Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
முதல் பக்கம் » ஸர்வ தானோத்தம விதி
படலம் 98: ஸர்வ தானோத்தம விதி
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

22 ஜூன்
2012
12:06

98வது படலத்தில் ஸர்வ தானோத்தம விதி, கூறப்படுகிறது. இங்கு துலாரோஹதான விதிப்படி மண்டபம் அமைத்து வேதிகை, குண்டம், மண்டலம் இவைகளோடு கூடியதாக செய்யவும் என கூறி கொட்டகையிலோ, இந்த விதியை அனுஷ்டிக்கவும் என விசேஷமாக கூறப்படுகிறது. மண்டலத்தின் மத்தியில் பரமேஸ்வரனை பிரம்மா, விஷ்ணு சஹிதமாக சந்தன, புஷ்பங்களால் பூஜிக்கவும் என கூறப்படுகிறது. பிறகு குண்டத்தில் நல்ல மனதை உடையவர்களால் சேஷ ஹோமம் செய்யவும் என கூறி அதன் மந்திரங்கள் கூறப்படுகின்றன. பிறகு நான்கு வேதங்களை அறிந்த மூன்று நபர்களை ஏற்றுக் கொள்ளவேண்டும். அந்த பிராம்ணர்களுக்கு பிரம்மா, விஷ்ணு, சிவன்களை உத்தேசித்து நியாயப்படி பஞ்சாங்க பூஷணம், நல்ல வஸ்திரங்களுடன் கூடியதாக தனித்தனியாக 108 கணக்குகள் ஸ்வர்ணங்களை கொடுக்கவும், இங்கு கூறப்படாத எந்த கர்மா உண்டோ அவை எல்லாம் முன்பு கூறப்பட்ட முறைப்படி செய்யவும் என கூறப்படுகிறது. இவ்வாறு 98வது படலத்தின் கருத்து சுருக்கமாகும்.

1. எல்லா தானங்களை காட்டிலும் உத்தமமான முதல் தானத்தை கூறுகிறேன். முன்பு போல் வேதிகை குண்டம் இவைகளுடன் மண்டபத்தை அமைக்க வேண்டும்.

2. முன்பு கூறிய விதமாக மண்டலத்துடன் மண்டப நிர்மாணத்தை தண்ணீர் பந்தலில் அமைக்கவும். மண்டலத்தின் நடுவில் பிரம்மா, விஷ்ணு, இவர்களுடன் பரமேஸ்வரனை

3. சந்தனம் முதலியவைகளால் சிவன், பிரம்மா விஷ்ணுவிற்கும் பூஜை செய்யவும். தனத்தை கொடுக்கும் பிரம்மாவிற்கும் (விஷ்ணுவிற்கும்)

4. சிவனுக்கும் விஷ்ணுவிற்கும் ஸ்வாஹா, ஸ்வதா, வவுஷட், வஷட், நம என்பதாக பூஜிக்கவும். (நாராயாணாய வித்மஹே வாஸுதேவாய தீமஹி தந்தோ விஷ்ணு: ப்ரசோதயாது)

5. என்பதாகவும் மீதமுள்ள ஹோமத்தை சமாதான முள்ளவர்களால் குண்டத்தில் ஹோமம் செய்ய வேண்டும். நான்கு வேதங்களை அறிந்த மூன்று நபர்களை ஜபம் செய்ய சொல்ல வேண்டும்.

6. அந்த பிராம்மணர்களுக்கு கூறிய முறைப்படி தட்சிணையை கொடுக்கவும். நூற்றிஎட்டு ஸுவர்ணம் தனித்தனியாக கொடுப்பது உத்தமமாகும்.

7. அவர்களுக்கு ஐந்து அங்களுக்கும் ஆபரணம் ஸமர்ப்பித்து வஸ்த்ரம் முதலியவைகளை கொடுக்கவும். இங்கு கூறப்படாததை முன்பு கூறப்பட்டது போல் எல்லாவற்றையும் செய்ய வேண்டும்.

இவ்வாறு உத்தரகாமிக மஹாதந்திரத்தில் ஸர்வதானோத்தம விதியாகிய தொண்ணூற்றி எட்டாவது படலமாகும்.

 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar