திருப்பூர் - அவிநாசி ரோடு, எஸ்.ஏ.பி., தியேட்டர் எதிரில், ஸ்ரீசக்தி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. காலை 7:45 மணிக்கு, திருமுருகன்பூண்டி ஞனாதி நாயனார் மடாதிபதி முத்துசுப்பிரமணிய சிவாச்சார்யார் கும்பாபிஷேகத்தை நடத்திவைத்தார். பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.