உத்தமமான ஸாதகர்களால் தியானிக்கப்படவேண்டும் என்று விசேஷம் விளக்கப்படுகிறது. பிறகு வியாதியை போக்கும் விஷயத்தில் அகோரமந்திர, அகோராஸ்திர மந்திரங்களின் பூஜையால் சாதிக்க வேண்டிய பிரயோகமும், அவ்வாறே கருங்கல் முதலிய திரவ்யங்களில் அகோரமூர்த்தியை ஏற்படுத்தி ஸ்தாபித்து அந்த பூஜையால் சாதிக்கக்கூடிய பிரயோகம் ஆவரணத்துடன் கூடிய அகோர மூர்த்தியின் பூஜையின் முறையும் விளக்கப்படுகிறது. அங்கு செய்யவேண்டிய ஜப, ஹோம, பலி முறைகள் கூறப்படுகின்றன. பிறகு சாதாரண மனிதர்களுக்கும், விசேஷமான அரசர்களுக்கும், கால்நடைகளுக்கும் வியாதியை போக்கும் முறைகளில் பலவித பிரயோக விஷயங்கள் கூறப்படுகின்றன. முடிவில் அகோரமந்திரம், அகோராஸ்திர மந்திரம், இவைகளுக்கு எந்த ராஜ்யத்தில் ஹோம பலியுடன் கூடிய பூஜை நடைபெறுகிறதோ, அங்கு ஆயுள் அபிவிருர்த்தி, நோயின்மை ஏற்படும். இதற்கு சமமாக வியாதியை போக்குவதற்கு காரணமான வேறுபிரயோகம் இல்லை என்கிறார். ஆகையால் முயற்ச்சியுடன் இந்த பிரயோகத்தை அனுஷ்டிக்கவும் என கூறப்படுகிறது. இவ்வாறு 75வது படல கருத்து சுருக்கமாகும்.

1. எல்லா மனிதர்களுக்கும், அரசர்களுக்கும் உண்டாகும் நோயைப் போக்கும் முறையை சுருக்கமாகவும், விசேஷமாகவும் கூறுகிறேன்.

2. பசு, எருமை, யானை, குதிரை, ஆடு, எருது, முதலிய பிராணிகளுக்கு உண்டாகும், ஜ்வரம், மாரி, க்ருஹ பீடைகள், வலிப்பு முதலிய நோய்களைப் போக்கும் முறைகளை கூறுகிறேன்.

3. க்ஷயம் குஷ்டம் போன்ற நோய், சோகை, வயிற்றுவலி, மண்ணீரம் நோய், பைத்யம், வாத, பித்த, கபங்களின் ஆதிக்கம், தீ புண், மயக்கம், மதம் பிடித்த தன்மை, காயங்கள் இவைகளுக்கும்

4. மஹோத்ரம், இரத்தக் குழாய் வீக்கம், நீர்கட்டு இது போன்ற இன்னும், பெரிய நோய்களும், தலை, கண், பல் முதலியவைகளில் தோன்றும் நோய்கள்

5. முகம், வாய், கைகால்கள், இவைகளில் உண்டாகும் நோய்களுக்கும் கூறப்படாத நோய்களுக்கும், விசேஷமாக உண்டாகும் நோய் மற்றும் அரசர் முதலியவர்களுக்கும்

6. நோய்களை போக்குவதற்கும், மேற் சொன்ன பிராணிகளுக்கு இவை போன்ற நோய்கள் உண்டாகாமல் இருப்பதற்கும் சரீரபுஷ்டி ஏற்படுவதற்கும், உடலில் பலம் உண்டாவதற்கும் சாஸ்திர முறைப்படி விதிமுறை சுருக்கமாகக் கூறப்படுகிறது.

7. ஆலயத்திலாவது, புண்ய நிதிக்கரையிலாவது அல்லது மலை, காடு, வேறு புண்ய தேசம் இவைகளிலாவது அந்த பிராணிகள் வியாதி ஏற்பட்ட இடத்திலாவது தன் வீட்டிலாவது

8. பசுஞ்சாணத்தினால் மெழுகப்பட்ட சுத்தமானதும் மனதிற்கு நிறைவை அளிக்கக்கூடியதும், மறைவானதும் இடையூறு ஏற்படாமல் காப்பாற்றப்பட்ட, இடத்தில் லிங்கத்தில் அல்லது மண்டலத்தில், கும்பத்தில், ஸ்தண்டிலத்தில் பலகை முதலியவைகளிலோ

9. ஈஸ்வரன் முதலிய தேவதைகளை ஆவாஹனம் செய்தும், சந்தனம், புஷ்பம், தூபதீப, ஹவிர் நிவேதனம் முதலியவைகளால் பூஜித்தும்

10. பஞ்ச கவ்யம், ஸ்நபனம், அபிஷேகம் முதலியவைகளால் ஈஸ்வரனை ஆராதித்து, மந்திர ஜபமும் செய்ய வேண்டும்.

11. பத்தாயிரமோ அல்லது ஐயாயிறமோ அல்லது இரண்டாயிரத்து ஐநூறோ, அல்லது ஆயிறமோ அல்லது ஐநூறோ அல்லது நூற்றியெட்டு ஆவ்ருத்தியாவது

12. அந்த மந்திரங்களுக்கு தகுந்தவாறு ஜபம் செய்ய வேண்டும். பிறகு அந்தந்த மந்திரங்களை உச்சரித்து நோய் உண்டானவனுடைய நிலையையும் சொல்லி நோயை நாசம் செய், நாசம் செய் என்று கூறி பிறகு

13. தேவதத்தனுடைய என்ற பதத்தை விசேஷமாக படித்து ஜபத்தை செய்து விருப்பமான (இஷ்டதேவதை) தேவனிடத்தில் தெரிவிக்க வேண்டும்.

