திருப்பூர் ;மங்கலம், அமிர்த வித்யாலயம் பள்ளியில் குரு பூர்ணிமா விழா கொண்டாடப்பட்டது. விழாவில், பள்ளி முதல்வர் வித்யாசங்கர் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து, குரு பூர்ணிமா கொண்டாட வேண்டியதன் அவசியம் குறித்து பேசினார். பிரம்மச்சாரி அஜித்சைதன்யா சிறப்பு விருந்தினராக பங்கேற்று, ஆதி பவுதீகம், ஆதி தெய்வீகம், ஆதி ஆத்மீகம் பற்றி சிறப்புரையாற்றினார். பள்ளி ஆசிரியர்கள் பஜனை பாடல் பாடினர்.குரு பூர்ணிமாவின் முக்கியத்துவத்தை பிளஸ் 2 மாணவி தர்ஷிகா பேசினார். பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பள்ளி முதல்வர் பரிசு வழங்கினார்.