Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news 6 மாதம் பின்.. ராமேஸ்வரம் கோயிலில் ... ராதா, கிருஷ்ணருக்கு திருக்கல்யாண உற்சவம் ராதா, கிருஷ்ணருக்கு திருக்கல்யாண ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நாகை அருகே கிடைத்த 17 ஐம்பொன் சிலைகள்
எழுத்தின் அளவு:
நாகை அருகே கிடைத்த 17 ஐம்பொன் சிலைகள்

பதிவு செய்த நாள்

27 செப்
2021
10:09

நாகப்பட்டினம் : நாகை அருகே, கோவில் திருப்பணிக்காக பள்ளம் தோண்டியபோது 17 ஐம்பொன் சிலைகளும், 36 வகையான பூஜை பொருட்களும் கிடைத்தன. நாகை மாவட்டம், தேவூரில் அமைந்துள்ளது, மதுரபாஷினி உடனுறை தேவபுரீஸ்வரர் கோவில். இது, கோச்செங்கட்டுவ சோழன் கட்டிய மாடக் கோவிலாகும். பழமை வாய்ந்த இக்கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு, திருப்பணிகள் நடந்து வருகின்றன. நேற்று காலை நவக்கிரஹ சன்னிதிக்கு பின்புறம், கான்கிரீட் பணிக்காக தொழிலாளர்கள் பள்ளம் தோண்டினர்.இதில் 7 அடி வரை பள்ளம் தோண்டியதில் 4 அடி உயர காட்சி கொடுத்த நாயகர், காட்சி கொடுத்த நாயகி 3 அடி உயர அம்பாள் 12 கைகளுடன் கூடிய பைரவர், திருஞானசம்பந்தர், அப்பர் மற்றும் 2 அடி உயர அஸ்திரதேவர் என மொத்தம் 17 ஐம்பொன் சிலைகள் கிடைத்தன.

மேலும், ஐம்பொன்னாலான தாம்பூலம், கமண்டலம், துாபக்கால், விசிறி போன்ற 36 வகையான பூஜை பொருட்களும் அடுத்தடுத்து கிடைத்தன.செயல் அலுவலர் கண்ணன் கூறுகையில், தோண்ட தோண்ட பொருட்கள் கிடைப்பதால் பணிகளை நிறுத்தி, தொல்லியல் துறைக்கு தகவல் தெரிவித்துள்ளோம். அவர்களது மேற்பார்வையில், இயந்திரம் வாயிலாக பள்ளம் தோண்டும் பணி துவங்கும். சிலைகளும், பொருட்களும் எந்த காலத்தைச் சேர்ந்தவை என்பது, தொல்லியல் துறையினரின் ஆய்வுக்கு பின்னரே தெரியவரும், என்றார். தேவூர் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த மக்கள் கும்பல் கும்பலாக வந்து, சிலைகளை வணங்கி சென்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: லட்சக்கணக்கான பக்தர்களின் கோவிந்தா கோஷம் முழங்க, மதுரை வைகை ஆற்றில் பச்சைப்பட்டு உடுத்தி ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரையில் சித்திரைத் திருவிழாவில் வீர அழகர் பச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலையில் அதிகாலை முதலே பக்தர்கள் குவிந்தனர். ... மேலும்
 
temple news
பரமக்குடி; பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் (அழகர்) கோயில் சித்திரைத் திருவிழாவில் கள்ளழகர் அதிகாலை 3:30 ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,  தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் அமைந்துள்ள சாரங்கபாணி கோவில், 108 வைணவ திவ்ய தேசங்களில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar