சின்னமனூர்: சின்னமனூர் வாலசித்தி விநாயகர் கோயிலில் இந்து முன்னணி சார்பில் கொரோனா தொற்றிலிருந்து நாட்டு மக்கள் விடுபட வேண்டி யாக கூட்டு பிரார்த்தனை நடைபெற்றது. நகர் செயலாளர் மருதமுத்து தலைமை வகித்தார் இந்து இளைஞர் முன்னணி மாவட்ட ஒருங்கிணைப்பாளா ராம் செல்வா, மாவட்ட செயலாளா பாலமுருகன் முன்னிலை வகித்தனர். இந்து அன்னையர் முன்னணி பொறுப்பாளர் சாரதா, பூங்கொடி பிரார்த்தனையை நடத்தினர். கோட்ட செயலாளர் கோம்பை கணேசன் சிறப்புரையாற்றினார். ஒன்றிய பொறுப்பாளர்கள் வேல்சிவக்குமார், ரெங்கசாமி உள்ளிட்ட பலா பங்கேற்றனர்.