கோவை வரதராஜபுரத்தில் 12 ராசிகளுக்காக அமைக்கப்பட்ட ஆன்மீ்க தோட்டம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22ஜூலை 2021 12:07
கோவை: வரதராஜபுரம் ராமசாமி நகரில் அமையப்பெற்றுள்ளது வரசித்தி விநாயகர் கோவில். இங்கு வெளி மாநிலம் மற்றும் நாடுகளில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேண்டி வருபவர்களுக்கு உடனடி வாய்ப்பு கிடைப்பதால் இந்த பகுதி மக்களிடையே #Foreign விநாயகர் என சிறப்பு உள்ளது. இந்நிலையில் இதே வளாகத்தில் அந்த பகுதி குடியிருப்பு வாசிகள் ஒன்றிணைந்து புதிதாக ராம பக்தர் அனுமருக்கு என தனியாக கோவில் கட்டி அண்மையில் எளிமையாக கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
இதன் தொடர்ச்சியாக கோவில் வளாகத்தில் 12 ராசிகளுக்கான செடிகளை நட்டு பராமரித்து வருகின்றனர். அதன் படி ஒவ்வொரு ராசிகளுக்குமான பாதிரி, மகிழம், புன்னை, வள்ளி என 12 ராசிகளுக்குமான செடிகளை எட்டு வடிவத்தில் நட்டுள்ளனர். இந்நிலையில் கோவிலில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் அந்த பகுதி மக்கள் கலந்து கொண்டனர்.இது குறித்து கோவில் நிர்வாகிகள் கூறுகையில்,கோவையில் முதன்முறையாக இது போன்ற ராசி தோட்டத்தை உருவாக்கி உள்ளதாகவும், இதில் நடைபயிற்சி மேற்கொள்ளும் போது அனைத்து ராசிக்காரர்களும் பலனடைந்து நல்ல ஆன்மீக அனுபவத்தை பெற முடியும் என தெரிவித்தனர். மேலும் வரும் காலங்களில் வேம்பு, வில்வம் போன்ற பல்வேறு சிறப்பு குணம் கொண்ட ஆன்மீக மரங்களை நட உள்ளதாகவும் தெரிவித்தனர். கோவையில் பிரத்யேகமாக அமைந்துள்ள இந்த ராசி தோட்டம் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.