பதிவு செய்த நாள்
23
அக்
2021
10:10
துாத்துக்குடி: துாத்துக்குடி, சிவன் கோயில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. 9ம் திருநாளில்தேரோட்டமும், 11ம் நாளில் திருக்கல்யாணமும் நடக்கிறது.
துாத்துக்குடி மாவட்டத்தில், பிரசித்தி பெற்ற சங்கரராமேஸ்வரர் பாகம்பிரியாள் அம்பாள் கோயிலில் , இந்த ஆண்டு ஐப்பசி திருக்கல்யாண திருவிழா,நேற்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று முன்தினம் காப்பு கட்டும் நிகழ்ச்சி நடந்தது. முன்னதாக வாஸ்து சாந்தி, கணபதி பூஜை, அங்குரார்ப்பணம் போன்ற வைபவங்கள் நடந்தது. நேற்று காலை கொடி பரிவட்டம், ரதவீதி உலா வந்து காலை 8:30 முதல் 9:30 மணிக்குள் கொடியேற்றம் நடந்தது. கொடிமரம், பலிபீடம், பாகம்பிரியாள் அம்பாள், உற்சவமூர்த்திக்கு அபிஷேகம், தீபாராதனைகளை அர்ச்சகர் செல்வம் பட்டர் செய்தார் . அதிகமான பக்தர்கள் கலந்து கொண்டனர். மாலையில் அம்பாள் ரதவீதி உலா வந்தது. விழாவை ஒட்டி , ஒவ்வாரு நாளும் அம்பாள் வெவ்வேறு வாகனங்களில் உலா வருதல் நடக்கிறது.