சேத்தியாத்தோப்பு, : சேத்தியாத்தோப்பு, மேட்டுத்தெரு மகா காளியம்மன் கோவில் ஆடி மாத உற்சவ திருவிழா நடந்தது.விழா, 23ம் தேதி காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் துவங்கியது.
காலை சுவாமிக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை, மலர் அலங்காரம் நடந்தது. இரவு 11.30 மணிக்கு கோவிலிருந்து சக்தி கரகம் புறப்பாடாகியது. மேட்டுத் தெரு, வடக்கு மேட்டுத் தெரு, முருகன் கோவில் தெரு, வடக்கு மெயின்ரோடு வழியாக வீதியுலா நடந்தது.மூன்றாவது நாளான நேற்று மஞ்சள் நீராட்டு விழா, சுவாமி வீதியுலா நடந்தது. கோழி, ஆடுகளை விட்டு பக்தர்கள் வேண்டுதலை நிறைவேற்றினர். ஏராளமானோர் சுவாமியை வழிபட்டனர். ஏற்பாடுகளை விழாக்குழுவினர், கிராம மக்கள் செய்திருந்தனர்.