14. பிறகு ஜபத்தை சந்தனம், புஷ்பம், அக்ஷதை, அருகு இவைகளோடு இறைவனிடத்தில் அர்பணம் செய்து இறைவனை வணங்கி ஹோமம் செய்ய அனுமதி பெற்று ஹோமம் செய்யும் இடத்தை அடைய வேண்டும்.

15. ஆராதிக்கப்பட்ட ஈச்வரனுக்கு முன்புபோல் அல்லது ஈசான்ய திக்கிலாவது நான் கோண வடிவில் அல்லது வட்டவடிவ குண்டத்தில் அல்லது ஸ்தண்டிலத்திலாவது முறைப்படி சிவாக்னியை ஏற்படுத்தி

16. அதில் இஷ்ட தேவதையை ஆவாஹனம் செய்து சாஸ்திரத்தில் கூறப்பட்டபடி சந்தனம், சமித்து, அன்னம், நெய், என்று முதலியவைகளால் ஆராதிக்க வேண்டும்.

17. ஜபம் செய்ததில் பத்தில் ஒருபங்காவது அல்லது நூற்றி எட்டு ஆவ்ருத்தியாவது ஹோமம் செய்து பூர்ணாஹூதியும் செய்து, அதிலிருந்து ரøக்ஷயை எடுத்து

18. கும்பத்தில் ஆவாஹனம் செய்யப்பட்ட ஈஸ்வரனிடம் சென்று ஹோமகர்மாவை விக்ஞாபித்து துதித்து வணங்கி (ஈஸ்வரனுக்கு பரான் முகார்யம் கொடுக்க வேண்டும்)

19. கும்பத்தில் உள்ள தீர்த்தத்தால் நோயாளியை ஸ்நானம் அல்லது பிரோக்ஷணம் செய்து ஹோம பஸ்மாவினால் தகுந்த மந்திரங்களைச் சொல்லி உடம்பில் பூச வேண்டும்.

20. ஹோமத்தின் முடிவில் நெய் கலந்த தயிர் அன்னத்தால் ருத்திரன் முதலிய தேவதைகளுக்கு பலி கொடுக்க வேண்டும். இது ஓர்முறையாகும். வேறு முறையும் இப்பொழுது கூறப்படுகிறது.

21. நோயாளியின் உருவப் படிவம் போல் மாவினால் ஓர் உருவத்தையமைத்து சந்தனம் புஷ்பம் முதலியவைகளால் பூஜித்து, பலி பூஜை வரையிலுமாவது பூஜித்து,

22. பலவிதமான காய்கறி, பக்ஷணவகைகளுடன் பாயஸம், பாசிபயிறுடன் சுத்தான்னம், நெய், தயிர், அப்பம் இவைகளுடன்

23. தினந்தோறும் மூன்று ஸ்ந்த்யா காலங்களில் அல்லது ஒருகாலத்திலாவது நாற் சந்தியிலோ யக்ஞத்திற்கு தகுந்த புண்ய விருக்ஷத்தின் அடியிலாவது

24. ஸப்தமாதர்கள் ஆலயத்தின் ஸமீபத்திலோவது, மயானத்திலாவது, எது தேவதத்தனை பிடித்திருக்கிறதோ

25. அதற்கு இந்த பலி ஆகட்டும் என்பது மந்திரத்தோடு மேற்கூறிய பொருட்கள் கொடுக்க வேண்டும். பலி ஓர் தினம் முதல் பத்து நாள் வரையிலும், ஓர்மாதம் முதல் ஓர் ஆண்டு வரையிலுமாகவும்

26. ஓர் ஆண்டு முதல் நூறு வருடம் வரையிலும், மனிதர்களுக்கு பிராணிகளுக்குமாக தூப, தீபத்துடன் கூடியதாக இந்த பலியானது, கூறப்பட்டது.

27. பதாகம் என்ற உபசார கொடியை எடுத்து வந்து மேற்கூறிய பலிகளை செய்வது பொதுவானதாகும். இன்னும் வேறு விதமாகவும், நோயை தீர்க்கும் தன்மை கூறப்படுகிறது.

28. லிங்கத்திலோ அல்லது கும்பத்திலோ இறைவனை ஆவாஹனம் செய்து, ஜபஹோமங்களை முடித்துக் கொண்டு நூறு நிஷ்க்க அளவு தங்கத்திலாவது வெள்ளியிலாவது

29. ஐம்பது நிஷ்கத்திலாவது அல்லது இருபத்தைந்து நிஷ்கத்திலாவது பத்து நிஷ்கத்திலாவது ஐந்து நிஷ்கத்திலாவது

30. 2, 1/2 நிஷ்கத்தில் ஒரு நிஷ்கத்திலாவது அவரவர்கள் சக்திக்கு தக்கவாறு வ்யாதி உள்ளவனுடைய உருவம் செய்ய வேண்டும். பணக்குறைவை செய்யக்கூடாது. (நிஷ்கம் என்பது எண்பது குண்டுமணி எடை)

31. வியாதியால் பீடிக்கப்பட்டவர்களின் உருவத்தை நிர்மாணித்தோ, யமனுடைய உருவத்தையோ, பூமி சக்ரம் போன்றோ வேறு உருவத்தையோ

32. முன்கூறப்பட்ட முறைப்படி துதித்து இறைவனிடம் அர்ப்பணம் செய்ய வேண்டும். இப்படி செய்தால் ரோகம் போய் ரோகமில்லாது இருப்பது நிச்சயம்

33. இவ்விதம் செய்ய முடியாவிடில் நான்கு, ஐந்து, ஆறுமாதம் வரை பலிதானம் மட்டும் செய்தாலும் நோய் தீர்ந்து விடும்.

