பெலகாவி: பெலகாவி கித்துாரில் ஆண்டுதோறும் ‘கித்துார் உற்சவம்’ கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான உற்சவம் நேற்று துவங்கியது. பைலஹொங்கலில் உள்ள கித்துார் ராணி சமாதியில் இருந்து புறப்பட்ட‘வெற்றி ஜோதி’க்கு கித்துாரில் உள்ள சென்னம்மா சதுக்கத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பெலகாவி பா.ஜ., – எம்.பி., மங்களா அங்கடி கொடியேற்றி உற்சவத்தை துவக்கி வைத்தார். கலைநிகழ்ச்சிகளை கித்துார் ராஜகுரு சமஸ்தான மடத்தின் மடாதிபதி ஸ்ரீமடிவாளா ராஜயோகிந்திரா சுவாமிகள் துவக்கினார். இதில், மயிலாட்டம், கேரள செண்டமேளம் உட்பட நாட்டுப்புற கலைஞர்களின் கலைநிகழ்ச்சிகள் நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்றது.