விழுப்புரம்: விழுப்புரம் பிரஹன்நாயகி சமேத கைலாசநாதர் கோவிலில் அன்னாபிஷேகம் நடந்தது. அதனையொட்டி நேற்று முன்தினம் மாலை 6:00 மணிக்கு மேல் சாயரக்ைஷ பூஜை நடந்தது. பின், சுவாமிக்கு அன்னத்தால் சிவபெருமான் வடிவம் அமைத்து அலங்காரம் செய்யப்பட்டது.இரவு 7:00 மணிக்கு மேல் மகா தீபாராதனை நடந்தது. ஓய்வு பெற்ற காவல் அதிகாரி கோதண்டம் மற்றும் வைஷால் மாலு குழுவினர் சிவபுராணம், சிவபக்தி பாடல்கள் பாடும் நிகழ்ச்சி நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.செஞ்சிபீரங்கிமேடு அருணாசலேஸ்வரர் கோவிலில் அருணாசலேஸ்வரருக்கு அன்னம், காய்கனிகள், பழங்களைக் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டது. நேற்று முன்தினம் இரவு 7:00 மணிக்கு சிறப்பு ஆராதனை நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.திண்டிவனம்தீவனுார் பொய்யாமொழி விநாயகர் கோவிலில், நேற்று முன்தினம் மாலை 6:00 மணிக்கு அன்னாபிேஷகமும், மகா தீபாராதனையும் நடந்தது. இதில் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த ஏராளமான சுவாமி தரிசனம் செய்தனர்.