34. மற்றொரு விதத்தாலும் நோய் போவதற்கு முறை கூறப்படுகிறது. அஷ்டமியிலாவது, சதுர்த்தியிலாவது இரண்டு பக்ஷங்களின் பர்வாக்களிலாவது

35. கிரஹண காலத்திலாவது, விஷுவ புண்ய காலத்திலாவது, இரண்டு அயனங்களிலாவது ஜன்ம நக்ஷத்திரத்திலாவது அனு ஜன்ம நக்ஷத்திரத்திலாவது

36. பசுஞ்சாணத்தினால் மனதிற்கு நிம்மதியாக உள்ள இடத்தை அஸ்த்ர மந்திரத்தை சொல்லி பிரோக்ஷணம் செய்து, அங்கு ஸ்தண்டிலம் அமைத்து ஒன்பது கலசங்களையோ

37. இருபத்தி ஐந்து கலசங்கள் அல்லது ஐந்து கலசங்களையோ இரண்டு மரக்கால் அளவு ஜலம் பிடிக்கும் ஒரு கலசத்தையாவது வைத்து பூஜை செய்ய வேண்டும்.

38. எல்லா கலசங்களும் நூல் சுற்றப்பட்டு வஸ்த்ரங்கள் சந்தனம், அக்ஷதை, அலங்கரிக்கப்பட்டு தங்க பிரதிமைகளோடும் மருந்துகளோடும் பலவித விதைகளோடும்

39. கூர்ச்சம், மாவிலைகளோடும் சந்தனம், அக்ஷதை, இவைகளோடும் வாசனை பொருள் நிறைந்த ஜலம், உள்ளதுமான அந்த கலசங்களை அதற்கு தகுந்த மந்திரங்களாலும்

40. சந்தனம், புஷ்பம், தூபம் இவைகளாலும் விசேஷமாக பூஜித்து அந்தந்த மந்திரங்களை நூறுமுறை கூறி அதற்கு முன்போ, நான்கு திசைகளிலுமோ

41. குண்டமோ, ஸ்தண்டிலமோ, அமைத்து சிவாக்னியை ஆவாஹனம் செய்து, அதில் சமித்து, நெய் அன்னங்களோடு ஹோமம் செய்ய வேண்டும்.

42. அதிலிருந்து பஸ்மாவை எடுத்து வடக்கு பக்கத்தில் பசுஞ்சாணம் மெழுகப்பட்ட இடத்தில் பலகையில் இருக்கின்ற நோயுள்ளவர்களுக்கு ஸ்நானம் செய்வித்து

43. அந்தந்த மேற்பட்ட தேசத்திலுள்ள நோயால் பீடிக்கப்பட்டவனை ஸ்னானம் செய்விக்க வேண்டும். யவை முதலான திரவ்யங்களினால் ஆன மாவுகளாலும் பசுஞ்சானத்தாலும்

44. வியாதிக்கு தகுந்த மந்திரத்தினால் தியானத்தோடு சொல்லி எடுத்த ரøக்ஷயை உடம்பில் பூசவேண்டும்.

45. பிறகு நோய் உள்ளவன், ஆசார்யனை பூஜிக்க வேண்டும். பட்டம் சூட்டிய ராஜாக்களும் சிற்றரசர்களுக்கும் இன்னும் மஹான்களுக்கும்

46. நூற்றியெட்டு கலசங்களையாவது அல்லது ஐம்பதுக்கும் குறையாத கசலங்களை வைத்து பூஜை செய்தல் வேண்டும்.

47. எல்லா கலசங்களிலும் ஒரே மந்திரந்தான் பூஜிக்கப்படுகிறது. ஆனால் நடுவில் உள்ள கலசத்தில் விசேஷமாக பூஜிக்கப்பட்டு அந்த தீர்த்தங்களால் மேற் கூறியவர்களை ஸ்னானம் செய்விக்க வேண்டும்.

48. நோயை போக்குவதற்கு வேறு முறையும் கூறப்பட்டுள்ளது. சூர்ய உதயத்திலிருந்து ஜலத்தில் நின்று கீழ்வரும் முறைப்படி மந்திரத்தை ஜபம் செய்ய வேண்டும்.

49. பத்தாயிரம் அல்லது ஐயாயிரம் அல்லது இருபத்தி ஐந்தாயிரம் அல்லது ஆயிரம், நூற்றியெட்டு ஆவ்ருத்தியானது மந்திரத்தை ஜபம் செய்ய வேண்டும்.

50. ஹோம எண்ணிக்கைக்கு ஸமமாகவோ ஜப எண்ணிக்கைக்கு ஸமமாகவோ தர்பணம் செய்ய வேண்டும்.

51. சக்தி உள்ளவனாக இருந்தால் ஜலமத்தியில் நின்று நித்யம் ஜபம் செய்ய வேண்டும். இந்த விதமாகவோ காட்டுப் பூவரசுத்தோல் முதலியவைகளில்

52. நோயுள்ளவனுக்கு தக்கவாறு நல்ல நேரத்தில் நல்ல லக்னத்தில் அவரவர்களின் தேவனின் பூஜை முறைப்படியான எழுத்துக்களை குங்குமத்தால் எழுத வேண்டும்.

