பதிவு செய்த நாள்
21
செப்
2021
09:09
காஞ்சிபுரம்: காஞ்சி சங்கர மடம் காமகோடி பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் மேற்கொண்ட சாதுர்மாஸ்ய விரதம், நேற்றுடன் நிறைவு பெற்றது.
தொடர்ந்து, சுவாமிகள் யாத்திரை விழாவை முன்னிட்டு, செவிலிமேடு கைலாசநாதர் கோவிலுக்கு சென்றார்.காஞ்சி சங்கர மடம் காமகோடி பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், ஜூலை 24ம் தேதி பவுர்ணமி அன்று, சாதுர்மாஸ்ய விரதத்தை, காஞ்சிபுரம் ஓரிக்கை மஹா சுவாமிகள் மணிமண்டபத்தில் துவக்கினார். இந்த பூஜை, பவுர்ணமி நாளான நேற்றுடன் நிறைவடைந்தது.தொடர்ந்து விஸ்வரூப யாத்திரை துவக்க விழாவை முன்னிட்டு, ஓரிக்கை மணி மண்டபத்தில் இருந்து, விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், ஏராளமான பக்தர்களுடன், நேற்று மாலை புறப்பட்டு செவிலிமேடு கைலாசநாதர் கோவிலுக்கு சென்றார்.
அங்கு நடந்த கிருஷ்ண பூஜையில் பங்கேற்று, கீதையின் உபாசனையை பக்தர்களுக்கு வழங்கினார். இரவு அங்கிருந்து புறப்பட்ட விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், ஓரிக்கை மணி மண்டபத்திற்கு சென்றார். இரவு பவுர்ணமி பூஜையில் பங்கேற்றார்.மணி மண்டபத்தில், 18, 19, 20 ஆகிய, மூன்று நாட்கள் நடைபெற்ற நித்ய அக்னி உபாசனை நிகழ்ச்சியும் நேற்றுடன் நிறைவு பெற்றது. இந்நிகழ்ச்சியில் ஆந்திரா, கர்நாடகா, மஹாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் இருந்து பலர் பங்கேற்றனர்.