பதிவு செய்த நாள்
14
அக்
2021
01:10
புதுச்சேரி: தர்ம சம்ரக் ஷண சமிதி நடத்தும் சத சண்டி மகா ஹோமத்தில், நேற்று அம்பாள் மகா கவுரி அலங்காரத்தில் அருள்பாலித்தார்.புதுச்சேரி, தர்ம சம்ரக் ஷண சமிதி சார்பில், நவராத்திரியை முன்னிட்டு, 2வது ஆண்டாக இ.சி.ஆரில் உள்ள சங்கர வித்யாலயா பள்ளியில், கடந்த 7ம் தேதி முதல், சத சண்டி ஹோமம் நடைபெற்று வருகிறது. நேற்று, அம்மன் மகா கவுரி அலங்காரத்தில் எழுந்தருளினார். காலை 7:00 மணிக்கு கோ பூஜையுடன் ஹோமம் துவங்கியது. சோமகும்ப பூஜை, யாகி யாகீஸ்வர பூஜைக்கு பிறகு, 13 அத்யாயங்கள் பாராயணம் செய்து, புடவை சமர்ப்பித்து, பூர்ணாஹூதி நடந்தது. யாகத்தை சர்வசாதகம் கீதாராம சாஸ்திரி வழிகாட்டுதலோடு அசோக் சாஸ்திரி நடத்தினார். மாலையில் மூலமந்திர ஜபம், லலிதா சஹஸ்ரநாம பாராயணம், வேதபாராயணம், இசைக்கச்சேரி, மகா தீபாராதனை நடைபெற்றது. இன்று 14ம் தேதி மாலை 6:00 மணிக்கு, 64 யோகினி, 64 வடுக பைரவ பலி பூஜை நடக்கிறது.