53. முன்பு கூறப்பட்ட ஜபம், தர்பணம், ஹோமத்துடன் கூடியும், ஜபத்தை மட்டுமோ, கோரோசனையால்

54. ஊசியால், அம்பினால், மந்திரங்களை எடுத்து எழுதி சந்தனம், புஷ்பம் முதலியவைகளால் பூஜித்து மாத்திரை போன்றோ (தாயுத்து போன்றோ)

55. தங்கத்தினாலோ வெள்ளியிலோ, தாமிரத்திலோ, பஞ்சால் ஆன நூலோ அரக்கினாலோ கட்டி வியாதி தீரும்வரை தரித்துக் கொள்ள வேண்டும்.

56. பலமில்லாதவன் பலமுள்ளவனாகவும், பூமியில் எல்லோர்களாலும் பூஜிக்கப்படுகிறான். காதிலோ கழுத்திலோ, சிகையிலோ அல்லது கையிலாவது ரக்ஷõபந்தனம் செய்ய வேண்டும்.

57. ஆனால் மந்திர ஸான்னியத்தை முன்னிட்டு இடுப்பின் கீழே கட்டுதல் கூடாது. இப்படி தினமும் பூஜிரக்கப்படும் மந்த்ரம் எல்லா பயனையும் அளிக்க கூடியது.

58. கடமையுணர்வோ கூடினவனாய் தினமும் பூஜை ஜபம் மட்டுமோ அல்லது பூஜை, ஜபம், ஹோமம், தர்பணம் இவைகளை செய்விக்க வேண்டும்.

59. இவ்வாறு எவன் செய்கிறானோ அவன் தீமைகளிலிருந்து விடுபட்டவனாகிறான். துர்பலம் உள்ளவன், பலமுள்ளவனாகவும் எல்லோராலும் மதிக்கப்படுபவனாகவும் ஆகிறான். அரசனாக இருந்தால் பலமுள்ளவனாகவும் எல்லோராலும் விரும்பத்தக்கவனாகவும் தர்மத்தில் அதிகம் ஈடுபட்டவனாகவும் ஆகிறான்.

60. சக்தியில்லாதவர்களுக்கு அவர்களால் அதிகாரம் கொடுக்கப்பட்ட ஆசார்யன் இந்த கர்மாவில் அதிகாரமுள்ளவனாக ஆகிறான், அதிலும் விசேஷமாக ராஜாவை முன்னிட்டு செய்யும் கர்மாக்களில் வேறு யாருக்கும் இடமில்லை.

61. ஆகையால் பிறர்க்கு அனுக்ரஹம் புரிவதையே குறிக்கோளாகக் கொண்ட ஆதி சைவனிடத்தில் எப்பொழுதும் பூர்ணமான நம்பிக்கை வைக்க வேண்டும். அவனே எப்பொழுதும் ஆதிசைவன் என கூறப்படுகிறான்.

62. யானைகளுக்கு உண்டாகும் நோய்களுக்கு சாந்தி சொல்லப்படுகிறது. யானைக் கொட்டாரத்தின் நடுவில் அல்லது அழகான இடத்திலும்

63. சிவாலயம், விஷ்ணு ஆலயம், துர்கை, ஸூர்யன், சாஸ்தா அவர்களின் ஆலயத்திலாவது ஸப்தமாதாக்களின் ஆலயத்திலாவது

64. நதிக்கரை, குளக்கரை, நந்தவனம், இவைகளுள் ஏதேனும் ஒன்றை பசு சாணத்தால் மெழுகி அஸ்த்ர மந்த்ரத்தை கொண்டு ஜலத்தைப் பிரோக்ஷித்து

65. முறைப்படி நெல், அரிசி முதலியவைகளால் ஸ்தண்டிலம் ஏற்படுத்தி மரக்கால் அளவு ஜலம் கொண்டதும் பொறி, தர்பம் இவைகளுடன் சேர்த்தும்

66. கூர்ச்சம், வஸ்த்ரம், வாசனைப் பொருள் நிறைந்த ஜலம் நிறைந்ததும் ஏலம், குங்குமப்பூ, பச்சைக் கற்பூரம் இவைகளை மூன்று பல அளவோடும்

67. அருஹம் புல்லுடன் வெள்ளை அரிசியுடனும் சேர்த்து கும்பத்தில் அகோராஸ்ரத்துடன் கூடியதாக நன்கு பூஜிக்க வேண்டும்.

68. பத்மாஸனத்தில் வீற்றிருப்பவராகவும் ஆறு கைகள் மூன்று கண்கள், உள்ளவராக ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டவராகவும் பூர்ண சந்திரனுக்கு சமமான காந்தியுள்ளவராகவும்

69. கபாலம், சூலம், வில், அம்பு, கத்தி, கேடயம் இவைகளோடு கூடியவராகவும் மேல் நோக்கிய கேசபாசத்தை உடையவராகவுமாக

70. மேற்கூறிய முறைப்படி அகோராஸ்த்ர உருவ அமைப்பை தியானித்தோ முன்கூறிய உருவ அமைப்புடன் வெண்மை நிறமாகவோ

71. சந்தனம், புஷ்பம், தூப தீபங்களால் உபசரித்து உபதம்சத்துடன் தாம்பூலத்துடனும் நைவேத்யத்தை நிவேதனம் செய்ய வேண்டும்.

