Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news 66 அடி உயர சாமுண்டீஸ்வரி உருவச்சிலை ... திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் திருவதிகை சரநாராயண பெருமாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவில் வேப்ப மரத்தில் இருந்து தண்ணீர்: பல்லடத்தில் பரபரப்பு
எழுத்தின் அளவு:
கோவில் வேப்ப மரத்தில் இருந்து தண்ணீர்: பல்லடத்தில் பரபரப்பு

பதிவு செய்த நாள்

05 ஆக
2021
10:08

பல்லடம்: பல்லடம் அருகே, துர்க்கை அம்மன் கோவில் வேப்ப மரத்தின் வேரில் இருந்து தண்ணீர் சுரந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர் மாவட்டம், பல்லடம் அடுத்த ஆறுமுத்தாம்பாளையம் கிராமத்தில், நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த துர்க்கை அம்மன் கோவில் உள்ளது. இக்கோவில், கும்பாபிஷேகம் நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. அதற்கான சீரமைப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது, கோவில் முன்புறம் உள்ள வேப்ப மரத்தின் வேரிலிருந்து, தண்ணீர் சுரந்தது. இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது: ஆக., 28 அன்று கோவில் கும்பாபிஷேகம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்காக நேற்று காலை முதல் பராமரிப்பு பணிகள் மேற்கொண்டிருந்த போது, கோவில் முன்புறம் உள்ள அம்மனின் ஊஞ்சலுக்காக நடப்பட்ட கற்களை எடுக்க முயன்றோம். பல மணிநேரம் போராடியும் கற்களை எடுக்க முடியாமல், ஐந்துக்கும் மேற்பட்டவர்கள் இணைந்து கற்களை அகற்றினோம்.

இதையடுத்து, கற்கள் அகற்றப்பட்ட இடத்தில் கோவில் முன் உள்ள நூற்றாண்டு பழமையான வேப்ப மரத்தின் வேர் பகுதியில் இருந்து தண்ணீர் சுரந்தது. குடிநீர் குழாய் உடைந்து இருக்கலாம் என்று நினைத்தோம். ஆனால், வேப்ப மர வேரில் இருந்து தொடர்ந்து தண்ணீர் வெளியேறியது வியப்பாக இருந்தது. மேலும், தண்ணீர் வேப்ப இலை வாசனையுடன் கசப்பின்றி சுவையாக இருந்தது என்றனர்.  வேரில் இருந்து தண்ணீர் சுரந்ததை அறிந்த அப்பகுதி மக்கள், கோவில் முன் கூடினர். தண்ணீர் சுரந்த இடத்தில் விளக்கு ஏற்றி வழிபட்டதுடன், தண்ணீரை தீர்த்தமாக நினைத்து அருந்தி துர்க்கை அம்மனை வழிபட்டு சென்றனர். வேப்ப மரத்தில் இருந்து பால் சுரந்த சம்பவங்கள் கடந்த காலங்களில் நடந்துள்ளன. அதுபோல், வேப்பமர வேரில் இருந்து தண்ணீர் சுரந்தது, பல்லடத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஒவ்வொரு மாதமும் தேய்பிறை சதுர்த்தியை, சங்கடஹர சதுர்த்தியாக அனுஷ்டிப்பது உங்களுக்கு தெரியும். ... மேலும்
 
temple news
மதுரை; திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் பங்குனி பெருவிழா கடந்த 15ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி ... மேலும்
 
temple news
அவிநாசி; அவிநாசி வட்டம், கருவலூரில் மாரியம்மன் கோவிலில் பங்குனி தேர் விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்தூர்; ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோயில் பூக்குழி திருவிழா கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
சிவகங்கை; சிவகங்கை மாவட்டம் கொல்லங்குடி வெட்டுடையார் காளியம்மன் கோயில் பங்குனி திருவிழாவை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar