Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
அக்ஷர்தாம் சுவாமி நாராயண் மந்திர் முன்னோர்களை வழிபடுவோம்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
மணவாழ்வு சிறக்க மயிலைக்கு வாங்க!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 செப்
2021
06:09


மாதவப்பெருமாள் மணக்கோலத்தில் அருள்புரியும் தலம் சென்னை மயிலாப்பூர். புரட்டாசி சனியன்று இவரை வழிபட்டால் தடைகள் நீ்ங்கி மணவாழ்வு சிறப்பாக அமையும். குழந்தைப் பேறுக்கு குறைவிருக்காது.  
மகாவிஷ்ணுவின் சாந்த குணத்தை சோதிக்க எண்ணிய பிருகு மகரிஷி அவரது மார்பில் உதைத்தார். அதைக் கண்ட மகாலட்சுமி கோபத்துடன் விஷ்ணுவின் மார்பை விட்டு நீங்கினாள். தன் தவறுக்கு பிராயச்சித்தம் தேட விரும்பிய பிருகு, தன் மகளாக மகாலட்சுமி அவதரிக்க வேண்டும் என இத்தலத்தில் தவத்தில் ஈடுபட்டார். அவரது பக்திக்கு இரங்கிய மகாலட்சுமி, இங்குள்ள குளத்தில் குழந்தையாக அவதரித்தாள். ‘அமிர்தவல்லி’ எனப் பெயரிட்டு வளர்த்தார் பிருகு. திருமண வயதை அடைந்த போது மகாவிஷ்ணு மணமகனாக வந்து அமிர்தவல்லியை ஏற்றார். அவரே இங்கு மாதவப்பெருமாளாக கோயில் கொண்டார். தாமரை போல அழகான முகத்துடன் இருப்பதால் உற்ஸவர் ‘அரவிந்த மாதவன்’ எனப்படுகிறார். ‘அரவிந்தம்’ என்றால் ‘தாமரை’.
 நாரத மகரிஷியிடம், ‘பூலோகத்தில் தோஷம் இல்லாத தலம் எது’ என வியாசர் கேட்ட போது இத்தலத்தையே குறிப்பிட்டார். கருவறையில் பெருமாள் அமர்ந்த கோலத்தில் இருக்கிறார். அமிர்தவல்லித்தாயார் தனி சன்னிதியில் இருக்கிறாள். திருமணத்தடை உள்ளவர்கள், குழந்தை இல்லாதவர்கள் தாயாருக்கு கல்கண்டு, குங்குமப்பூ, பால் சேர்ந்த கலவையை நைவேத்யம் செய்கின்றனர்.
 இங்கு உள்ள ‘மணிகைரவம்’  என்னும் கிணற்றில் பூத்த அல்லி மலரில் பேயாழ்வார் அவதரித்தார். ஐப்பசி சதயம் நட்சத்திரத்தை ஒட்டி இவருக்கு 10 நாள் திருவிழா நடக்கும். பொய்கையாழ்வார், பேயாழ்வார், பூதத்தாழ்வார் ஆகிய மூவரும் மகாவிஷ்ணுவைச் சந்தித்த நிகழ்வின் அடிப்படையில் ‘திருக்கோவிலுார் வைபவம்’ இங்கு நடக்கிறது.
   மகான் ராமானுஜர் கர்நாடகாவிலுள்ள திருநாராயணபுரம் கோயிலுக்குச் சென்ற போது, அங்குள்ள உற்ஸவர் சிலையை டில்லி பாதுஷாவின் மகள் எடுத்துச் சென்றதைக் கேள்விப்பட்டார். உடனடியாக டில்லிக்குச் சென்று அச்சிலையை மீட்டார். இதனடிப்படையில் ‘செல்வப்பிள்ளை’ என்னும் சன்னதி இங்குள்ளது. பூவராகப்பெருமாள், ஆண்டாள், ராமர், அனுமனுக்கு சன்னதிகள் உள்ளன.  
எப்படி செல்வது:
* கோயம்பேட்டில் இருந்து 12 கி.மீ.,
* எக்மோரில் இருந்து 5 கி.மீ.,

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
கலக்கத்தில் இருப்பவர்களுக்கு பலத்தைக் கொடுப்பவர் ராமர். அவரது திருவடியில் சரணடைந்த பக்தர்களைக் ... மேலும்
 
ஆடி என்றொரு கொடிய அரக்கன் முன்னொரு காலத்தில் இருந்தான். பிரம்மாவை வேண்டிப் பல வரங்களைப் பெற்றான். ... மேலும்
 
கவலை, கடன்களில் இருந்து மீள வழி கூறுங்கள் என அறிஞரிடம் ஒருவர் கேட்டார்.அதற்கு அவர் உங்களுக்காக ... மேலும்
 

நீ நீயாக இரு ஏப்ரல் 05,2024

கழுதை ஒன்று வழி தவறி காட்டிற்குள் சென்றது. அங்கு இருந்த மானிடம், ‘ஏன் எல்லா விலங்குகளும் ஓடுகிறது’ எனக் ... மேலும்
 

ராஜா மரியாதை ஏப்ரல் 05,2024

* நீதியின் பாதையில் நடப்பவர்களுக்கு ராஜமரியாதை கிடைக்கும்.* தேவனிடம் கேட்பது கிடைக்கும்.* எண்ணத்தில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar