பதிவு செய்த நாள்
25
அக்
2021
11:10
திருச்சி, தமிழகத்திலேயே மிக உயரமான 33 அடி உயர சஞ்ஜீவன ஆஞ்சநேயர் சிலை, திருச்சி, கொள்ளிடக் கரையில் நேற்று பிரதிஷ்டை செய்யப்பட்டது.
திருச்சி, ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த வாசுதேவன், 62, என்பவர், ஸ்ரீரங்கம் அருகே, மேலுார் கொள்ளிடக் கரையில், ஆஞ்சநேயருக்கு கோவில் கட்ட முடிவு செய்தார்.முக்கால் ஏக்கர் நிலம் தேர்வு செய்து, சஞ்ஜீவன ஆஞ்சநேயர் கோவில் கட்டுமானப் பணிகளை துவக்கினார்.அங்கு, 1,000 கோடி ராமஜெயம் எழுதிய புத்தகங்கள் வைத்து பூமி பூஜை செய்யப்பட்டது. அதில், ஆஞ்சநேயர் தெற்கு நோக்கி அமையும் வகையில், 4 அடி உயரத்தில் பீடம் அமைக்கப்பட்டது.தமிழகத்திலேயே மிக உயரமான, 33 அடி உயரமுள்ள கருங்கல்லால் ஆன ஆஞ்சநேயர் சிலை, திருப்பூர் அருகே, திருமுருகன் பூண்டியில் செய்யப்பட்டது. பணிகள் முடிந்து கடந்த மாதம் கொள்ளிடக் கரைக்கு வந்தது.தொடர்ந்து, திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, நேற்று காலை 10:00 மணிக்கு, ஆயிரக்கணக்கான பக்தர்களின் ஜெய் ஆஞ்சநேயா கோஷம் முழங்க, ராட்சத கிரேன் உதவியுடன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.அடுத்த ஆண்டு ஜனவரியில் கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.