கோவில் நகைகளை உருக்கக் கூடாது சிவசேனா வலியுறுத்தல்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25செப் 2021 06:09
நாகப்பட்டினம்: கோவில்கள் புனரமைப்புக்காக கலைநுட்பமிக்க புராதான நகைகளை உருக்காமல் மாற்றுத் திட்டம் ஏற்படுத்தி கோவில்களை புனரமைக்கப்பட வேண் டும் என சிவசேனா கட்சி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. சிவசேனா கட்சியின் தஞ்சை கோட்ட மைய கூட்டம் மாநில செயலாளர் சுந்தர வடிவேலன் தலைமை யில் நாகைபில் நடந்தது. கூட்டத்தில், தமிழகத்தில் உள்ள திருக்கோவில்கள் அனைத்தும் பல ஆயிரம் ஆண்டுகள் பழமையானது.திருக்கோவில்கள் புனரமைப்பு என்று புராதானமான கலை சின்னங்களான நகைகளை, பல்வேறு அன்னிய அன்னியர்களின் ஆட்சி காலங்களிலும் பாதுகாத்து வைத்திருக்கும் நிலையில் உருக்குவது என்பது எந்த வகையிலும் ஏற்புடையது அல்ல. கோவில் திருப்பணிகளை செய்ய வேண்டுமென்றால், ஹிந்து சமய அறநிலையத்துறை என்ற துறையை உருவாக்கி அதை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் தமிழக அரசு தான் அதற்கான முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும். திருக்கோவில் நகைகளை உருக்கி அடகு வைத்து கடன் வாங்கி அந்த தொகையிலிருந்து கோவில் திருப்பணிகளை செய்வதென்பது ஏற்க முடியாது. என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.