72. தினமும் ஆயிரம் அல்லது ஐநூறு அல்லது நூற்றியெட்டு ஆவ்ருத்தியாவது அஸ்திர மந்திரத்தை ஜபம் செய்தல் வேண்டும்.

73. அதன் முன்போ அல்லது அதன் ஈசான்ய திக்கிலோ வட்டவடிவ குண்டமாவது நாற்கோணகுண்டமாவது, அமைத்து அதில் சிவாக்னியை ஆவாஹித்து ஹோமம் செய்தல் வேண்டும்.

74. ஸமித்து, நெய், அன்னம், எள், அரிசி முதலியவைகளால் ஹோமம் செய்ய வேண்டும். பாலுள்ள மரத்திலுண்டான புரசு முதலான மரங்களிலிருந்து பில்வம் முதலியவைகளிலிருந்தும் உண்டான

75. ஸமித்துக்கள் மிக மேலானது அல்லது அருஹம்பில் மேலானது என அறியவும். ஆயிரம் அல்லது ஐநூறு அல்லது நூற்றியெட்டு ஆவ்ருத்தி முன் சொன்ன பொருளால் ஹோமம் செய்ய வேண்டும்.

76. பிறகு பிராயச்சித்தாஹுதி செய்து பூர்ணாஹுதியும் செய்ய வேண்டும். ஹோம பஸ்மாவை எடுத்து கும்பத்தில் சேர்த்து இறைவனுக்கு பராங்முகார்க்யம் கொடுக்க வேண்டும்.

77. அந்த தீர்த்தத்தால் ஸ்நானம் செய்வித்து தினமும் அந்த ஹோம பஸ்மாவை தரித்துக் கொள்ள துஷ்டக்ரஹங்கள் விலகுகின்றன. நோய்கம் அழிகின்றன. அதுமட்டுமில்லாமல் சரீரபலமும் ஏற்படுகிறது, மேலும்

78. வேறு நோய்களும் ஏற்படுவதில்லை, ஆயுள் வளர்ச்சியும் உண்டாகிறது. எங்கு இது போன்று கார்யங்கள் செய்யப்படுகிறதோ அங்கு யஜமானன் வெற்றி உள்ளவனாக ஆகிறான்.

79. கோமயத்தால் மெழுகப்பட்ட மண்டபத்தில் ருத்ரன் முதல் ÷க்ஷத்ரபாலர் வரையும் உள்ள தேவதைகளுக்கு பலி கொடுத்து திக்பாலர் பலியும் கொடுக்க வேண்டும்.

80. அல்லது யானைகொட்டாரத்தின் ஸமீபத்தில் அல்லது ஹோமம் செய்த இடத்தில் பலியை கொடுக்கவும். குதிரை முதலியவைகளுக்கும் இந்த விதியே பொருந்தும்.

81. ஆசார்யரால் தூம்ரவர்ணம் (புகை கலர்) உள்ள ஈஸ்வரன் தியானிக்கத்தக்கவர், யானை கூட்டம், குதிரை, பசு, எருமை, ஆடு இவைகள்

82. அஸ்த்ர ராஜாவின் கருணையால் நன்கு காப்பாற்றப்பட்டும், அவைகள் நோய் நீங்கியதோடு அல்லாமல் நன்கு புஷ்டியாகவும் ஆகிவிடும்.

83. முற்பகலில் அல்லது நடுபகலில் அல்லது இரவில் இதை செய்ய வேண்டும். ஒருகாலம் அல்லது இரண்டு காலம் மூன்று காலம் செய்வது விசேஷமானது.

84. அரசன் இதை தினமும் செய்வானேயானால் புண்யம் செய்தவனாய் எங்கும் வெற்றி பெற்றவன் ஆவான். யஜமானன், ஸாதகன், திருப்தியடையும்படி பூஜிக்க வேண்டும்.

85. குதிரைகளுக்கும், யானைகளுக்கும் வேறு விதமாகவும் காக்கும் முறை சொல்லப்பட்டுள்ளது. முதலில் ஜலத்தினால் தர்பணம் செய்த பிறகு

86. சாஸ்திர முறைப்படி அமைக்கப்பட்ட ஸ்தண்டிலத்தில் பதினாறு மரக்கால் அல்லது எட்டு மரக்கால் அல்லது நான்கு மரக்கால் அல்லது இரண்டு மரக்கால்

87. அல்லது ஒருமரக்கால் ஏழையாக இருந்தால் அதிலும் பாதி நெல் பரப்பி, பரப்பிய நெல்லில் பாதியுள்ள அரிசியையும் பரப்பி

88. எள், பொறியையும், பரப்பி அதன் மேல் இரண்டு மரக்கால் கொள்ளளவு உள்ள கும்பத்தை வைத்து

89. தேங்காய், வஸ்த்ரம், கூர்ச்சம், மாவிலைகளோடு கூடியதும் வாசனைப் பொருள்களோடு ஜலம் நிறைந்துள்ளதும், முன்பு கூறப்பட்ட திரவ்யங்களோடு கூடியதுமாக அமைத்து

90. அதில் முன்கூறப்பட்ட தியானத்தோடு அகோரத்தை ஆவாஹித்து சந்தனம், புஷ்பம், தூபதீபங்களோடும்

91. பாயசத்தை தாம்பூலத்துடன் நைவேத்யம் செய்து, பிறகு ஹோமத்தை நிறைவு பெறச் செய்ய வேண்டும்.

