பதிவு செய்த நாள்
02
ஆக
2021
02:08
பொள்ளாச்சி:பொள்ளாச்சி, மாக்கினாம்பட்டி கந்தவேல் லே - அவுட்டில், ஸ்ரீமன் நாராயணசுவாமி கோவிலில், ஆடி மாதம், மூன்றாவது வாரத்தையொட்டி, பால் முறை பூஜை விழா நேற்று துவங்கியது.காலை, 6:00 மணிக்கு பூச்சாட்டுதல், மதியம், 12:00 மணிக்கு உச்சிப்படிப்பு, அருள்வாக்கு சொல்லுதல் நடந்தது. இன்று காலை, 9:00 மணிக்கு சிறப்பு பணிவிடை, மதியம், 12:00 மணிக்கு உச்சிபடிப்பு நிகழ்ச்சி நடக்கிறது. நாளை (3ம் தேதி) ஆடிப்பெருக்கு அன்று காலையில் பால்முறை நிகழ்ச்சியுடன் விழா நிறைவடைகிறது.