56 நாடுகளில் முருக பக்த மார்க்கம் தீவிரமாக கடைபிடிக்கப்படுகிறது
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21அக் 2021 10:10
மதுரை : உலகில் 56க்கும் மேற்பட்ட நாடுகளில் முருக பக்த மார்க்கம் தமிழர்களால் தீவிரமாக கடைபிடிக்கப்படுகிறது, என மதுரை காமராஜ் பல்கலை தொலைநிலைக் கல்வி தமிழ் துறை, மலேசியா திருமுருகர் திருவாக்கு திருபீடம் சார்பில் நடந்த முருக பக்த மார்க்கம் இணையவழி கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது.
பல்கலை பதிவாளர் வசந்தா தலைமை வகித்தார். தொலைநிலைக் கல்வி இயக்குனர் ராமசாமி முன்னிலை வகித்தார். துறைத் தலைவர் பரமேஸ்வரன் வரவேற்றார். சுவிட்சர்லாந்தின் கதிர்வேலாயுத சுவாமி அறக்கட்டளை நிர்வாகி வேலுப்பிள்ளை கணேஷ்குமார் பேசியதாவது:உலகில் 56க்கும் மேற்பட்ட நாடுகளில் வாழும் தமிழர்கள் வழிபடும் கடவுளாக முருகன் உள்ளார். பால் காவடி, வேல் குத்துதல், பறவை காவடி உட்பட மரபு மாறாமல் முருக பக்த மார்க்கத்தை தமிழர்கள் தீவிரமாக பின்பற்றி இளைய தலைமுறைக்கும் கொண்டு செல்கின்றனர். அங்குள்ள அரசும் அங்கீகாரம் வழங்குகிறது என்றார்.லண்டன் பல்கலை தமிழ் பிரிவு இயக்குனர் சிவாபிள்ளை, பீடத்தின் தலைவர் பாலயோகிசுவாமி மற்றும் பல்வேறு நாடுகளின் பேராசிரியர்கள் பங்கேற்றனர். மாணவர்கள் ஆய்வுக்கட்டுரைகளை சமர்ப்பித்தனர்.