92. ஸமித், நெய், அன்னம், எள்ளு, கடுகு, பொறி, பால் உள்ள மரத்தின் ஸமித்துக்கள் அல்லது அருகு இவைகளாலும்

93. ஆயிரம் அல்லது ஐநூறு அல்லது நூற்றிஎட்டு அல்லது ஐம்பது அல்லது இருபத்தி ஐந்து ஆவ்ருத்தியாவது

94. ஒவ்வொரு திரவ்யத்தை அகோர மந்திரத்தால் அதே எண்ணிக்கையுள்ள அகோராஸ்த்ர மந்திரத்தையும் உச்சரித்துக் கொண்டு

95. இரண்டு குண்டத்திலாவது ஒரு குண்டத்திலாவது ஹோமம் செய்யவும். பிரதான மந்திரத்தால் பூர்னாஹுதியையும் தர்பணத்தையும் செய்து

96. அல்லது தனியாக பூர்ணாஹூதி செய்து, மத்தியில் நெய்யோடு கூடிய அன்னம் பலி கொடுத்து எட்டு திக்குகளிலும் பலி கொடுக்க வேண்டும்.

97. ஸ்வாஹா என்ற சொல்லை முடிவுடையதாக அகோராஸ்த்ர மந்திரத்தால் குண்டத்திற்கு ஈசான திக்கில் பலி கொடுத்தல் கூறப்பட்டுள்ளது.

98. பெரிய ஜ்வாலையுள்ள தீயையே சிகையாகக் கொண்ட ஹே அகோராஸ்த்ர தேவரே எவனால் பூஜிக்கப்பட்டு தர்பணத்தாலும், பலியாலும் ஸந்தோஷம் அடைந்தீர்களோ அப்பேற்பட்ட நீங்கள்

99. அந்த யஜமானனையும் அவன் யானைகளையும் காப்பாற்றுங்கள் என்றும் வேண்டிக் கொள்ளவும், ஸ்வாஹா என்று விசேஷமாகக் கூறி பலி, தர்பணம் கொடுக்க வேண்டும்.

100. இந்த கர்மாவை முதற்பகலிலோ, நடுபகலிலோ இரவிலோ செய்தல் வேண்டும். மஹாபலி கொடுக்க வேண்டுமானால் நடு இரவில் கொடுத்தல் வேண்டும் எப்படி எனில்

101. தேன், நெய், தயிர், பொறி, வாழைப்பழம், வடை இவைகளோடு கூடிய அன்னத்தை

102. பலவிதமான, வாத்ய கோஷங்களோடும் நாய்கள் பின்தொடர தீபமில்லாமல் கிராமத்தின் ஆரம்பத்தில் பலி கொடுத்தல் வேண்டும்.

103. ஹே பிராம்மண உத்தமர்களே அதிலும் குறிப்பாக அரண்மனையில் தீங்கு வராமல் காப்பாற்றப்பட வேண்டிய இடத்தில் அகோராஸ்த்ர தேவரின் கொடியோடு மவுன வ்ருதத்தை கடைபிடித்து

104. ÷க்ஷத்திர பாலர்களுக்கும் ருத்திரர், முதலியவர்களுக்கும் பலி கொடுத்தல் வேண்டும். பிறகு கும்பத்தில் உள்ள புண்ணிய தீர்த்தத்தால் நோயுள்ளவர்களை பிரோக்ஷிக்க வேண்டும்.

105. அகோர மந்திரத்தையும், அகோரஸ்த்ர மந்திரத்தையும் ஜபித்துக் கொண்டு, நோயுள்ளவனுக்கு பிரோக்ஷணம் செய்தும், பிறகு அந்த மந்திரங்களால் அபிமந்திரம் செய்யப்பட்ட விபூதியை அந்த இரண்டு மந்திரங்களையும் தியானித்து கொடுக்க வேண்டும்.

106. பிறகு ஹோம ரøக்ஷயும் கொடுத்தல் வேண்டும். அவர்கள் நோயிலிருந்து விடுபட்டவர்கள் ஆவார்கள். பிறகு கர்த்தா போஜனம் தட்சிணை முதலியவைகளால் ஆசார்யரை சந்தோஷிக்க செய்ய வேண்டும்.

107. ஆசார்யன் ஸந்தோஷம் அடைந்தால், அசையும் பொருள், அசையா பொருள் எல்லாம் மகிழ்ச்சி அடையும், கோயில்களிலும் அகோர தேவதை சிலாவிக்ரஹமாக அமைத்து

108. ஹோமம் பலி முதலியவைகளை செய்தல் வேண்டும். கும்பத்திலும் ஆவாஹித்து பூஜை ஹோமம் முதலியவைகளைச் செய்யலாம்.

109. இப்படி தர்பணம், ஹோமம், முதலியவைகளோடு பூஜை செய்தால் இப்பிறவியில் நோய்களும், எல்லாப் பீடைகளும் அழிந்து விடுகின்றன.

110. பூஜை ஹோமம், பலிமட்டுமாவது தினந்தோறும் செய்ய வேண்டும். எல்லா மனிதர்களுக்கும் இந்த ஹோமம் பலி கூறப்படுகிறது.

111. பூஜையின் முடிவில் ஜபத்தையும் ஹோமத்தையும் செய்ய வேண்டும். அல்லது எல்லா தீங்குகளும் நீங்குவதற்கு ஜபம் மாத்திரமாவது செய்ய வேண்டும்.

112. யானைகளின் நோய் தீருவதற்கு மற்றொரு விதமும் இங்கு கூறப்படுகிறது. தூய்மையான இடத்தையடைந்து பசுஞ்சாணத்தால் மெழுகிவிட வேண்டும்.

