பழநி மலைக் கோயிலில் மீண்டும் தங்கரத புறப்பாடு: பக்தர்கள் மகிழ்ச்சி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24அக் 2021 04:10
பழநி: பழநி மலைக்கோயிலில் கொரோனா பரவலை தடுக்க 2021 ஏப்ரல் முதல் பக்தர்களை தங்கத் தொட்டில் தங்கரத புறப்பாடு நேர்த்திக்கடன் செலுத்தவும் கால பூஜைகளில் சுவாமி தரிசனம் செய்யவும் அரசு அனுமதி வழங்கவில்லை. நேற்று முதல் (அக்.23-) இவற்றில் பக்தர்கள் பங்கேற்க மலைக்கோயில் நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.
பழநி மலைக்கோயிலில் நேற்று காலை தங்கத் தொட்டில் இரவு 7:00 மணிக்கு வெளிப்பிரகாரத்தில் தங்கரத புறப்பாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஒன்றரை ஆண்டுக்குப்பின் பங்கேற்றதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.பங்கேற்பு கட்டணம் தங்கத் தொட்டிலில் 2 வயதுக்குட்பட்ட குழந்தைகளை படுக்கவைத்து நேர்த்திக் கடன் செலுத்தலாம். இதற்கு கட்டணம் ரூ.300. தங்கரத புறப்பாட்டில் 3 பேர் கலந்து கொள்ளலாம். இதற்கு கட்டணம் ரூ. 2000 செலுத்த வேண்டும். காலை 6:00 முதல் மாலை 5:00 மணி வரை நேரில் வந்து பதிவு செய்ய வேண்டும். தங்க தொட்டிலில் பங்கேற்போருக்கு பஞ்சாமிர்த பிரசாதமும் தங்கரத புறப்பாட்டில் பங்கேற்போருக்கு பரிவட்டம் பஞ்சாமிர்தம் பித்தளை விளக்கு முருகன் படம் உட்பட பிரசாதங்கள் வழங்கப்படும். இதுபற்றிய விவரங்களை 04545 - 242 236 என்ற எண்ணில் அறியலாம்.