காஞ்சிபுரம் : காஞ்சி சங்கர மடம் வரலாறு குறித்த ஆய்வு நுாலின் முதல் தொகுதி, ஓரிக்கை மணிமண்டபத்தில் நேற்று வெளியிடப்பட்டது.
காஞ்சி சங்கர மடம் வரலாறு குறித்த ஆய்வு நுாலை, புலவர் மகாதேவன் எழுதியுள்ளார். நுாலின் முதல் தொகுதி வெளியீட்டு விழா, காஞ்சிபுரம் ஓரிக்கை மணிமண்டபத்தில் நேற்று நடந்தது. பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் வெளியிட, பா.ஜ., மூத்த தலைவர் இல.கணேசன் பெற்றுக் கொண்டார். இல.கணேசன் கூறியதாவது:பாரம்பரிய முறைப்படி ஆடி மாத பவுர்ணமி துவங்கி இரண்டு மாதம், சாதுர்மாஸ்ய விரதத்தை, துறவியர் கடைப்பிடிப்பர். விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், ஓரிக்கையில் இந்த ஆண்டு விரதம் கடைப்பிடிக்கிறார். இந்த நாட்களில் அவரை தரிசிப்பது பக்தர்களுக்கு புண்ணியம். மீண்டும் ஒரு முறை, சென்னையில் பெரிய அளவில் இந்நுால் வெளியீட்டு விழாவை நடத்தலாம் என சுவாமிகள் ஆலோசனை கூறியுள்ளார். இவ்வாறு, அவர் கூறினார்.