113. கோவை பழம் போல் செந்நிறம் உள்ளதும் இரண்டு மரக்கால் கொள்ளளவு உள்ளதுமான கும்பத்தை நூல் சுற்றி இரண்டு மரக்கால் நெல்

114. ஒரு மரக்கால் அரசி அரை மரக்கால் எள்ளு கால் மரக்கால் பொறியுள்ள ஸ்தண்டிலத்தில் ஸ்தாபிக்க வேண்டும்.

115. கும்பத்தின் மேல், ஐந்து தர்பங்களால் கூர்ச்சம் நிர்மாணம் செய்யப்பட்டும் கும்பத்தில் சந்தனம்

116. முப்பழங்களோடும், கீழாநெல்லி, விளாமிச்சவேர், ஏலம், லவங்கம் முதலிய வாசனைப் பொருளின் தூள்களையும், கும்பத்தில் ஸமர்பித்து

117. வஸ்திரம் உடுத்தி ஆதார சக்தி அனந்தாஸனம் தர்ம, ஞான, வைராக்ய ஐச்வர்யம் முதலிய ஆஸனங்களையும் கல்பித்து

118. அதர்மாதி நான்கையும் கல்பித்து அதச்சதனம் (கீழ்இதழ்) ஊர்ச்வச்சதனம் (மேல் இதழ்) இவைகளோடு கூடியும் தண்டு தளம், கர்ணிகை முதலியவைகளோடு

119. கூடிய பத்மாஸனத்தை பூஜித்து முன் சொன்ன தியானத்துடன் கும்பத்தை இறைவனுடைய மூர்த்தமாக நினைக்க வேண்டும்.

120. கும்பத்தின் நடுவில் பிரணவஸ்வரூபமான வரும், தெற்கு நோக்கியவருமான அகோர மூர்த்தியை ஆசாரியர் அகோர மந்திரத்தை உச்சரித்து பாத்யம் முதலியவைகளால் பூஜிக்க வேண்டும்.

121. சந்தனம், விளாமிச்சவேர், இவைகளோடு கூடிய தீர்த்தத்தை பாத்யமாகக் கொடுக்க வேண்டும். ஏலம், இலவங்கம் மூன்று வகை பழங்களுடன்

122. தீர்த்தத்தை ஆசமனமாக கொடுத்து பிறகு நீர், பால், தர்பை நுனி, அக்ஷதை புஷ்பம் எள்ளு இவைகளும்

123. யவை, வெண்கடுகு, இவைகளுடன் எட்டு பொருள்களுடன் கூடிய அர்க்யத்தை இங்கு கூறப்பட்டுள்ளது. சந்தனம் கோரக் கிழங்கு கீழாநெல்லி ஆகிய மூன்று சந்தனங்களை சாத்தி,

124. பலவித புஷ்பங்களால் பூஜித்து, தூபதீபம், முதலிய உபசாரம் செய்து அந்த பத்மத்தின் தளத்தில் அகோராஸ்திர மந்திரத்தை உச்சாடனத்துடன்

125. அகோராஸ்திரத்தை பூஜித்து முன் போலவே பாத்யம், ஆசமனம் அர்க்யம் கொடுத்து ஆவரணத்தோடோ, ஆவரணமில்லாமலோ பூஜித்து

126. கிழக்கு திசை முதல் அசிதாங்க பைரவர், ருரு பைரவர், சண்ட பைரவர், க்ரோத பைரவர், உன்மத்த பைரவர்

127. கபால பைரவர், பீஷணபைரவர், ஸம்ஹார பைரவர், என்ற எட்டு பைரவர்களையும் பூஜித்து பத்மத்திற்கு வெளியில் திக்பாலர்களையும் அதற்கு வெளியில் அவரவர்களின் ஆயுதங்களையும்

128. அஸ்த்ராவணம் மட்டுமோ, லோகபாலகர், பைரவர் வரையிலுமோ சந்தனம் முதலியவைகளாலும் தூபம் நெய் தீபம் முதலியவைகளால் உபசாரம் செய்து

129. காய்கறி வகைகளுடன் ஆஜ்யத்தோடு கூடியதுமான நிவேதனத்தை ஈச்வரனுக்கு அர்ப்பணம் செய்ய வேண்டும். அகோர தேவர்க்கும் அகோராஸ்த்ரத்திற்கும் பருக நீர் முதலியவற்றை நிவேதிக்க வேண்டும்.

130. பிறகு தாம்பூலம் கொடுத்து நூற்றெட்டு ஆவ்ருத்தி அகோர மந்த்ரத்தையும் அகோராஸ்த்ர மந்த்ரத்தையும் ஜபித்து அதை அந்தந்த தேவதைகளுக்கு ஆசார்யன் ஸமர்பிக்க வேண்டும்.

131. கும்பத்தின் முன் ஐந்து ஸம்ஸ்காரங்கள் சுத்தம் செய்யப்பட்ட மணலாலான ஸ்தண்டிலத்தில் குண்டஸம்ஸ்காரமும் செய்து

132. முன் கூறிய விதம் அக்னியில் இறைவனை ஆவாஹனம் செய்து பாலுள்ள மரத்தின் ஸமித்துகளாலும் ஆஜ்யத்தாலும் அன்னத்தாலும்

133. பொறி, அக்ஷதையோடு கூடிய எள்ளாலும், நூற்றெட்டு ஆவ்ருத்தி ஹோமம் செய்து கடைசியாக அஸ்த்ரரூபமான இறைவனுக்கு தாம்பூலமும் நிவேதனம் செய்து

134. கடைசியில் பூர்ணாஹுதியும் செய்ய வேண்டும். அகோர மந்திரத்தால் ஹோமபஸ்மத்தை எடுத்து அஸ்த்ரமந்திரத்தால் அதை ரட்சிக்கவும் வேண்டும்.

135. போகாங்க பூஜையும், லயாங்க பூஜையும் செய்து அக்னியை விஸர்ஜனம் செய்ய வேண்டும். பிறகு ஹோம கர்மாவை அகோர ரூபியான கும்பத்தில்

136. அர்ப்பணம் செய்து விரும்பியதைப் பிரார்த்தித்துக் கேட்டு உத்தரவு பெற்று பராங் முகார்க்யம் கொடுத்து போகாங்க பூஜைகளை ஒடுக்கிக் கொண்டு

137. லயாங்க பூஜை செய்து உபஸம்ஹரணம் செய்ய வேண்டும். அஸ்த்ர மந்திரத்தையும் அகோர மந்திரத்தையும் மற்ற மந்திரங்களையும் ஹ்ருதய கமலத்தில் சேர்த்து

138. கும்ப தீர்த்தத்தால் நோயுள்ளவனை ஸ்னானம் செய்விக்க வேண்டும். தினந்தோறும் இவ்வாறு அந்த தீர்த்தத்தால் பிரோக்ஷணமும் செய்து கொள்ளலாம்.

139. எல்லாவற்றிற்குமோ யானைகளின் இடம் முதலிய இடங்களிலும் புரோக்ஷித்து அகோர தேவரை விட்டு அகோராஸ்த்ரத்தையாவது பூஜிக்க வேண்டும்.

140. இவ்வாறு ஒரு நாள் அல்லது மூன்று நாட்கள் ஐந்து அல்லது ஏழு நாட்கள் அல்லது பக்ஷம் ஒரு மாதம் அல்லது இரண்டு மூன்று மாதம் தினந்தோறும் இவ்வாறு.

141. தினந்தோறும் செய்தால் அரசன் முதலானவர்களுடைய நோயும் யானை முதலியவைகளுடைய நோயும் தீர்ந்துவிடும்.

142. அரசனும் யானைகளும், நோயின்றி பலம் பொருந்திய சிறந்து விளங்கும் என்பதில் ஐயமில்லை.

143. இதுவே குதிரை எருமை, ஆடு முதலிய பிராணிகளுக்கு உண்டாகும் நோயைப் போக்கவும் முடியும்

144. யாகத்தில் உபயோகித்து மிச்சமுள்ள பொருள் ஆசார்யனுக்கு கொடுப்பதோடு உணவும், நெய் முதலியவற்றையும் தினம் கொடுக்க வேண்டும்.

145. கடைசியில் சக்திக்கு தக்கவாறு தட்சிணையும் கொடுக்க வேண்டும். இவ்வாறு பகலிலும் இரவிலும் இக்கர்மாவை செய்ய வேண்டும்.

146. ஹோமத்தின் முடிவில் இரவில் தினந்தோறும் யானைக் கொட்டாரத்திலோ குதிரை லாயத்திலோ அல்லது

147. அதன் சமீபத்திலோ ஆஜ்யத்தோடு கூடிய அன்னம் பலியாகக் கொடுக்க வேண்டும். சுத்தமான கோமயத்தால் மெழுகப்பட்ட அஸ்த்ரமந்திரத்தால்

148. அகோர தேவரையும் அகோராஸ்த்ர தேவரையும் பரிவாரத்துடன் சந்தனம் புஷ்பங்களால் பூஜித்து வஜ்ரம் முதல் சக்ரம் வரையிலான ஆயுத ஆவரணத்துடன் கூடிய

149. ஸ்வாஹாந்தமாக பலிதானம் செய்ய வேண்டும். மேற்கிலோ, வடமேற்கிலோ ÷க்ஷத்திரபாலகருக்கு பலிதானம் செய்ய வேண்டும்.

150. அகோரமந்திரமின்றி அகோராஸ்த்ரத்தை மட்டுமாவது நடுவில் வைத்து அஸ்த்ராவண தேவதைகளுக்கும் ருத்திரன் முதலியவர்களுக்கு பலிதானம் செய்ய வேண்டும்.

151. எந்த ராஜ்யத்தில் இவ்விதம் பலிதானம் செய்யப்படுகிறதோ அங்கு ருத்திர பாதங்களால் உண்டான பயமும் நோயின் உபத்ரவமும் நிச்சயம் ஏற்படாது.

152. ஏதேனும் நோய், செய்கிறவனுக்கும் செய்விப்போனுக்கும் உண்டாகுமேயானால் அது உடனே நசித்து விடும். ஐயமில்ல.

153. எந்த அரசனின் ராஜ்யத்தில் அகோரதேவருக்கு அகோரசாஸ்த்ரத்திற்கும் பூஜையும் ஹோமமும் பலிதானமும் நடைபெறுகிறதோ

154. அங்கு ஆயுள் விருத்தியும் நோயற்ற தன்மையும் உண்டாகும். இதற்கு சமமாக நல்லது செய்யக் கூடியது வேறொன்றும் இல்லை ஆகையால் இதை முயற்சியுடன் செய்ய வேண்டும்.

இவ்வாறு உத்தரகாமிகாகம மஹாதந்திரத்தில் வியாதிநாச விதியாகிற எழுபத்தி ஐந்தாவது படலமாகும்.

 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar